சிந்தனைக் களஞ்சியம்

சிந்தனைக் களஞ்சியம், உ. நீலன், அருள் பதிப்பகம், சென்னை, விலை 130ரூ. பல நூல்களைப் படித்த திருப்தியை தரக்கூடிய அளவுக்கு பல்வேறு செய்திகள் மற்றும் கருத்துக்களின் தொகுப்பாக இந்நூல் அமைந்துள்ளது. குறிப்பாக, பிரபலமானவர்களின் வாழ்க்கையில் நடந்த நிகழ்ச்சிகளைப் பதிவு செய்யும்போது, அவற்றிலுள்ள பலம், பலவீனங்களையும் ஆரோக்கியமான விமர்சனத்துடன் குறிப்பிடுவது இந்நூலாசிரியரின் தனிப் பணியாகும். இந்நூலின் முதல் கட்டுரையான காந்தியடிகளுக்கு ஏன் நோபல் பரிசு கிடைக்கவில்லை? என்ற காரணங்களை படிக்கும்போது, தேர்வு கமிட்டியினர் இப்படியெல்லாமா யோசிப்பார்கள் என்று தோன்றுகிறது. எத்தனையோ இக்கட்டான நேரங்களில் மிகச் சரியான […]

Read more

திருக்குர்ஆன்

திருக்குர்ஆன், மூலம் தமிழாக்கம் விரிவுரை, இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட், சென்னை, பக். 1227, விலை 350ரூ. 1400 ஆண்டுகளுக்கு முன் மனித சமூதாயம் அனைத்திற்கும் இறுதித் தூதராக அனுப்பப்பட்ட முஹம்மது நபி (ஸல்) அவர்களுக்கு இறுதி வேதமாக திருக்குர்ஆன் அருளப்பட்டது. இதன் சிறப்பு என்னவென்றால், எதிரிகள் பலமுறை முயன்றும் இதற்குள் ஒரு மனித வார்த்தையைக்கூட திணிக்க முடியாமல், இன்று வரையும் அதன் புனிதம் பாதுகாக்கப்படுவதுதான். திருக்குர்ஆன், உலகிலுள்ள எல்லா மொழிகளிலுமே அதன் மூலத்துடன் கூடிய மொழிபெயர்ப்புகள் வெளியாகியுள்ளன. அத்தகைய திருக்குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்பு தமிழகத்தில் […]

Read more

இளையராஜாவைக் கேளுங்கள்

இளையராஜாவைக் கேளுங்கள், குமுதம் பு(து)த்தகம், சென்னை, பக். 184, விலை 120ரூ. இசைஞானி இளையராஜாவை தரிசிக்க ரசிகர்களுக்கும் வாசகர்களுக்கும் மிகப் பெரும் வாய்ப்பை உருவாக்கித் தந்தது குமுதம். வாசகர்கள் கேள்விக்கு இசைஞானி அளித்த பதில்களின் மூலம் அந்த தரிசனம் சாத்தியமானது. ஆனால் அவை வெறும் பதில்கள் மட்டுமல்ல. இசைஞானியின் வாழ்க்கையை அவரது அனுபவரீதியில், அவரே சொல்லக்கேட்ட மிகப் பெரிய பேறு அது. இசை, ஆன்மீகம், குடும்பம், நட்பு, சினிமா என்று எந்த ஒன்றைப் பற்றி பேசினாலும் அதில் தன் புகழை நாட்டாமல், உண்மைகளை வெளிப்படையாகப் […]

Read more

தியாகசீலர் கக்கன்

தியாகசீலர் கக்கன், முனைவர் இளசை சுந்தரம், மதுரா வெளியீடு, சென்னை, விலை 100ரூ. தியாகசீலர் கக்கன்ஜியைப் பற்றிய ஒரு விரிவான நூல் வெளியாவது இதுதான் முதல் முறை. அவரைப் பற்றிய தகவல்களைத் திரட்ட இந்நூலாசிரியர் மிகவும் சிரமப்பட்டிருப்பதை இந்நூலைப் படிக்கும்போது உணரமுடிகிறது. மிக எளிய குடும்பத்தில், அதிலும் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தில் பிறந்த ஒருவர், விடுதலைப் போராட்ட வீரராகவும், சிறந்த கொள்கைப் பிடிப்புள்ளவராகவும், நேர்மையான அரசியல்வாதியாகவும், நிர்வாகத் திறமை மிக்கவராகவும், இறுதிவரை எளிய வாழ்க்கையையே விரும்பியவராகவும், மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக உயர்ந்து விளங்கியுள்ளது பாராட்டத்தக்கது. இவரின் பிறப்பு […]

Read more

பாரதத்தில் ராஜதர்மம்

பாரதத்தில் ராஜதர்மம் அன்றும், இன்றும், ஆர்.பி.வி.எஸ். மணியன், வர்ஷன் பிரசுரம், சென்னை 17, பக். 456, விலை 250ரூ. ஆட்சியாளர்கள் கடைபிடிக்க வேண்டிய உயரிய நெறிமுறைகளே ராஜதர்மம் எனப்படுவது. போற்றத்தக்க இத்தகைய நெறிமுறைகளை உருவாக்கி, அவற்றை உலகிற்கு முதன் முதலில் போதித்தது பாரத நாடு என்று கூறும் இந்நூலாசிரியர், அவை குறித்த பல்வேறு வரலாற்றுத் தகவல்களை இந்நூலில் தொகுத்துள்ளார். இதற்கு ராமாயணம், மகாபாரதம், சுக்ர நீதி, அர்த்த சாஸ்திரம் போன்ற ஹிந்து தர்ம நூல்கள் முதல், திருக்குறள், அகநானூறு, புறநானூறு போன்ற சங்க கால […]

Read more

குமுதம் ஒரு பக்கக் கதைகள் 1999

குமுதம் ஒரு பக்கக் கதைகள் 1999, குமுதம் பு(து)த்தகம், சென்னை, பக். 112, விலை 80ரூ. பரபரப்பான இந்த உலகில் ஒரே மூச்சில் படித்து விட வேண்டும். அதே சமயம் ஒரு சிறுகதையைப் படித்த திருப்தி கிட்ட வேண்டும் என்ற வாசகர்களின் எண்ணத்தை குமுதம் ஒரு பக்கக் கதைகள்தான் தீர்த்து வைத்தன. கதை எழுத ஆர்வம் உள்ள அனைவரையும் குறிப்பாக வாசகர்களையும் எழுதவைத்தது இந்தக் கதைகள்தான். அன்றாட வாழ்வில் நடக்கும் எந்த ஒன்றையும் இந்தக் கதைகள் விட்டு வைத்ததேர இல்லை. கொலை மனசு, நூலைப்போல, […]

Read more

பாரதநாடு பாருக்கெல்லாம் திலகம்

பாரதநாடு பாருக்கெல்லாம் திலகம், ஆர்.பி.வி.எஸ். மணியன், வர்ஷன் பிரசுரம், சென்னை, விலை 140ரூ. நம் பாரத நாட்டின் அருமை, பெருமைகளைப் பற்றி, வி.ஹெச்.பி. நடத்தி வந்த ஹிந்து மித்திரன் இதழில் 2005ல் இந்நூலாசிரியர் எழுதிரய தொடர் கட்டுரைகளின் தொகுப்பே இந்நூல். இதில் உள்ள விஷயங்கள் அடடா… இத்தனை சிறப்புகளைக் கொண்டதா நம் நாடு என்று இன்றைய தலைமுறையினரை வியப்பில் ஆழ்த்தக்கூடியவை. நமது பழைய சாஸ்திரங்களில் இல்லாத விஷயங்களே இல்லை. ஆனால் நம்மை ஆண்ட அன்னியர்கள் அவற்றையெல்லாம் அழித்துவிட்டார்கள் என்று ஆதங்கப்படும் ஆசிரியர், அவற்றை உரிய […]

Read more

ஊழல் நம் பிறப்புரிமை

ஊழல் நம் பிறப்புரிமை, துக்ளக் சத்யா, ஆதாரம் வெளியீடு, சென்னை, விலை 100ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-248-0.html துக்ளக் வாசகர்களுக்கு இந்நூலாசிரியர் பற்றிய அறிமுகம் தேவையில்லை. சீரியஸான அரசியலையும், நாட்டு நடப்புகளையும் நகைச்சுவைப் பாணியில் படிப்பவர்கள் மட்டுமல்ல, விமர்சிக்கப்படுபவர்களும்கூட மெய்மறந்து சிரிக்கும்படி எழுதுவதில் இந்நூலாசிரியர் கைதேர்ந்தவர். இவரது அரசியல் கற்பனைக் கட்டுரைகளைவிட, நாட்டு நடப்புகள் குறித்த நையாண்டி உரையாடல் கட்டுரைகள் வயிறு குலுங்கச் சிரிக்க வைப்பவை. துக்ளக்கில் பல்வேறு கட்டங்களில் வெளியாகி, வாசகர்களின் சிறப்பான வரவேற்பைப் பெற்ற 25 […]

Read more

பரம(ன்) இரகசியம்

பரம(ன்) இரகசியம், என். கணேசன், பிளாக்ஹோல் மீடியா பப்ளிகேஷன்ஸ் லிமிடெட், சென்னை, விலை 550ரூ. இலக்கியச் சிந்தனை உட்பல பல பரிசுகளைப் பெற்றவை இந்நூலாசிரியரின் படைப்புகள். சிறுகதைகள், நாவல்கள் மட்டுமின்றி ஆழ்மன சக்தி, ஆன்மீகம், சுய முன்னேற்றம், வாழ்வியல் போன்றவை குறித்தும், இன்றைய தலைமுறையினருக்கு ஏற்ப நவீன சிந்தனையுடன் இவரது படைப்புகள் உள்ளதால், வாசகர்களிடையே அவற்றிற்கு பெரும் வரவேற்பு உள்ளது. அந்த வகையில் 600 பக்கங்களுக்கு மேல் விரியும் இந்த நாவலும், ஆரம்பம் முதல் இறுதி வரை பரபரப்பான, திகிலான, நிகழ்வுகளுடன் தொய்வின்றிக் கதை […]

Read more

திருக்குறளை மெய்ப்பிக்கும் மறக்க முடியாத 100 வரலாற்று நிகழ்ச்சிகள்

திருக்குறளை மெய்ப்பிக்கும் மறக்க முடியாத 100 வரலாற்று நிகழ்ச்சிகள், முனைவர் எஸ். சந்திரா, நர்மதா பதிப்பகம், சென்னை, விலை 55ரூ. உள்நாடு, வெளிநாடு என்று பல கணித அறிவியல் மாநாடுகளில் கலந்துகொண்டு அறிவியல் கட்டுரைகளை சமர்ப்பித்துள்ள இந்நூலாசிரியர், தமிழ் இலக்கிய ஆராய்ச்சிகளிலும் ஈடுபட்டு இவ்விரு துறைகளிலும் பல நூல்களை வெளியிட்டுள்ளார். நம் வாழ்க்கையில் நடக்கும் பல நிகழ்ச்சிகளை உற்று நோக்கினால், வள்ளுவன் கூறிய ஏதாவது ஒரு குறளுடன் ஒத்துப் போவதை அறியலாம். அந்த அளவிற்கு எக்காலத்திற்கும் பொருந்தும் வகையில் திருக்குறளைப் படைத்திருக்கிறார் திருவள்ளுவர். அதை […]

Read more
1 12 13 14 15 16 21