கருவேலங்காட்டுக் கதை

கருவேலங்காட்டுக் கதை, ராஜா செல்லமுத்து, கவிதா பப்ளிகேஷன், விலை 100ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0000-810-2.html கல் மரத்தில் பூத்த ஒத்தப் பூ மாதிரி காத்துக்கு விழாமெத் தலையாட்டித் தலையாட்டிப் பேசுச்சு எண்ணை விளக்கு. நம்ம ஊருக்குப் புதுசா ஒரு சோடி வந்திருக்குன்னு ரோட்டச் சுத்தி நின்ன புளியமரமெல்லாம் பூ உதுத்து வரவேத்துச்சு… குடிதண்ணீர்க் குழாயின் கைப்பிடி, காதலன் கைப்பிடியாய் உருமாறும். ஒவ்வொரு அடியும் அவன் கைப்பிடிச்சு நடபப்து போலாகும். அடிமையா வாழ்ந்த காலத்துல நமக்குள்ள ஒத்துமை இருந்துச்சு. எல்லாரும் […]

Read more

தேசத்தை நேசிப்போம்

தேசத்தை நேசிப்போம், செந்தமிழ்தாசன், இளைஞர் இந்தியா புத்தகாலயம், 109, பெருமாள் கோவில் தெரு, மாதவரம், சென்னை 60, விலை 150ரூ. ஒரு காலத்தில் குண்டூசிக்குக் கூட நாம் லண்டனை எதிர்பார்த்திருந்த நிலை. இன்று கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை உற்பத்தி செய்து ஏற்றுமதி செய்கிறோம். இப்படி எல்லாத் துறைகளிலுமே சாதனை படைத்து வருகிறோம். காரணம், நாம் பெற்ற சுதந்திரம். அதற்காக நம் முன்னோர் சிந்திய ரத்தமும், செய்த தியாகங்களும் அளவிட முடியாதவை. இன்றைய தலைமுறைக்கு இவற்றைச் சரியானபடி உணர்த்தத் தவறிவிட்டோம். இதன் விளைவாக […]

Read more

தூக்கணாங்குருவி

தூக்கணாங்குருவி, தங்கமணி, மணிவாசகர் பதிப்பகம், 31, சிங்கர் தெரு, பாரிமுனை, சென்னை 108, பக். 64, விலை 20ரூ. அந்த நாட்களில் சிறந்த குழந்தை எழுத்தாளராகத் திகழ்ந்தவர் பல விருகளைப் பெற்றவர். அன்னாரின் அக்காலச் சிறுவர் முழு நாவல் படங்களுடன் இடம்பெற்றுள்ளது. சிறுவர், சிறுமியர் படித்து மகிழ பயனுள்ள நூல். -எஸ். திருமலை.   —-   நீதி நெறி விளக்கம், முனைவர் இரா. குமரவேலன், பாரி புத்தகப்பண்ணை, 184/88, பிராட்வே, சென்னை 108, பக் 96, விலை 30ரூ. நீதி நெறி விளக்கம் […]

Read more

செல்வம் கொழிக்கச் செய்யும் மகாலட்சுமி பூஜை

செல்வம் கொழிக்கச் செய்யும் மகாலட்சுமி பூஜை, பரமஹம்ச ஸ்ரீமத் பரத்வாஜ் சுவாமிகள், வனிதா பதிப்பகம், 11, நானாதெரு, பாண்டிபஜார், தி.நகர், சென்னை 17, பக். 304, விலை 110ரூ இந்தக் கலியுகத்தில் நேர்வழியில் செல்வத்தைக் குவிக்க முடியாது என்றுதான் பலரும் நினைக்கின்றனர். ஆனால் நேர்வழியில் செல்வத்தைக் குவிக்க முடியும். அம்மாதிரி நேர்வழியில் குவியும் செல்வம்தான் நிலைத்து நிற்கும், துன்பமே தராத செல்வமாக இருக்கும் என்கிறார் நூலாசிரியர். நேர்வழியில் செல்வத்தை குவிக்க, மகாலட்சுமி திருவிளக்கு பூஜையை அதற்கான விதிமுறைகளைப் பின்பற்றி செய்ய வேண்டும் என்று அவற்றை […]

Read more

வரப்பெற்றோம்

வரப்பெற்றோம் நீதி நூல்கள்(நன்னெறிச் செல்வங்கள்), நல்லாமூர் முனைவர் கோ. பெரியண்ணன், வனிதா பதிப்பகம், 11, நானா தெரு, பாண்டிபஜார், தி.நகர், சென்னை 17, பக். 160, விலை 70ரூ. ஆத்திசூடி மூதலான ஒன்பது நீதி நூல்களை சேர்த்து, கருத்துரையுடன் வெளிப்பட்டிருக்கும் இந்நூல், மாணவர்கள் மட்டுமின்றி பெற்றோரும் படித்து பயன்பெறத்தக்க நூல். -சிவா.   பாதுகாப்பட வேண்டிய கலைக்கருவூலங்கள், சாந்தினி, ஓவியர் ஸுபா, பண்மொழி பதிப்பகம், சி. விகாஸ் அடுக்ககம், 19/8, பால கிருண்ணா தெரு, மயிலாப்பூர், சென்னை 4, பக். 200, டெம்மி விலை […]

Read more

ஐந்தாம் கட்ட விடுதலை போர்

ஐந்தாம் கட்ட விடுதலைப் போர், கண்மணி, மானுட நம்பிக்கை, 568எ, எட்டாவது முதன்மைச் சாலை, மகாகவி பாரதி நகர், வியாசார்பாடி, சென்னை 39, பக். 534, விலை 225ரூ. தமிழீழம் தேவையா? தேவையில்லையா? என்று பேசும் பலரும், அது இலங்கையில் இருக்கும் தமிழ் மக்களின் பிரச்னைகளாகவே பார்க்கத் தொடங்கிவிட்டனர். அத்தகையோரை கடுமையாக சாடுவதோடு, அது நம் சகோதரர்களின் பிரச்னை என்ற உறுதியோடு நூல் முழுவதும் பேசுகிறார் கண்மணி, கடந்த 10ஆண்டுகளாக இலங்கையில் நடைபெற்று வந்த வரலாற்று நிகழ்வுகளை நூல் முழுதும் பதிவு செய்கிறார். பேச்சுவார்த்தை […]

Read more

வேட்டைக்கத்தி

வேட்டைக்கத்தி, ஹாருகி முரகாமி, தமிழில்-ச.ஆறுமுகம், ஆதி பதிப்பகம், 15, மாரியம்மன் கோயில் தெரு, பவித்திரம், திருவண்ணாமலை, பக். 96, விலை 70ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0000-810-9.html ஜப்பானிய எழுத்தாளர் ஹாருகி முரகாமியின் வேட்டைக் கத்தி இருபதாவது பிறந்தநாளில் அவள், அமெரிக்க எழுத்தாளர் மெய்லி மெலாயின் பதிலித் திருமணம், இங்கிலாந்து அறிவியல் புனைகதை எழுத்தாளர் மோனிகா ஹ்யூக்ஸின் வணக்கம் நிலவே, போய் வருகிறேன் ஆகிய நான்கு கதைகளின் தொகுப்பு இந்நூல். முரகாமியின் கதைகளில் பாத்திரங்களைப் புதிரான மையமாக்கி நுட்பமான விஷயங்களை […]

Read more

சங்கச் செல்வி

சங்கச் செல்வி (செம்மொழிப் பெட்டகம்), முனைவர் சுந்தர ஆவுடையப்பன், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், 41பி, சிட்கோ இண்டஸ்ட்ரியல் எஸ்டேட், அம்பத்தூர், சென்னை 98, பக். 128, விலை 60ரூ. சங்க நூல்களில் உள்ள அரிய பொருட்கள் பற்றி அழகாக எடுத்துரைக்கும் 30 சிறிய கட்டுரைகளின் தொகுப்பு நூல். யவனர் என்னும் அயல்நாட்டார் பற்றியும், அசுணம் என்னும் விலங்கு பற்றியும் தெரிவிக்கும் இந்த நூல், பண்டைத் தமிழரின் பழக்க வழக்கங்களையும், பண்பாட்டையும் தெளிவாக விளக்குகிறது. வான்கேழ் வட்டம் என்னும் சந்தனம் அரைக்கும் வெள்ளைக்கல், இந்தியாவின் […]

Read more

தமிழகச் சிற்பங்களில் பெண் தொன்மம்

தமிழகச் சிற்பங்களில் பெண் தொன்மம், பெ. நிர்மலா, அலைகள் வெளியீட்டகம், 97/55, என்.எஸ்.கிருஷ்ணன் சாலை, கோடம்பாக்கம், சென்னை 24, விலை 280ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0001-862-8.html கல்லில் கலை வண்ணம் கண்டவன் தமிழன். அத்தகைய சிற்பங்கள் இதுவரை கலை, இலக்கிய, வரலாற்று பூர்வமாக ஆய்வு செய்யப்பட்டுள்ளன. அவற்றைப் பெண்ணியப் பார்வையில் பார்க்கும் புத்தகம் இது. சிற்பம், தொன்மம், பெண்ணியம் ஆகிய மூன்றும் முக்கியமான துறைகள். இந்த மூன்றையும் சேர்த்துப் பார்க்கும் பார்வையை நிர்மலாவின் படைப்பு கொடுக்கிறது. கோயில் இல்லாத […]

Read more

பாரதமே உயிர்த்தெழு

பாரதமே உயிர்த்தெழு, சுவாமி விவேகானந்தர், ராமகிருஷ்ண மடம், மயிலாப்பூர், சென்னை 4, பக். 205, விலை 55ரூ. சுவாமி விவேகானந்தரின் பேச்சும், எழுத்தும் இளைஞர்களின் மனதில் ஆழப்பதிந்தால், இந்திய தேசம் வலிமையும், பெருமையும் பெரும் என்பதில் ஐயமில்லை. விவேகானந்தரின் சொற்பொழிவுகளையும், எழுத்துக்களையும் சுருக்கி ஆறு தலைப்புகளில் இந்நூல் விளக்குகிறது. கல்வியானது ஞானத்தை வெளிப்படுத்தி, மனிதனாக உருவாக்கி, தன்னம்பிக்கை, நற்பண்புகள், அறிவு, பண்பாடு மற்றும் ஒருமைப்பாடு ஆகியவற்றை வளர்ப்பதாக இருக்க வேண்டும் என்ற விவேகானந்தரின் கூற்றை இன்றைய கல்வியாளர்கள் சிந்தித்து பார்க்க, இந்நூல் பெரிதும் பயன்படும். […]

Read more
1 791 792 793 794 795 841