இரத்த மிகை அழுத்தமும் உங்கள் இதயமும்

இரத்த மிகை அழுத்தமும் உங்கள் இதயமும், தமிழில்-மருத்தவர் சிவசுப்ரமணிய ஜெயசேகர், அடையாளம், அடையாளம் 1205/1, கருப்பூர் சாலை புத்தாநத்தம், திருச்சி 621310. விலை 40ரூ. உடல்நலம் காக்கும் கையேடு, இந்நூல் மேயோ கிளினிக்னின் ஹை பிளாட் பிரஷர் அண்ட் யுவர் ஹார்ட்- 5 ஸ்டெப்ஸ் யு கேன் டேக் தட் சேவ் யுவர் லைஃப் என்னும் ஆங்கில நூலின் தமிழாக்கம். உடன் இருந்தே மௌனமாகக் கொல்லும் நோய் என ரத்த மிகை அழுத்தத்தை மருத்துவ உலகில் சொல்வதுண்டு. ஒருவருக்கு ரத்த மிகை அழுத்தம் இருக்கிறது […]

Read more

காவடிச் சிந்தும் கவிஞனின் வரலாறும்

காவடிச் சிந்தும் கவிஞனின் வரலாறும், அரங்க. சீனிவாசன், அருள் பதிப்பகம், 66, பெரியார் தெரு, எம்.ஜி.ஆர். நகர், சென்னை 78, விலை 120ரூ. வண்ணமயமான வாழக்கை. பாரதியின் வாழ்க்கையைப்போல அண்ணாமலை ரெட்டியாரின் வாழ்க்கையும் வண்ணமயமானது. அரங்க. சீனிவாசனால் எழுதப்பட்ட காவடிச் சிந்தும் கவிஞன் வரலாறும் என்னும் நூலின் வழியே இதை அறிய முடிகிறது. அவர்களுக்கெனத் தனி சாம்ராஜ்யம். அதை கவிராஜனாகத் தன்னை அறிவித்துக்கொள்வது போன்ற பண்புகளில் இருவருக்கும் உள்ள உற்றுமை நெருக்கத்தைத் தருகிறது. கண்கள் கூசப் பிரகாசத்தொளி மாசற்று விலாசத்தோடு இதுபோன்ற மொழியின் சௌந்தர்யம் […]

Read more

எமனின் திசை மேற்கு

எமனின் திசை மேற்கு, லயன் முத்து காமிக்ஸ், பிரகாஷ் பப்ளிஷர்ஸ், சிவகாசி, விலை 100ரூ. கதையின் புதிய வடிவங்கள் கிராபிக் நாவல்கள் மேற்கத்திய நாடுகளில் பிரபலமானவை. காமிக்ஸ் சட்டகங்களைத் தாண்டிச் சற்று விரிவாக, ஆழமாகக் கதை சொல்பவை. தொடராக இல்லாமல், ஒரே புத்தகத்தில் கதை முடியும் வகையில் உருவாக்கப்படுவது என்பதுதான் காமிக்சுக்கும் கிராபிக் நாவலுக்கும் இடையில் உள்ள முக்கிய வித்தியாசம். நம் நாட்டில் காமிக்ஸ் என்றாலே, அவை சிறுவர்களுக்கானவை என்ற எண்ணம் வலுப்பட்டுவிட்டது. சாகசம் என்பதைத் தாண்டி தொலைதூர நாடுகளின் அரசியல், போர், இனநிறவெறி […]

Read more

தனிமையின் நூறு ஆண்டுகள்

தனிமையின் நூறு ஆண்டுகள், காப்ரியேல் கார்சியா மார்ககேஸ், தமிழில்-சுகுமாரன், காலச்சுவடு பதிப்பகம், நாகர்கோவில், பக். 407, விலை 350ரூ. TO buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0001-161-2.html கனவுபோன்ற மொழியில் நனவு போன்ற உலகில். ஸ்பானிய மொழியில் 60களில் வெளிவந்து 80களில் நோபெல் பரிசு பெற்ற மார்க்கேஸின் தனிமையின் நூறு ஆண்டுகள் நாவல், தமிழின் அங்கமாகியிருக்கிறது. மகோந்தா கிராமம் நகரமாக மாற நூறு ஆண்டுகள் எடுத்துக்கொள்கிறது. சதுப்பு நிலப் பகுதியில் உருவாகும் அந்நகரையே ஓர் உலகமாக விரிக்கிறார் மார்க்கேஸ். அந்த நகரை […]

Read more

என்னுயிர் இந்திய இராணுவத்திற்கே

என்னுயிர் இந்திய இராணுவத்திற்கே, எஸ்.சக்தி கதிரேசன், மணிமேகலைப் பிரசுரம், 7, தணிகாசலம் சாலை, தி.நகர், சென்னை 17, விலை 55ரூ. படித்து பட்டம் பெற்று அரசு சார்ந்த உயர் பணியில் சேராமல் நாட்டைக் காக்கும் எல்லைப் பாதுகாப்புப்படையில் சேர்ந்த தியாக உணர்வை வெளிப்படுத்தும் சிறு நாவல்.   —-   கர்நாடக ருசி, வெ. நீலகண்டன், பிளாக் ஹோல் மீடியா பப்ளிகேஷன்ஸ் லிமிடெட், 7/1, மூன்றாவது அவென்யூ, அசோக் நகர், சென்னை 83, விலை 75ரூ. 29 கர்நாடக மாநில வட்டார உணவு வகைகள் […]

Read more

கண்சிமிட்டும் நேரத்தில்

கண்சிமிட்டும் நேரத்தில், ஆர். மணிமாலா, கற்பகம் புத்தகாலயம், 4/2, சுந்தரம் தெரு, தியாகராயநகர், சென்னை 17, விலை 60ரூ. தொலைக்காட்சியில் பணியாற்றும் நிவேதிதா மற்றும் சசிதரன் என்ற 2 கதாபாத்திரங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட நாவல் கண்சிமிட்டும் நேரத்தில். இதில் நல்ல நட்போ, கெட்ட நட்போ, நம்மை சரிபாதின்னு சொல்கிற ஆத்மாவிடம் எதையும் மறைக்கக்கூடாது என்ற உயர்ந்த தத்துவமும் எடுத்துக் கூறப்பட்டுள்ளது. சொல் நயத்துடன் அன்றாட நிகழ்வுகளை அருமையாக நூல் ஆசிரியர் தொகுத்துள்ளார்.   —-   பால்பண்ணைத் தொழில்கள் வங்கிக் கடனுதவி, அரசு […]

Read more

சுந்தர காண்டம்

சுந்தர காண்டம், கிரி டிரேடிங் ஏஜென்சி, டி.எஸ்.வி. கோவில் தெரு, மைலாப்பூர், சென்னை 4, விலை 225ரூ. இலங்கை மன்னன் ராவணனால் கவர்ந்து செல்லப்பட்ட சீதையை இலங்கை சென்று சீதையைக் கண்டுபிடித்து அனுமன் வெற்றியுடன் திரும்புவதே சுந்தரகாண்டம். சக்கரவர்த்தி திருமகளான ராமபிரானின் கட்டளைப்படி சீதையைத் தேடி வந்த வானர படை தென் சமுத்திரக்கரை வந்து சேர்ந்தது. எங்ஙனம் கடலைத் தாண்டுவது என்று அவர்கள் கவலையில் சோர்ந்திருந்தபோது, ஜாம்பவனான் ஆஞ்சநேயனுக்கு அவருள் உறைந்துகொண்டிருந்த அளப்பரிய செயலாற்றலை நினைவுபடுத்தி, புத்துணர்ச்சியுடன் வீறுகொண்டு எழச் செய்கிறார்.அதனால் உத்வேகமடைந்த அனுமன் […]

Read more

சைவ இலக்கிய வரலாறு

சைவ இலக்கிய வரலாறு, ஔவை சு. துரைசாமி பிள்ளை, ஸ்ரீ செண்பகா பதிப்பகம், பக். 392, விலை 250ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0000-809-6.html சைவத் தமிழ்ப் பேரறிஞர் ஔவை துரைசாமிப் பிள்ளை. கி.பி. 700 முதல் கி.பி. 1000 வரையில், 300 ஆண்டுகளில் உருவான பக்திநூல்களின் வரலாற்றை, பக்தி மனத்துடனும், ஆய்வு நலத்துடனும் இந்நூலில் மிக அற்புதமாகத் தந்துள்ளார். தேவாரம், திருவாசகம், திருவிசைப்பா முதலிய 12 சைவத் திருமுறைகள் தோன்றிய காலத்தை சந்தேகத்துக்கு இடமின்றி இவர் உறுதி […]

Read more

சிலப்பதிகாரமும் செந்தமிழ்க் காப்பியங்களும்

சிலப்பதிகாரமும் செந்தமிழ்க் காப்பியங்களும், க. கண்ணகி, தமிழ் ஐயா வெளியீட்டகம், ஔவைக் கோட்டம், திருவையாறு 613 204, பக். 472, விலை 340ரூ. திருச்செங்கோடு கே.எஸ்.ஆர். கலை அறிவியல் கல்லூரியுடன் இணைந்து, திருவையாறு தமிழ் ஐயா கல்விக் கழகம் 2012 ஜுலை திங்களில் நடத்திய அனைத்துலக அளவிலான காப்பியத் தமிழ் பத்தாவது ஆய்வு மாநாட்டின் கருத்தரங்கத்தில், அறிஞர்களால் வாசிக்கப்பட்ட 95 கட்டுரைகளின் தொகுப்பு நூல். சிலம்பில் சிகரங்கள் என்ற தலைப்பில் முப்பது ஆய்வுக் கட்டுரைகளும், சிலம்பில் புதுமை என்ற தலைப்பில் இருபது ஆய்வுக் கட்டுரைகளும், […]

Read more

வளம் தரும் வான்மீகியின் பாலகாண்டம், உரையும் ஆக்கமும்

வளம் தரும் வான்மீகியின் பாலகாண்டம், உரையும் ஆக்கமும், புலவர் ஆ. காளத்தி, கிள்ளை நிலையம், 16/383, ஆற்காடு சாலை, கோடம்பாக்கம், சென்னை 600024, பக். 294, விலை 190ரூ. வான்மீகி இயற்றியுள்ள ராமாயணத்தின் பாலகாண்ட தமிழ் மொழிபெயர்ப்பான இந்த நூல் எளிமையான தமிழில் எல்லோருக்கும் புரியும்படியாக வெளிவந்துள்ளது. பால காண்டத்தில் உள்ள எழுபத்து ஏழு சருக்கங்களில் சில சுலோகங்களை அழகிய முறையில் காளத்தி மொழி பெயர்த்துள்ளார். மூல நூலுக்கு ஊறு செய்யாது மொழி பெயர்த்திருப்பது பாராட்டுக்குரியது. இதைப் பாராட்டும் ஸ்ரீ வரத யதிராஜ ஜீயர் […]

Read more
1 2 3 4 5 6 9