ரத்த ஞாயிறு

ரத்த ஞாயிறு, டாக்டர். கோவி. மணிசேகரன், பூம்புகார் பதிப்பகம், 127-63, பிரகாசம் சாலை, பிராட்வே, சென்னை 108, விலை 260ரூ. பாரத தேசத்தை எப்படிக் கட்டிக் காக்க வேண்டும் என்கிற அக்கறையுடன் போராடிய சரித்திர மகாபுருஷர்கள் ஏராளம். அவர்களுள் மக்களுக்காகவும், மதத்துக்காகவும், மொழிக்காகவும் போராடியவர்கள் சொற்பமானவர்கள். அவர்களுள் ஒருவர் சத்ரபதி சிவாஜி. இந்த மாவீரரை கதாநாயகனாகக் கொண்டு படைக்கப்பட்டுள்ளது இந்நூல். சிவாஜியின் காலத்தில் ஏற்பட்ட நிகழ்ச்சிகள் யாவும் விடுதலைப் போராட்டம் போன்றதே. பின்னாளில் ஆங்கிலேயனை விரட்டுவதற்காக எழுந்த போராட்டத்தின் தொடக்கத்தை சிவாஜிதான் அமைத்துக் கொடுத்தார் […]

Read more

மௌனியின் கதைகள்

மௌனியின் கதைகள், தொகுப்பாசிரியர்-கி.அ.சச்சிதானந்தம், சாகித்ய அகாடமி, குணா பில்டிங்ஸ், 443, அண்ணா சாலை, தேனாம்பேட்டை, சென்னை 18, விலை 110ரூ. உலகத் தரத்துக்கு தமிழில் சிறுகதைகள் எழுதியவர் மௌனி. 1907ல் பிறந்து 1985ல் மறைந்த அவர் எழுதியவை 24 சிறுகதைகள்தான். ஆயினும் அவை சிகரம் தொட்டவை. அதனால்தான் சிறுகதை மன்னர் புதுமைபித்தன் தமிழ் சிறுகதை உலகின் திருமூலர் என்ற மௌனியைப் பாராட்டி இருக்கிறார்.அவருடைய மிகச்சிறந்த 13 கதைகளை தேர்ந்தெடுத்து சாகித்ய அகாடமி வெளியிட்டு உள்ளது. இக்கதைகள், எல்லோருக்கும் எளிதில் புரிந்து விடாது. நிதானமாகவும், பொறுமையாகவும், […]

Read more

ஆழ்மனதின் அற்புத சக்திகள்

ஆழ்மனதின் அற்புத சக்திகள், என். கணேசன், பிளாக்ஹோல் மீடியா பப்ளிகேஷன் லிமிடெட், 7/1, 3வது அவென்யூ, அசோக் நகர், சென்னை 83. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0001-009-2.html ஒவ்வொரு மனிதருக்குள்ளும் மகத்தான ஆழ்மனசக்தி உண்டு. முறையான பயிற்சிகளின் மூலம் அத்தகைய சக்தி கைவரப்பெற்று பல அற்புதங்களை நிகழ்த்தியவர்களைச் சித்தர்கள், மகான்கள் என்று அழைக்கிறோம். வெளிநாடுகளிலும் இத்தகையவர்கள் உண்டு. இவர்கள் புரியும் அற்புதங்கள் சில சமயம் அறிவுக்குப் பொருத்தமாகத் தோன்றாது. ஆனால் அவை உண்மை. அறிவியலில் எல்லா வினாக்களுக்கும் விடையில்லை என்றார் […]

Read more

மருது பாண்டிய மன்னர்கள்

மருது பாண்டிய மன்னர்கள், மீ. மனோகரன், அன்னம், மனை எண் 1, நிர்மலா நகர், தஞ்சாவூர் 7, விலை 780ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0000-508-1.html பாளையக்காரப் புரட்சியின் தலைவர்கள் என்று, இந்திய வரலாற்று ஆசிரியர்களால் ஒப்புக்கொள்ளப்பட்டவர்கள் மருது சகோதரர்கள். இந்த இருவர்தான் வெள்ளையருக்கு எதிரான போரை ஒருங்கிணைத்து ஓர் இயக்கமாக்கி, வெள்ளையனை வெளியேறச் சொல்லி முறைப்படி பிரகடனம் செய்தவர்கள். வளரி என்ற ஆயுதத்தை வைத்துக்கொண்டு, வெள்ளையரை அச்சுறுத்தியவர்கள். இலக்கைத் தாக்கிவிட்டு, எய்தவன் கைக்கே வந்துசேரும் வளரி இருக்கும் வரை […]

Read more

தினமணி தீபாவளி மலர் 2012

தினமணி தீபாவளி மலர் 2012, விலை 100ரூ. வீணை சிட்டிபாபுவின் கச்சேரி ஒன்றைக் கேட்ட ரிக்க்ஷாத் தொழிலாளி ஒருவர், கச்சேரி முடிந்தவுடன் இரண்டு ஒரு ரூபாய் நோட்டுகளை அன்பளிப்பாகத் தந்தாராம். ஐயா தினமும் நான் அஞ்சு, ஆறு ரூபாய் சம்பாதிப்பேன். சம்பாக்கிறதில் பாதிக்குக் குடிச்சுருவேன். நீங்க வாசிக்கறதைப் பார்த்துட்டு இருந்துட்டன். குடிக்கணும்னே தோணலை… என்றும் சொன்னாராம். இந்த அருமையான நிகழ்ச்சியைப் பகிர்ந்து கொள்கிறார் சுந்தர் சி. பாபு, அன்புள்ள அப்பா என்னும் தலைப்பில் பாவேந்தர், கருமுத்து தியாகராயர், பி.ஆர். பந்துலு, நடிகர் ஜெய்சங்கர், அகிலன் […]

Read more

மாலன் சிறுகதைகள்

மாலன் சிறுகதைகள், மாலன், கவிதா பப்ளிகேஷன்ஸ், சென்னை 17, பக். 416, விலை 200ரூ. TO buy this Tamil book online – www.nhm.in/shop/978-81-8368-047-9.html ஆசிரியர் மாலன் பல்வேறு பத்திரிகைகளில் பல்வேறு காலகட்டங்களில் எழுதிய, 55 சிறுகதைகள் இந்நூலில் தொகுக்கப் பெற்றுள்ளன. இலக்கியத் தரம் வாய்ந்த இச்சிறுகதைகள் பற்றி, தமிழன் தமிழ் இளைஞர்களின் இன்றைய நிலை குறித்து மாலன் மிக அக்கறையோடு தாயுள்ளத்தோடு யோசித்துள்ளார் என, கூறியுள்ளார் பிரபஞ்சன். ஆரோக்கியமான விவாதங்களை நம்முன் வைக்கும் சிறுகதை தொகுதி நூல். -கவுதம நீலாம்பரன்.   —- […]

Read more

கலை பொதுவிலிருந்தும் தனித்திருக்கும்

கலை பொதுவிலிருந்தும் தனித்திருக்கும், ஷங்கர் ராமசுப்ரமணியன், நற்றிணைப் பதிப்பகம், எண், 123 ஏ, திருவல்லிக்கேணி, நெடுஞ்சாலை, திருவல்லிக்கேணி, சென்னை 5, விலை 110ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0000-806-6.html எதையும் அழுத்திப் பேசும்போது அது அருவெறுப்பாகி விடுகிறது. எதையும் உரத்துப் பேசும்போது பொய் நுழைந்துவிடுகிறது. எழுத்தாளன் இதற்கு நடுவில் சிக்கலான பாதையில் பயணிப்பவன் எனும் ஷங்கர் ராமசுப்ரமணியனின் முதல் கட்டுரைத் தொகுப்பு இது. விதைகள் மலமாக அறிமுகமானவர், கட்டுரைகள் மூலமாகவும் கவனிக்கப்பட வேண்டியவராகிறார். இலக்கியத்தில் கிடைக்கும் பிரபலயத்தின் மூலமாக உலகத்தின் […]

Read more

ஸ்ரீ ராமானுஜர் வாழ்வும், தொண்டும்

ஸ்ரீ ராமானுஜர் வாழ்வும், தொண்டும், ஜெகதா, ஸ்ரீசெண்பகா பதிப்பகம், தி.நகர், சென்னை 17, பக். 136, விலை 50ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0001-058-2.html வைணவர்களால் போற்றி வணங்கப் பெறுபவரும், ஸ்ரீபெரும்புதூரில் அவதரித்தவருமான மகான் இராமானுஜரின் வாழ்க்கை வரலாற்றை முறைப்படி தொகுத்து வெளியிட்டுள்ளார் நூலாசிரியர் ஜெகதா. ஒன்றே குலம் என்று எல்லோரையும் சமமாகக் கொண்டாடிய உத்தமர் ராமானுஜர். குருவின் ஆணையையும் மீறி, திருக்கோட்டியூர் சவும்ய நாராயணப் பெருமாள் கோவில் கோபுரத்தின் மேல் ஏறி நின்று, எல்லோரையும் உரத்த குரலில் அழைத்து, […]

Read more

காவிரி பிரச்சனையின் வேர்கள்

காவிரி பிரச்சனையின் வேர்கள், வே. ஜீவகுமார், பாரதி புத்தகாலயம், 421, அண்ணாசாலை, தேனாம்பேட்டை, சென்னை 18, பக். 48, விலை 30ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0001-013-4.html காவிரி நடுவர் மன்றத்தின் இறுதி உத்தரவை அரசிதழில் வெளியிட்டு விட்டார்கள். இனி தமிழகத்திற்கு காவிரி நீர் வருவதில் பிரச்னை இருக்காது என்றே அத்தனை கோடி தமிழர்களும் நம்பியிருந்தனர். ஆனால் கடிகாரம் பின்னோக்கி சுற்ற ஆரம்பித்துவிட்டது. மாநில எல்லைக் கோடுகள் நதிகளுக்குக் கிடையாது என்கிற நிலையில், ஒரு நதி பாயும் அத்தனை நிலப்பரப்புக்கும் […]

Read more

சமகால மலையாளக் கவிதைகள்

சமகால மலையாளக் கவிதைகள், தொகுப்பு-சுகத குமார், தமிழில்-சா. சிவமணி, சாகித்ய அகடமி, 433, அண்ணாசாலை, தேனாம்பேட்டை, சென்னை 600018, பக். 256, விலை 135ரூ. மகாகவி ஜி. சங்கர குறுப்பு முதல் பாலச்சந்திரன் கள்ளிக்காடு வரையுள்ள கவிஞர்கள் 1950 முதல் 1980 வரை எழுதியுள்ள கவிதைகளிலிருந்து 56 கவிதைகள் இந்நூலுள் தொகுக்கப்பட்டுள்ளன. மலையாளக் கவிதைகளின் 30 ஆண்டுகால வரலாற்றின் பதிவுகள் இவை. இந்தக் கவிதைகளைப் படித்துப் பார்க்கும்போது புலப்படுவது. ஒரு மகா நதியின் பிரவாகச் சித்திரம். உயர்ந்த இமயமலைச் சிகரங்களில் இருந்து, பள்ளத்தை நோக்கி […]

Read more
1 783 784 785 786 787 841