உடன்கட்டை

உடன்கட்டை (ஒரு வரலாற்று ஆய்வு), செ. ஜெயவீரதேவன், பாவை பப்ளிகேஷன்ஸ், 142, ஜானிஜான்கான் சாலை, ராயப்பேட்டை, சென்னை 14, பக். 112, விலை 50ரூ. உடன்கட்டை ஒழிப்பு என்றதும், நமக்கு ராஜாராம் மோகன்ராய் நினைவுக்கு வருகிறார். டிசம்பர் 4, 1829ல் வில்லியம் பெண்டிங் பிரபு உடன்கட்டை ஏறுவது, சட்ட விரோதமான தண்டனைக்குரிய குற்றம் என சட்டம் இயற்றினார். இச்சட்டத்திற்குப் பின்தான் இந்தியாவில் உடன்கட்டையேறும் வழக்கம் ஒழிந்தது. இந்நூலில் இந்தியாவிலும், குறிப்பாக தமிழகத்திலும் உடன்கட்டையேறும் வழக்கம் இருந்ததையும், அதற்கான காரணங்களையும் அதை ஒழிக்கச் சட்டங்கள் வந்தது […]

Read more

மொழிபெயர்ப்பு ஒரு கவின்கலை

மொழிபெயர்ப்பு ஒரு கவின்கலை, வி. சந்திரன், உலக தமிழாராய்ச்சி நிறுவனம், இரண்டாம் முதன்மைச் சாலை, மையத் தொழிநுட்ப வளாகம், சென்னை 113, பக். 170, விலை 75ரூ. நூலின் தலைப்பில் நூலாசிரியர் நிகழ்த்திய அறக்கட்டளைச் சொற்பொழிவின் நூல் வடிவம் இது. தமிழ் மொழியுடன், பிறமொழியிலும் சிறப்பான பாண்டித்தியம் உள்ளவர்களால் மட்டுமே, மொழிபெயர்ப்பு பணியில் ஈடுபட முடியும். மொழிபெயர்ப்புக்கு இலக்கணம் இருக்கிறது. மேலும், மொழிமாற்றம், செய்யப் பெற்றதும், இலக்கிய அந்தஸ்தைப் பெறக்கூடியதுதான். நிர்வாகம், சட்டம், தொழில்நுணுக்கம் ஆகிய துறைகளில் மொழிபெயர்ப்பில் ஈடுபடுகையில், புதிய சொல்லாக்கம் தவிர்க்க […]

Read more

புதுக்கவிதை மொழி

புதுக்கவிதை மொழி, முனைவர் மா. கோவிந்தராசு, பாவை பப்ளிகேஷன்ஸ், 142, ஜானி ஜான்கான் சாலை, ராயப்பேட்டை, சென்னை 14, பக். 225, விலை 125ரூ. கவிதை வடிவமோ, கவிதைத் தன்மையோ மொழிக் கட்டமைப்போ இல்லாமல் கவிதை எழுதக்கூடாது என்கிறார் ஆசிரியர் மொழியின் மரபினையும், அமைப்பினையும் அறிந்து கவிதை படைக்க வேண்டும் என்கிறார். எழுத்து, சொல், தொடர் அமைப்பு, புதுக்கவிதையில் எவ்வாறு வரவேண்டும், எவ்வாறு வரக்கூடாது என்றெல்லாம் விளக்குகிறார். (உதாரணம்) கவிதைக்கு மொழித் தூய்மை இன்றியமையாததாகும். வழக்கில் உள்ள செந்தமிழ்ச் சொற்களே கவிதையில் இடம் பெற […]

Read more

அதிசய சாதனையாளர் நிக் வாயிச்சஸ்

அதிசய சாதனையாளர் நிக் வாயிச்சஸ், சேவியர், அருவி, 10, 6வது செக்டர், கே.கே. நகர், சென்னை 78, விலை 100ரூ. கைகள் இல்லை, கால்கள் இல்லை, கவலைகள் இல்லை, இரண்டு கைகள், கால்கள் இல்லாத நிலையில் பிறந்த குழந்தையை (நிக்வாயிச்சஸ்) பெற்றோர் வெறுத்து ஒதுக்கிவிடாமல் வளர்த்து ஆளாக்கி இருப்பதற்கே சபாஷ் சொல்ல வேண்டும். அந்தக் குழந்தையும் வளர்ந்து இன்றைக்கு தன்னம்பிக்கை பேச்சுக்களால் உலகத்துக்கே தன்னம்பிக்கையூட்டி கொண்டிருப்பது மெய்சிலிர்க்க வைக்கிறது. மனம் வைத்தால் எந்த நிலையிலும் வாழ்வில் வென்று காட்ட முடியும் என்பதற்கு நிவ்யிச்சஸ் உதாரணமாகி […]

Read more

கலாம் காலம்

கலாம் காலம், ஆதனூர் சோழன், நக்கீரன் பப்ளிகேஷன்ஸ், 105, ஜானி ஜான்கான் ரோடு, சென்னை 14, பக். 128, விலை 80ரூ. நல்ல புத்தகங்கள், நல்ல ஆசிரியர்கள், நல்ல மனிதர்கள் துணையோடு எவ்வளவு அறிவைப் பெற முடியுமோ அவ்வளவு அறிவை சேகரியுங்கள், கடுமையாக உழையுங்கள், விடா முயற்சியுடன் பிரச்னைகளை தோற்கடித்து வெற்றி பெறுங்கள் என்றெல்லாம் நம் நாட்டு இளைஞர்களை ஊக்குவிக்கும் அப்துல் கலாம், இளைஞர்களின் கனவு நாயகராக மாறிவிட்டவர். அப்துல் கலாமின் எழுச்சி மிக்க வரலாற்றைச் சொல்லும் உணர்ச்சிக்காவியம். -எஸ்.குரு.   —-   […]

Read more

அமிர்தம்

அமிர்தம் (சிறுகதை இரண்டாம் தொகுதி), எஸ். ஷங்கர நாராயணன், சு. வேணுகோபால், நிவேதிதா புத்தகப் பூங்கா, 6/11, டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலை, வ.உ.சி. நகர், பம்மல், சென்னை 75, பக். 176, விலை 85ரூ. தீனிப்பிரியர்களை சாப்பாட்டு ராமன்கள் என சாடுகிறோம். ஆனால் ரசித்துச் சாப்பிடுவதிலும், ருசித்துச் சாப்பிடுவதிலும் ஆர்வம் கொள்ளாதவர்கள் யார்? அது தவிர இந்த நாட்டில் ஒரு பட்டினிப் பட்டாளம் இருக்கிறது. அடுத்த வேளைச் சோறு எங்கே கிடைக்கும்? என தெரியாத நிலை. பசி பற்றியும், ருசி பற்றியும் உணவு பற்றியும் […]

Read more

பொன்மலர்

பொன்மலர் (சமூக நாவல்), அகலின், தாகம், பு.எண் 34, ப.எண் 35, சாரங்கபாணி தெரு, தி.நகர், சென்னை 17, பக். 194, விலை 80ரூ. கலைமகள் இதழில் தொடராக வந்து, பல்லாயிரக்கணக்கான வாசகர்களின் பாராட்டைப் பெற்ற நாவல், இப்போது புத்தக வடிவு பெற்று, 15ம் பதிப்பாக வந்திருக்கிறது. ரஷ்ய, சீனா, ஆகிய மொழிகளிலும், இந்திய மொழிகளான குஜராத்தி, ஓரிய, மலையாள, கன்னட மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ள இந்நாவலின் நாயகி டாக்டர் சங்கரி ஒரு வித்தியாசமான பாத்திரம், நாவல் பிரியர்களுக்கு ஒரு நல்ல விருந்து. நன்றி: தினமலர், […]

Read more

பாரதியின் பராசக்தி

பாரதியின் பராசக்தி, டாக்டர் என். ஸ்ரீதரன், கங்கை புத்தகநிலையம், 23, தீனதயாளு தெரு, தி.நகர், சென்னை 600 017, பக். 238, விலை 70ரூ. சிவசக்தி என்ற கதையில், அன்னை பராசக்தியைப் பற்றி, பலர் கூறுவதை பாரதி தொகுத்துத் தருகிறார். சக்தியை, இயற்கை, ஐம்பூதங்கள், உயிர்த், தீ, அறிவு, சோதி, காளி, இன்பம், துன்பம் என அடுக்கடுக்காகச் சொல்கிறார். பாரதி அறுபத்தாறிலும், ஐம்பூதங்கள் சக்தியின் உருவே என்க கூறுகிறார். பராசக்தியைப் பற்றி, அமர கவி பாரதியின் பன்முகப் பார்வையைப் பதிவு செய்யும் இலக்கியப் பொக்கிஷம். […]

Read more

புறநானூறும் திருக்குறளும்

புறநானூறும் திருக்குறளும், முனைவர் சரளா ராசகோபாலன், ஒளிப்பதிப்பகம், எண் 4(63), டாக்டர் ரங்கா சாலை, சென்னை 6000018, பக். 232, விலை 150ரூ. சிறந்த புலமையும் எழுத்தாற்றலும் உடைய, நூலாசிரியரின் 74வது நூல் இது. இந்நூலுள் புறநானூறு அறிமுகம், திருக்குறள் அறிமுகம், தொடர் ஒப்புமை, பொருள் ஒப்புமை, ஒற்றுமை, வேற்றுமைக் கூறுகள் என ஐந்து பகுதிகள் காணப்படுகின்றன. இரு நூல்களையும் பலமுறை ஆழ்ந்து கற்று, ஒப்புமைகளைக் கண்டு ஆராந்து, நுட்பமாக இந்நூலை ஆக்கியுள்ளார் ஆசிரியர். சொல்லாய்வுகளும் இடம் பெற்றுள்ளன. பெண்ணின் பெருந்தக்க யாவுள கற்பென்னும் […]

Read more

திருவடி மாலை

திருவடி மாலை, எஸ். ஆர். ஜி. சுந்தரம், பாற்கடல் பதிப்பகம், 4/50, நான்காவது தெரு, சபாபதி நகர், மூவரசன்பேட்டை, சென்னை 6000091, பக். 240, விலை 75ரூ. வைணவத்தலங்கள் 108 என்றும் அதில் 106 திருத்தலங்கள் சென்று வழிபட இயலும். மற்ற இருஇடங்களான திருப்பாற்கடலும், ஸ்ரீவைகுண்டமும் (திருப்பரமபதம்), இவ்வுடலுடன் சென்று சேவிக்க இயலாது என்றும் கூறுவர். 108 திவ்ய தேசங்களுக்கும், ஆன்மிக அன்பர்கள் சென்று சேவிக்க வசதியாக, திருப்பதிகளில் அருள் பாலிக்கும் மூலவர் மற்றும் உற்சவ மூர்த்தியை, உற்சவ மூர்த்திகள் திருநாமங்களும், அவ்விடச்சிறப்பு குறித்த […]

Read more
1 793 794 795 796 797 841