மருத நிலமும் பட்டாம் பூச்சிகளும்

மருத நிலமும் பட்டாம் பூச்சிகளும், சோலை சுந்தரபெருமாள், முற்றம், சென்னை 14, பக். 296, விலை 150ரூ. நூலாசிரியரின் கருத்தரங்க உரைகள், இதழ்களில் வெளிவந்த அவருடைய கட்டுரைகள் ஆகியவற்றின் தொகுப்பு இந்நூல். வண்டல் நிலப் பகுதியின் குறிப்பாக தஞ்சை மாவட்ட மக்களின் வாழ்க்கையைப் பல்வேறு கோணங்களில் ஆராய்ந்து எழுதப்பட்டுள்ள கட்டுரைகள். தஞ்சை மண்ணின் சாதியப் பண்பாடு, உணவு, பழக்க வழக்கங்கள், வழிபாடு ஆகிய எல்லாவற்றுக்கும் அடிப்படையாக அம்மண்ணில் வளம்பெற்றிருந்த நிலவுடைமைச் சமூக அமைப்பே இருந்தது என்பதைச் சொல்லும் நூல். தஞ்சை மாவட்ட எழுத்தாளர்களின் சிறப்பான […]

Read more

பூஜ்ஜியத்தின் ராஜ்ஜியம்

பூஜ்ஜியத்தின் ராஜ்ஜியம், பாண்டூ, கந்தகப் பூக்கள் பதிப்பகம், 120, குட்டியணஞ்சான் தெரு, சிவகாசி 626123, விலை 100ரூ. புதுப்புது சிந்தனைகளை ஊட்டக்கூடியதாக இந்த கவிதை நூல் விளங்குகிறது. மொழி, மண், இனம் போன்றவை மீது கவிஞருக்கு உள்ள பற்று இந்த படைப்பு மூலம் விளங்குகிறது. மேலும் இதில் இடம்பெற்றுள்ள 30 ஹைக்கூ கவிதைகளும் அருமை.   —-   கண்ணாடிப் பார்வையில் திருக்குறள், அகில் பதிப்பகம், 35, ஹச்ஐஆர் தெரு, கோட்டை, கோவை 641001, விலை 120ரூ. கண்ணாடி மூலமாக மட்டுமே படிக்கக் கூடிய […]

Read more

பிஞ்சுச் சாவு

பிஞ்சுச் சாவு, நக்கீரன் பப்ளிகேஷன்ஸ், 105, ஜானிஜான்கான சாலை, ராயப்பேட்டை, சென்னை 14,விலை 125ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0001-490-7.html பிரபாகரனின் மகன் பாலச்சந்திரனின் மரணம் குறித்து 87 கவிஞர்கள் நெஞ்சு பொறுக்க முடியாத வேதனையில் படைத்த கண்ணீர்க் கவிதைகளின் தொகுப்பு நூல். பாலச்சந்திரன் தன் உயிரைக் கொடுத்து உலகின் பார்வையை தமிரீழத்தின் பக்கம் திருப்பியிருக்கிறான். அவர் மார்பைத் துளைத்த தோட்டாக்கள், லட்சக்கணக்கான தமிழீழ மக்களைக் கொன்று குவித்த கொடுரத்தை உலகின் பார்வைக்குகொண்டு சென்றிருக்கிறது. அவனது ஒற்றை மரணம், ஒரு […]

Read more

நெருக்கடி நிலையை எதிர்த்துப் போராட்டம்

நெருக்கடி நிலையை எதிர்த்துப் போராட்டம், இராம. கோபாலன், விஜயபாரதம் பதிப்பகம், 12, எம்.வி.நாயுடு தெரு, சேத்துப்பட்டு, சென்னை 31, விலை 200ரூ. பாரத நாட்டில் 1975 ஜுன் 25ந்தேதி நள்ளிரவு தொடங்கி 1977 மார்ச் 21ந்தேதி காலையில் முடிவடைந்த நெருக்கடிநிலையின் போது நடந்த போராட்டத்தை விவரிக்கும் வரலாற்று நூல். நெருக்கடி நிலை அமுலாக்கப்பட்டது சுதந்திர பாரதத்தின் இருண்ட காலம். அடக்கு முறைக்கு எல்லையே இல்லாமல் இருந்து வந்த காலம் என்று வர்ணிக்கப்பட்டது. நாட்டில் புரட்சி பற்றி பேசியும், எழுதியும் வந்த கட்சிகள் இந்திரா காந்தியின் […]

Read more

மரண வலையில் சிக்கிய மான்கள்

மரண வலையில் சிக்கிய மான்கள், வெ. தமிழழகன், அறிவுப் பதிப்பகம், 16(142), ஜானிஜான்கான் சாலை, ராயப்பேட்டை, சென்னை 14, விலை 180ரூ. விறுவிறுப்பு, சிக்கல்கள், திகில், அதிர்ச்சி, வியப்பு, மாயாஜால காட்சிகள் என ஒரு திரைப்படத்தை பார்த்ததுபோல பலதரப்பட்ட அனுபவம் இந்த குறுநாவலைப் படிக்கும்போது நமது எண்ணத்தில் தோன்றும். அடுத்து நடப்பது என்ன? என்ற எதிர்பார்ப்பை தூண்டி ஆர்வத்தோடு படிக்கும்படியாக அமைக்கப்பட்டது இந்நூல்.   —-   புதுக்குறள், தளவை வே. திருமலைச்சாமி, பூம்புகார் பதிப்பகம், 127, பிரகாசம் சாலை, பிராட்வே, சென்னை 108, […]

Read more

பரதேசம் போன தமிழர்களின் பரிதாபப் பாடல்கள்

பரதேசம் போன தமிழர்களின் பரிதாபப் பாடல்கள், பெ. முத்துலிங்கம், கயல் கவின் புக்ஸ், 16/25, இரண்டாம் கடல்போக்கு சாலை, வால்மீகி நகர், திருவான்மியூர், சென்னை 41, விலை 160ரூ. இருபதாம் நூற்றாண்டின் மையப் பகுதியில் தமிழகத்தில் இருந்து இலங்கைக்கு அடிமைகளாக கொண்டு செல்லப்பட்ட துமிழர்கள், அங்கு அடைந்த துயரங்கள், இழப்புகளை வாய்மொழி பாடல்களாக பாடியுள்ளனர். பல்வேறு சான்றோர்களால் சிலவற்றை பெ.முத்துலிங்கம் தொகுத்துள்ளார். இந்த பாடல்கள் மூலம், தமிழர்கள் இலங்கையில் கால் வைத்த நாள் முதலே இரண்டாந்தர குடிமக்களாக நடத்தப்பட்ட விதம் விளங்குகிறது. பாடல்கள் ஒவ்வொன்றும் […]

Read more

மண்வாசம்

மண்வாசம், தமிழச்சி தங்கபாண்டியன், விகடன் பிரசுரம், விலை 85ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0001-449-7.html தமிழச்சி, தான் வாழ்ந்த கிராமத்தின் இரண்டு இடுக்குகளை இன்னமும் மறக்காமல், தனக்கான நிழலாக, தான் தலை சாய்க்கும் மடியாக மல்லாங்கிணறை நினைத்திருப்பதும், அக்கம்பக்கத்தினரை அளவிட முடியாத பாசத்தோடு அவர் அணுகும் விதமும், மஞ்சணத்தி, குப்பைமேனி, வெந்தயக் கீரை என இயற்கையின் வரங்களை வைத்து வைத்தியம் பார்க்கும் கிராமத்து மக்களின் வாழ்வியலை, சொலவடையாக மருத்துவமாக, பேச்சுவழக்காக, உயிரார்ந்த நேசமாக கிராமத்தின் அத்தனைவிதமான ஆசாபாசங்களோடு அடையாளப்படுத்தி இருக்கிறார். […]

Read more

பணம் சந்தேகங்கள் விளக்கங்கள்

பணம் சந்தேகங்கள் விளக்கங்கள், ஆசிரியர்-சோம. வள்ளியப்பன், வானதி பதிப்பகம், 23, தீனதயாளு தெரு, தி. நகர், சென்னை 17, விலை 60ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0000-560-6.html பணம் சம்பாதிப்பது திறமையா? சம்பாதித்த பணத்தைச் சேமித்து, பெருக்கிப் பயன்படுத்தவது திறமையா என்றால், இரண்டாவதுதான் திறமை. முன்னதற்கு உழைப்பு மட்டும் போதும். பின்னதற்கு உழைப்புடன் ஓரளவு பொருளாதார அறிவும் வேண்டும். டாக்டர், எஞ்ஜீனியர், பேராசிரியர் என்று அதிகம் படித்தவர்களில் பலருக்குக் கூட இன்றும் பங்கு மார்க்கெட் பற்றியோ, ஆன்லைன் வர்த்தகம் பற்றியோ […]

Read more

போதியின் நிழல்

போதியின் நிழல், அசோகன் நாகமுத்து, அந்திமழை, விலை 180ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0000-815-6.html 2500 ஆண்டுகளுக்கு முன்னால் தனி ஒரு மனிதராக, சீனாவிலிருந்து இந்தியா வந்து திரும்பியவர் யுவான் சுவாங். இவ்ர இந்தியா வந்தது, அத்தேடல் காரணமாகவும், பௌத்த தரிசனத்துக்காகவும், பௌத்தம் ஒரு மதமாக இந்தியாவை விட்டு விலகி இருக்கலாம். ஆனால் சமூகத்தின் அகமனதில் புத்தர் கண்மூடி தியானத்தில் அமர்ந்திருக்கிறார் என்று முன்னுரையில் எழுதுகிறார் ஆசிரியர் அசோகன் நாகமுத்து. இந்தியா முழுவதும் பரவியிருந்த  பௌத்தத்தின் எச்சமே இப்போது நம்மிடையே […]

Read more

தொல்காப்பியர் வழியில் நாட்டுப்புலவியல்

தொல்காப்பியர் வழியில் நாட்டுப்புலவியல், பேராசிரியர் குரு. சண்முகநாதன், சங்கீதா, சி. 69, ஒன்பதாம் குறுக்குத்தெரு, அரசு அலுவலர் குடியிருப்பு, திருநெல்வேலி-627007, விலை 120ரூ. நாட்டுப்புறப்பாடல் என்ற சொல் சரியானதுதானா என்ற வினாவுடன் தொடங்கி அதற்கு, தொல்காப்பியர் வழியில் விடை காணும் முயற்சியாக, ஒரு ஆய்வு நூலாக வெளியாகி இருக்கிறது. வழக்கில் உள்ள ஏராளமான நாட்டுப்புற பாடல்களையும், அவை எந்த சூழ்நிலையில் உருவானவை, அவற்றின் தன்மை மற்றும் இயல்பு என்ன என்பதையும், புலவர்கள் மட்டும் இன்றி அனைவரும் படித்தறியும் வகையில் தந்து இருப்பது சிறப்பு. நன்றி: […]

Read more
1 769 770 771 772 773 841