வாலிப வாலி

வாலிப வாலி, நெல்லை ஜெயந்தா, வாலி பதிப்பகம், சென்னை, பக். 374, விலை 250ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0000-722-0.html கண்ணனே நீ வரக் காத்திருந்தேன். கண்விழித் தாமரை பூத்திருந்தேன் எனும் காதல் பாடல், ஆனாலும் பாஞ்சாலி துயரமெல்லாம் பாவையினம் அறியாதோ? எனும் காப்பியச் செய்தி ஆனாலும், உலகம் சுழல்கிறது. அதன் பயணம் தொடர்கறிது – வெள்ளிக்கிமை விடியும் வேளை வாசலில் கோலமிட்டேன். வள்ளிக் கணவன் பேரைச் சொல்லிக் கூந்தலில் பூ முடித்தேன் என்ற பக்தி ரசமாயினும், திரை இசைக் […]

Read more

பாண்டியர் காலச் செப்பேடுகள்

பாண்டியர் காலச் செப்பேடுகள், அகநி வெளியீடு, 3, பாடசாலை வீதி, அம்மையப்பட்டு, வந்தவாசி 604408, விலை 300ரூ. To buy this Tamil book onine – www.nhm.in/shop/100-00-0000-811-3.html இந்த நூலின் ஆசிரியர் டாக்டர் மு. ராஜேந்திரன் ஐ.ஏ.எஸ்., திருவண்ணாமலை மாவட்டக் கலெக்டராக இருந்தபோது மாவட்டத்தில் உள்ள 1000 ஆண்டுகளுக்கு முற்பட்ட பழமையான கோவில்களில் இருந்த ஆயிரத்துக்கு மேற்பட்ட கல்வெட்டுகளை, தொல்லியல் துறையின் உதவியுடன் படியெடுத்தவர். பாண்டியர் வரலாறு நீண்டது. நெடியது. ஆயிரக்கணக்கான கல்வெட்டுகள், பல நூறு செப்பேடுகள், ஓலைச்சுவடிகள் மூலம் அவர்களின் வரலாற்றை அறிய […]

Read more

சங்க இலக்கிய ஆய்வு மாலை

சங்க இலக்கிய ஆய்வு மாலை, பதிப்பாசிரியர் கி.இராசா, பதிப்புத்துறை பாரதிதாசன் பல்கலைக்கழகம், திருச்சி 620024, பக். 212, விலை 120ரூ. இத்தொகுப்பில் உள்ள 14 கட்டுரைகளை எழுதியவர்களில், முனைவர்கள் இருவரைத் தவிர மற்ற பன்னிருவரும் முனைவர் பட்ட ஆய்வு மாணவர்கள். முதன்முதலில் தி போனே என்பவரால் அறிமுகப்படுத்தப்பட்டதுதான் சூழியற் பெண்ணியம். ஆமாம் பெண்ணியம் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறோம். அது என்ன சூழியற் பெண்ணியம்? சூழியற் பெண்ணியமும் திணை இலக்கியமும் என்ற கட்டுரையில் இதுபற்றி விரிவாக விளக்கியுள்ளார் கி.இராசா. ஒரே கருத்தை பல்வேறு புலவர்கள் எவ்வாறு வேறு […]

Read more

உரை மாண்புகள்

உரை மாண்புகள், இரா. குமரவேலன், விழிகள் பதிப்பகம், 8ஏம், 139, 7ஆம் குறுக்குத் தெரு, திருவள்ளுவர் நகர், திருவான்மியூர் விரிவு, சென்னை 41. பக். 160, விலை 130ரூ. கருத்தரங்குகளில் வாசிக்கப்பட்ட எட்டு கட்டுரைகளின் தொகுப்பு. சிலப்பதிகாரம் அடியார்க்கு நல்லார், திருக்குறள் பரிமேலழகர், திருக்குகோவையார் பேராசிரியர், இவ்வாறு அறிஞர் பெருமக்கள் மனதில் பதிந்துவிட்ட உரை (உண்மை)கள் இவை. அடியார்க்கு நல்லாரின் சிலப்பதிகார உரைக்கு முன்பே அரும்பதவுரை ஒன்று இருந்துள்ளது. ஆனால் அடியார்க்கு நல்லார் உரைதான் விரிவானதாக விளங்குகிறது. இதைப் பற்றி ஆராய்கிறது அடியார்க்குநல்லார் உரைநலம் […]

Read more

ஒரு கதை வசனகர்த்தாவின் கதை

ஒரு கதை வசனகர்த்தாவின் கதை, ஆரூர்தாஸ், மணிவாசகர் பதிப்பகம், 31, சிங்கர் தெரு, பாரிமுனை, சென்னை 1, பக். 448, விலை 190ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0001-796-8.html கதை வசனகர்த்தாவாக திரையுலகில் புகழ் பெற்ற ஆரூர்தாஸ் தனது வாழ்க்கை அனுபவங்களை சுவைபட விவரிக்கும் நூல் இது. அவரின் வாழ்க்கை வரலாற்றோடு அந்தக் கால கலையுலகின் வரலாறும் இதில் பின்னிப் பிணைந்திருக்கிறது. பராசக்தி படத்தில் அறிமுகமானபோது, சிவாஜியை குதிரை மூஞ்சி என்று சொல்லி படத்திலிருந்தே தூக்கிவிடச் சொன்ன ஏ.வி. மெய்ப்ப […]

Read more

தியானமும் பயிற்சியும்

தியானமும் பயிற்சியும், சுவாமி ராமா, தமிழில் புவனா பாலு, கண்ணதாசன் பதிப்பகம், சென்னை 17, பக். 154, விலை 100ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0001-917-8.html மேலை நாடுகளில் யோகா, தியானம் மற்றும் கீழை நாடுகளில் சிந்தனைகளைக் குறித்த தற்கால எழுத்தாளர்கள், மேதைகளின் கட்டுரைகள் அடங்கிய தொகுப்பு இந்நூல். தியான முறைகளின் குறிக்கோள் மற்றம் யோக ஞானத்தை அடையும் வழிமுறைகளைப் பற்றிய அனைத்தையும் உள்ளடக்கி, எளிமையான விரிவுரைகள் இந்நூலில் உள்ளன. மனிதன் தனது அகம் மற்றும் புறம் என்னும் இரு […]

Read more

என்றென்றும் நன்றியுடன்

என்றென்றும் நன்றியுடன், கே.எஸ். ரவிக்குமார், ஜே.டி.ஜீவா, நாகரத்னா பதிப்பகம், 3ஏ, டாக்டர் ராம் தெரு, நெல்வயல் நகர், பெரம்பூர், சென்னை 11, பக். 96, விலை 70ரூ- To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0000-711-3.html திரைப்பட இயக்குநர் கே.எஸ். ரவிக்குமாரின் பன்முகங்களையும் மிகச் சுவையாக வெளிப்படுத்தும் நூல். அவரிடம் துணை இயக்குநராகப் பணிபுரியும் நூலாசிரியர் அந்த அனுபவஙங்களிலிருந்து இந்நூலை எழுதியிருக்கிறார். பல வெற்றிப் படங்களை இயக்கியவர் என்பதற்கு அப்பால் கே.எஸ். ரவிக்குமார் என்ற மனிதரின் நல்ல பண்புகளைச் சித்தரிக்கும் பல சுவையான […]

Read more

க.நா. சுப்ரமணியனின் தேர்ந்தெடுத்த சிறுகதைகள்

க.நா. சுப்ரமணியனின் தேர்ந்தெடுத்த சிறுகதைகள், தொகுப்பாசிரியர் சா. கந்தசாமி, சாகித்திய அகாதெமி, 443, அண்ணாசாலை, தேனாம்பேட்டை, சென்னை 18, பக். 240, விலை 125ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0001-918-0.html தமிழ் இலக்கிய வாசகர்கள் அனைவராலும் அறியப்பட்ட எழுத்தாளர் க.நா.சு. அவர் எழுதிய தொண்ணூற்றுக்கும் மேற்பட்ட சிறுகதைகளில் தேர்ந்தெடுத்த 24 சிறுகதைகளின் தொகுப்பு இது. க.நா.சு. மிகச் சிறந்த இலக்கிய விமர்சகர் என்பதில் சந்தேகம் இல்லை. அதற்காக அவர் எழுதிய எல்லாக் கதைகளும் சிறந்தவையாக இருந்தாக வேண்டிய கட்டாயமும் இல்லை. […]

Read more

நில் கவனி கண்மணி

நில் கவனி கண்மணி, மார்பக நோய்களும் மருத்துவ தீர்வுகளும், டாக்டர் க. முத்துச் செல்லக்குமார், விகடன் பிரசுரம், சென்னை 2, பக். 80, விலை 65ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0000-840-7.html குழந்தைப் பருவம் முதல் ஒவ்வொரு கட்டமாக பெண்ணின் மார்பக வளர்ச்சி குறித்தும் ஒவ்வொரு பருவங்களின்போதும் அவை அடையும் மாற்றங்கள் குறித்தும் விரிவாகக் கூறும் நூல். மார்பகத்தில் புற்று நோய் இருக்கிறதா என்பதைத் தெரிந்து கொள்ள பெண்கள் தங்களுக்கு தாங்களே மார்பக பரிசோதனை செய்து கொள்ளும் முறைகள் விளக்கப்பட்டிருக்கின்றன. […]

Read more

மனிதன் தேவர் நரகர்

மனிதன் தேவர் நரகர், பிரபஞ்சன், புதிய தலைமுறை வெளியீடு, விலை 180ரூ. இன்றைக்கு யார் யாரை எல்லாமே பூனை நடையைப் பார்த்துவிட்டு உலக அழகி என்று மகுடம் சூட்டுகிறார்கள். தமிழ்த்திரை உலகில் நிஜமாகவே அப்படி ஒருவர் இருந்தார். உணவு, நீர் இரண்டும் அருந்தாமல் மூன்று இரவுகளும் மூன்று பகல்களும் பசியும் தாகமும் இன்றி ராஜகுமாரியை ஒரு ரசிகர் பார்த்துக்கொண்டிருக்கலாம். அத்தனை பெரிய பிரபஞ்ச அழகி அவர்…‘ என்று எழுதுகிறார் பிரபஞ்சன். பி.யு. சின்னப்பா நடித்த கிருஷ்ணபக்தி டிவிடியைப் பார்த்துவிட்டே இந்த விமர்சனம். அந்த சின்னப்பாவுக்கு […]

Read more
1 760 761 762 763 764 841