திருக்குறள் நயவுரை

திருக்குறள் நயவுரை, திருக்குறள் பெட்டகம், தங்க பழமலை, அருள்மொழி வெளியீடு, திருக்கோவிலூர் 605 757, பக். 88, விலை 30ரூ. திருக்குறள் நயவுரை என்ற முதல் நூலில் குறட்பாவுக்கு உரை காணும்பொழுது, அவ்வுரைக்கு அரண் சேர்க்கும் வண்ணம் திருக்குறளுக்குள்ளேயே அமைந்துள்ள வேறு குறட்பாக்களைக் கருத்திற்கொள்வதும், நாம் கொள்ளும் உரையை உறுதிப்படுத்தும் வண்ணம் பிற புலவர் பெதுமக்களும், அருளாளர்களும் கூறிப்போந்துள்ள கருத்துகளை உளங்கொள்வதும் சிறப்பமைந்த உரைக்கு வழிகோலும் என்பதை மனதில் இறுத்தியே இவ்வுரையினை யான் எழுதியுள்ளேன் என்று முன்னுரையில் நூலாசிரியர் குறிப்பு உள்ளது. அடுத்து திருக்குறள் […]

Read more

மன்னுபுகழ் மணவாள மாமுனிவன்

மன்னுபுகழ் மணவாள மாமுனிவன், இரா. அரங்கராஜன், ஸ்ரீ ரங்க நாச்சியார் அச்சகம், திருச்சி, பக்.410, விலை 200ரூ. மணவாள மாமுனிகளின் வாக்கையும் வாழ்க்கையையும் படம் பிடித்துக்காட்டி, படிப்பவர்களை மாமுனிகள் வாழ்ந்த காலத்துக்கே கொண்டுபோய், நேராக அனுபவிக்கும் அனுபவத்தை இந்நூல் அளிக்கிறது என்று அ.வெ. ரங்காசார்யர் எழுதியுள்ள அணிந்துரை நூற்றுக்கு நூறு சரி.  ஸ்ரீ வைஷ்ணவ ஆசார்ய பரம்பரை ஸ்ரீமத் நாதமுனிகளால் தொடங்கப்பெற்று, ஸ்ரீமந் மணவாள மாமுனிகளுடன் நிறைவு பெறுகிறது. அந்தப் பரமனை எப்படிச் சேவிக்க வேண்டும், எப்படி கைங்கர்யங்கள் செய்ய வேண்டும் என்று உதாரண புருஷர்களாய்த் […]

Read more

பாம்பின் கண்-தமிழ் சினிமா ஓர் அறிமுகம்

பாம்பின் கண்-தமிழ் சினிமா ஓர் அறிமுகம், சு. தியோடர் பாஸ்கரன், தமிழில்-லதானந்த், கிழக்கு பதிப்பகம், சென்னை 14, பக். 280, விலை 190ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/978-81-8493-701-5.html திரைப்படம் குறித்து எழுதப்பட்ட சிறந்த நூலுக்கான இந்திய அரசின் விருது பெற்ற ஆங்கில நூலின் தமிழாக்கமே இந்நூல். 1897ஆம் ஆண்டு சென்னையில் (அப்போது மதராஸ்) அரைவல் ஆஃப் தி டிரெயின், லீவிங் தி ஃபேக்டரி ஆகிய இரு குறும்படங்கள் திரையிடப்பட்டதில் தொடங்கி சாமிக்கண்ணு வின்சென்ட், ஆர்.வெங்கையா, ஆர்.நடராஜ முதலியார், பிரகாசா, […]

Read more

நர பட்சணி

நர பட்சணி, நானக் சிங், தமிழில்-முத்து மீனாட்சி, சாகித்திய அகாதெமி, 443, அண்ணா சாலை, தேனாம்பேட்டை, சென்னை 18. இந்திய விடுலையின்போது வாழ்ந்த பொதுவுடமை சிந்தனை கொண்ட இரு இளைஞர்களின் போராட்ட வாழ்க்கையே இந்தப் புதினம். பஞ்சாப் மாநிலம் லூதியானாவைச் சேர்ந்தவர் ஆலை முதலாளி டாகூர் சிங். இவரது மனைவி அமர்கௌர், மகன் பிரீத்பால். இவர்களது பக்கத்துவீட்டைச் சேர்ந்த ஊனமுற்ற சராசரி இளைஞன் சிங்காரா சிங். அவனது இளம் மனைவி சுலோச்சனா என விரல்விட்டு எண்ணிவிடக்கூடிய கதாபாத்திரங்களுடன் தொடங்கும் கதை, பொதுவுடமை சித்தாந்தம் பேசும் […]

Read more

அதிக ஆற்றல் வாய்ந்த மனிதர்களின் 7 பழக்கங்கள்

அதிக ஆற்றல் வாய்ந்த மனிதர்களின் 7 பழக்கங்கள், ஸ்டீபன் ஆர். கவி, தமிழில் நாகலட்சுமி சண்முகம், மஞ்சள் பப்ளிஷிங் ஹவுஸ், குர்காவ்ன் ஹரியானா, பக். 507, விலை 325ரூ. 2 கோடிப் பிரதிகள் விற்றுள்ள புத்தகம் என்ற பெருமையுடன் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு தனி மனிதரும், நான்தான் என் வாழ்வின் படைப்பு சக்தி என்று கண்டுபிடித்துக் கொள்வதுதான் வளர்ச்சி மற்றும் நம்பிக்கை குறித்த கொள்கையாக வரலாறு முழுவதும் விளங்கிவருகிறது. நன்னெறிகளை அடித்தளமாகக் கொண்டு நிர்மாணிக்கப்படுகின்ற வாழ்க்கைமுறையையும், தலைமைத்துவத்தையும் குடும்பங்களிலும் நிறுவனங்களிலும் எவ்வாறு வளர்த்தெடுப்பது என்பது […]

Read more

அன்பே யோகம்

அன்பே யோகம், தா. நீலகண்டபிள்ளை, செம்மூதாய் பதிப்பகம், 17, தாகூர் தெரு, எம்.எம்.டி.ஏ. நகர், சிட்லபாக்கம், சென்னை 64, பக். 150, விலை 80ரூ. 18 கட்டுரைகள் அடங்கிய தொகுப்பு இது. பக்தி இலக்கியங்கள் மனிதர்களை செழுமைப்படுத்தத் தோன்றியவை என்பதை சம்பந்தப்பட்ட ஆசிரியர்களின் பாக்களோடு விளக்கியிருக்கிறார் ஆசிரியர். திருமூலர், திருநாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர், புனிதவதியார், கம்பன் ஆகியோரின் பாடல்களில் பிறரிடம் அன்பு செலுத்த வேண்டும் என்கிற கருத்தை மேலோங்கியிருந்தது என்பதை உணர்த்தும் ஆசிரியர் அன்பே யோகம் என்று நூலுக்கும் தலைப்பிட்டது பொருத்தமானதே. இந்த இலக்கியங்களின் […]

Read more

ம.பொ.சி.யின் தமிழன் குரல்

ம.பொ.சி.யின் தமிழன் குரல், தொகுப்பு-தி.பரமேசுவரி, சந்தியா பதிப்பகம், பு.எண்.77, 53வது தெரு, 9வது அவென்யூ, அசோக் நகர், சென்னை 83, 3 தெகுதிகள் சேர்த்து விலை 420ரூ. தமிழக எல்லைப் பரப்பைக் காத்த தலைமகன், ம.பொ.சிவஞானம் தமிழகத்தின் முக்கியப் பகுதிகளை ஒருபுறம் கேரளத்தவரும், இன்னொரு புறம் ஆந்திரத்தவரும் எடுத்துக் கொள்ளத் துடித்தபோது பதற்றம் ஏற்பட்டது. ம.பொ.சி.க்கு மட்டும்தான். எங்கு இருந்தால் என்ன, இந்தியாவுக்குள்தானே இருக்கப்போகிறது என்று காங்கிரஸ்காரர்களும் இதையெல்லாம் சேர்த்துத்தானே நாங்கள் திராவிட நாடு கேட்கிறோம் என்று திராவிட இயக்கத்தவரும் காரணங்கள் சொல்லிக்கொண்டு இருந்தபோது […]

Read more

356 தலைக்கு மேல் கத்தி

356 தலைக்கு மேல் கத்தி, தி. சிகாமணி, பாவை பப்ளிகேஷன்ஸ், 142, ஜானி ஜான்கான் சாலை, ராயப்பேட்டை, சென்னை 14, விலை 70ரூ. கோடிக்கணக்கான மக்களின் விரலில் பட்ட மையை, ஒரு துளி பேனா மையால் அழிக்க முடியுமா? முடியும் என்று சொல்வதுதான் இந்தியா அரசியலமைப்புச் சட்டத்தின் 356 வது பிரிவு. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தின் ஆட்சியை தங்களது சுயவிறுப்பு வெறுப்பின் அடிப்படையில் கலைக்க வழிவகை அமைக்கிறது சட்டம். இந்தச் சட்டத்தால் 1976, 1980, 1991 ஆகிய மூன்றுமுறை தமிழகத்தில் ஆட்சி கலைக்கப்பட்டுள்ளது. இந்திராவின் […]

Read more

சங்கச் செவ்வியல்

சங்கச் செவ்வியல் (சங்க கிரேக்க ஒப்பீடு), முனைவர் செ. சாரதாம்பாள், மீனாட்சி புத்தக நிலையம், மதுரை 1, பக். 336, விலை 175ரூ. நீண்ட விரிவான மரபும் கட்டுக்கோப்பும் விரிவான முறைமைகளும் கொண்ட தன்மைதான் செவ்வியல். இதை ஆங்கிலத்தில் கிளாசிசம் என்பர். அத்தகைய செவ்வியல் பண்பைத் தமிழ் இலக்கியங்கள் பெற்றிருக்கின்றன. வாய்மொழி இலக்கியப் பண்புகளும் வரிவடிவ இலக்கியச் செம்மையும் ஒன்றமிடத்தில்தான் செவ்வியல் தோற்றம் பெறுகிறது என்பது நிதர்சன உண்மை. தமிழில் இலக்கியங்களில் உள்ள செவ்வியல் கூறுகளை பண்புகளை, கிரேக்க இலக்கியங்களுடன் ஒப்பிட்டு சில ஆய்வு […]

Read more

வரலாற்றில் மணிமங்கலம்

வரலாற்றில் மணி மங்கலம், அனந்தபுரம் கோ. கிருட்டின மூர்த்தி, திருக்குறள் பதிப்பகம், சென்னை 78, பக். 304, விலை 200ரூ. மகேந்திரவர்மனிடம் தோல்வி கண்ட இரண்டாம் புலிகேசி, நரசிம்மவர்மனை வெற்றிகாண காஞ்சிபுரத்துக்கு அருகில் உள்ள மணிமங்கலம் என்ற இடத்தில் போர் புரிந்து தோல்வியைத் தழுவுகிறான். இரண்டாம் புலிகேசியின் போர் முயற்சியால் பல்லவ நாடு பெரும் துன்பத்தைச் சந்தித்திருக்கிறது. இதனால் நரசிம்மவர்மன், இரண்டாம் புலிகேசியை அவன் நாட்டிலேயே அவனைத் தோற்கடிக்கிறான். அதனால் நரசிம்மவர்மன் காலத்தில் காஞ்சிரம் பல்லவருக்கு உரியதாக நிலைபெற்றது. இதனால் பல்லவ நாட்டின் முக்கிய […]

Read more
1 781 782 783 784 785 841