இந்திய வேதங்கள் போற்றும் நபிகள் நாயகம்(ஸல்)

இந்திய வேதங்கள் போற்றும் நபிகள் நாயகம்(ஸல்), ஜே.எம். சாலி எம்.ஏ, யுனிவர்ஸல் பப்ளிஷர்ஸ், 2, வடக்கு உஸ்மான் சாலை, தி.நகர், சென்னை 17, விலை 110ரூ. கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக எழுத்துத் துறையில் ஈடுபட்டு வரும் இந்நூலாசிரியர், உலக முஸ்லிம்கள் தன் உயிரினும் மேலாக ஏற்றிப் போற்றும் இறைத்தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்களைப் பற்றி பல்லாயிரம் வருடங்களுக்கு முன்பே இந்திய வேதங்களில் கூறப்பட்டுள்ள பல்வேறு செய்திகளை இந்நூலில் தொகுத்துள்ளார். உலகிலுள்ள ஒவ்வொரு சமுதாயத்திற்கும் தூதர்களை நாம் அனுப்பியிருக்கிறோம் – என்பது திருக்குர் […]

Read more

இந்திய பணக்காரர்களின் இன்னொரு முகம்-பெரு முதலாளிகளின் மறுபக்கம்

இந்திய பணக்காரர்களின் இன்னொரு முகம்-பெரு முதலாளிகளின் மறுபக்கம், வே. குமரவேல், முல்லை பதிப்பகம், சென்னை 40, பக். 532, விலை 300ரூ. மேடைப் பேச்சுத் தொனியில் 40 கட்டுரைகளைக் கொண்ட தொகுப்பு. அரசு அதிகார மையங்களுடன் பெருமுதலாளிகள் கொண்டுள்ள தொடர்புகள் குறித்த ஏராளமான குறிப்புகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. பெரும்பாலும் காங்கிரஸ், தி.மு.க., பா.ஜ.க. உள்ளிட்ட பெரும்பாலான கட்சிகள் எதையும் இந்நூல் விட்டுவிடவில்லை. சுமார் 60 ஆண்டுகால ஊழல்கள் அத்தனையும் இந்த நூலில் வெவ்வேறு இடங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளன. சமூகத்தை உற்றுநோக்குவதற்கு இன்னும் கூடுதலான வாசிப்பு […]

Read more

நீந்திக்கடந்த நெருப்பாறு பாகம்1

நீந்திக்கடந்த நெருப்பாறு பாகம்1, அரவிந்தகுமாரன், தமிழ்லீடர், ஆஸ்திரேலியா. போர்க்காலம் தமிழில் இந்த நூற்றாண்டின் ஆகச்சிறந்த படைப்புகள் ஈழத்து மண்ணில் இருந்துதான் முகிழ்க்க வேண்டும். ஏனெனில் அந்த சமூகமே மிகுந்த நெருக்கடிக்கு உள்ளாகி இருக்கிறது என்று சொல்லுவதுண்டு. முள்ளிவாய்க்கால் போன்ற பெரும் அழித்தொழிப்புக்கும் ஆயுதப் போராட்டத் தோல்விக்கும் பின்னர் தன்னை மீட்டெடுக்க கடந்த நான்காண்டுகளாக அச்சமூகம் போராடி வருகிறது. அதில் ஒரு பகுதியாகத்தான் அங்கொன்றும் இங்கொன்றுமாக எழுந்துவரும் படைப்புகள். அதில்ஒன்றுதான் நீந்திக்கிடந்த நெருப்பாறு என்கிற இந்த நாவல். இது ஒரு போர் நாவல். ஈழப்போரின் இறுதிக்கட்டத்தில் […]

Read more

காஞ்சிமகான் மகிமை

காஞ்சிமகான் மகிமை, சாரதா விஸ்வநாதன், விஜயா பப்ளிகேஷனஸ், விஜயா கார்டன்ஸ், 317, என்.எஸ்.கே.சாலை, வடபழனி, சென்னை 26, விலை 70ரூ. காஞ்சிப் பெரியவர் சங்கராச்சாரியாரை சந்தித்த தலைவர்களும், பிரமுகர்களும் தங்களுக்கு ஏற்பட்ட அபூர்வமான அனுபவங்கள் பற்றிக் கூறும் விவரங்கள் அடங்கிய புத்தகம். சந்நியாசிகள் என்றாலே பிடிக்காதவர், சுப்பிரமணியசுவாமி. அவர் எப்படி பெரியவருக்கு பக்தரானார் என்பதை ஒரு கட்டுரை விவரிக்கிறது. அது மட்டுமல்ல, நெருக்கடி நிலை பிரகடனம் பற்றியும், காஞ்சிப் பெரியவரை இந்திராகாந்தி சந்தித்தபோது என்ன பேசினார் என்பது பற்றியும், பலரும் அறிந்திராத அபூர்வமான தகவல்களை […]

Read more

இசையில் நனையும் இறைவன்

இசையில் நனையும் இறைவன், டாக்டர் பாரதி மாடசாமி, சபரீஷ் பாரதி, எஸ்.17/8 மாசிலாமணி தெரு, பாண்டிபஜார், தி.நகர், சென்னை 17, விலை 100ரூ. இறைவனை பல வழிகளில் தரிசிக்கிறோம். அதில் இசைவழி பிரார்த்தனையும் ஒன்று. இசை வழிபாட்டின் தோற்றமும் வளர்ச்சியும், சங்க காலத்து இசை வழிபாடு, மன்னர்கள் காலத்து இசை பிரார்த்தனை, பஜனைகள், திருப்புகழ் சபைகள், கிருஷ்ணர் ஜெயந்தி, இறைவனும்  இசையும், இசையின் இன்பம், பஜனை பலன்கள் ஆகியவை குறித்து தெளிவாக விளக்கப்பட்டுள்ளது.   —-   உயரிய சிந்தனைத் துளிகள், முனைவர் சோ. […]

Read more

சித்தர் பாடல்கள்

சித்தர் பாடல்கள், மானோஸ், பூங்கொடி பதிப்பகம், 14, சித்திரைக்குளம் மேற்கு வீதி, மைலாப்பூர், சென்னை 4, விலை 200ரூ. To buy this Tamil book online  – www.nhm.in/shop/100-00-0001-432-6.html தமிழ்நாட்டு சித்தர்களான அகத்தியர், கபிலர் முதற்கொண்டு கயிலாய கம்பளிச்சட்டை முனி நாயனார் வரையிலான சித்தர்களின் பாடல்களை உள்ளடக்கிய நூல் இது. பாடல்கள் அனைத்தும் எளிய நடையில் அமைந்திருப்பதுடன், அருஞ்சொற்பொருள் விளக்கமும் நூலில் இணைக்கப்பட்டுள்ளன. இத்துடன் உரைநடையில் விளக்கப்பட்டுள்ள சித்தர் தத்துவங்கள் நூலுக்கு சிறப்பு சேர்க்கிறது. நன்றி: தினத்தந்தி, 11/12/13.   —-   […]

Read more

வாழ்ந்து படிக்கும் பாடங்கள்

வாழ்ந்து படிக்கும் பாடங்கள், என். கணேசன், கருத்துளை மீடியா பப்ளிகேஷன், 7/1, 3வது அவென்யூ, அசோக் நகர், சென்னை 33, விலை 110ரூ. நாகரீக உலகில் அர்த்தமுள்ள வாழவு வாழ நினைக்கும் மனிதனுக்கு அதற்கான வழிகள் தெரிவதில்லை. அந்த நிறைவாழ்வுக்கான பல்வேறு பாடங்களை சாதனை படைத்தவர்களின் வாழ்வியல் மேற்கோள்களுடன் தன்னகத்தே கொண்ட நூல் இது.   —-   அமானுஷ்யமும் அற்புத நிகழ்வுகளும், எம்.ஆர். ஆனந்தவேல், ஸ்ரீஹனுமான் டாரட் எண் கணிதே ஜோதிட ஆய்வுமையம்,9, ராகவேந்திரா நகர், ஐ.ஓ.பி. காலனி, பாரதியார் பல்கலைக்கழகம், மருதமலை, […]

Read more

சமூக வரலாற்றில் அரவாணிகள்

சமூக வரலாற்றில் அரவாணிகள், முகிலை ராஜபாண்டியன், முனைவர் கே.ஆர். லட்சுமி, முனைவர் கி. அய்யப்பன், முனைவர் கெ.ரவி, சி.ராமச்சந்திரன், விசாலாட்சி பதிப்பகம், கிழக்குத் தெரு, கடையம், நல்லாப்பாளையம் அஞ்சல், விழுப்புரம் மாவட்டம், விலை 300ரூ. அனுதினமும் எதிர்கொள்ளும் பிரச்சினைகள், அடையும் அவமானங்கள், சொந்த குடும்பமே புறந்தள்ளும் அவலம் என இதற்கு மேலும் தாங்காது கசப்பு என்கிற நிலையில்தான் இப்போதும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள், பெரும்பாலான அரவாணிகள். இவர்களின் வாழ்க்கையில் சமூகத்தின் அக்கறை எத்தகையதாக இருக்க வேண்டம் என்பதை 58 ஆய்வாளர்களின் பார்வையில் தந்திருப்பதே இந்த நூல். […]

Read more

இறுதிச் சொற்பொழிவு

இறுதிச் சொற்பொழிவு, மஞ்சுள் பப்ளிக் ஹவுஸ், 7/32, அன்சாரி ரோடு, தர்யாகஞ்ச், புதுடெல்லி 110002, விலை 199ரூ. அமெரிக்காவின் கார்னகி மெலன் பல்கலைக்கழக கணினி துறை பேராசிரியர் ரேண்டி பாஷ் அழகான மனைவி, 3 இளம் குழந்தைகளுடன் வாழ்ந்து வரும் அவருக்கு குணப்படுத்த முடியாத புற்றுநோய் இருப்பது திடீரென தெரியவருகிறது. வாழ்வின் கடைசி கட்டத்தில் இருந்தாலும் ரேண்டிபாஷ் துவண்டுவிட வில்லை. தன் மனைவி குழந்தைகளுக்கு வாழ்நாள் முழுவதும் இருந்து செய்யக்கூடியவற்றை குறைந்த நாட்களிலேயே செய்ய முனைகிறார். இதற்கிடையே பல்கலைக்கழகத்தில் இறுதிச் சொற்பொழிவு ஆற்ற அவருக்கு […]

Read more

ஆதி உண்மைச் சிலப்பதிகாரம்

ஆதி உண்மைச் சிலப்பதிகாரம், புலவர் சிகாமணி சம்பந்தன், 329/10, கதிரவன் காலனி, அண்ணாநகர் மெயின் ரோடு, சென்னை 40, விலை 80ரூ. சிலப்பதிகாரம் பற்றிய ஆய்வு நூல். சிலப்பதிகாரம் ஒரு சமண காவியம் என ஆசிரியர் கூறுகிறார். நன்றி: தினத்தந்தி, 9/10/13.   —-   நீங்களும் மகுடம் சூடலாம், இளசை சுந்தரம், புகழ் பதிப்பகம், பக். 162, விலை 100ரூ. காலம் என்ற சிற்பு நம்மை செதுக்குகிறது. அதில நாம் சிற்பமா? சிதறி விழும் கற்களா? என்ற சிந்தனையை தூண்டும் வரிகளுடன் துவங்கும் […]

Read more
1 184 185 186 187 188 223