நிச்சயம் வெல்லலாம் நேரான பாதையில்

நிச்சயம் வெல்லலாம் நேரான பாதையில், கோபாலஸ்மி ரமேஷ், சேவாலயா கசுவா கிராமம், திருநின்றவூர் அருகில், திருவள்ளூர் மாவட்டம் 602024, விலை  நன்கொடை மட்டுமே. பொதுவாக எல்லா பள்ளிகளுமே தேர்வில் மாணவர்கள் அதிக மதிப்பெண் பெறுவதை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு இயங்கும் இன்றைய நிலையில் சேவாலயா தொண்டு நிறுவனம், கல்வியுடன் மாணவர்களக்கு இறை நம்பிக்கை, தன்னம்பிக்கை, நேர்மை, ஒழுக்கம், பொதுநலன் சார்ந்த நற்பண்புகளைப் போதித்தும் நீதிபோதனை (Moral Science) வகுப்புகளையும் பிரத்யேகமாக நடத்துகிறது. குறிப்பாக, மகாகவி பாரதி, மகாத்மா காந்தி, விவேகானந்தர் போன்ற மகான்கள் கூறிய […]

Read more

ஸ்ரீராமகிருஷ்ணப் பேரொளி

ஸ்ரீராமகிருஷ்ணப் பேரொளி, கல்யாணி வெங்கடராமன், திருமதி கல்யாணி வெங்கடராமன், 21ஈ, நியூடெக் ஐயப்பா என்க்ளேவ், ஸ்ரீ மாதவன் ரோடு, மகாலிங்கபுரம், சென்னை 34, பக். 480, விலை 280ரூ. இந்தியாவில் 19ஆம் நூற்றாண்டில் அவதரித்த மகா புருஷர்களில் தலைசிறந்தவர் ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்ஸர். ஹிந்து முஸ்லிம் கிறிஸ்தவம் என்று எல்லா மதங்களும் அந்த ஒரே கடவுளைத்தான் அடைய வழிகாட்டுகின்றன. எனவே எந்த மதத்தையும், அதன் நெறிகளைஹயம் நிந்திக்கக்கூடாது. நேசிக்க வேண்டும் என்று சமய நல்லிணக்கத்திற்கு முதன் முதலாக வழிகாட்டியவர். காளிதேவியை நேருக்குநேர் தரிசனம் செய்தவர். இந்த […]

Read more

பொது அறிவுக்கு 1000 கேள்வி பதில்கள்

பொது அறிவுக்கு 1000 கேள்வி பதில்கள், டி.எஸ். ரோகிணி, நற்பவி பிரசுரம், 57பி, பசுல்லா சாலை, தி.நகர், சென்னை 17, பக். 368, விலை ரூ. 150. எவ்வளவுதான் உயர் கல்வி கற்றிருந்தாலும், ஒருவரிடமுள்ள பொது அறிவுத் திறன்தான் அவரது ஆற்றலை உயர்த்தி காட்டுகிறது. அதனால் அரசு மற்றும் தனியார் துறை வேலை வாய்ப்புகளில் பொது அறிவுத் தேர்வுக்கு முக்கியத்துவம் தரப்படுகிறது. தவிர, படிக்காதவர்களும் கூடத் தங்களது பொது அறிவை வளர்த்துக் கொள்வது சமுதாயத்தில் மதிப்பு பெற அவசியமாகிறது. இந்நூலின் அறிவியல், வரலாறு, ஆன்மிகம், […]

Read more

நவீன வாழ்க்கையில் பிள்ளைகள் வளர்ப்பு

நவீன வாழ்க்கையில் பிள்ளைகள் வளர்ப்பு, Dr.C.S. ராஜு, டி.வி. சிவக்குமார், மணிமேகலைப் பிரசுரம், த.பெ.எண். 1447, 7, தணிகாசலம் சாலை, தி.நகர், சென்னை 17, பக். 192, விலை 100ரூ. கூட்டுக்குடும்பங்கள் இருந்த காலத்தில் எளிதாக இருந்த பிள்ளைகள் வளர்ப்பு, தனிக்குடுத்தனங்கள் பெருகிவிட்ட இக்காலத்தில் கஷ்டமாகிவிட்டது. தவிர, பிள்ளைகளை ஒழுக்கமானவர்களாகவும், தன்னம்பிக்கை உடையவர்களாகவும், ஆராக்கியமானவர்களாகவும்கூட வளர்க்க முடியாத நிலை உருவாகிவிட்டது. குறிப்பாக, இன்றைய பெற்றோர்களுக்கு சம்பாதிப்பதிலும் மற்ற பிரச்னைகளை சமாளிப்பதிலும் இருக்கும் ஞானம், பிள்ளைகள் வளர்ப்பு விஷயத்தில் போதிய அளவு இல்லை. விளைவு, பிள்ளைகளின் […]

Read more

சார்லி சாப்ளின் ஒரு தரிசனம்

சார்லி சாப்ளின் ஒரு தரிசனம், தி. குலசேகர், பிளாக் ஹோல் மீடியா பப்ளிகேஷன் லிமிடெட், 7/1, 3வது அவென்யூ, அசோக் நகர், சென்னை 600083, விலை ரூ. 150 ஹாலிவுட் திரைப்பட வரலாற்றில் பிரமிக்கத்தக்க சாதனைகளைப் புரிந்த மாபெரும் கலைஞன் சார்லி சாப்ளின். சினிமாவில், தான் பேசாமலேயே தன்னை எல்லோரும் வியந்து பேசும்படி மௌன மொழியில் தனது நடிப்புத் திறனை வெளிப்படுத்திக்காட்டியர். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை குலுங்கக் குலுங்கச் சிரிக்க வைத்த இவரது ஆரம்பகால வாழ்க்கை, வேதனைகளும், சோதனைகளும் நிரம்பியவை. வறுமைக்கும், மாற்றந்தாயின் […]

Read more

கனவு மெய்ப்பட வேண்டும்

கனவு மெய்ப்பட வேண்டும், வெ. துரைசாமி, ஆப்பிள் பப்ளிகேஷன்ஸ், 130, நெல்சன் மாணிக்கம் ரோடு, சென்னை 29. இந்நூலாசிரியர், இந்திய அளவில் வங்கி அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்கத் தலைவராக பல ஆண்டுகள் தொண்டாற்றியவர். இன்றைய அரசியல், சமூக, பொருளாதாரப் பிரச்னைகளை படம்பிடித்துக் காட்டும் இந்நூலாசிரியர், இவற்றைக் களைந்து இந்தியாவை செழிப்பான ஒரு நாடாக ஆக்கிக் காட்டும் வழிகளை இந்நூலில் கூறியுள்ளார். வாசகர்களுக்குப் போரடிக்காமல் இருக்க, விறுவிறுப்பான நாவலாக இந்நூலை உருவாக்கியுள்ளார். ஒரு சாதாரண மனிதன் இறையருளால் பிரதமராகி, நாட்டுப் பிரச்னைகளுக்குத் தீர்வு காண்பதுதான் கதைக்கரு. […]

Read more

ஓய்வுக்குப்பிறகும் உற்சாக வாழ்க்கை

ஓய்வுக்குப்பிறகும் உற்சாக வாழ்க்கை, மன்னார்குடி பானுகுமார், விஜயா பதிப்பகம், 20, ராஜ வீதி, கோவை 641001, பக். 272, விலை 155ரூ. பணி ஓய்வு பெற்றவர்கள் மட்டுமின்றி 60 வயதை எட்டிய அனைவருமே ஓய்வு பெற்றவர்களே. இவர்களில் பலர் தங்களது சுறுசுறுப்பான வாழ்க்கையும், சம்பாத்தியமும் நம்மைக் கடந்துவிட்டது. இனி பிறர் தயவில்தான் வாழ வேண்டும் என்ற தாழ்வு மனப்பான்மையால் உந்தப்பட்டு விரக்தி அடைகிறார்கள். அந்த விரக்தியிலிருந்து விடுபட்டு முதியவர்கள் உற்சாகத்துடன் வாழவும், எதிர்காலத்தில் இதுபோன்ற பிரச்னைகள் தங்களை அணுகாமல் இருக்க இளைஞர்கள் எச்சரிக்கையுடன் வாழவும் […]

Read more

நினைவு நாடாக்கள்

நினைவு நாடாக்கள், கவிஞர் வாலி, விகடன் பதிப்பகம். To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0000-394-7.html கவியரசர் கண்ணதாசனுக்கு ஒப்பாக வைத்து பாராட்டப்படுபவர் இந்நூலாசிரியர். இவர் கவிதை, கட்டுரை, பேச்சு, நடிப்பு, பாட்டு, ஓவியம் என்று பன்முகத் தன்மை கொண்டவர். இவர் திரைத் துறையில் நுழைந்தது முதல் அதில் கோலோச்சியது வரை அத்துறையில் தனக்கு நேர்ந்த அனுபவங்களையும், தனது வாழ்க்கையில் நிகழ்ந்த சம்பவங்களையும் நினைவுகூறும்போது, நம்மையும் அந்தச் சூழலுக்கு கூட்டிச் செல்கிறார். தவிர இவரது எழுதிதும், நடையும் செறிவூட்டப்பட்ட புதிய தமிழை […]

Read more

திரை

திரை, எஸ்.எல். பைரப்பா, விஜய பாரதம் பதிப்பகம், 12, எம்.வி. நாயுடு தெரு, சேத்துப்பட்டு, சென்னை 31, பக். 470, விலை 250ரூ. புகழ்பெற்ற கன்னட எழுத்தாளரான இந்நூலாசிரியரின் படைப்பு ஆவரணா இந்த நாவல் வெளியாகி 5 வருடத்திற்குள் 30 பதிப்புகளைப் பெற்று, கன்னட வாசகர்களின் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்நாவல் மராட்டி, ஹிந்தி, சமஸ்கிருதத்திலும், தற்போது திரை என்ற பெயரில் தமிழிலும் சிறப்பாக மொழி பெயர்க்கப்பட்டு வெளிவந்துள்ளது. ஆவரணா என்பதற்கு திரை என்ற பொருளும் உண்டு. அதையே தமிழில் இந்நாவலுக்குத் தலைப்பாக வைத்துள்ளனர். […]

Read more

இந்திய வேதங்கள் போற்றும் நபிகள் நாயகம்(ஸல்)

இந்திய வேதங்கள் போற்றும் நபிகள் நாயகம்(ஸல்), ஜே.எம். சாலி எம்.ஏ, யுனிவர்ஸல் பப்ளிஷர்ஸ், 2, வடக்கு உஸ்மான் சாலை, தி.நகர், சென்னை 17, விலை 110ரூ. கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக எழுத்துத் துறையில் ஈடுபட்டு வரும் இந்நூலாசிரியர், உலக முஸ்லிம்கள் தன் உயிரினும் மேலாக ஏற்றிப் போற்றும் இறைத்தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்களைப் பற்றி பல்லாயிரம் வருடங்களுக்கு முன்பே இந்திய வேதங்களில் கூறப்பட்டுள்ள பல்வேறு செய்திகளை இந்நூலில் தொகுத்துள்ளார். உலகிலுள்ள ஒவ்வொரு சமுதாயத்திற்கும் தூதர்களை நாம் அனுப்பியிருக்கிறோம் – என்பது திருக்குர் […]

Read more
1 14 15 16 17 18 21