கலித்தொகை

கலித்தொகை, புலியூர்க்கேசிகன், ஸ்ரீசெண்பகா பதிப்பகம், அஞ்சல்பெட்டி எண்-8836, பாண்டிபஜார், சென்னை 17, பக். 400, விலை 175ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0001-035-5.html சங்க இலக்கியங்கள், தமிழின் கருவூலம், மதிப்புடைய மூலதனம், இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன், பல புலவர்கள், பல்வேறு காலங்களில் பாடியதைத் தொகுத்ததே எட்டுத்தொகை நூல்கள் ஆகும். இதில் கலித்தொகை கலிப்பாவகை இலக்கணம சார்ந்தது. இசை வடிவம் சேர்ந்தது. துள்ளும் இசை நயமும் உவமைச் சிறப்பும், அற நெறிகளும், ஐந்திணை மக்களின் வாழ்வும், பண்பாடும், மரம், விலங்குகள், இயற்கை […]

Read more

எழுந்து நில் என் தோழா

எழுந்து நில் என் தோழா (கவிதைப் பூக்கள்), மாயாண்டி சந்திர சேகர், மணிமேகலைப் பிரசுரம், 7(4) தணிகாசலம் சாலை, தியாகராய நகர், சென்னை 17, பக். 162, விலை 70ரூ. கவிதை எழுத, கவிதை உணர்வு வேண்டும். அந்த உணர்வு இவருக்கு இயல்பாக வரப்பெற்றுள்ளதால் இந்த நூல் வெளிவந்துள்ளது என்றுதான் கூறவேண்டும். பழைய பகையை தீர்த்துக்கொண்டது புகையும் சிகரெட் போன்ற வரிகள் மனதில் தைக்கின்றன. -எஸ். திருமலை. நன்றி: தினமலர், 23/10/2011.   —-   அனாடமிக் செவிவழித் தொடுசிகிச்சை-2012, ஹீலர் பாஸ்கர், ப்ரவாகம் […]

Read more

வாழ்வியல் பூக்கள்

வாழ்வியல் பூக்கள்(குறுநாவல்கள், சிறுகதைகள்), திருமதி சங்கரி அப்பன், ரமணி பதிப்பகம், 69, மேலப் பொன்னகரம் 5வது தெரு, (ஆரப்பாளையம் பேருந்து நிலையம் அருகில்), மதுரை 625016, பக். 236, விலை 75ரூ. அமரர் தீபம் நா. பார்த்தசாரதியின் பொன்விலங்கு நாவலைப் படித்து தமிழ் எழுத்து உலகில் நுழைந்த இந்த எழுத்தாளரின் இந்த முதல் படைப்புத் தொகுப்பு வாசகர்களை வசீகரிக்கும் என்று சொல்லலாம். மூன்று குறுநாவல்களும், 33 சிறுகதைகளையும் உள்ளடக்கிய இந்தத் தொகுப்பிற்கு, அறிஞர் பெருமக்களின் மதிப்புரையும், வாசித்து மகிழ்ந்த வாசகர்கள் கடிதங்களும் சிறப்பு சேர்க்கின்றன. […]

Read more

கபிலரின் குறிஞ்சிப் பாட்டுத் தாவரங்கள்

கபிலரின் குறிஞ்சிப் பாட்டுத் தாவரங்கள், இரா. பஞ்சவர்ணம், பஞ்சவர்ணம் வெளியீடு, காமராஜர் தெரு, பண்ருட்டி 607106, பக். 272, விலை 300ரூ. குறிஞ்சிப்பாட்டில் பதிவு செய்யப்பட்டுள்ள 112 தாவரங்கள், கபிலர் தொகுத்து வழங்கயி, 102 பூக்கள் ஆகியவற்றை இலக்கியப் புலமையோடும், அறிவியலின் அடிப்படையில் தாவரவியல் பெயரீட்டு முறையிலும் அணுகி, மிக அருமையானதொரு பணியினைத் தாவரத் தகவல் மையம் செய்துள்ளது. குறிஞ்சிப்பாட்டில் உள்ள தாவரங்கள் பட்டியல், சங்க இலக்கியங்கள், பதினெண் கீழ்கணக்கு போன்ற இலக்கியங்களில் இடம் பெறும் தாவரம் எனப் பட்டியலிட்டு அதன் வகைப்பாடு, தாவர […]

Read more

திராவிடமா? தீரா விடமா?

திராவிடமா? தீரா விடமா?, ஓவியப்பாவலர் மு.வலவன், முத்தையன் பதிப்பகம், பக். 296, விலை 180ரூ. தமிழ்நாடு, கேரளம், ஆந்திரப்பிரதேசம், கர்நாடகம் என்னும் நான்கு மாநிலங்களையும் புதுச்சேரி என்னும் யூனியன் பிரதேசத்தையும் உள்ளடக்கியது திராவிட நாடு. இந்தத் திராவிட நாட்டில் பெரும்பான்மை மக்களால் நான்கு மொழிகள் பேசப்படுகின்றன. தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் இன்னும், இந்த நான்கு மொழிகளில் எந்த மொழியைத் திராவிட நாட்டின் தேசிய மொழியாக ஏற்றுக் கொள்வது? என்னும் கேள்விக்குத் திராவிட நாட்டுக்காரர்களால், எந்தப் பதிலையும் தரமுடியவில்லை. ஆட்சி அமைப்பு வசதிக்கு, ஒரு […]

Read more

ஆன்மிக சாண்ட்விச்

ஆன்மிக சாண்ட்விச், மு. கோபி சரபோஜி, வானவில் பதிப்பகம். நமது இதிகாச புராணங்களுக்குள் நுழைந்தால், சுவாரஸ்யத்திற்கும், சுவைக்கும் பஞ்சமே இல்லாத அளவு, ஏராளமான கதைகள் கிடைக்கும். ஆசிரியர் இவற்றிலிருந்து 20 கதைகளை தேர்வு செய்து இந்த நூலில் நமக்கு வழங்கியிருக்கிறார். எல்லா கதைகளுக்கும், அருமையான ஓவியங்களையும் இணைத்து, நூலை மிக நன்றாக வெளிக் கொணர்ந்திருக்கிறது வானவில் பதிப்பகம். தலைப்பில் உள்ள சாண்ட்விச்சுக்கு பதிலாக, தேன் துளிகள் என்றோ அமிர்தத் திவலைகள் என்றோ வைத்திருக்கலாம். -ஜனகன். நன்றி: தினமலர், 12/5/2013.   —-   ஸ்ரீமாகம் […]

Read more

வல்லமை தாராயோ

வல்லமை தாராயோ, வரலொட்டி ரெங்கசாமி, தனலட்சுமி பதிப்பகம், எஸ்-17, அரவிந்த் நரேன் என்கிளேவ், 8, மாசிலாமணி தெரு, பாண்டிபஜார், தி. நகர், சென்னை 17, பக். 416, விலை 200ரூ. ஆண்டவனிடம் வியாபார புத்தியுடன் பக்தி செய்வதால் எந்தப் பயனும் இல்லை. கடவுளை கடவுளுக்காகவே காதலித்து, அன்பு செலுத்துபவர்களின் பக்தி எப்படிப்பட்டதாக இருக்கும்? மரணம் என்பது நம் முடிவில்லை. ஜனனம் என்பது நம் தொடக்கமும் இல்லை. இந்த ஞானத்துடன் கடவுளின் செயல்களைக் காண்பவர்களுக்கு அன்பைத் தவிர, வேறு எதுவுமே தெரியாது. பாரசீகக் கவிஞன் ஜலாலுதீன் […]

Read more

பேறு பெற்ற பெண்மணிகள்

பேறு பெற்ற பெண்மணிகள், அதிரை அஹ்மத், இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட், 138, பெரம்பூர் நெடுஞ்சாலை, சென்னை 12, பக். 160, விலை 65ரூ. இஸ்லாம் மதத்தில் பெண்களுக்கு உரிமை இல்லை என்ற கருத்தை மறுக்கிறது இந்த நூல். பெண்களை இஸ்லாம் அடிமைப்படுத்தவில்லை என்பது மட்டுமின்றி, அவர்களுக்கு விடுதலையும் உரிமையும் வழங்குகின்றது (பக்.8). இஸ்லாத்தில் பலதார மணம் ஏன்? வரலாற்றில் போர்கள் முடிந்ததும் பல ஆண்கள் மடிந்துபோவர். அந்தப் பெண்களுக்கு வாழ்வு தரவே ஒரு ஆண் பல பெண்களை மணக்கிறார்கள் என்று இந்த நூல் பதில் […]

Read more

விவேக சிந்தாமணி

விவேக சிந்தாமணி, கவிஞர் பத்ம தேவன், கற்பகம் புத்தகாலயம், 4/2, சுந்தரம் தெரு, தி. நகர், சென்னை 17, பக். 200, விலை 65ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0001-878-8.html தனிப்பாடல்கள் பலவற்றைத் தொகுத்து, விவேக சிந்தாமணி என்ற பெயரில் நூலாக முதலில் வெளியிட்டவர் யார் என அறிய இயலவில்லை. முற்காலத்தில், பெரியோர்கள் அனைவரும் படித்து பாதுகாத்த நூல். இலக்கியத் தரம் வாய்ந்த பாடல்களும், நீதிக் கருத்துக்களை கூறும் பாடல்களும் உள்ளன. புராணச் செய்திகளும் பஞ்சதந்திரக் கதைச் செய்திகளும் […]

Read more

பார்வைகள் மறுபார்வைகள்

பார்வைகள் மறுபார்வைகள் (கட்டுரைத் தொகுதி), நீல பத்மநாபன், திருவரசு பத்தக நிலையம், 23, தீனதயாளுதெரு, தி.நகர், சென்னை 17, பக். 260, விலை 100ரூ. நீலபத்மநாபன் 2008 முதல் 2010 முடிய எழுதிய கட்டுரைகள், நேர்காணல்கள், மதிப்புரைகள் இதில் தொகுக்கப்பட்டுள்ளன. என் படைப்புகள் மூலம் ஆத்ம சோதனையும், சுய உணர்தலும் பயில்வதின் வழி தேடிக்கொண்டிருக்கிறேன் என்று கூறும் நூலாசிரியர் நவீன காலத்தில் தமிழ் மொழி என்னும் கட்டுரையில் இனி வரும் எந்த மாற்றங்களையும் எதிர்கொண்டு புத்துயிர்ப்புடனும், புதுப்பொலிவுடனும் வாழும் திறனையும் தீரத்தையும் தமிழ் பெற்று […]

Read more
1 794 795 796 797 798 841