காதல் நதி

காதல் நதி, லோகம் பதிப்பகம், சென்னை, விலை 60ரூ. தலைப்புக்கு ஏற்ப, காதல் கவிதைகள் நிறைந்த புத்தகம். மாதிரிக்கு ஒன்று, இளமையிற் கல் என்பதை உன்னைக் கண்டதும் இளமையில் காதல் எனத் திருத்திக் கெண்டேன். படங்கள், அழகுக்கு அழகு சேர்க்கின்றன. நன்றி: தினத்தந்தி, 23/4/2014.   —- நூற்றாண்டு நாயகர் பேரறிஞர் அண்ணா, எம்.எஸ்.தியாகராஜன், தமிழ்ச்சோலை பதிப்பகம், சென்னை, விலை 215ரூ. தனது அறிவாற்றலாலும் அயராது நூல் வாசிப்பாலும், அரசியல் சாணக்கியத்தனத்தாலும், சட்டசபை, பாராளுமன்றத்தில் நுட்பமான உரைகளால், சர்வ கட்சித் தலைவர்களின் நன்மதிப்பைப் பெற்று […]

Read more

சிறுவாடு

சிறுவாடு, மாலிறையன் (இரா. கிருட்டிணமூர்த்தி), சந்தியா பதிப்பகம், சென்னை, விலை 90ரூ. மரபுக் கவிதை நூல்கள் அரிதாகி வருகிற இன்றைய நிலையில் பல விஷயங்களை பாடுபொருளாகக் கொண்ட சிறுவாடு கவிதை நூலைப் படைத்திருக்கிறார் கவிஞர் மாலிறையன். பாடல்கள் அனைத்திலும் இயல்பான சந்தமும், அழகும் கொஞ்சுகின்றன. கவிஞரின் தமிழ்ப் பற்றை நூல் முழுவதும் காண முடிகிறது. நன்றி: தினத்தந்தி, 23/4/2014.   —- காணாமல் போன கவிதைகள், தங்கத்தாய் பதிப்பகம், புதுக்கோட்டை, விலை 140ரூ. பஞ்சபூதம், ஆறாம் அழிவு, இரக்கத்தின் சிலுவைகள் உட்பட பல்வேறு தலைப்புகளில் […]

Read more

பலி கடாக்கள்

பலி கடாக்கள், அகில இந்திய மில்லி கவுன்சில், சென்னை, விலை 300ரூ. தீவிரவாதத்திற்கு எதிரான நடவடிக்கைகள் என்ற பெயரில் நம் நாட்டின் உளவுத்துறை, காவல்துறை ஆகியவை என்ன செய்து கெண்டிருக்கின்றன என்பதை விளக்கிடும் நூல். அரசு தான் செய்யும் அத்தனை அத்துமீறல்களையும் நியாயப்படுத்திட தேவையான சட்டங்களை இயற்றிக் கொள்கின்றது. இன்னும் ஒருபடி மேலேபோய் சட்டங்களை இயற்றிட தேவையான தீவிரவாத செயல்களை அரசே ஏற்பாடு செய்கின்றது. இதுபற்றிய பல்வேறு அறிக்கைகள், ஆவணங்கள், செய்தி அறிக்கைகள் ஆகியவற்றின் தொகுப்பு இந்நூலில் இடம் பெற்றுள்ளன. சட்டத்திற்கு புறம்பான கைதுகள், […]

Read more

அசுரன்

அசுரன், மஞ்சுள் பப்ளிஷிங் ஹவுஸ் பி லிட், சென்னை, விலை 395ரூ. இலங்கை அரசன் ராவணன் மற்றும் அவனது அசுர இன மக்களின் வீரக் கதையை எடுத்துக் கூறுகிறது இப்புத்தகம். ராமாயணத்தில் அறியப்படாத ஒரு பழங்கதையை இந்நூல் கூறுகிறது. அசுரன் கதையில் ராவணின் மகள் சீதை. சீதை அசுரகுலத்து அரசியாக வளரவில்லை என்றாலும் அவள் அவனுடைய மகள். அவளுடைய நல்வாழ்க்கைக்காக ராவணன் செய்யும் செயல்கள் ஒவ்வொன்றும் தவறாகப் போக, அவனது உடன்பிறப்புக்களும் மகனும் மாண்டு போகிறார்கள். இறுதியில் அவனே கொல்லப்படுகிறான். அசுரகுலம் அழிந்து போகிறது. […]

Read more

திருக்குறள் புதுக்கவிதை வடிவில்

திருக்குறள் புதுக்கவிதை வடிவில், காவ்யா, சென்னை, விலை 900ரூ. கடவுள் மனிதனுக்குச் சொன்னது கீதை. மனிதன் கடவுளுக்குச் சொன்னது திருவாசகம். மனிதன் மனிதனுக்குச் சொன்னது திருக்குறள். மனிதன் மகோன்னத நிலையடையும் நெறிகளையும் அறங்களையும் அழகாக சொன்னது திருக்குறள். அத்திருக்குறளுக்கு உரைநடையில் விளக்கம் எழுதியவர்கள் பலர். சிலரது உரை சாமான்யர்களுக்கு புரிவது கடினம். அதனால் உரைநடையை வேறொரு கோணத்தில் புதுக்கவிதை வடிவத்தில் கொடுத்தால் அனைவரும் படித்து இன்புறுவர் என்றெண்ணி இந்நூலை படைத்துள்ளார் நூலாசிரியர் கி.ரா. கிருஷ்ண பிரசாத். நன்றி: தினத்தந்தி, 23/4/2014.   —- பகதூர்கான் […]

Read more

காலத்தின் திரைச்சீலை

காலத்தின் திரைச்சீலை, டிராட்ஸ்கி மருது, தொகுப்பு-அ. வெண்ணிலா, அகநி வெளியீடு, வந்தவாசி, பக். 280, விலை 300ரூ. தமிழ் ஓவிய மரபில் நெடுவழிப்பாதை ஒன்றை உருவாக்கி அதில் பயணித்துக் கொண்டிருக்கும் ஓவியர் டிராட்ஸ்கி மருதுவின் ஆளுமையைத் தொகுத்துத் தரும் நூல். விவாதங்களுக்கு அப்பாற்பட்டு, நாற்பதாண்டுகளுக்கும் மேலாக, அழுத்தமான தன்னுடைய கோடுகளின் மூலம் தமிழ்க் கலை உலகை அடையாளப்படுத்துவதில் முன் நிற்கும் மருதுவின் வாழ்க்கைப் பதிவுகள், ஒரு ஆவணப் பதிவாக மட்டுமாகிவிடாமல், உயிரோட்டத்துடனான செயலாகவும் ஆக்கியதில் அ.வெண்ணிலாவின் பங்கு அதிகம். கட்டுரைகளை வாசிக்கும்போது கண்முன் வந்து […]

Read more

கதைகள் வழி கொன்றை வேந்தன்

கதைகள் வழி கொன்றை வேந்தன், பேராசிரியர் ஏ. சோதி, நன்மொழிப் பதிப்பகம், புதுச்சேரி, பக். 80, விலை 50ரூ. ஔவையாரின் கொன்றை வேந்தன் என்ற நீதி நூலின் வழி நின்று 16 கதைகளை உருவாக்கியுள்ளார் ஆசிரியர். கதைகள் வழியாக அறிவுரைகளைச் சொன்னால் சிறுவர், சிறுமியர் மனங்களில் கதையும் கருத்தும் பதியும். அவர்கள் நல்வழியில் நடக்கத் தூண்டுதலாக அமையும் என்ற நூலாசிரியரின் எண்ணம் ஈடேறியுள்ளது. கொன்றை வேந்தனில் வரும் அறிவுரைகளையே கதைகளுக்குத் தலைப்பாக வழங்கியிருப்பது சிறப்பு. நன்றி: குமுதம், 30/4/2014.   —- குறையொன்றுமில்லை, கவிஞர் […]

Read more

குழந்தைகளின் பிரச்சினைகளை உளரீதியாக தீர்ப்பது எப்படி

குழந்தைகளின் பிரச்சினைகளை உளரீதியாக தீர்ப்பது எப்படி?, ஜான் முருகசெல்வம், பூங்கொடி பதிப்பகம், சென்னை, விலை 25ரூ. குழந்தை வளர்ப்பில் இன்றைய இளம் பெற்றோர் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் அதிகம். அந்தக் காலம்போல, இவ்விஷயத்தில் வழிகாட்டுவதற்கு இன்று தாத்தா பாட்டிகள் இல்லை. இந்நிலையில் குழந்தை வளர்ப்பில் சந்திக்க வேண்டியிருக்கும் முக்கியமான பிரச்சினைகளை வகைப்படுத்தி, அவற்றுக்கான தீர்வுகளை தெளிவாக வழங்கியிருக்கிறார் ஆசிரியர். நன்றி: தினத்தந்தி.   —- நினைத்ததை நிறைவேற்றும் காரிய சித்தி மந்திரங்கள், ஸ்ரீராம் ஸ்வாமிகள் எடையூர் சிவமதி, அழகு பதிப்பகம், சென்னை, விலை 45ரூ. இறைவனை […]

Read more

முக்கிய விண்ணப்பப் படிவங்கள்

முக்கிய விண்ணப்பப் படிவங்கள், வடகரை செல்வராஜ், ரேவதி பப்ளிகேஷன்ஸ், சென்னை, விலை 350ரூ. இன்றைய காலகட்டத்தில் சில விண்ணப்பப் படிவங்களை நிரப்புவதில் பட்டதாரிகளே தள்ளாட்டத்தை சந்தித்து வருகின்றனர். அப்படியிருக்கையில் சரிவர படிக்காதவர்களின் நிலை சொல்லித் தெரிய வேண்டியதில்லை. அரசு துறைகளில் வழங்கப்படும் விண்ணப்பப் படிவங்களை சரிவர நிரப்பாததால், அவை நிராகரிக்கப்பட்டு கிடைக்க வேண்டிய பணியை இழந்தவர்கள்கூட இருக்கிறார்கள் என்ற தகவலே விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்வதில் உள்ள முக்கியத்துவத்தை உணர்த்தும்விதமாக இருக்கிறது. இதுபோன்ற இன்னல்களில் இருந்து விடுவிக்கும் பொக்கிஷமாக இந்நூல் வெளியாகி உள்ளது. அரசுத் […]

Read more

சிவப்பு நிற மழைக்கோட்டில் ஒரு பெண்

சிவப்பு நிற மழைக்கோட்டில் ஒரு பெண், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்,  சென்னை, விலை 145ரூ. மூட நம்பிக்கை மற்றும் மத கலவரங்களினால் ஏற்பட்ட பாதிப்புகளை மையமாக கொண்டு மக்களிடையே பகுத்தறிவு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக, உருது இலக்கியவாதி சாதத் ஹசன் மண்ட்டோவின் கதைகளை தமிழில் மொழிபெயர்த்து தந்துள்ளார் உதயசங்கர். சிறப்பாக மொழிபெயர்க்கப்பட்டிருப்பதால், இவை மொழி பெயர்ப்புக் கதைகள் என்பதையே மறந்து விடுகிறோம். நன்றி: தினத்தந்தி.   —- சீனப்பொருள்கள் இறக்குமதியும் இந்திய சிறுதொழில்களும், ஆ. சண்முகவேலாயுதன், சென்னை, விலை 75ரூ. இப்போது கடைகளுக்குச் […]

Read more
1 689 690 691 692 693 841