வாலி சிறுகதைகள்

வாலி சிறுகதைகள், கவிஞர் வாலி, வாலி பதிப்பகம், சென்னை 17, பக். 112, விலை 80ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0001-867-0.html இந்தப் புத்தகத்தில் நறுக்குத் தெரித்தாற்போல உள்ள இந்த ஆறு சிறுகதைகளுமே வாலியின் கற்பனைக்கும் கருத்துக்கும் கவிதா விலாசத்தையும் பறைசாற்றுகின்றன. சிறுகதைகள்தான் தன் எழுத்துக்கு பிள்ளையார் சுழி என்று முகவுரையில் சொல்லியிருக்கிறார். முதலில், சங்கீத குரு நம்பூதிரியின் பெண்ணை குரு என்பவன் மணக்கும் கலப்பின சங்கீதக் காதல், கதை முழுவதும் துக்கடாக்கள். சில இடங்களில் ராகமாலிகா, இரண்டாவது கதை, […]

Read more

ஜெருசலேம் அழியா நகரத்தின் கதை

ஜெருசலேம் அழியா நகரத்தின் கதை, பா. முருகானந்தம், பழனியப்பா பிரதர்ஸ், சென்னை 14, பக். 267, விலை 210ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0001-033-9.html இன்றைய இஸ்ரேல் நாட்டின் தலைநகரமான ஜெருசலேம் நகரத்தின் ஏழாயிரம் ஆண்டு காலவரலாற்றுப் பின்னணியைப் பேசும் நூல் இது. கிறிஸ்தவர்களின் புண்ணிய பூமி ஜெருசலேம் என்ற பொதுவான நம்பிக்கையை தகர்த்து முஸ்லீம்களுக்கும் ஜெருசலேம் ஒரு புண்ணிய பூமி என்பதை நூல் விளக்குகிறது. இயேசு கிறிஸ்து இந்த நகரத்தில்தான் சிலுவையில் அறையப்பட்டார் என்பதால் கிறிஸ்துவர்களுக்கு ஜெருசலேம் புண்ணிய […]

Read more

வம்புக்கு நான் அடிமை

வம்புக்கு நான் அடிமை, ஜே.எஸ். ராகவன், அல்லயன்ஸ் கம்பெனி, சென்னை 4, பக். 200, விலை 90ரூ. நகைச்சுவை உணர்வு நமது மன இறுக்கங்களைத் தளர்த்தும் ஆற்றல் மிக்கது. கடுமையான விஷயங்களையும் கூட நகைச்சுவையுடன் கூறினால், அதில் தொடர்புள்ளவர்களே தன்னை மறந்து சிரித்துவிடுவர். எந்த ஒரு நிகழ்வையும் நகைச்சுவையாக எடுத்துக் கொண்டு கடந்துவிட்டால், மனவேதனையிலிருந்து தப்ப முடியும் என்கிறார்கள் மருத்துவர்கள். நகைச்சுவையை மட்டுமே மூலப்பொருளாகக் கொண்டு இந்நூலை எழுதி இருக்கிறார் ஜே.எஸ். ராகவன். சுமார் 40 ஆண்டுகளாக பத்திரிகைகளில் கட்டுரை எழுதிவரும் நூலாசிரியர், சென்னையில் […]

Read more

நாலாயிர திவ்யப் பிரபந்தம்

நாலாயிர திவ்யப் பிரபந்தம், ஸ்ரீ செண்பகா பதிப்பகம், 32பி, கிருஷ்ணா தெரு, பாண்டிபஜார், தி.நகர், சென்னை 17. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0001-136-1.html பன்னிரு ஆழ்வார்கள் அருளிய நாலாயிர திவ்யப் பிரபந்தம் உரையுடன் வெளிவந்துள்ளது. உரை எழுதிய முனைவர் த.கோவிந்தன் எல்லோரும் புரிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்துடன் எளிமையாக எழுதியுள்ளார். 4 ஆயிரம் பாடல்களும் 2 புத்தகங்களாக வெளிவந்துள்ளன. மொத்தம் 2, 164 பக்கங்கள். இரண்டு பக்கங்களும் சேர்த்து விலை 850ரூ. பாக்களையும், அழகிய கட்டமைப்பையும் காணும்போது விலை […]

Read more

கொங்குவேளாளர் குல வரலாறு

கொங்குவேளாளர் குல வரலாறு, முதல்பாகம், புலவர் செ. ராசு, கொங்கு ஆய்வு மையம், ஈரோடு 638011, பக். 330, விலை 350ரூ. தமிழகத்தின் ஐந்து பகுதிகளுள் ஒன்றான கொங்கு நாட்டில் உழவைத் தொழிலாகக் கொண்ட வேளாண் மக்கள் கொங்கு வேளாளர்கள் என்று அழைக்கப்படுகின்றனர். பிற வேளாளர் சமூகத்தினரிடமிருந்து தனி அடையாளமாகக் கொங்கு என்ற அடைமொழி சேர்த்து அழைக்கின்றனர். அந்த மக்களின் உட்பிரிவான குலங்கள் குறித்த வரலாற்றைக் கூறும் நூல் இது. கூட்டம் கூட்டமாகக் குடியேறிய காரணத்தாலும், பண்டைக் கால சூழ்நிலைக்கு ஏற்ப கூட்டமாக வாழ்ந்தாலும் […]

Read more

கல்வெட்டுக்கலை

கல்வெட்டுக்கலை, பொ. ராசேந்திரன், சொ. சாந்தலிங்கம், பாண்டிய நாட்டு வரலாற்று ஆய்வு மையம், மதுரை, பக். 240, விலை 250ரூ. இனம், மொழி, பண்பாட்டின் ஆணிவேர்களை அலசி ஆராய உதவுபவை இலக்கியங்களும் கல்வெட்டுகளும், நாட்டின் வரலாற்றை எழுதுவதிலும் அவை முக்கியப் பங்காற்றுகின்றன. அவற்றில் கல்வெட்டுகள், கால ஓட்டத்தில் தேய்ந்துபோனாலும் உள்ளதை உள்ளபடி சொல்பவை. இலக்கிய வளர்ச்சியை அறிந்துகொள்ள கல்வெட்டுகள் உதவுவதால், கல்வெட்டு கற்பது ஒரு கலையாகவே போற்றப்படுகிறது. இன்றைய காலகட்டத்தில் வளர்ந்துவரும் துறையாக கல்வெட்டியல் மாறியுள்ளது. அதைக் கற்போரின் எண்ணிக்கையும் கணிசமாக அதிகரித்துள்ளது. அந்த […]

Read more

கற்றது கடலளவு

கற்றது கடலளவு, து. கணேசன், விகடன் பிரசுரம், சென்னை 2, பக். 396, விலை 115ரூ. சாண்டில்யனின் கடல்புறா நாவல், அந்தக் கால கடற்பயணத்தை விவரித்தால், அதற்கு சற்றும் சுவை குன்றாமல், நவீன கால கடற்பயணத்தை தொழில் அனுபவமாகவும், வாழ்க்கை அனுபவமாகவும் விவரிக்கிறது இந்தப் புத்தகம். கப்பல்களில் வேலை செய்வோர் நிறைய சம்பளம் வாங்குவதாக நினைப்போம். இதைப் படித்தால் தங்கள் எண்ணத்தை மாற்றிக் கொள்ள வேண்டியிருக்கும். அவர்கள் இழக்கும் வாழ்க்கை எது? கடல் விபத்து, மனைவி மக்களைப் பிரிந்திருந்தால், விலை மாதர்களிடம் உடல் நலத்தை […]

Read more

அகம் பொதிந்தவர்கள்

அகம் பொதிந்தவர்கள், கர்ணன், மெய்யப்பன் பதிப்பகம், 53, புதுத்தெரு, சிதம்பரம் 608001, பக். 160, விலை 75ரூ. மகாகவி பாரதியார் தொடங்கி எழுத்தாளர் மாஜினி வரை தன் மனம் கவர்ந்த, தான் நேரில் பார்த்துப் பழகிய, பழகத் தவறிய 26, எழுத்தாளர்களுடனான தனது அனுபவங்கள், அவர்களைப் பற்றிய தனது கருத்துகள் போன்றவற்றை சுவையாகப் பதிவு செய்துள்ளார் ஆசிரியர். எழுத்தாளர்கள் எழுதிய நூல்களின் பட்டியல், அவர்களின் வாழ்க்கைக் குறிப்பு போன்ற தெரிந்த தகவல்களையே சொல்லி நம்மைச் சலிப்படைய வைக்காமல், அவர்களை தான் சந்தித்தபோது நிகழ்ந்த சம்பவங்கள், […]

Read more

அறிவியல் தொழில்நுட்ப நூல் வரிசை தொகுதி 5

அறிவியல் தொழில்நுட்ப நூல் வரிசை தொகுதி 5, விண்வெளித் தொழில் நுட்பம் செயற்கைக்கோள்கள், நெல்லை சு. முத்து, தமிழ் வளர்ச்சிக் கழகம், சென்னைப் பல்கலைக்கழக வளாகம், சென்னை 5, பக். 358, விலை 300ரூ. தமிழில் மிக அபூர்வமாகவே நல்ல தரமான நூல்கள் வெளியாகின்றன. தமிழ் வளர்ச்சிக் கழகம் வெளியிட்டுள்ள இந்த நூல் அப்படிப்பட்டதாகும். விண்வெளியில் உள்ள நிலைமைகள், ராக்கெட் தோன்றிய வரலாறு, ராக்கெட் வடிவமைப்பு, எரிபொருட்கள், ராக்கெட் தளம், செயற்கைகோள்கள், விண்கலன்கள் என்று தொடங்கி எதிர்கால ராக்கெட் எஞ்சின்கள் வரை அனைத்தும் இந்நூலில் […]

Read more

இருட்டிலிருந்து வெளிச்சம்

இருட்டிலிருந்து வெளிச்சம், அசோகமித்திரன், நற்றிணை பதிப்பகம், சென்னை 5, பக். 320, விலை 240ரூ. கடந்த 30 ஆண்டுகளில் பல்வேறு இதழ்களில் அசோகமித்திரன் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு. ஒரு சினிமா தயாரிப்பு கூடத்தில் பல ஆண்டுகள் பணிபுரிய நேராதிருந்த இத்தொகுப்பிலுள்ள பல கட்டுரைகள் சாத்தியமாகி இருக்காது என்று அவரே குறிப்பிட்டுள்ளார். அசோகமித்திரன், கட்டுரையொன்றில் அன்றைய முன்னணி ஆண் நட்சத்திரங்களுக்கு எந்தவிதத்திலும் கஞைர்களாக நடிகைகள் தாழ்ந்து போய்விடவில்லை. இன்றைய தமிழ் படங்களின் கதாநாயகிகள் எண்ஜான் உடம்பையும் நாற்புறமும் அசைக்கவல்ல பொம்மைகளாகிவிட்டனர் என்ற கருத்து இன்று பலரிடமும் […]

Read more
1 162 163 164 165 166 180