முத்திரைச் சிறுகதைகள்

முத்திரைச் சிறுகதைகள், ஆர்னிகா நாசர், மேகதூதன் பதிப்பகம், 7, சின்னப்ப ராவுத்தர் தெரு, திருவல்லிக்கேணி, சென்னை 5, பக். 208, விலை 130ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0000-718-0.html ஆர்னிகா நாசர் நிறைய இதழ்களில் அடிக்கடி எழுதுபவர். பிரபலமான எழுத்தாளர். இவருக்கென்று ஒரு பெரிய வாசகர் கூட்டம் இருக்கின்றது. இவர் எழுதும் பாணியில், புதுமை இருக்கும். எழுத எடுத்துக் கொள்ளும் கதை கருக்களில் புதுமையும், வித்தியாசமும் இருக்கும். ஆயிரத்துக்கும் மேற்பட்ட நாவல்களும் எழுதியுள்ள ஆர்னிகா நாசர், தாம் எழுதியவற்றுள் சிறந்த […]

Read more

சின்ன அரயத்தி

சின்ன அரயத்தி, மலையாள மூலம்-நாராயணன், தமிழில்-குளச்சல் மு. யூசுப், காலச்சுவடு பதிப்பகம், 669, கே.பி. சாலை, நாகர்கோவில் 629001, பக். 280, விலை 200ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0001-515-7.html ஆசிரியரின் (மலையாள மூலம்) முதல் படைப்பான இந்த நாவல் சாகித்ய அகடமி, கேரள சாகித்ய அகடாமி, தோப்பில் ரவிவிருது, அபுதாபி தி விருது என்று ஏகப்பட்ட விருதுகளை பெற்ற ஒன்று. கேரளத்தின் ஆதிவாசிச் சமூகமான மலையரையர்களை குறித்து ஆதிவாசி ஒருவரே எழுதிய நாவல். இடுக்கி மாவட்ட பழங்குடியினரின் பண்பாடு, […]

Read more

அன்பே சிவம்

அன்பே சிவம், உமா பாலகுமார், அருண் பதிப்பகம், 107/8, கவுடியா மடம் சாலை, ராயப்பேட்டை, சென்னை 14, பக். 380, விலை 150ரூ. சிவபெருமான் உயிர் அம்சம் என்றால், உடல் சக்தி அம்சமாகும். சிவனும் சக்தியும் இணைந்த சொரூபமே சிவசக்தி சொரூபமாகும். இந்த உலகின் முதல்வர், அரசன், தலைவன், இறைவன் சிவபெருமானே, ஆதலால் அவர் ஈசன், ஈஸ்வரன் என அழைக்கப்படுகிறார். சிவன், சக்தியோடும் உயிர்களோடும் உலகத்தோடும் இரண்டறக் கலந்து நிற்கும் இயல்பே அத்வைதமாகும். சக்தி, சிவம் இருவருமே ஞான வடிவானவர்கள். அம்மையும் அப்பனுமாகிய இருவரும் […]

Read more

தமிழ்க்காதல்

தமிழ்க்காதல், வ.சுப. மாணிக்கம், மீனாட்சி புத்தக நிலையம், மயூரா வளாகம், 48, தானப்ப முதலி தெரு, மதுரை 625001, விலை 150ரூ. காதல் உடலுக்கு நல்லது, உள்ளத்துக்கு நல்லது, ஊருக்கு நல்லது, உலகத்துக்கு நல்லது. அந்த நல்ல காதல், தமிழ்க்காதல். இதனை தலைப்பாக கொண்டு நூலாசிரியர் வ.சுப. மாணிக்கம் 7 தலைப்புகளில் அகத்திணையை மையமாக வைத்து எளிய நடையில் இலக்கிய நூலை எழுதியுள்ளார். தமிழர் கண்ட காதல் நெறியே அகத்திணையாகும். இதனை நம் முன்னோர்கள் முழுமையாக கற்றிருந்ததால், உலகையும், உடலையும், மனதையும், திருமணத்தையும் அவர்கள் […]

Read more

காலமறிந்து கூவிய சேவல்

காலமறிந்து கூவிய சேவல், கே. ஜீவபாரதி, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், ஏ1பி, சிட்கோ இண்டஸ்டிரியல் எஸ்டேட், அம்பத்தூர், சென்னை 98, விலை 95ரூ. பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரத்தின் கவிதைகளை அலசி ஆராய்ந்து எழுதப்பட்ட நூல். அவரைப்பற்றி வெளிவராத தகவல்களும் இதில் உள்ளன. நன்றி: தினத்தந்தி 8/5/2013.   —-   மைனஸ் ஒன், நந்தாகுமாரன், உயிர்மை பதிப்பகம், 11/29, சுப்ரமணியம் தெரு, அபிராமபுரம், சென்னை 18, பக். 112, விலை 90ரூ. நவீன உலகின் மனித செயற்பாடுகள் அவனது பேச்சில் மொழியில் நடையில் […]

Read more

அத்தையின் அருள்

அத்தையின் அருள், சு. வெங்கடசுப்ராய நாயக்கர், கண்ணம்மா பதிப்பகம், 144, மகாலட்சுமி இல்லம், பாக்கமுடையான்பட்டு, புதுச்சேரி, பக். 100, விலை 70ரூ. அப்பாவைக் காட்டிலும மாமாவின்பேரில்தான் குழந்தைகளுக்கு பிரியம் அதிகம். அப்பாவின் உடன்பிறந்த அத்தை பேரிலும் ஒரு அலாதிப் பிரியம் ஏற்படும். அதிலும் சிறுபிள்ளையாய், தாயை இழந்துவிட்ட குழந்தைகளுக்கு அப்பத்தை பேரில் சொல்லவொண்ணாப் பிரயம் சகஜமே என்று கி.ராஜநாராயணன் கொடுத்திருக்கும் முன்னுரையே இந்நூல் பற்றிய விளக்கமாக அமைந்துவிடுகிறது. இந்நூலை யாரோ ஒருவன் தன் அத்தையைப் பற்றி எழுதியிருப்பதாக சாதாரணமாக நினைக்க முடியாது. ஒரு அத்தையை […]

Read more

பாரதத்தின் பேரரசி சாதனை வரலாறு

பாரதத்தின் பேரரசி சாதனை வரலாறு, அழகிய பாண்டியன், குமரன் பதிப்பகம், 19, கண்ணதாசன் சாலை, தியாகராய நகர், சென்னை 17, விலை 360ரூ. முதல் அமைச்சர் ஜெயலலிதாவின் இளமை வாழ்க்கை, திரைத்துறை வாழ்க்கை, அரசியல் வாழ்க்கை ஆகிய 3 பிரிவுகளாக பிரித்து 119 தலைப்புகளில் ஆழ்ந்த சிந்தனைகள் அடங்கிய கவிதை தொகுப்பாக நூலாசிரியர் அழகிய பாண்டியன் தந்துள்ளார். அரிய புகைப்படங்ளையும் இடையிடையே சேர்த்திருப்பது புத்தகத்தின் சிறப்புக்கு சிறப்பு சேர்க்கிறது. அண்ணல் பிறந்தார் அஹிம்சை பிறந்தது, புத்தர் பிறந்தார் அன்பு பிறந்தது, அன்னை தெரசா பிறந்தார் […]

Read more

எதற்கு ஈழம்?

எதற்கு ஈழம்?, தீபச்செல்வன், தோழமை வெளியீடு, 10, 6வது செக்டர், கே.கே.நகர், சென்னை 78, விலை 175ரூ. ஈழம் என்பது பல ஆண்டுகளாகப் போராடி மாண்ட போராளிகளின் கனவு மட்டுமல்ல, முப்பதாண்டு போரில் வாழும் கனவோடு கொல்லப்பட்டவர்களுக்கான அஞ்சலியும் ஈழம்தான் என்று நெத்தியடியாக சொல்லி இருக்கிறார் நூலாசிரியர். அதே வேளையில் ஈழப்பிரச்சினையில் தமிழக அரசியல்வாதிகள் நடந்துகொண்டவிதமும் தோலுரித்துக் காட்டப்பட்டுள்ளது. விடுதலைப்புலிகள் ஆயுதம் ஏந்தும் சூழல் உருவானது தொடங்கி உள்நாட்டுப போர் முடிவுக்கு வந்த பின்னரும் இன்று வரை ஈழத்தமிழர்களுக்கு இழைக்கப்படுகிற அநீதி விவரிக்கப்பட்டுள்ள விதம், […]

Read more

இலக்கியச் சித்தர்

இலக்கியச் சித்தர், முனைவர் கா. செல்லப்பன், வானதி பதிப்பகம், 23, தீனதயாளு தெரு, தி.நகர், சென்னை 17, பக். 144, விலை 50ரூ. நான் ஓர் ஆசிரியன், நம்பிக்கையோடு மனித குலத்தை உயர்த்தலாம் என்ற நம்பிக்கையே, என் வாழ்வின் அடிப்படை என்று வாழ்ந்த பேராசிரியர் அ. சீனிவாசராகவனின் ஒட்டுமொத்த இலக்கியப் பணிகளை மிகச் சுருக்கமாக, அதே வேளையில் மிக ஆழமாக ஆய்வு செய்துள்ளார். ஆங்கிலம், தமிழ் இரண்டிலும் புலமைவாய்ந்த முனைவர் செல்லப்பன். உடல் உண்டு, ஆகவே வாழ்வதற்கு விஞ்ஞானம் தேவை. உள்ளமுண்டு. ஆகவே சமுதாயக் […]

Read more

சான்றோர் கவி

சான்றோர் கவி, முனைவர் அ. பாண்டுரங்கன், சேகர் பதிப்பகம், 66, பெரியார் தெரு, எம்.ஜி.ஆர். நகர், சென்னை 78, பக். 192, விலை 120ரூ. ஆராய்ச்சி எண்ணமுடையோர்க்கு ஆர்வத்தை ஊட்டும் வகையில் அமைந்த ஆய்வுக்கட்டுரைகள் ஏழினைக் கொண்டது இந்நூல். ஆய்வரங்கங்களில் படிக்கப்பட்ட கட்டுரைகளையும், ஆய்விதழ்களில் வெளியிடப்பட்ட கட்டுரைகளையும் செம்மைப்படுத்தி, தொகுத்து வெளியிட்டுள்ள ஆசிரியரை பாராட்டலாம். சங்க இலக்கியங்கள், சிலப்பதிகாரம், பக்தி இலக்கியங்கள் ஆகியவற்றில் நூலாசிரியர் ஆய்வு செய்துள்ள முறை சிறப்பானது. எட்டுத்தொகை நூல்களை படிக்க விழைபவர்களுக்கு, முதல் நான்கு கட்டுரைகள் வழிகாட்டியாய் அமைந்துள்ளன. இளங்கோவடிகள் […]

Read more
1 792 793 794 795 796 841