இராமனும் இராமசாமியும்

இராமனும் இராமசாமியும், ம. பிரகாஷ், காவ்யா, பக். 192, விலை 150ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0001-313-6.html ஒரு நாணயத்திற்கு இரு பக்கங்கள் இருப்பது போன்று, எந்த விவாதத்திற்கும் இரண்டு விதமான விளக்கங்கள் உண்டு என்பர். இந்நூலில் ராமரின் அவதாரம் குறித்து, ஈ.வெ.ரா., எடுத்துக்கொண்ட ராமாயண எதிர்ப்புப் போர் குறித்து, மிக விரிவாக ஆய்வு செய்யப்படுவதை காண்கிறோம். இந்நூலில் மூன்று பிரிவுகளில் ராமாயணம் குறித்த ஆய்வுகள் நூலாசிரியர் செய்துள்ளார். அதில் பெரியாருக்கு முன் ராமாயணமும் தமிழ் சமூகமும் என்ற […]

Read more

தமிழைப் பழித்தவருக்கு சாட்டையடி

தமிழைப் பழித்தவருக்கு சாட்டையடி, தமிழ்ப் பேராயம், திரு. இராமசாமி நினைவுப் பல்கலைக்கழகம், காட்டாங்குளத்தூர் 603203, காஞ்சிபுரம் மாவட்டம், விலை 120ரூ தொல்லியல் ஆராய்ச்சியாளரான இரா. நாகசாமி ஆங்கிலத்தில் ஒரு புத்தகம் எழுதியுள்ளார். தமிழையும் சமஸ்கிருதத்தையும் காட்டும் கண்ணாடி (The Mirror of Tamil and Sanskrit) என்பது அந்த நூலின் பெயர். தமிழ் தனித்தன்மையுடன் வளரவில்லை என்றும், சமஸ்கிருத சொற்களைக் கடன் வாங்கியே வளர்ந்தது என்றும் இந்த நூலில் அவர் குறிப்பிட்டுள்ளார். பொதுவில் வடமொழியை உயர்த்தியும், தமிழைத் தாழ்த்தியும் இந்த நூலில் எழுதப்பட்டுள்ளது. இதற்கு […]

Read more

நம்மிடையே உலவும் ஆவிகள்

நம்மிடையே உலவும் ஆவிகள், மேகதூதன் பதிப்பகம், 7/13, சின்னப்ப ராவுத்தர் தெரு, திருவல்லிக்கேணி, சென்னை 5, விலை 250ரூ. ஆவிகளுடன் பேசும் நுட்பங்கள், தியான முறைகள், நம் வாழ்வில் ஆவிகள் எப்போதும் நுழையும் என்பது போன்ற தகவல்களைத் தருகிறது இப்புத்தகம். ஆவி மீடியாவான ஜேம்ஸ், வான் பிராக், நேரலை நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று, மக்களின் கேள்விகளுக்கு ஆவிகளிடம் நேரடியாகக் கேட்டு, பதில் பெற்றுத் தந்தது. உலகத் தொலைக்காட்சி வரலாற்றில் அதுவே முதல் முறை. ஆவிகள் குறித்து மக்களிடம் ஏராளமான கேள்விகள் இருக்கின்றன. ஆவிகள் உலகம் […]

Read more

பல்லவர் பாண்டியர் அதியர் குடைவரைகள்

பல்லவர் பாண்டியர் அதியர் குடைவரைகள், மு. நளினி, ரா. கலைக்கோவன், சேகர் பதிப்பகம், சென்னை 78, பக். 352, விலை 300ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0001-867-9.html வரலாற்று ஆய்வில் பாறைச் சிற்பங்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. தமிழகத்தின் ஆதி வரலாற்றை அறிய உதவுபவையாக குடைவரைக் கோயில்களும், பாறைகளும், கல்வெட்டுகளும் உள்ளன என்பதற்கு ஆதாரமாக நூலாசிரியர்கள் தங்களது கள ஆய்வுகளைத் தொகுத்து நூலாக்கியுள்ளனர். சிங்கப் பெருமாள் கோயில் குடைவரை கட்டுரையில் பெருமாளைத் தரிசிக்கும் ஆடவர் திருவுருவத்தைக் கூட விட்டுவிடாமல் […]

Read more

எழுதித் திரிந்த காலம்

எழுதித் திரிந்த காலம், புதுவை ரா. ரஜினி, புதுவை ரா.ராஜினி, புதுச்சேரி, பக். 128, விலை 150ரூ. பல்வேறு இதழ்களில் எழுதிய 22 கட்டுரைகள், நூலாசிரியரின் 2 நேர்காணல்கள் தொகுக்கப்பட்டு இந்நூலில் சுவையாகப் பரிமாறப்பட்டுள்ளன. நமது வாழ்க்கையில் அன்றாடம் சந்திக்கும் நபர்கள், நிகழ்வுகள் இந்தக் கட்டுரைகளில் பதிவாகியிருக்கிறன்றன. எல்லாருடைய வாழ்க்கையிலும் இந்த கட்டுரைகளில் விவரிக்கப்பட்டிருக்கும் அனுபவங்கள் இருந்திருக்கும் என்றாலும், இக்கட்டுரைகளைப் படிக்கும்போது இனம்புரியாத வாசிப்பின்பம் ஏற்படுகிறது என்பது என்னவோ உண்மை. எழுத்தாளர் கி. ராஜநாராயணனுடன் நூலாசிரியர் பழகிய அனுபவம் சல்யூட் என்ற கட்டுரையில் நமது […]

Read more

ஆய்வுக் களஞ்சியம் தொகுதி 1

ஆய்வுக் களஞ்சியம் தொகுதி 1, நிர்மலா மோகன், வானதி பதிப்பகம், சென்னை 17, பக். 208, விலை 110ரூ. கபிலரின் வாழ்வியல் சிந்தனைகள், குறுந்தொகையில் உவமை நயம், கலித்தொகையில் நோக்கு, நற்றிணை நவிலும் கற்பு நெறி, சங்க இலக்கியத்தில் குந்தை, ஊடல் தணிக்கும் வாயிலாக, ஈத்துவக்கும் பெருஞ்சித்திரனார் உள்பட சங்க இலக்கியம் தொடர்பான 16 கட்டுரைகளும், திருக்குறள் உள்பட அற நூல்கள் தொடர்பான 3 கட்டுரைகளும் இந்நூலில் உள்ளன. ஒக்கூர் மாசாத்தியாரின் தனித்திறன் கட்டுரை தமிழ்ப் பெண் கவியின் கற்பனை வளம் உவமை நயம், […]

Read more

ஆஸ்திரேலிய ஆதிவாசிக் கதைகள்

ஆஸ்திரேலிய ஆதிவாசிக் கதைகள், தமிழில் மாத்தளை சோமு, தமிழ்க்குரல் பதிப்பகம், 10, புலியோன் பஜார், இரண்டாவது சந்து, திருவல்லிக்கேணி, சென்னை 5, பக். 270, விலை 180ரூ. கல்தோன்றி மண் தோன்றாக் காலத்தோடு முன்தோன்றிய மூத்தகுடி எனத் தமிழர்களின் தொன்மையை நிலை நிறுத்துவது, போலவே நூலாசிரியர்கள் முயற்சி அமைந்திருப்பதைப் பாராட்டலாம். ஏழு கடல் தாண்டி, ஏழு மலை தாண்டி என தமிழில் பாட்டி கால கதைகளை ஞாபகமூட்டும் வகையில் நூலின் முதல் கதையான கடவுளை நோக்கி ஒரு பயணம் அமைந்துள்ளது. பெரியதும், சிறியதுமான 94 […]

Read more

தூது வந்த வீரர்

தூது வந்த வீரர், ஏம்பல் தஜம்முல் முகம்மது, நியூலைட் புக் சென்டர், 1504ஏ, எம்ஐஜி, 3ம் முதன்மைச்சாலை, மாத்தூர் எம்.எம்.டி.ஏ, சென்னை 68, விலை 200ரூ. 150 ஆண்டுகளுக்கு முன்னர் அண்ணல் முஹம்மது நபி குறித்து, இங்கிலாந்தில் வரலாற்று ஆசிரியரும், ஆங்கில அறிஞருமான தாமஸ் கார்லைல் பேசிய பேச்சுக்கள் அடங்கிய ஆங்கிலநூல், அழகிய எளிய தமிழில், படிப்பவர்கள் அனைவரும் புரிந்து கொள்ளும் வகையில் உபயோகமான குறிப்புகளோடு தூது வந்த வீரர் என்ற மிகச்சிறந்த நூலாக வெளிவந்துள்ளது. இதில் இஸ்லாமும் மேற்கு நாடுகளும் என்ற தலைப்பில் […]

Read more

ஜெகாந்தன் சிறுகதைகளில் பெண்

ஜெகாந்தன் சிறுகதைகளில் பெண், ந. சுரேஷ்ராஜன், அய்யா நிலையம், ஆரோக்கியா நகர், ஐந்தாம் தெரு, இ.பி. காலனி, நாஞ்சிக்கோட்டைச் சாலை, தஞ்சாவூர் 613006, பக். 224, விலை 175ரூ. சமூகத்தில் எந்த நிலையில் இருந்தபோதிலும் பெண்கள் சிந்திக்கத் தெரிந்தவர்கள் என்பதைத் தனது படைப்புகள் மூலம், அழுத்தமாகப் பதிவு செய்தவர் ஜெயகாந்தன். அவரது கதைகளில் மேல்தட்டுப் பெண்களை விடவும், நடுத்தர மற்றும் விளிம்பு நிலைப் பெண்களே மிகுதியாக இடம் பெற்றுள்ளனர். அப்படிப்பட்ட பெண் பாத்திரங்களை வரிசைப்படுத்தி அவர்களின் குணாதிசயங்களை விளக்கியிருப்பதோடு, தொடர்புடைய கதைகளில் இருந்து ஓரிரு […]

Read more

முதல் விடுதலைப்போர் 1800-1801

முதல் விடுதலைப்போர் 1800-1801, டாக்டர் கே. ராஜய்யன், ஜெகமதி கல்வி அறக்கட்டளை வெளியீடு, விலை 500ரூ. வெள்ளையர்களே போற்றிய விடுதலை வீரர்கள் அன்னியர் ஆதிக்கத்தை எதிர்த்து இந்தியர்கள் நடத்திய முதல் போராட்டம் எது? 1857இல் நடைபெற்ற சிப்பாய்க் கலகம் என்று வழங்கப்படும் போராட்டத்தையே அப்படி அங்கீகரித்திருக்கிறார்கள். ஆனால் அதற்குப் பல ஆண்டுகளுக்கு முன்னரே ஆங்கிலேயரை எதிரத்துப் போராடி 1799இல் தூக்கிலிடப்பட்ட வீரபாண்டிய கட்டபொம்மன் கூட்டத்தார், அடுத்த இரண்டு ஆண்டுகளில், 1801இல் துடிக்கத் துடிக்கப் படுகொலை செய்யப்பட்ட 543க்கும் மேற்பட்ட மருதுபாண்டியர் அணியினர் என்று தமிழ்நாட்டு […]

Read more
1 3 4 5 6 7 9