மரத்தின் அழைப்பு

மரத்தின் அழைப்பு, மலையாள சிறார் கதைகள், தமிழில்-யூமா வாசுகி, பாரதி புத்தகாலயம், 421, அண்ணா சாலை, தேனாம்பேட்டை, சென்னை 18, விலை 90ரூ. நகர்மயமாதலின் மௌனமான விளைவுகளில் ஒன்று குழந்தைப்பருவம் இழக்கும் உலகம். பெரும்பாலான முந்தைய தலைமுறை கிராமங்களில் வசித்தது. காடுகரைகள் எல்லாம் ஓடித்திரிந்து சிறுவர்கள் மாலைதான் வீட்டுக்கு வருவார்கள். சாப்பாட்டுக்குப் பையனைத் தேடி தாய்மார்கள் தெருக்களில் அலைவார்கள். கிளி பிடித்து, பொன்வண்டு தேடி, தேனடை தேடி, மீன்களைத் துழாவி அலைந்த அந்த சிறுவர்கள் எல்லாம் எங்கே போய்விட்டார்கள்? முந்தைய தலைமுறை அனுபவித்த கட்டற்ற […]

Read more

ஈ.வெ.கி. சம்பத்தும் திராவிட இயக்கமும்

ஈ.வெ.கி. சம்பத்தும் திராவிட இயக்கமும், இனியன் சம்பத் பதிப்பகம், 3/643, குப்பம் சாலை, காவேரி நகர், கொட்டிவாக்கம், சென்னை 41, விலை 650ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0000-806-0.html இந்நூலின் நாயகர், ஈ.வெ.ரா. பெரியாரின் அண்ணன் மகன். இவர் பெரியார் உருவாக்கிய திராவிட கழகத்தின் மிக முக்கிய தலைவர்களில் ஒருவராகவும், பெரியாருக்குப் பிறகு இயக்கத்தை தலைமையேற்று நடத்தக்கூடியவராகவும் திகழ்ந்தவர். ஒரு கட்டத்தில் பெரியாரின் சில அரசியல் முடிவுகளில் முரண்பட்டு, அண்ணாதுரையுடன் இணைந்து தி.க.விலிருந்து வெளியேறி தி.மு.க.வின் தோற்றத்திற்கும் வளர்ச்சிக்கும் உறுதுணையாக […]

Read more

ஆழ்மனதின் அற்புத சக்திகள்

ஆழ்மனதின் அற்புத சக்திகள், என். கணேசன், பிளாக்ஹோல் மீடியா பப்ளிகேஷன் லிமிடெட், 7/1, 3வது அவென்யூ, அசோக் நகர், சென்னை 83. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0001-009-2.html ஒவ்வொரு மனிதருக்குள்ளும் மகத்தான ஆழ்மனசக்தி உண்டு. முறையான பயிற்சிகளின் மூலம் அத்தகைய சக்தி கைவரப்பெற்று பல அற்புதங்களை நிகழ்த்தியவர்களைச் சித்தர்கள், மகான்கள் என்று அழைக்கிறோம். வெளிநாடுகளிலும் இத்தகையவர்கள் உண்டு. இவர்கள் புரியும் அற்புதங்கள் சில சமயம் அறிவுக்குப் பொருத்தமாகத் தோன்றாது. ஆனால் அவை உண்மை. அறிவியலில் எல்லா வினாக்களுக்கும் விடையில்லை என்றார் […]

Read more

மௌனியின் கதைகள்

மௌனியின் கதைகள், தொகுப்பாசிரியர்-கி.அ.சச்சிதானந்தம், சாகித்ய அகாடமி, குணா பில்டிங்ஸ், 443, அண்ணா சாலை, தேனாம்பேட்டை, சென்னை 18, விலை 110ரூ. உலகத் தரத்துக்கு தமிழில் சிறுகதைகள் எழுதியவர் மௌனி. 1907ல் பிறந்து 1985ல் மறைந்த அவர் எழுதியவை 24 சிறுகதைகள்தான். ஆயினும் அவை சிகரம் தொட்டவை. அதனால்தான் சிறுகதை மன்னர் புதுமைபித்தன் தமிழ் சிறுகதை உலகின் திருமூலர் என்ற மௌனியைப் பாராட்டி இருக்கிறார்.அவருடைய மிகச்சிறந்த 13 கதைகளை தேர்ந்தெடுத்து சாகித்ய அகாடமி வெளியிட்டு உள்ளது. இக்கதைகள், எல்லோருக்கும் எளிதில் புரிந்து விடாது. நிதானமாகவும், பொறுமையாகவும், […]

Read more

ரத்த ஞாயிறு

ரத்த ஞாயிறு, டாக்டர். கோவி. மணிசேகரன், பூம்புகார் பதிப்பகம், 127-63, பிரகாசம் சாலை, பிராட்வே, சென்னை 108, விலை 260ரூ. பாரத தேசத்தை எப்படிக் கட்டிக் காக்க வேண்டும் என்கிற அக்கறையுடன் போராடிய சரித்திர மகாபுருஷர்கள் ஏராளம். அவர்களுள் மக்களுக்காகவும், மதத்துக்காகவும், மொழிக்காகவும் போராடியவர்கள் சொற்பமானவர்கள். அவர்களுள் ஒருவர் சத்ரபதி சிவாஜி. இந்த மாவீரரை கதாநாயகனாகக் கொண்டு படைக்கப்பட்டுள்ளது இந்நூல். சிவாஜியின் காலத்தில் ஏற்பட்ட நிகழ்ச்சிகள் யாவும் விடுதலைப் போராட்டம் போன்றதே. பின்னாளில் ஆங்கிலேயனை விரட்டுவதற்காக எழுந்த போராட்டத்தின் தொடக்கத்தை சிவாஜிதான் அமைத்துக் கொடுத்தார் […]

Read more

பிரபல கொலை வழக்குகள்

பிரபல கொலை வழக்குகள், எஸ்.பி. சொக்கலிங்கம், கிழக்கு பதிப்பகம், 57, பி.எம்.ஜி. காம்ப்ளக்ஸ், தெற்கு உஸ்மான் ரோடு, தி.நகர், சென்னை 17, பக். 200, விலை 140ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/978-81-8493-787-9.html இப்படிக் கூடவா நடந்திருக்கும் என்று பலரால் வியந்து பேசும்படியான சம்பவங்களை உள்ளடக்கிய வழக்குகளை பிரபலமான வழக்குகள் என்று கூறுவோம். சமுதாயத்தில் புகழ் பெற்றவர் புரியும் குற்றச் சம்பவங்கள் தொடர்பான வழக்குகளுக்கும் அப்பெயர் உண்டு. அந்த வகையில் சென்ற நூற்றாண்டில் பத்திரிகைகளில் தினமும் வெளியாகி, மக்களால் பெரிதும் […]

Read more

நிஜங்களின் பதிவுகள்

நிஜங்களின் பதிவுகள், கே.ஜி.மகாதேவா, மித்ர ஆர்ட்ஸ் அண்டு கிரியேஷன்ஸ், 20/2, ஜக்கரியா காலனி முதல் தெரு, சூளைமேடு, சென்னை 94, விலை 90ரூ. இலங்கையின் புகழ் பெற்ற எழுத்தாளரும், பத்திரிகையாளருமான கே.ஜி.மகாதேவா எழுதிய கட்டுரைகளும், நேர்காணல்களும் கொண்ட நூல். கோவையில் நடந்த தமிழ் செம்மொழி மாநாடு, சென்னையில் கட்டப்பட்ட அண்ணா நூற்றாண்டு நூலகம், ஆயிரம் வயது கண்ட தஞ்சை பெரிய கோவில் உள்பட மொத்தம் 20 தலைப்புகள். இலங்கைத் தமிழர் பிரச்சினை குறித்து, இந்திய பாராளுமன்றத்தில் நடந்த விவாதத்தின் சுருக்கமும் இடம் பெற்றுள்ளது கட்டுரைகள் […]

Read more

கலை பொதுவிலிருந்தும் தனித்திருக்கும்

கலை பொதுவிலிருந்தும் தனித்திருக்கும், ஷங்கர் ராமசுப்ரமணியன், நற்றிணைப் பதிப்பகம், எண், 123 ஏ, திருவல்லிக்கேணி, நெடுஞ்சாலை, திருவல்லிக்கேணி, சென்னை 5, விலை 110ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0000-806-6.html எதையும் அழுத்திப் பேசும்போது அது அருவெறுப்பாகி விடுகிறது. எதையும் உரத்துப் பேசும்போது பொய் நுழைந்துவிடுகிறது. எழுத்தாளன் இதற்கு நடுவில் சிக்கலான பாதையில் பயணிப்பவன் எனும் ஷங்கர் ராமசுப்ரமணியனின் முதல் கட்டுரைத் தொகுப்பு இது. விதைகள் மலமாக அறிமுகமானவர், கட்டுரைகள் மூலமாகவும் கவனிக்கப்பட வேண்டியவராகிறார். இலக்கியத்தில் கிடைக்கும் பிரபலயத்தின் மூலமாக உலகத்தின் […]

Read more

மாலன் சிறுகதைகள்

மாலன் சிறுகதைகள், மாலன், கவிதா பப்ளிகேஷன்ஸ், சென்னை 17, பக். 416, விலை 200ரூ. TO buy this Tamil book online – www.nhm.in/shop/978-81-8368-047-9.html ஆசிரியர் மாலன் பல்வேறு பத்திரிகைகளில் பல்வேறு காலகட்டங்களில் எழுதிய, 55 சிறுகதைகள் இந்நூலில் தொகுக்கப் பெற்றுள்ளன. இலக்கியத் தரம் வாய்ந்த இச்சிறுகதைகள் பற்றி, தமிழன் தமிழ் இளைஞர்களின் இன்றைய நிலை குறித்து மாலன் மிக அக்கறையோடு தாயுள்ளத்தோடு யோசித்துள்ளார் என, கூறியுள்ளார் பிரபஞ்சன். ஆரோக்கியமான விவாதங்களை நம்முன் வைக்கும் சிறுகதை தொகுதி நூல். -கவுதம நீலாம்பரன்.   —- […]

Read more

தினமணி தீபாவளி மலர் 2012

தினமணி தீபாவளி மலர் 2012, விலை 100ரூ. வீணை சிட்டிபாபுவின் கச்சேரி ஒன்றைக் கேட்ட ரிக்க்ஷாத் தொழிலாளி ஒருவர், கச்சேரி முடிந்தவுடன் இரண்டு ஒரு ரூபாய் நோட்டுகளை அன்பளிப்பாகத் தந்தாராம். ஐயா தினமும் நான் அஞ்சு, ஆறு ரூபாய் சம்பாதிப்பேன். சம்பாக்கிறதில் பாதிக்குக் குடிச்சுருவேன். நீங்க வாசிக்கறதைப் பார்த்துட்டு இருந்துட்டன். குடிக்கணும்னே தோணலை… என்றும் சொன்னாராம். இந்த அருமையான நிகழ்ச்சியைப் பகிர்ந்து கொள்கிறார் சுந்தர் சி. பாபு, அன்புள்ள அப்பா என்னும் தலைப்பில் பாவேந்தர், கருமுத்து தியாகராயர், பி.ஆர். பந்துலு, நடிகர் ஜெய்சங்கர், அகிலன் […]

Read more
1 278 279 280 281 282 336