சுவாமி ராமாவுடன் எனது பயணம்

சுவாமி ராமாவுடன் எனது பயணம், ஐஸ்டின் ஓ பிரையன், தமிழில் சிவதர்ஷினி, கண்ணதாசன் பதிப்பகம், சென்னை, விலை 300ரூ. To buy this Tamil book online : https://www.nhm.in/shop/100-00-0002-336-9.html அமெரிக்காவைச் சேர்ந்த ஜஸ்டின் ஓ பிரையன், தொடக்கத்தில் கிறிஸ்தவ பாதிரியராக இருந்தவர். இந்தியாவில் இமயமலையைச் சேர்ந்த ஆன்மிகவாதி சுவாமி ராமா, அமெரிக்காவில் பக்தி பிரசங்கம் செய்தபோது, அவரிடம் முரட்டுத்தனமான கேள்விகள் கேட்ட ஜஸ்டின் ஓ பிரையன், பின்னர் படிப்படியாக சுவாமி ராமாவின் முக்யி சீடராக மாறி, அவருடன் பயணித்தபோது ஏற்பட்ட ஆன்மிக அனுபவங்களை […]

Read more

வியாசர் அருளிய மகாபாரதம்

வியாசர் அருளிய மகாபாரதம், கவிதா பப்ளிகேஷன்ஸ், சென்னை, விலை 200ரூ. மாபெரும் இந்திய இதிகாசங்களில் வியாசர் அருளிய மகாபாரதம் மனித வாழ்வை நெறிப்படுத்தும் நன்னூல். தர்மத்தை உயிர் மூச்சாய் கொண்ட யுதிஷ்டிரன், அநியாய அக்கிரமங்கள் செய்யத் தயங்காத துரியோதனன் இவர்களுக்கிடையே உருவாகிறது பகைமை. முடிவில் எது வெற்றி பெறுகிறது? தர்மமா, அதர்மமா என்ற கேள்வியும், அதற்கான பதிலுமே மிகப்பெரிய மகாபாரதமாய் விரிந்திருக்கிறது. இந்நூலின் சிறப்பு, கண்ணன், யுதிஷ்டிரன், அர்ச்சுனன், கர்ணன், சகுனி, விதுரன் என்று மாறுபட்ட ஆளுமைச் சிறப்புகளை, வாழ்வியல் நெறிகளை உள்ளடக்கியது என்பதுதான், […]

Read more

திருக்குறளுக்கு புதிய உரை

திருக்குறளுக்கு புதிய உரை, மணிவாசகர் பதிப்பகம், சென்னை, விலை 125ரூ. திருக்குறளுக்கு பலர் உரை எழுதியுள்ளனர். ஆரம்ப காலத்தில் எழுதப்பட்ட சில உரைகள், மிகக் கடினமாக இருந்தன. அவற்றுக்கே உரை எழுத வேண்டும்போல் இருந்தன. காலமாற்றத்துக்குத் தக்கபடி சமீப காலமாக எளிய உரைகள் வரத் தொடங்கின. 1000 படங்களுக்கு மேல் வசனம் எழுதியவரும், பல மொழிகள் அறிந்தவருமான ஆரூர்தாஸ் தமிழ் மறை என்ற தலைப்பில் திருக்குறளுக்கு இனிய, எளிய தமிழில் புதிய உரை எழுதியுள்ளார். பாமர மக்களுக்கு புரிந்து கொள்ளத்தக்க வகையில் உரை எளிய […]

Read more

வள்ளுவர் முப்பால் அறத்துப்பால்

வள்ளுவர் முப்பால் அறத்துப்பால், உரையும் உரைவும், உரையாசிரியர் தி.முருகரத்தனம், தமிழ்ச்சோலை வெளியீடு, பக். 145, விலை 100ரூ. உலகம் போற்றும் அறநூலாம் திருக்குறளை இயற்றியவர் திருவள்ளுவர். நாட்டின் தேசிய நூலாக அறிவிப்பதற்குத்தகுதியுடைய திருக்குறளை, பலரும் தத்தம் போக்கில் வெளியிடுகின்றனர். இந்நூலை வெளியிட்டுள்ள இந்த உரையாசிரியர், முதல் நாற்பது குறட்பாக்களை (பாயிரம்) வள்ளுவர் இயற்றவில்லை என கருதுகிறார். திருக்குறளை முப்பால் என்றுதான் கூற வேண்டும் என்றெண்ணும் ஆசிரியர், காரணம் கூறாமல் தம் விருப்பப்படி குறட்பாக்களை புதிய முறையில் வரிசைப்படுத்தி எண்கள் கொடுத்துள்ளார். இந்நூலின் ஆசிரியர் ஒவ்வொரு […]

Read more

நாகூர் குலாம் காதிறு நாவலர்

நாகூர் குலாம் காதிறு நாவலர், ஏவி.எம். நசீமுத்தீன், சாகித்திய அகாடமி, பக். 128, விலை 50ரூ. ஒரு நூற்றாண்டிற்கு முன் வாழ்ந்த தமிழப் பெரும் புலவர் குலாம் காதிறு நாவலர். பாண்டித்துரை தேவர், பாஸ்கர சேருபதி, மு.ராகவையங்கார் போன்றோரோடு இணைந்து, மதுரையில் நான்காம் தமிழ்ச்சங்கம் கண்டவர். புலமைத்திறம் மிக்கவராக, உரைநடை வல்லுனராக, மொழிப்பெயர்ப்பாளராக, நாவன்மை கொண்ட நாவலராக இயங்கிய, குலாம் காதிறுவின் வாழ்க்கை வரலாற்றுச் சுருக்கமும், அவர்தம் அளப்பரிய தமிழ்ப்பணிகளும், பெருங்குணங்களும் நூலில் குறிக்கப்பட்டுள்ளன. சிற்றிலக்கியங்கள் பல படைத்தவர். இவரது நாகூர்ப் புராணம் குறிப்பிடத்தக்கதொன்று. […]

Read more

முதற்கனல்

முதற்கனல், ஜெயமோகன், நற்றிணைப் பதிப்பகம், சென்னை, விலை 290ரூ. இதிகாசங்களையும் புராணங்களையும் தமிழ்நாட்டில் இந்த அறுபது, எழுபது ஆண்டுகளில் நிறையவே விமர்சனம் செய்தாயிற்று. இந்த 21வது நூற்றாண்டில் இந்தியாவின் ஆதி காவியமாகிய வால்மீகியின் ராமாயணம் தமிழில் புதிய மொழிபெயர்ப்பு பெற்றிருக்கிறது. வியாச மகாபாரதம், இன்றைய தமிழ்ப் படைப்பிலக்கியத்தின் இரு பெரும் எழுத்தாளர்களால் எழுதப்பட்டு வருகிறது. பிரபஞ்சன் சில மாதங்களாக இதைத் தொடராகச் சிறப்பாக எழுதி வருகிறார். ஜெயமோகன் தன் இணையதளத்தில் தினம் ஓர் அத்தியாயமாக எழுதி வருகிறார். இதன் முதல் பாகம் நூலாக வெளிவந்து […]

Read more

குறளறம்

குறளறம், திருவள்ளுவர் பதிப்பகம், விழுப்புரம், பக். 240, விலை 150ரூ. திருக்குறள் வெண்பாவால் ஆனது. அதை விருத்தப்பாவில் விளக்கம் அளித்து அனைவரும் எளிதில் புரியும் வண்ணம் படைத்துள்ளார் நூலாசிரியர். முயற்சியும் புதிது. அவர்தரும் கருத்துரைகளும் புதிது. வாழ்க்கை நிலையற்றது என்று வேதனைப்படுவோர் கூட இவரின் விளக்கத்தால்  உற்சாகம் அடையலாம். திருமூலர், வள்ளலார், வேதாத்ரி, மகரிஷி ஆகியோரின் தாக்கம் நூலில் அதிகம். 1330 குறளையும் எளிதாகப் படிக்க இந்நூலை ஒருமுறை வாசித்தால் போதுமானது. -இரா. மணிகண்டன். நன்றி: குமுதம், 13/8/2014.   —- வரலாற்றில் விழுப்புரம் […]

Read more

செவ்விலக்கிய மதிப்புகள்

செவ்விலக்கிய மதிப்புகள், செ. ரவிசங்கர், மெய்யப்பன் பதிப்பகம், சிதம்பரம், பக். 112, விலை 50ரூ. தொல்காப்பியத்திற்குப் பலர் உரை எழுதியுள்ளனர் அவர்களுள் ச.வே.சு.வும் ஒருவர். தொல்காப்பியம் முழுமைக்கும் ச.வே.சு. எளிய விளக்கவுரை எழுதியுள்ளார். தம் உரை நூலில் பல்வேறு இடங்களில் அவர் எடுத்துக் காட்டுகளை தமிழ் சார்ந்து பயன்படுத்தியுள்ள திறத்தை ச.வே. சுப்பிரமணியனாரின் தொல்காப்பிய உரை எடுத்துக்காட்டுத் திறன் என்ற இந்நூலின் முதல் கட்டுரை விளக்குகிறது. அகப்பாடலில் இருக்கும் சங்ககாலச் சூழலியல் கட்டுரையில் வாழிடச் சூழலியல், சுற்றுப்புறச் சூழலியல், பண்பாட்டுச் சூழலியல் போன்றவையும், தமிழர்களின் […]

Read more

வைரமுத்து ஒரு பல்கலைக்கழகம்

வைரமுத்து ஒரு பல்கலைக்கழகம், காவ்யா, சென்னை, விலை 1400ரூ. கவிதை, உரைநடை, சினிமா பாடல், நாவல் என அனைத்து துறையிலும் தனக்கென தனி நடை வகுத்துக் கொண்டு இலக்கிய வானில் உச்சத்தைத் தொட்டவர் கவிபேரரசு வைரமுத்து. ஆண் பெண், சிறியோர் பெரியோர், படித்தோர்-பாமரர், உள்நாட்டினர்-வெளிநாட்டினர் என அனைத்துத் தமிழர்களும் உச்சி முகர்ந்து பாராட்டும் உன்னத கவிஞர் அவர். அவரது படைப்புகளை ஆய்வு செய்து எண்ணற்றோர் பி.எச்.டி. மற்றும் எம்.பில். பட்டங்களைப் பெற்றுள்ளனர். தமிழகம் முழுவதும் 300 பி.எச்டி ஆய்வேடுகளும் 700க்கும் மேலாக எம்.பில். ஆய்வேடுகளும் […]

Read more

தமிழில் பில்கணீயம்,

தமிழில் பில்கணீயம், மணிக்கொடி எழுத்தாளர்கள் பாரதிதாசன், தொகுப்பும் பதிப்பும் – ய. மணிகண்டன், சந்தியா பதிப்பகம், சென்னை, பக். 104, விலை 80ரூ. வடமொழியிலிருந்து பல காவியங்கள், கதைகள், பல தமிழிலும் பிற இந்திய மொழிகளிலும் வழங்குகின்றன. அவ்வாறு வழங்கும் இலக்கியப் படைப்புகளுள் ஒன்றுதான் பில்கணீயம். இச்சொல் பரவலாக அறியப்பட்டதற்குக் காரணம் பாரதிதாசன்தான் என்பர். பில்ஹணீயம் என்ற வடமொழி நூலைத் தழுவி எழுதப்பட்ட அவரது குறுங்காவியம்தான் புரட்சிக்கவி. ஆனால் இக்கதை பாரதிதாசனுக்கு முன்னும் பின்னும் பல இலக்கிய வடிவங்களில் வெளிவந்துள்ளன. 19ஆம் நூற்றாண்டின் இறுதியில் […]

Read more
1 34 35 36 37 38 56