மனச்சிறகுகள்

மனச்சிறகுகள், கவிஞர் மருதம்கோமகன், கோமகன் பதிப்பகம், 479ஏ, 8வது தெரு, பாரதிநகர் தெற்கு, கும்பகோணம், விலை 90ரூ. கண்ணில் கண்ட காட்சிகளை காதில்பட்ட செய்திகளை கவிதையாய், புகைப்படத்துடன் சமுதாய சிந்தனை கருத்துடன் சொல்லப்பட்டுள்ளது. 104 கவிதைகள் இடம்பெற்றுள்ளன. நன்றி: தினத்தந்தி 10/4/13.   —-   சுற்றுச்சூழல் சிந்தனைகள், அரிமா. ஜே, ஜோபிரகாஷ், ரேவதி பதிப்பகம், 19, ராஜசேகரன் தெரு, மைலாப்பூர், சென்னை 4, விலை 225ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0001-023-8.html என்னென்ன காரணங்களால் நமது சுற்றுச்சூழல் […]

Read more

கபிலர்

கபிலர், கா. அரங்கசாமி, சாகித்திய அகாதெமி, குணா பில்டிங், 443, அண்ணா சாலை, தேனாம்பேட்டை, சென்னை 18, விலை 50ரூ. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே சங்கப் புலவர்களால் போற்றப்பெற்றவர் கபிலர். திருகோவிலூர் பாடல் கல்வெட்டு இவர் பெருமையை பறைசாற்றுகிறது. கபிலர் குறித்து பல தமிழார்வலர்கள் புத்தகங்கள் எழுதியுள்ளனர். ஆனால் கபிலரின் வரலாற்றையும், கபிலரின் தமிழியல், ஆளுமைத்திறன், இலக்கியக் கோட்பாடுகள் குறித்து மாறுபட்ட கோணத்தில் படம்பிடித்து காட்டுகிறார் கல்வெட்டியல் புலமை பெற்ற நூலாசிரியர் கா. அரங்கசாமி. நன்றி: தினத்தந்தி 10/4/13.   —-   சாம்ராட் […]

Read more

ஊரகப் பொருளாதாரமும் வேளாண்மைப் பொருளாதாரமும்

ஊரகப் பொருளாதாரமும் வேளாண்மைப் பொருளாதாரமும், வே. கலியமூர்த்தி, சுடரொளிப் பதிப்பகம், 99/அ, 3, பாஞ்சாலியம்மன் கோவில் தெரு, அரும்பாக்கம், சென்னை 106, பக். 416, விலை 150ரூ. ஊரகப் பொருளாதாரத்தைப் பற்றியும் வேளாண்மைப் பொருளாதாரத்தைப் பற்றியும் பேராசிரியரால் எழுதப்பட்ட இந்த நூல் இளங்கலை, முதுகலைப் பட்ட வகுப்பு மாணவர்களுக்குப் பெரிதும் பயன்படும். இந்நூலைப் படிக்கும் மாணவர்கள் இத்துடன் நில்லாமல் இதில் குறிப்பிடப்பட்டுள்ள நூல் பட்டியலைக் கொண்டு மூலநூல்களையும் படிப்பது அவர்களுடைய அறிவு வளர்ச்சிக்குப் பெரிதும் துணை புரியும். பட்டங்களைப் பெறுவதற்கு மட்டுமல்லாமல், போட்டித் தேர்வுகளுக்குத் […]

Read more

கங்காபுரிக் காவலன்

கங்காபுரிக் காவலன், விக்கிரமன், ஆலயா, 6/11, டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலை, வ.உ.சி. நகர், பம்மல், சென்னை 75, விலை இரண்டு பாகங்களும் சேர்த்து 500ரூ. ராஜராஜசோழனின் மகனான ராஜேந்திர சோழன், தந்தைக்கு நிகராக சரித்திரத்தில் இடம் பெற்றவர். ராஜராஜன் தஞ்சை பெரிய கோவிலைக் கட்டினார். ராஜேந்திரன் கங்கை கொண்ட சோழபுரத்தை உருவாக்கினார். இதன் பின்னணியில் கங்காபுரிக்காவலன் வரலாற்று நாவலை இரண்டு பாகங்களில் எழுதியுள்ளார், கலைமாமணி விக்கிரமன். பொன்னியின் செல்வனுக்குத் தொடர்ச்சியாக நந்திபுரத்து நாயகியை எழுதி சாதனை படைத்த விக்கிரமன், கங்காபுரிக் காவலனை சிறப்பாக எழுதி […]

Read more

அரசியல் சதுரங்கம்

அரசியல் சதுரங்கம், சோலை, நக்கீரன், 105 ஜானி ஜான்கான் சாலை, ராயப்பேட்டை, சென்னை 14, விலை 140ரூ. அரசியல் விமர்சகர் சோலை நக்கீரன் வார இதழில் எழுதிய அரசியல் கட்டுரைகளின் தொகுப்பு. இந்த கட்டுரை தொடர் வெளியான காலகட்டத்தில் பரபரபப்பாக பேசப்பட்ட உள்ளூர் அரசியல் முதல் உலக அரசியல் வரையிலான விஷயங்களை தனது பாணியில் அலசி ஆராய்ந்து எழுதியுள்ளார். கட்சிபேதமின்றி உண்மைகளை உலகுக்கு எடுத்துச் சொல்லும் தைரியம் அவரது எழுத்தில் பளிச்சிடுகிறது. சமுதாய நோக்குடன் உண்மைகளை ஆணித்தரமாக எழுதியிருப்பது சிறப்பு.   —-   […]

Read more

அமுதம் பருகுவோம்

அமுதம் பருகுவோம், ப. முத்தக்குமாரசுவாமி, பழனியப்பா பிரதர்ஸ், 25, பீட்டர்ஸ் சாலை, சென்னை 14, பக். 128, விலை 100ரூ. இந்து மதத்தின் சிறப்புகளை அழகாக வெளிப்படுத்தும் நூல். தியானம் மனித வாழ்வுக்கு எவ்வளவு அவசியம் என்பதையும் வலியுறுத்துகிறது. தனி மனிதனின் உயர்வுக்கும் சமுதாய வளர்ச்சிக்கும் தேவையான அறநெறிகளை ராமாயணம், மகாபாரதம், பாகவதம், பகவத் கீதை போன்ற அறநூல்களின் மேற்கோள்களோடு எடுத்துரைக்கும் பயனுள்ள நூல் இது. ஆகம விதிப்படி நிறுவப்படாத சிலைகளினால் மக்களுக்கு நன்மைகள் கிடைக்காது. ஆகம விதிப்படி கட்டப்பட்ட கோவில்களினால் பொதுவாக நன்மைகள் […]

Read more

இலக்கிய மரபியல்

இலக்கிய மரபியல், கி. இராசா, பார்த்திபன் பதிப்பகம், திருச்சி 21, பக். 504, விலை 350ரூ. இலக்கிய ஆய்வில் பொதுவாக இலக்கிய மரபு என்ற வழக்கு உண்டு. இலக்கிய மரபியல் என்ற வழக்கு இதுகாறும் இல்லை. இலக்கிய மரபு என்பது வேறு. இலக்கிய மரபியல் என்பது வேறு. இலக்கிய மரபு (Literary Genetics) என்பது இலக்கியத்தின் தோற்றம் வளர்ச்சி குறித்தது. இதனை இலக்கியப் பரிணாமம் (Evolution lf Literature) என்றால் சட்டென விளங்கும். இந்த இலக்கியப் பரிமாணத்திற்கு அடிப்படையாக விளங்குகின்ற இலக்கிய மரபுக் கூறுகள் […]

Read more

தடைகளும் விடைகளும்

தடைகளும் விடைகளும், முரு.பழ.ரத்தினம் செட்டியார், சைவ சித்தாந்த வாழ்வியல் ஆய்வு மையம், 3, அண்ணாநகர், சோளிங்கர் 631102, பக். 306, விலை 120ரூ. சைவ சித்தாந்தத்தின் வழியில், பல்வேறு வடிவில் எழுப்பப்படும் சமயம் தொடர்பான 250 கேள்விகளுக்கான விடைகள் இந்த நூலில் தொகுக்கப்பட்டுள்ளன. கேள்விகள் இரு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. முதல் பகுதியில் அருள் அறம், உலக நலம், ஊழ்வினை, பழக்க வழக்கங்கள், தெய்வமாடி, பேயகள், மந்திரங்கள், சித்துகள், வழிபாடு, புராணக் கதைகள் உள்ளிட்ட 10 தலைப்புகளில் கேள்விகள் தொகுக்கப்பட்டுள்ளன. பால் குடிப்பது தீமையா, வட்டி […]

Read more

ராஜீவ் படுகொலை-தூக்குக்கயிற்றில் நிஜம்

ராஜீவ் படுகொலை-தூக்குக்கயிற்றில் நிஜம், திருச்சி வேலுசாமி, பேட்ரிஷியா பதிப்பகம், 2/40, பி, இரண்டாம் தளம், ராம்நகர், நங்கநல்லூர், சென்னை 61, விலை 200ரூ. ஸ்ரீபெரும்புதூரில் 1991ல் நடந்த ராஜீவ் காந்தி படுகொலை ஒட்டுமொத்த தமிழின வரலாற்றில் பெரும் மாறுதல்களை ஏற்படுத்திய ஒன்று. இன்று அது முள்ளிவாய்க்காலில் தமிழினம் அழிக்கப்பட்ட நிகழ்வு வரைக்கும் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி இருக்கிறது. அந்த படுகொலை மட்டும் நடக்காமல் இருந்திருந்தால் இந்திய வரலாறு நிச்சயமாக வேறாக இருந்திருக்கும். ஒருவேளை இலங்கையில் நிலைமை கூட இப்போதிருப்பதில் இருந்து முற்றிலும் வேறாக இருந்திருக்கலாம். […]

Read more

ஐந்தாம் கட்ட விடுதலை போர்

ஐந்தாம் கட்ட விடுதலைப் போர், கண்மணி, மானுட நம்பிக்கை, 568எ, எட்டாவது முதன்மைச் சாலை, மகாகவி பாரதி நகர், வியாசார்பாடி, சென்னை 39, பக். 534, விலை 225ரூ. தமிழீழம் தேவையா? தேவையில்லையா? என்று பேசும் பலரும், அது இலங்கையில் இருக்கும் தமிழ் மக்களின் பிரச்னைகளாகவே பார்க்கத் தொடங்கிவிட்டனர். அத்தகையோரை கடுமையாக சாடுவதோடு, அது நம் சகோதரர்களின் பிரச்னை என்ற உறுதியோடு நூல் முழுவதும் பேசுகிறார் கண்மணி, கடந்த 10ஆண்டுகளாக இலங்கையில் நடைபெற்று வந்த வரலாற்று நிகழ்வுகளை நூல் முழுதும் பதிவு செய்கிறார். பேச்சுவார்த்தை […]

Read more
1 212 213 214 215 216 223