சிவபெருமானுக்குரிய அஷ்ட மஹா விரதங்கள்

சிவபெருமானுக்குரிய அஷ்ட மஹா விரதங்கள், க. முருகானந்தம், பிரேமா பிரசுரம், சென்னை, விலை 150ரூ. விரதங்கள் என்பது இறைவனை நினைப்பதற்காகவே தோன்றியது என்பதும், ஒரு காரணமாகும். அந்த விரதங்கள் எதற்காக இருக்கிறோம் என்பதுகூட தெரியாதவர்களாகவே பலர் இருக்கின்றனர். இந்த நூலில் சிவபெருமானுக்குரிய எட்டு விரதங்களைப்பற்றி, ஆசிரியர் கூறியிருக்கிறார். விரதங்களின் மகிமை, விரதம் தோன்றிய விதம், இந்த விரத நாட்களில் கோவில்களில் நடைபெறும் விழாக்கள் என்று ஆசிரியரின் பார்வை பரவியிருக்கிறது. நன்றி: தினத்தந்தி.   —- மனோரமா இயர்புக் 2014, மலையாள மனோரமா, சென்னை, விலை […]

Read more

கண்ணன் வருவாயா

கண்ணன் வருவாயா, வாழ்வியல் அனுபவங்கள், வரலொட்டி ரெங்கசாமி, தனலெட்சுமி பதிப்பகம், சென்னை, விலை 330ரூ. வாசகர் உலகம் நன்கறிந்த சிறுகதை எழுத்தாளரான, வரலொட்டி ரெங்கசாமி, பகவத்கீதையைக் கையில் எடுத்திருக்கிறார். அத்துடன்கூட, மிகச் சிறந்த சிந்தனையாளர்களின் ஆன்மிக நூல்களையும், கருத்தூன்றிப் படித்திருக்கிறார். நிதானமாக உட்கார்ந்து சிந்தித்துவிட்டு, பகவத் கீதையின், 702 சுலோகங்களுக்கு எளிய தமிழ் நடையில் விளக்கம் (விரிவுரை? பாஷ்யம்?) எழுதியிருக்கிறார். ஏராளமான மேற்கோள்களைப் பொருத்தமான இடங்களில் சரியான விகிதத்தில் கோர்த்திருக்கிறார். மறக்காமல், அவர்களின் பெயர்களைப் பதிவு செய்திருக்கிறார். பகவன் ஸ்ரீ ராமகிருஷ்ணர், மகாகவி பாரதியார், […]

Read more

தமிழில் ஒற்றுப்பிழையின்றி எழுத மிக எளிய விதிகள்

தமிழில் ஒற்றுப்பிழையின்றி எழுத மிக எளிய விதிகள், முனைவர் மணிமேகலை புஷ்பராஜ், பாவேந்தன் நினைவு அறக்கட்டளை, பக். 96, விலை 50ரூ. மூத்த தமிழறிஞர் சிலம்பொலி செல்லப்பனாரின் திருமகள் மணிமேகலையார் படைத்தளித்துள்ள நூல் இது. தமிழ்மொழியின் சிறப்பில் துவங்கி, தமிழ் இலக்கணம் குறித்தும், ஒற்றுப்பிழைகள், வலி மிகுதல், வலி மிகாமை குறித்தும், தவறும் சரியும் ஆகும் சொற்கள் பற்றியும் எழுதி, தமிழின் தலையாய நூல்களையும் குறிப்பிட்டு நூல் நிறைவு பெறுகிறது. அறிஞர் பலர் தமிழில் பிழையின்றி எழுத வழிகாட்டியுள்ளனர். அந்த வரிசையில் அண்மையில் வெளிவந்த, […]

Read more

சங்ககாலத் தொழில்நுட்பம்

சங்ககாலத் தொழில்நுட்பம், பேராசிரியர் த. சாமிநாதன், அன்னம், பக். 195, விலை 190ரூ. தமிழர்கள், சங்க காலத்திலேயே தொழில் நுட்ப அறிவு வாய்க்கப் பெற்றிருந்தவர்களாக இருந்தனர். அதற்கு சான்றாக சங்கப் பாடல்களில் இருந்து, பல்வேறு உதாரணங்களை காட்டி, இந்த நூலாசிரியர் ஆதாரங்களை நிறுவுகிறார். பயிர்த்தொழில், நெசவு, கட்டுமான இயல், மண்பாண்டம் செய்தல், இரும்புத் தொழில், பொன் தொழில், கடறப்யணம், தோல் பதனிடுதல், கண்ணாடி தயாரித்தல், மகளிர் ஒப்பனை, மதுவகைகள் தயாரிப்பு முறைகளும், தெரிந்திருந்ததையும், அன்றிருந்த தொழில்நுட்பங்களையும், ஆசிரியர் விரிவாக விளக்கி உள்ளார். நிறைவு தலைப்பாக, […]

Read more

நரேந்திர மோடி

நரேந்திர மோடி, எஸ்.பி. சொக்கலிங்கம், சிக்ஸ்த்சென்ஸ், பக். 200, விலை 125ரூ. இன்றைய அரசியலின், சர்ச்சைக்குரிய மற்றும் அதிக நம்பிக்கைக்குரிய முகமாக பார்க்கப்படுவது மோடிதான். அவரது பிறப்பில் இருந்து, தற்போதைய பிரதமர் வேட்பாளர்வரை, அனைத்து விஷயங்களையும் இந்த புத்தகம் விளக்குகிறது. கோத்ரா கலவரம் தொடர்பாக, டில்லியில் உள்ள சர்வதேச விவகாரம் மற்றும் மனித உரிமைகளுக்கான சபை அமைத்த நீதிபதி திவத்தியா குழுவின் விசாரணை முடிவுகளில் முக்கியமானவற்றை ஆசிரியர் இதில் சேர்த்திருக்கிறார். மேலும் 1964 முதல் 2002 வரை இந்தியா முழுவதும் பல்வேறு இடங்களில் நடந்த […]

Read more

என்றென்றும் சுஜாதா

என்றென்றும் சுஜாதா, அமுதவன், விகடன் பிரசுரம், பக். 184, விலை 90ரூ. சுஜாதா எழுதிய எழுத்துகளும் சரி, அவரைப் பற்றி மற்றவர்கள் எழுதியதும் சரி. எல்லாமே தனி சுவாரஸ்யத்தோடு இருப்பவை. நூலாசிரியர் ஏறத்தாழ கால் நூற்றாண்டுக் காலம் சுஜாதாவுடன் நெருங்கிப் பழகியவர். அந்த நாட்களில் படிப்படியான அவரது வளர்ச்சியை மகிழ்ச்சியை சில நேரங்களில் அவருக்கு ஏற்பட்ட வருத்தங்களை உடனிருந்து பகிர்ந்து கொண்டவர். சுஜாதா தொடர்பான பல வெளியே வராத மிகச் சுவையான தகவல்களை இந்த நூலில் பதிவு செய்திருக்கிறார். -கேசி. நன்றி: தினமலர், 27/4/2014. […]

Read more

இந்தியத் தத்துவம் ஓர் அறிமுகம்

இந்தியத் தத்துவம் ஓர் அறிமுகம், தேவி பிரசாத் சட்டோபாத்யாயா, தமிழில் வெ. கிருஷ்ணமூர்த்தி, படைப்பாளிகள் பதிப்பகம். பல நூற்றாண்டுகளாக கற்பதற்கு கடினமானதாக கருதப்பட்ட, இந்திய தத்துவ நூல்களை எளிமைப்படுத்தி, அவற்றைப் பற்றிய புரிதலை நமக்கு இந்நூல் ஏற்படுத்துகிறது. இந்த நூலிலுள்ள 28 தொடர் கட்டுரைகள், இந்திய மண்ணில் வேர்விட்டு வளர்ந்துள்ள தத்துவங்களின் தோற்றத்தையும், வளர்ச்சியையும், பண்டைய மத்திய கால இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி நிலைகளோடு ஒப்பிட்டு, தத்துவங்களின் உண்மையான மதிப்பையும், தேவையையும் நமக்கு அறிமுகம் செய்கின்றன. இந்த நூல் சென்னை தரமணியில் செயல்படும் உலகத் […]

Read more

சென்னைக்கு மிக அருகில்

சென்னைக்கு மிக அருகில், விஸ்வபாரதி, காவ்யா, சென்னை, பக். 128, விலை 100ரூ. படைப்பின் அகத்தேடல் அன்பாக இருக்கட்டும், படைப்பின் அடிநாதம் அறமாக இருக்கட்டும், படைப்பின் நோக்கம் எல்லைகள் கடந்த மனித நேயமாக இருக்கட்டும் என தனது முகவுரையில் தெளிவுபடுத்திவிடுகிறார் விஸ்வபாரதி. இத்தொகுப்பில் மிக அழகான கதை என்றும், வடிவ அளவிலும் நிறைவான கதை என்றும் பூவரசு கதையைச் சொல்லலாம். கிராமத்தின் நம்பிக்கைகள் சார்ந்த சங்கிலிசி சாமி கதை நிறைவாக உள்ளது. இதேபோல பல கதைகளிலும் சுற்றுச் சூழல் பிரச்னை, சரிந்துபோன சமூக மதிப்பீடுகள் […]

Read more

கம்பனில் சங்க இலக்கியம்

கம்பனில் சங்க இலக்கியம், ம.பெ. சீனிவாசன், மீனாட்சி புத்தக நிலையம், மதுரை, பக். 304, விலை 200ரூ. கம்பரின் தொல்காப்பியப் புலமை கம்பராமாயணத்தில் பல இடங்களில் பளிச்சிடுகின்றன. அதேபோல் கம்பர், அகத்திணை, புறத்திணை இரண்டையும் போற்றிய விதத்தையும், சங்க இலக்கிய நூல்களில் இடம்பெற்றுள்ள பாடல்களைத் தம் பாடலில், ஏற்றிப் போற்றியுள்ள பாங்கையும் இடையள நாட்டு மணக்குடியான் பால்வண்ண தேவனான வில்லவதரையன் அகநானூற்றுக்கு அகவற்பாவால் எழுதிய உரைப் பாயிரத்தில் சங்கப் புலவர்களைச் சான்றோர் என்று குறிப்பிடுவதை அடியொற்றி, கம்பர் கோதாவரி ஆற்றுக்கு உவமை கூறுமிடத்தில் சான்றோர் […]

Read more

நரேந்திர மோடி

நரேந்திர மோடி, சந்திமௌலி, அல்லயன்ஸ் கம்பெனி, பக். 168, விலை 150ரூ. நேர்மையும் நிர்வாகத்திறமையும் மிக மிகச் சாதாரண குடும்பத்தில் பிறந்த நரேந்திர மோடி, கட்சிக்குள்ளும், வெளியிலும் எதிர்ப்புகளைச் சமாளித்து, சாதனையாளராக மாறியது எப்படி என்பதை விவரிக்கும் நூல். காலத்தின் கட்டாயத்தால் குஜராத்தில் மோடி முதல்வராகப் பதவியேற்ற சிறிது காலத்துக்குள்ளாகவே நிகழ்ந்த கோத்ரா ரயில் எரிப்புச் சம்பவமும், அதைத் தொடர்ந்து நிகழ்ந்த கலவரமும் மாறாத வடுக்களாகத் திகழ்கின்றன. கலவரத்தின்போதும், அதற்கு முன்னர் 2001இல் நிலநடுக்கத்தால் ஏற்பட்ட கடும் பாதிப்புகளைச் சீர் செய்யவும், அதன் பின்னர் […]

Read more
1 688 689 690 691 692 841