ஓளவை சொன்ன அமுத உரை

ஓளவை சொன்ன அமுத உரை, கமலா சுவாமிநாதன், வானதி பதிப்பகம், பக். 144, விலை 70ரூ. அவ்வையாரின் ஆத்திசூடியில், 77 முதல் 109 வரை, 33 தலைப்புகளில், முக்கனிச் சுவையில் கதைகளைச் சொல்கிறார் ஆசிரியர். பள்ளியில் தலைமை ஆசிரியராகவும், இணையதளங்களில் எழுதுபவராகவும் இருந்த அனுபவத்தால், வார்த்தைப் பூக்களைத் தூவி, வசந்த கால அனுபவமாக கதை சொல்கிறார். ஒரு கதையில், ராமலிங்க அடிகளாரின் தாயார், மருதம்மை என்று தவறாக தரப்பட்டுள்ளது. அவரது உண்மையான பெயர், சின்னம்மையார் அடிகளார், பிறந்த ஊர் மருதூர். அடுத்த பதிப்பில் திருத்தி […]

Read more

காலச் சப்பரம்

காலச் சப்பரம், விழிகள் பதிப்பகம், சென்னை, விலை 100ரூ. பாவல் கவிமுகில் எழுதிய கவிதைகளின் தொகுப்பு. சிறுவயதில் கிராமத்தில் நடந்த நிகழ்ச்சிகளின் மலரும் நினைவுகளாக கவிதை நடையில் உலா வருகின்றன. பேச்சு நடை வீச்சில் கவிதைகள் அமைந்துள்ளன. அமாவாசை கணக்கா ஒருத்தன் வெளுப்பா தேடுனாக்கா கைநகமும் கண்ணு முழியும்தான் ஆனா பேரு வெள்ளத்துரை என்பன போன்ற பாடல்கள். கிராமீய மணம் வீசுகின்றன. நன்றி: தினத்தந்தி, 15/7/2015.   —- நீ உன்னை அறிந்தால், ஜி. மீனாட்சி, வானதி பதிப்பகம், சென்னை, விலை 65ரூ. விண்வெளி, […]

Read more

நல்லது நடந்தால் நல்லது

நல்லது நடந்தால் நல்லது, ஏர்வாடி ராதாகிருஷ்ணன், வானதி பதிப்பகம், சென்னை, விலை 150ரூ. ஏர்வாடி ராதாகிருஷ்ணன், சிறந்த கவிஞர் என்பதை அனைவரும் அறிவர். உரைநடையிலும் அவருக்கு மிக்க ஆற்றல் உண்டு என்பதை இந்நூல் எடுத்துக் காட்டுகிறது. இதில் 23 கட்டுரைகள் உள்ளன. எல்லாமே கருத்தாழம் மிக்க கட்டுரைகள். தமிழால் முடியும் என்ற கட்டுரையில் கீழ்க்கண்ட தகவல்களைக் கூறுகிறார். உலக மொழிகள் 2800ல் செம்மொழி என்கிற சிகரச் சிறப்பைப் பெற்ற மொழிகள் 6 மட்டுமே. அந்த ஆறில் ஒன்று தமிழ் என்பது தமிழுக்குப் பெருமை. சில […]

Read more

காவ்யா ஒரு காவியம்

காவ்யா ஒரு காவியம், ஆரூர்தாஸ், பூம்புகார் பதிப்பகம், சென்னை, விலை 125ரூ. 1000 திரைப்படங்களுக்கு மேல் வசனம் எழுதி சாதனை படைத்த ஆரூர்தாஸ், இப்போது நாவல்கள், குறுநாவல்கள், சிறுகதைகள் எழுதுவதிலும் சாதனை படைத்து வருகிறார். அவர் எழுதிய காவ்யா ஒரு காவியம், இலட்சியப் பயணம், இதய இலக்கணம், அரண்மனை வாரிசு ஆகிய 4 குறுநாவல்கள் இப்புத்தகத்தில் அடங்கியுள்ளன. பாசமலர் போன்ற காவியங்களை படைத்தவர் அல்லவா? இந்த குறுநாவல்களிலும் அவரது முத்திரையைப் பதித்துள்ளார். நன்றி: தினத்தந்தி, 12/8/2015.   —- மருத்துவ நோபல், நெல்லை சு. […]

Read more

குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கான அடிப்படைகள்

குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கான அடிப்படைகள், டாக்டர் இரா. விருத்தகிரி, வானதி பதிப்பகம், சென்னை, விலை 250ரூ. குழந்தை வளர்ப்பு பற்றிய சிறந்த புத்தகம் இது. குழந்தைகளை எப்படி வளர்க்க வேண்டும், அவர்களுக்கு வரக்கூடிய நோய்கள் எவை, அதற்கு என்ன சிகிச்சை அளிக்க வேண்டும், அவர்களுக்குக் கொடுக்கக்கூடிய சத்துள்ள உணவுகள் எவை என்பதையெல்லாம் விவரமாகப் படங்களுடன் விளக்குகிறார், டாக்டர் இரா. விருத்தகிரி.  ஆண், பெண் குழந்தைகள் வாலிப வயதை அடையும்போது, அவர்கள் உடலில் ஏற்படக்கூடிய மாற்றங்கள், அக்காலக்கட்டத்தில் பெற்றோர்களின் கடமை ஆகியவை பற்றியும் ஆசிரியர் விளக்குகிறார். அளவிலும், […]

Read more

இப்படிக்கு அன்புடன் – ஆனந்தியின் கடிதங்கள்

இப்படிக்கு அன்புடன் (ஆனந்தி கடிதங்கள், தொகுப்பாசிரியர் சுப்ர.பாலன், வானதி பதிப்பகம், பக். 422, விலை 300ரூ. To buy this Tamil book online: http://www.nhm.in/shop/1000000024686.html அமரர் கல்கியின் புதல்வி ஆனந்தி ராமசந்திரன் எழுதிய இலக்கியத் தரம் வாய்ந்த கடிதங்களின் தொகுப்பு. தாயார் ருக்மணி அம்மாள், குஞ்சக்கா என்று பிரயமுடன் அழைக்கப்பட்ட எம்.எஸ்., சதாசிவம், கணவர் ராமசந்திரன், உறவினர்கள், இளைய தலைமுறையினருக்கும் பிறருக்கும் ஆனந்தி எழுதிய கடிதங்கள் பயணம் செய்த இடங்களைப் பற்றியெல்லாம் மிக விரிவாக எழுதியிருப்பது இந்நூலைப் பயண இலக்கியமாகவும் மிளிர வழி […]

Read more

கம்பன் கவியமுதம்

கம்பன் கவியமுதம், பேராசிரியர்கள் இரா.மோகன், நிர்மலாமோகன், வானதி பதிப்பகம், பக். 152, விலை 80ரூ. கம்பன் காவியத்தை முழுமையாக கற்கும் பேறு எல்லாருக்கும் கிடைப்பது அரிது. அது படிக்க படிக்க விரிந்து கொண்டே இன்பம் சேர்க்கும் பாடற்கடல். அதில் நூலாசிரியர்கள் நீந்தி தாங்கள் பருகியதை, அதன் சுவையை இனிமை குன்றாது, நமக்கும் தரும் அரிய நூல் இது. தெய்வப் புலவர் கம்பருயை சொல்லழகையும் பொருளழகையும் நமக்கு விளக்கும் இடம் சவை. கம்பர் தரும் செஞ்சொற் கவியின்பத்தையும், நடைச்சித்திரத்தையும் இவர்கள் தரும் எடுத்துக்காட்டுடன் படிக்கப் படிக்க […]

Read more

பஞ்ச நாராயண கோட்டம்

பஞ்ச நாராயண கோட்டம், காலச்சக்கரம் நரசிம்மா, வானதி பதிப்பகம், பக். 720, விலை 300ரூ. சமண சமயத்தின் கேந்திரமான ஹொய்சாள சாம்ராஜ்யம், வைணவத்தின்பால் ஈர்க்கப்பட்டு, அங்கு அழகு வாய்ந்த பஞ்ச நாராயண கோட்டங்கள் உருவாக்கப்பட்டதை கோவையாகச் சித்திரிக்கிறது இந்த நாவல். குலோத்துங்க சோழனின் சைவ வேட்கைக்கு அடிபணியாது, வைணவ ஆச்சார்யார் ராமானுஜர், திருவரங்கத்திலிருந்து ஹொய்சாளத்தில் அடைக்கலம் புகுந்தார். அங்கு சமண மன்னரான பிட்டி தேவனின் மகளான வசந்திகாவைப் பிடித்திருந்த பேயை விரட்டி நோயை விரட்டியதால், வைணவத்தைத் தழுவினான் பிட்டிதேவன். தனது பெயரையும் விஷ்ணுவர்த்தனன் என […]

Read more

மாமல்லபுரத்தில் மங்கையும் சிற்பியும்

மாமல்லபுரத்தில் மங்கையும் சிற்பியும், வானதி பதிப்பகம், விலை 200ரூ. பல்லவ பேரரசின் சம்பவங்களின் பின்னணியாகக் கொண்டு படைக்கப்பட்ட சரித்திர நாவல். இளம் சிற்பி மதிஒளியும் ஆடலரசி மலர்விழியும் முதற் சந்திப்பிலேயே மோதிக்கொள்கிறார்கள். கருத்துக்களால், கலைத்திறன் கொடுத்த துணிவால், இளமைத் துடிப்பால் அவர்கள் ஒருவரையொருவர் வெல்லப் பார்க்கிறார்கள். கடைசிக் கட்டத்தில் ஒரு போட்டியை ஏற்படுத்தி வெற்றி தோல்வி என்று நிர்ணயிக்க முடியாமல், காதல் உள்ளங்களைப் பிரிக்காமல், திரைப்படத்திற்கு ஏற்றதாக இந்த சரித்திர நவீனத்தை அமைத்துள்ளார் பட அதிபர், டைரக்டர், கதை வசன கர்த்தா ஏ.வி. நாகராஜன். […]

Read more

வெற்றி பெற்றவர்களின் அனுபவங்கள்

வெற்றி பெற்றவர்களின் அனுபவங்கள், கவின் மீடியா ஓர்க்ஸ், சென்னை, விலை 50ரூ. கடும் உழைப்பும், ஆர்வமும் இருந்தால் வாழ்க்கையில் வெற்றி பெறலாம் என்று கூறுகிறார், காரையடி செல்வன். புத்தகத்தின் பெயர் உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல் என்று சூட்டப்பட்டிருந்தாலும், அதை எளிமையாகக் கூறினால் வெற்றி பெற்றவர்கள் வரலாறு என்றே கூறவேண்டும். பல்வேறு துறைகளில் வெற்றி பெற்றவர்களை பேட்டிகண்டு, வெற்றியுடன் ரகசியத்தை கதைபோல் கூறுகிறார் ஆசிரியர். வாழ்வில் முன்னேறத்துடிக்கும் இளைஞர்களுக்கு, இந்தப் புத்தகம் சிறந்த டானிக். நன்றி: தினத்தந்தி, 17/6/2015.   —- சொல்லுக்குள் ஈரம், வானதி பதிப்பகம், […]

Read more
1 12 13 14 15 16 22