குருதிப்புனல்

குருதிப்புனல், இந்திரா பார்த்தசாரதி, கவிதா பப்ளிகேஷன், 8, மாசிலாமணி தெரு, பாண்டிபஜார், தி.நகர், சென்னை 17, விலை 150ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/978-81-8368-072-1.html தமிழ்நாட்டில் நடந்த கலவரங்களில், தஞ்சை மாவட்டம் கீழவெண்மணி கிராமத்தில் நடந்த கலவரம் முக்கியமானது. மிராசுதாரர்களுக்கும், விவசாயிகளுக்கும் நடந்த தகராறில், விவசாயிகள் சுமார் 40பேர் உயிருடன் கொளுத்தப்பட்டார்கள். அவர்களில் பெரும்பாலோர் பெண்கள், குழந்தைகள், முதியவர்கள். இச்சம்பவத்தை அடிப்படையாக வைத்து, எழுத்தாளர் இந்திரா பார்த்தசாரதி எழுதிய குருதிப்புனல் சாகித்ய அகாடமி பரிசைப் பெற்ற சிறந்த நாவல். உணர்ச்சியும் […]

Read more

நானும் என் எழுத்தும்

நானும் என் எழுத்தும், சுந்தர ராமசாமி, காலச்சுவடு பதிப்பகம், பக். 199, விலை 150ரூ. தமிழின முன்னோடி எழுத்தாளர்களில், எல்லோராலும் அன்புடனம், பாசத்துடனும் சு,ரா, என அழைக்கப்படுவர் சந்தர ராமசாமி. இலக்கியம், நவீனத்துவ இலக்கியம், சிறுகதை, புதினம், கட்டுரை என, பல சிந்தனைக் களங்களில் கால் பதித்த பெருமகனார், பன்மொழி வித்தகர், பல விருதுகளுக்கு உறவுக்காரர். அவரது 42 ஆண்டு கால படைப்புகள் பற்றிய பதிவுகள், கட்டுரைகள், என்னுரைகள், கேள்வி-பதில், நாட்குறிப்புகள் என, பல வகைகளில் தொகுத்து வெளியிட்டுள்ளனர் காலச்சுவடு பதிப்பகம். தமிழ் இலக்கியம் […]

Read more

க.நா. சுப்ரமணியனின் தேர்ந்தெடுத்த சிறுகதைகள்

க.நா. சுப்ரமணியனின் தேர்ந்தெடுத்த சிறுகதைகள், தொகுப்பு-சா. கந்தசாமி, சாகித்ய அகடமி, 443, அண்ணாசாலை, சென்னை 18, பக். 240, விலை 125ரூ. பரவலான வாசிப்பு அனுபவம் உள்ள, க.நா.சு.வுக்கு விமர்சகர் என்ற கவுரவம் உண்டு. சர்மாவின் உயில், பொய்த்தேவு போன்ற சிறந்த நாவல்கள் படைத்த பெருமை உண்டு. அவருடைய சிறுகதைப் படைப்புக்கு பெரிய வரவேற்பு இருந்ததாகச் சொல்ல முடியாது. ஐம்பதாண்டுகளுக்கும் மேலாக தமிழ் இலக்கிய உலகில், தன்னை முழுவதுமாக ஈடுபடுத்திக் கொண்டுள்ள, சாகித்ய அகடமி பரிசு பெற்ற சா. கந்தசாமி, க.நா.சு.வின் 24 சறுகதைகளைத் […]

Read more

மன்னுபுகழ் மணவாள மாமுனிவன்

மன்னுபுகழ் மணவாள மாமுனிவன், இரா. அரங்கராஜன், ஸ்ரீ ரங்க நாச்சியார் அச்சகம், திருச்சி, பக்.410, விலை 200ரூ. மணவாள மாமுனிகளின் வாக்கையும் வாழ்க்கையையும் படம் பிடித்துக்காட்டி, படிப்பவர்களை மாமுனிகள் வாழ்ந்த காலத்துக்கே கொண்டுபோய், நேராக அனுபவிக்கும் அனுபவத்தை இந்நூல் அளிக்கிறது என்று அ.வெ. ரங்காசார்யர் எழுதியுள்ள அணிந்துரை நூற்றுக்கு நூறு சரி.  ஸ்ரீ வைஷ்ணவ ஆசார்ய பரம்பரை ஸ்ரீமத் நாதமுனிகளால் தொடங்கப்பெற்று, ஸ்ரீமந் மணவாள மாமுனிகளுடன் நிறைவு பெறுகிறது. அந்தப் பரமனை எப்படிச் சேவிக்க வேண்டும், எப்படி கைங்கர்யங்கள் செய்ய வேண்டும் என்று உதாரண புருஷர்களாய்த் […]

Read more

அன்பே யோகம்

அன்பே யோகம், தா. நீலகண்டபிள்ளை, செம்மூதாய் பதிப்பகம், 17, தாகூர் தெரு, எம்.எம்.டி.ஏ. நகர், சிட்லபாக்கம், சென்னை 64, பக். 150, விலை 80ரூ. 18 கட்டுரைகள் அடங்கிய தொகுப்பு இது. பக்தி இலக்கியங்கள் மனிதர்களை செழுமைப்படுத்தத் தோன்றியவை என்பதை சம்பந்தப்பட்ட ஆசிரியர்களின் பாக்களோடு விளக்கியிருக்கிறார் ஆசிரியர். திருமூலர், திருநாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர், புனிதவதியார், கம்பன் ஆகியோரின் பாடல்களில் பிறரிடம் அன்பு செலுத்த வேண்டும் என்கிற கருத்தை மேலோங்கியிருந்தது என்பதை உணர்த்தும் ஆசிரியர் அன்பே யோகம் என்று நூலுக்கும் தலைப்பிட்டது பொருத்தமானதே. இந்த இலக்கியங்களின் […]

Read more

வரலாற்றில் மணிமங்கலம்

வரலாற்றில் மணி மங்கலம், அனந்தபுரம் கோ. கிருட்டின மூர்த்தி, திருக்குறள் பதிப்பகம், சென்னை 78, பக். 304, விலை 200ரூ. மகேந்திரவர்மனிடம் தோல்வி கண்ட இரண்டாம் புலிகேசி, நரசிம்மவர்மனை வெற்றிகாண காஞ்சிபுரத்துக்கு அருகில் உள்ள மணிமங்கலம் என்ற இடத்தில் போர் புரிந்து தோல்வியைத் தழுவுகிறான். இரண்டாம் புலிகேசியின் போர் முயற்சியால் பல்லவ நாடு பெரும் துன்பத்தைச் சந்தித்திருக்கிறது. இதனால் நரசிம்மவர்மன், இரண்டாம் புலிகேசியை அவன் நாட்டிலேயே அவனைத் தோற்கடிக்கிறான். அதனால் நரசிம்மவர்மன் காலத்தில் காஞ்சிரம் பல்லவருக்கு உரியதாக நிலைபெற்றது. இதனால் பல்லவ நாட்டின் முக்கிய […]

Read more

ஆழ்மனதின் அற்புத சக்திகள்

ஆழ்மனதின் அற்புத சக்திகள், என். கணேசன், பிளாக்ஹோல் மீடியா பப்ளிகேஷன் லிமிடெட், 7/1, 3வது அவென்யூ, அசோக் நகர், சென்னை 83. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0001-009-2.html ஒவ்வொரு மனிதருக்குள்ளும் மகத்தான ஆழ்மனசக்தி உண்டு. முறையான பயிற்சிகளின் மூலம் அத்தகைய சக்தி கைவரப்பெற்று பல அற்புதங்களை நிகழ்த்தியவர்களைச் சித்தர்கள், மகான்கள் என்று அழைக்கிறோம். வெளிநாடுகளிலும் இத்தகையவர்கள் உண்டு. இவர்கள் புரியும் அற்புதங்கள் சில சமயம் அறிவுக்குப் பொருத்தமாகத் தோன்றாது. ஆனால் அவை உண்மை. அறிவியலில் எல்லா வினாக்களுக்கும் விடையில்லை என்றார் […]

Read more

நிஜங்களின் பதிவுகள்

நிஜங்களின் பதிவுகள், கே.ஜி.மகாதேவா, மித்ர ஆர்ட்ஸ் அண்டு கிரியேஷன்ஸ், 20/2, ஜக்கரியா காலனி முதல் தெரு, சூளைமேடு, சென்னை 94, விலை 90ரூ. இலங்கையின் புகழ் பெற்ற எழுத்தாளரும், பத்திரிகையாளருமான கே.ஜி.மகாதேவா எழுதிய கட்டுரைகளும், நேர்காணல்களும் கொண்ட நூல். கோவையில் நடந்த தமிழ் செம்மொழி மாநாடு, சென்னையில் கட்டப்பட்ட அண்ணா நூற்றாண்டு நூலகம், ஆயிரம் வயது கண்ட தஞ்சை பெரிய கோவில் உள்பட மொத்தம் 20 தலைப்புகள். இலங்கைத் தமிழர் பிரச்சினை குறித்து, இந்திய பாராளுமன்றத்தில் நடந்த விவாதத்தின் சுருக்கமும் இடம் பெற்றுள்ளது கட்டுரைகள் […]

Read more

ஸ்ரீ ராமானுஜர் வாழ்வும், தொண்டும்

ஸ்ரீ ராமானுஜர் வாழ்வும், தொண்டும், ஜெகதா, ஸ்ரீசெண்பகா பதிப்பகம், தி.நகர், சென்னை 17, பக். 136, விலை 50ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0001-058-2.html வைணவர்களால் போற்றி வணங்கப் பெறுபவரும், ஸ்ரீபெரும்புதூரில் அவதரித்தவருமான மகான் இராமானுஜரின் வாழ்க்கை வரலாற்றை முறைப்படி தொகுத்து வெளியிட்டுள்ளார் நூலாசிரியர் ஜெகதா. ஒன்றே குலம் என்று எல்லோரையும் சமமாகக் கொண்டாடிய உத்தமர் ராமானுஜர். குருவின் ஆணையையும் மீறி, திருக்கோட்டியூர் சவும்ய நாராயணப் பெருமாள் கோவில் கோபுரத்தின் மேல் ஏறி நின்று, எல்லோரையும் உரத்த குரலில் அழைத்து, […]

Read more

ஆய்வுச் சுடர்கள்

ஆய்வுச் சுடர்கள், முனைவர் ந. வெங்கடேசன், அய்யா நிலையம், பக். 112, விலை 70ரூ. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு, முந்தைய இலக்கியம் முதல் இக்கால இலக்கியம் வரை, எதையும் விடாமல் அத்தனையையும், திறனாய்வு நோக்கில் இந்த நூல் அணுகுகிறது. பள்ளு என்னும் சிற்றிலக்கியம் காட்டும் மருத நில வளத்தையும், சைவத் திருமுறைகள் காட்டும் வாழ்வியல் செய்திகளையும், அழகாக ஆய்வுக்குட்படுத்தியுள்ளார் ஆசிரியர். மு.வ. எனச் சுருக்கமாக அழைக்கப்பெறும், மு. வரதராசனாரின் உரைநடைத் திறனை வெளிப்படுத்தியிருக்கும் விதம் பாராட்டிற்குரியது. தமிழ் இலக்கிய அறிமுகத்தையும், ஆய்வையும் நோக்கில் படையெடுக்கப்பட்டுள்ள இந்த […]

Read more
1 113 114 115 116 117 128