திருத்தொண்டர்கள்

திருத்தொண்டர்கள் (63 நாயன்மார் வரலாறு), வீ. தமிழ்ச் சேரனார், தஞ்சை பெரிய கோயில் வார வழிபாட்டு மன்றம், தஞ்சாவூர், பக். 256, விலை 120ரூ. சைவ சமயத்தின் ஒப்பற்ற கருவூலமாக விளங்கும் பன்னிரு திருமுறை வரிசையில் பன்னிரண்டாவது திருமுறையாக வைத்துப் போற்றப்படுவது பெரியபுராணம். தெய்வச் சேக்கிழார் அருளிய அப்பெரியபுராணத்தை அடிப்படையாகக் கொண்டு, 63 மூன்று நாயன்மார்களின் அருள் வரலாற்றை விரித்துரைக்கிறது இந்நூல். நாயன்மார்கள் பிறந்த ஊர், குலம் அவர்களுடைய சிவ பக்தியின் ஆழம், இறைவன் அவர்களைத் தடுத்தாட்கொண்டவிதம் எல்லாமே சுவைபட எழுதப்பட்டுள்ளது. குறிப்பாக மானக்கஞ்சாற […]

Read more

எல்லைப்புறத்தில் ஓர் இதயத்தின் குரல்

எல்லைப்புறத்தில் ஓர் இதயத்தின் குரல், கர்னல் கணேசன், தாரிணி பதிப்பகம், 1, முதலாவது தெரு, சந்திரபாக் அவென்யூ, மைலாப்பூர், சென்னை 4, விலை 100ரூ. நூல் ஆசிரியர் கர்னல் கணேசன், இந்திய ராணுவ அதிகாரியாக பணியாற்றிய அனுபவங்களை அவ்வப்போது தனது அண்ணனுக்கு எழுதிய கடிதங்களின் கோர்வையே இந்நூல். பாகிஸ்தான் போர், சீன போர் ஆகியவற்றில் பங்கெடுத்தது, வங்காளதேச உதயம் ஆகிய அனுபவங்களை பகிர்ந்துள்ளார். இளைஞர்கள் படித்து பின்பற்ற வேண்டிய புத்தகம். விலை 150ரூ. இதே நூலாசிரியர் எழுதிய மற்றொரு புத்தகம் சிவந்தமண், கைப்பிடி நூறு. […]

Read more

கம்யூனிஸத்திற்குபின் ரஷ்யா

கம்யூனிஸத்திற்குபின் ரஷ்யா, நடிகர் ராஜேஷ், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், 41பி, சிட்கோ இண்டஸ்ட்ரியல் எஸ்டேட், அம்பத்தூர், சென்னை 98, விலை 100ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0001-157-7.html நடிகர் ராஜேஷ் தனது ரஷிய பயணத்தின்போது தனக்கு ஏற்பட்ட அனுபவங்களை நூலாக தொகுத்துள்ளார். இந்த நூலை படிக்கும்போது ரஷியாவுக்கு சென்று வந்த உணர்வு ஏற்படுகிறது. சோவியத் ரஷியா 22 குட்டி நாடுகளாக பிரிந்ததும், அதனால் கம்யூனிசம் பலியான சம்பவங்களும் நூலில் விரிவாக விளக்கப்பட்டுள்ளது. இன்றைய ரஷியாவின் பண்பாடு, கலாசாரம், விலைவாசி […]

Read more

காவல் புலன் விசாரணை

காவல் புலன் விசாரணை, வீ. சித்தண்ணன், ஜெய்வின் பதிப்பகம், 4/391, ஏ, ராம்தோட்டம், அண்ணாசாலை, பாலவாக்கம், சென்னை 41, விலை ஒரு பாகம் 500ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0001-306-8.html குற்றவாளிகள் தண்டனையிலிருந்து தப்பக்கூடாது, நிரபராதிகள் தண்டிக்கப்படக்கூடாது என்ற உயரிய எண்ணத்தை மையமாக வைத்து காவல் புலன்விசாரணை அதிகாரங்கள், அணுகுமுறைகள் மற்றும் நுணுக்கங்கள் என்ற தலைப்பில் 1034 பக்கங்களுடன் 25 தலைப்பகளில் 2 பாகம் கொண்ட நூலை வீ. சித்தண்ணன் எழுதி உள்ளார். இவர் 35 ஆண்டுகள் காவல் துறையில் […]

Read more

பூர்வீக பூமி

பூர்வீக பூமி, சூர்யகாந்தன், பாவை பப்ளிகேஷன்ஸ், 142, ஜானிஜான்கான்சாலை, ராயப்பேட்டை, சென்னை14, விலை 80ரூ. கர்நாடக மாநிலத்திற்கு இடம் பெயர்ந்து பிழைக்க சென்ற விவசாயிகள் பற்றிய கதையே பூர்வீக பூமி நாவல். கிராமத்தில் வேளாண்மை பொருளாதாரம் வீழ்ச்சியடைந்ததால் புதிய வாழ்க்கை தேடுவதும், ஏழை விவசாயிகளே ஒருவரை ஒருவர் ஏமாற்றிச் சுரண்டுதல் மற்றும் அரசியல் நாடகங்களால் அண்டை மாநில வெறி தூண்டப்படுதலையும், அதனால் ஏற்படும் விளைவுகளையும் நூலாசிரியர் சூர்யகாந்தன் இந்த நாவலில் அருமையாக வெளிப்படுத்தி உள்ளார். கோவை மாவட்டத்து மக்கள் மொழியின் பச்சை நெடி நாவல் […]

Read more

சாகச வீரர் சச்சின்

சாகச வீரர் சச்சின், குன்றில்குமார், அழகு பதிப்பகம், 15/21, டீச்சர்ஸ் கில்டு காலனி, இரண்டாவது தெரு, ராஜாஜி நகர் விரிவு, வில்லிவாக்கம், சென்னை 49, விலை 100ரூ. இந்திய கிரிக்கெட் வீரர்களின் இன்று உலகப்புகழ் பெற்ற சாதனையாளராக விளங்குபவர் சச்சின் டெண்டுல்கர். அவருடைய வாழ்க்கை வரலாற்றை சுவைபட எழுதியுள்ளார் குன்றில்குமார். கிரிக்கெட்டில் உலக சாதனை படைத்தவர் ஆஸ்திரேலியாவை சேர்ந்த பிராட்மேன். அவர் மனதைக் கவர்ந்தவர் டெண்டுல்கர்தான். தன்னுடைய 90வது வயது பிறந்தநாள் விழாவில் கலந்து கொள்ள டெண்டுல்கரை அழைத்துப் பெருமைப்படுத்தினார் பிராட்மேன். சாதனை வீரர் […]

Read more

உலகைக் கவர்ந்த உன்னதக் கதைகள்

உலகைக் கவர்ந்த உன்னதக் கதைகள், சாகம்பரிதாசன், எம்.ஏ. ஜெய் ஷங்கர், கடலங்குடி பப்ளிகேஷன்ஸ், 38, அய்யர்தெரு, தி.நகர், சென்னை 17, விலை 60ரூ. சிறுகதைகள் எப்போதுமே ரசமானவை. படிக்க சுவாரசியமானவை. அதிலும் உலகப் புகழ்பெற்ற சிறுகதைகளை படிக்கும்போது அதன் சிறப்பு இன்னமும் நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது. இந்நூலில் உலகப் புகழ்பெற்ற 8 சிறுகதைகளை தொகுத்து தந்திருக்கிறார்கள். பணக்கார தோழியின் நெக்லசை இரவல் வாங்கி தொலைத்துவிட்டு அதனால் அவதிப்பட்ட நடுத்தர வர்க்க பெண்ணின் போராட்டத்தை சொல்லும் நெக்லஸ் ஓ நெக்லஸ் தொடங்கி அத்தனை கதைகளிலும் ஆச்சரியம் […]

Read more

நிஜங்களின் பதிவுகள்

நிஜங்களின் பதிவுகள், கே.ஜி. மகாதேவா, மித்ரா ஆர்ட்ஸ் அண்டு கிரியேஷன்ஸ், 20/2, ஜக்கரியா காலனி முதல் தெரு, சூளைமேடு, சென்னை 94, விலை 90ரூ. இலங்கையின் புகழ் பெற்ற எழுத்தாளரும் பத்திரிகையாளருமான கே.ஜி.மகாதேவா எழுதிய கட்டுரைகளும், நேர்காணல்களும் கொண்ட நூல். கோவையில் நடந்த தமிழ் செம்மொழி மாநாடு, சென்னையில் கட்டப்பட்ட அண்ணா நூற்றாண்டு நூலகம், ஆயிரம் வயது கண்ட தஞ்சை பெரிய கோவில் உள்பட மொத்தம் 20 தலைப்புகள். இலங்கைத் தமிழர் பிரச்சினை குறித்து, இந்திய பாராளுமன்றத்தில் நடந்த விவாதத்தின் சுருக்கமும் இடம் பெற்றுள்ளது. […]

Read more

அமானுஷ்யம்… ஆனால் உண்மை

அமானுஷ்யம்… ஆனால் உண்மை, வேணு சீனிவாசன், குறிஞ்சி பதிப்பகம், 15/21, டீச்சர்ஸ் கில்டு காலனி, இரண்டாவது தெரு, ராஜாஜி நகர் விரிவு, வில்லிவாக்கம், செக்கை 49, விலை 100ரூ. ஆவிகளின் கதையை, ஆவி பறக்க தந்திருக்கும் நூல். மனித அறிவுக்கும் ஆற்றலுக்கும் எட்டாத சில விஷயங்கள் நமக்கு பிரமிப்போடு பயத்தையும் ஊட்டுகின்றன. பறக்கும் பேய் மனதன், ஆண்களை தூக்கில் போட்டு உயிரை பலி வாங்கும் அமானுஷ்ய உருவம், கண்ணாடியில் தோன்றி அதிசயிக்க வைக்கும் சிலுவைக்குறி இப்படி ஒவ்வொரு சிலிர்ப்புப் பின்னணியிலும் ஒரு திகில் சம்பவம் […]

Read more

தமிழ் இலக்கிய வரலாறு

தமிழ் இலக்கிய வரலாறு, முனைவர் மு. அருணாசலம், பேராசிரியர் இராஜா வரதராஜா, அருண் பதிப்பகம், திருச்சி 1, பக். 672, விலை 125ரூ. தமிழர்களின் வாழ்வியலைப் படம்பிடித்துக் காட்டுபவை தமிழ் இலக்கியங்கள். அவை காலத்தால் அழிந்துவிடாதபடி தமிழின் இலக்கிய வரலாறு முறையாகப் பதிவு செய்யப்பட்டு அதன் பயனை எல்லோரும் அனுபவிக்க வேண்டும் என்ற நல்ல நோக்கத்தில் தமிழ் இலக்கிய வரலாற்றை முதன் முதலில் பதிவு செய்தவர் தமிழறிஞர் கா. சுப்பிரமணியப்பிள்ளை. அவருக்குப் பின் மு. அருணாசலம், மு. வரதராசன், தி.வை. சதாசிவபண்டாரத்தார், க. வெள்ளைவாரணர் […]

Read more
1 768 769 770 771 772 841