இலக்கியத் திறனாய்வியல் ஓர் அறிமுகம்

இலக்கியத் திறனாய்வியல் ஓர் அறிமுகம், பகுதி 2, இரா. சாவித்திரி, சக்தி பதிப்பகம், 197, புட்பம் காலனி, அருளானந்த நகர், தஞ்சாவூர் 613007, பக். 402, விலை 200ரூ. தமிழ் இலக்கியத்தில் இளங்கலை பயிலும் மாணவர்களுக்கு ஒரு பாடமாக உள்ளது திறனாய்வியல். இரண்டாவது தொகுதியான இதில், தமிழ்த் திறனாய்வு வரலாறு என்ற இயலில் நிகழ்கால திறனாய்வுப் போக்குகள், நிறுவனங்கள் மற்றும் பல்கலைக்கழகங்களின் பங்களிப்பு பற்றியும், இதழ்கள் வளர்த்த திறனாய்வு இயலில் எழுத்து, இலக்கிய வட்டம், கணையாழி, வானம்பாடி, கொல்லிப்பாவை, உயிர்மை ஆகிய இதழ்களின் திறானாய்வுப் […]

Read more

பாரதிதாசன் கவிதைகள்

பாரதிதாசன் கவிதைகள் (பாவேந்தர் பாடல்களின் முழுத்தொகுப்பு), தொகுப்பாசிரியர்-கவிஞர் சுரதா கல்லாடன், மணிவாசகர் நூலகம், சென்னை 108, பக். 804, விலை 600ரூ. 1920 முதல் 1978 வரை வெளியான பாவேந்தர் பாரதிதாசனின் அனைத்து நூல்களும் அடங்கிய முழுத்தொகுப்பு. அவரது முழு ஆளுமையை விவரிக்கிறது. கற்பகத்தின் நற்குளிர் கிடப்பதென்று உளத்து எழுந்த சுப்புரத்தினம் உரைத்த நற்பதத்தை உச்சரிப்பீர் என்று தன்கவியை வியக்கும் ஆன்மிகக் கவிஞராக இருந்தவர் (மயிலம் ஸ்ரீசிவசண்முகக் கடவுள் பஞ்சரத்நம்) முற்றிலும் நாத்திகராக மாறி, சுயமரியாதை இயக்கத்தோடு இணைந்து தமிழுக்காக தமிழருக்காகப் பாடிய பாடல்கள் […]

Read more

சங்க இலக்கிய ஆய்வு மாலை

சங்க இலக்கிய ஆய்வு மாலை, பதிப்பாசிரியர் கி.இராசா, பதிப்புத்துறை பாரதிதாசன் பல்கலைக்கழகம், திருச்சி 620024, பக். 212, விலை 120ரூ. இத்தொகுப்பில் உள்ள 14 கட்டுரைகளை எழுதியவர்களில், முனைவர்கள் இருவரைத் தவிர மற்ற பன்னிருவரும் முனைவர் பட்ட ஆய்வு மாணவர்கள். முதன்முதலில் தி போனே என்பவரால் அறிமுகப்படுத்தப்பட்டதுதான் சூழியற் பெண்ணியம். ஆமாம் பெண்ணியம் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறோம். அது என்ன சூழியற் பெண்ணியம்? சூழியற் பெண்ணியமும் திணை இலக்கியமும் என்ற கட்டுரையில் இதுபற்றி விரிவாக விளக்கியுள்ளார் கி.இராசா. ஒரே கருத்தை பல்வேறு புலவர்கள் எவ்வாறு வேறு […]

Read more

நில் கவனி கண்மணி

நில் கவனி கண்மணி, மார்பக நோய்களும் மருத்துவ தீர்வுகளும், டாக்டர் க. முத்துச் செல்லக்குமார், விகடன் பிரசுரம், சென்னை 2, பக். 80, விலை 65ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0000-840-7.html குழந்தைப் பருவம் முதல் ஒவ்வொரு கட்டமாக பெண்ணின் மார்பக வளர்ச்சி குறித்தும் ஒவ்வொரு பருவங்களின்போதும் அவை அடையும் மாற்றங்கள் குறித்தும் விரிவாகக் கூறும் நூல். மார்பகத்தில் புற்று நோய் இருக்கிறதா என்பதைத் தெரிந்து கொள்ள பெண்கள் தங்களுக்கு தாங்களே மார்பக பரிசோதனை செய்து கொள்ளும் முறைகள் விளக்கப்பட்டிருக்கின்றன. […]

Read more

என்றென்றும் நன்றியுடன்

என்றென்றும் நன்றியுடன், கே.எஸ். ரவிக்குமார், ஜே.டி.ஜீவா, நாகரத்னா பதிப்பகம், 3ஏ, டாக்டர் ராம் தெரு, நெல்வயல் நகர், பெரம்பூர், சென்னை 11, பக். 96, விலை 70ரூ- To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0000-711-3.html திரைப்பட இயக்குநர் கே.எஸ். ரவிக்குமாரின் பன்முகங்களையும் மிகச் சுவையாக வெளிப்படுத்தும் நூல். அவரிடம் துணை இயக்குநராகப் பணிபுரியும் நூலாசிரியர் அந்த அனுபவஙங்களிலிருந்து இந்நூலை எழுதியிருக்கிறார். பல வெற்றிப் படங்களை இயக்கியவர் என்பதற்கு அப்பால் கே.எஸ். ரவிக்குமார் என்ற மனிதரின் நல்ல பண்புகளைச் சித்தரிக்கும் பல சுவையான […]

Read more

தியானமும் பயிற்சியும்

தியானமும் பயிற்சியும், சுவாமி ராமா, தமிழில் புவனா பாலு, கண்ணதாசன் பதிப்பகம், சென்னை 17, பக். 154, விலை 100ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0001-917-8.html மேலை நாடுகளில் யோகா, தியானம் மற்றும் கீழை நாடுகளில் சிந்தனைகளைக் குறித்த தற்கால எழுத்தாளர்கள், மேதைகளின் கட்டுரைகள் அடங்கிய தொகுப்பு இந்நூல். தியான முறைகளின் குறிக்கோள் மற்றம் யோக ஞானத்தை அடையும் வழிமுறைகளைப் பற்றிய அனைத்தையும் உள்ளடக்கி, எளிமையான விரிவுரைகள் இந்நூலில் உள்ளன. மனிதன் தனது அகம் மற்றும் புறம் என்னும் இரு […]

Read more

ஒரு கதை வசனகர்த்தாவின் கதை

ஒரு கதை வசனகர்த்தாவின் கதை, ஆரூர்தாஸ், மணிவாசகர் பதிப்பகம், 31, சிங்கர் தெரு, பாரிமுனை, சென்னை 1, பக். 448, விலை 190ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0001-796-8.html கதை வசனகர்த்தாவாக திரையுலகில் புகழ் பெற்ற ஆரூர்தாஸ் தனது வாழ்க்கை அனுபவங்களை சுவைபட விவரிக்கும் நூல் இது. அவரின் வாழ்க்கை வரலாற்றோடு அந்தக் கால கலையுலகின் வரலாறும் இதில் பின்னிப் பிணைந்திருக்கிறது. பராசக்தி படத்தில் அறிமுகமானபோது, சிவாஜியை குதிரை மூஞ்சி என்று சொல்லி படத்திலிருந்தே தூக்கிவிடச் சொன்ன ஏ.வி. மெய்ப்ப […]

Read more

உரை மாண்புகள்

உரை மாண்புகள், இரா. குமரவேலன், விழிகள் பதிப்பகம், 8ஏம், 139, 7ஆம் குறுக்குத் தெரு, திருவள்ளுவர் நகர், திருவான்மியூர் விரிவு, சென்னை 41. பக். 160, விலை 130ரூ. கருத்தரங்குகளில் வாசிக்கப்பட்ட எட்டு கட்டுரைகளின் தொகுப்பு. சிலப்பதிகாரம் அடியார்க்கு நல்லார், திருக்குறள் பரிமேலழகர், திருக்குகோவையார் பேராசிரியர், இவ்வாறு அறிஞர் பெருமக்கள் மனதில் பதிந்துவிட்ட உரை (உண்மை)கள் இவை. அடியார்க்கு நல்லாரின் சிலப்பதிகார உரைக்கு முன்பே அரும்பதவுரை ஒன்று இருந்துள்ளது. ஆனால் அடியார்க்கு நல்லார் உரைதான் விரிவானதாக விளங்குகிறது. இதைப் பற்றி ஆராய்கிறது அடியார்க்குநல்லார் உரைநலம் […]

Read more

ந.பிச்சமூர்த்தி கட்டுரைகள்

ந.பிச்சமூர்த்தி கட்டுரைகள், தொகுப்பாசிரியர் ய. மணிகண்டன், சந்தியா பதிப்பகம், சென்னை 83, பக். 208, விலை 150ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0001-870-1.html ந.பிச்சமூர்த்தி மணிக்கொடி, சுதந்திரச் சங்கு, கலைமகள், தினமணி, சுதேசமித்திரன், கலாமோகினி, கிராம ஊழியன், பாரததேவி, ஹனுமான், ஜெயபாரதி, சிவாஜி, எழுத்து, பி.எஸ். ராமையா மணி மலர் உள்ளிட்டவற்றில் எழுதிய கட்டுரைகள், அவர் எழுதிய முன்னுரைகள் வ.ரா., பி.வி. சுப்பிரமணியன் நூல்களுக்கு எழுதிய அணிந்துரைகள் மற்றும் ந.பிச்சமூர்த்தி எழுத்து செல்லப்பாவுக்கும், சு. சங்கரசுப்பிரமணியனுக்கும் வழங்கிய முழுநீளப் பேட்டி […]

Read more

மனிதன்

மனிதன், ஏ.எஸ். ராகவன், திருமகள் நிலையம், 13, சிவப்பிரகாசம் சாலை, தி.நகர், சென்னை 17, விலை 190ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0001-870-0.html பிரபல எழுத்தாளர் ஏ.எஸ். ராகவன் எழுதிய சிறந்த நாவல் மனிதன். ஆனந்த விகடன் வெள்ளிவிழா நாவல் போட்டியில் முதல் பரிசு பெற்ற நாவல் இது என்பதில் இருந்தே இதன் தரத்தை நன்கு உணரலாம். தெளிந்த நீரோடை போன்ற நடையில் இந்த நாவலை எழுதியிருக்கிறார். ஏ.எஸ். ராகவன், கதாபாத்திரங்கள் உயிரோவியங்களாகத் திகழ்கின்றன. குறிப்பாக பூமா ஓர் அற்புத […]

Read more
1 163 164 165 166 167 180