எது சரியான கல்வி

எது சரியான கல்வி, முனைவர் வெ. இறையன்பு, நேசம் பதிப்பகம், சென்னை, விலை 25ரூ. மதிப்பெண் தேடும் கல்வியைத் தாண்டி வாழ்வியல் மதிப்புக்களை நாடும் கல்வியாக படிப்புமுறை எப்படி மாற வேண்டும் என்பதை நூலாசிரியரும், ஐ.ஏ.எஸ். அதிகாரியுமான முனைவர் வெ. இறையன்பு சிந்தனைச் சுவைபட எளிய நடையில் இந்த நூலில் கூறி உள்ளார். முறையான கல்வி என்பதே முறைசாராக் கல்வி தான் என்றும், மனப்பாடம் செய்வதை கற்றுக் கொள்வதையே கல்வி என எண்ணுபவர்கள் பெரிதாக எதையும் சாதிக்க முடியாது என்பதையும் நூலாசிரியர் ஆணித்தரமாக கூறியுள்ளார். […]

Read more

இலக்கியமும் வாசிப்பும்

இலக்கியமும் வாசிப்பும், ம. திருமலை, மீனாட்சி புத்தக நிலையம், மதுரை, பக். 144, விலை 70ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-223-5.html ஓர் இலக்கியப் படைப்பு அனைத்து வாசகர்களுக்கும் ஒரேவிதமான அனுபவத்தைத் தர வேண்டும் என்ற நியதியில்லை. அவ்வகையில், தமிழ் இலக்கியப் பாடல்களில் நூலாசிரியர் தாம் பெற்ற உயர்ந்த உன்னத அனுபவங்களை அழகான இனிய நடையில் வெளிப்படுத்தியுள்ள திறனாய்வுக் கட்டுரைகளின் தொகுப்பே இந்தநூல். சங்கப் பாடல்களும் கம்பராமாயணமும், பக்தி இலக்கிய முன்னோடி காரைக்காலம்மையார், மணிமேகலையில் நீர் ஆதாரங்கள், என காதல், […]

Read more

காற்றின் கையெழுத்து

காற்றின் கையெழுத்து, பழநிபாரதி, விகடன் பிரசுரம், சென்னை, பக். 256, விலை 130ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0000-483-1.html பத்திரிகையாளராக இருந்து பாடலாசிரியராக கவிஞர் பழநிபாரதி எழுதிய 52 கட்டுரைகளின் தொகுப்புதான் இந்தநூல். சமுதாயத்தில் புரையோடிப்போயிருக்கும் சகலவிதமான அழுக்குகளையும் சாடும் பழநிபாரதியின் ஆக்ரோஷமான கோபம், படிப்பவர்களையும் தொற்றிக்கொள்கிறது. இதுவே இந்நூலின் வெற்றி. நகரமயமாதல் என்கிற பெயரில் பன்னாட்டு நிறுவனங்களின் முதலாளிகளும் ரியல் எஸ்டேட் மாஃபியா கும்பல்களும் விவசாய நிலங்களை அடிமாட்டு விலைக்கு அடித்துத் துரத்தி வாங்கும் பின்னணியை காடு வெளையட்டும் […]

Read more

குற்றாலக் குறிஞ்சி

குற்றாலக் குறிஞ்சி, கோவி. மணிசேகரன், பூம்புகார் பதிப்பகம், பக். 360, விலை 275ரூ. 1992ஆம் ஆண்டின் சாகித்திய அகாதெமி விருது பெற்ற நாவல் இது. தஞ்சையில் சரபோஜி மன்னர் காலத்தில் வாழ்ந்த குறிஞ்சி என்ற தாழ்ந்த குலத்தில் பிறந்த பாடகியின் வாழ்க்கையை இந்நாவல் சித்திரிக்கிறது. சரபோஜி மன்னராகட்டும், அக்காலத்தில் இருந்த பல ஜமீன்தார்களாகட்டும், குறிஞ்சியி இசையைவிட அவளுடைய அழகில் மயங்கி அவளை அடைய முயல்கின்றனர். பாடகி என்ற கர்வத்தோடும், பெருமையோடும் அவர்களின் முயற்சிகளுக்கெல்லாம் பணிய மறுக்கிறாள் குறிஞ்சி. அவளுடைய காதலன் சிறை வைக்கப்படுகிறான். அவன் […]

Read more

தமிழ்நாட்டில் காந்தி

தமிழ்நாட்டில் காந்தி, அ. ராமசாமி, விகடன் பிரசுரம், 757, அண்ணாசாலை, சென்னை 2, விலை 425ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-198-9.html மகாத்மா காந்தி தென் ஆப்பிரிக்காவில் போராட்டத்தை தொடங்கியபோது அவருக்கு உறுதுணையாக இருந்தவர்களில் பலர் தமிழர்களே. இதன் தாக்கத்தால் தமிழர்கள் மீதும், தமிழ் மீதும் மகாத்மா கொண்டு இருந்த அளப்பரிய பாசத்தால் அவர், 1896 முதல் 1946 வரை 20 முறை தமிழகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். இதன் அனைத்து நிகழ்வுகளையும் ஒரு நொடி பிசகாமல் இந்த நூலில் பதிவு […]

Read more

முதல் கோணல்

முதல் கோணல், ஏ.எஸ். பன்னீர்செல்வன், நக்கீரன் பப்ளிகேஷன்ஸ், 105, ஜானிஜான்கான் சாலை, ராயப்பேட்டை, சென்னை 14, விலை 60ரூ. பன்முகத்தன்மை கொண்ட நம் நாட்டில் வாழும் மக்களின் நிலையைக் கருத்தில்கொண்டு வெளியிடப்படும் மத்திய பட்ஜெட் எப்படி இருக்க வேண்டும். எப்படி இருக்கிறது என்பதை நூலாசிரியர் விளக்கமாக அளித்துள்ளார். சுற்றும் முற்றும் தொகுப்பின் 2ம் பாகமான முதல் கோணல் நூலில் ஒபாமா முதல் இலங்கை பிரச்சினை வரை அனைத்து தகவல்களும் அலசப்பட்டுள்ளது. முதல்கோணலை எவ்வாறு சரி செய்வது என்பதற்கு ஒரு வழிகாட்டியாக இந்த நூல் அமைந்துள்ளது. […]

Read more

ராஜாஜியின் ஆங்கிலப் பேருரைகள்

ராஜாஜியின் ஆங்கிலப் பேருரைகள், தமிழாக்கம் த.கணேசன், த.க. அகிலா, பாரதிய வித்யாபவன், லட்சுமிபுரம் தென்னூர், திருச்சி 17, விலை 125ரூ. ராஜாஜி தேசத்தந்தை காந்தியின் மனசாட்சி. தமிழர் தலைவர் பெரியாரின் அன்பான எதிரி. இந்தத் தேசத்தின் விடுதலை வேள்விக்கு விறகு சுமந்தவர். அதேநேரத்தில் இந்தியா பிளவுபடுவதைத் தவிர்க்க முடியாது என்று கணித்தவர். தமிழகத்தில் காங்கிரஸ் பேரியக்கம் கால் ஊன்ற உழைத்தவர். அவரேதான் காங்கிரஸை ஆட்சியில் இருந்து அகற்ற அண்ணாவுடன் கைகோத்தவர். மேலாட்டமாகப் பார்த்தால் ராஜாஜி, முரண்பாடானவராகத் தோன்றும். ஆனால் ஆழமாகப் பார்த்தால், அவரது தீர்க்கத்தரிசனம் […]

Read more

வெற்றி தரும் நேர நிர்வாகம்

வெற்றி தரும் நேர நிர்வாகம், பராங்க் அட்கின்ஸர், தமிழாக்கம் வெ. ராஜகோபால், ஜெய்கோ பப்ளிஷிங் ஹவுஸ், ஏ2, ஜாஷ் சேம்பர்ஸ், 7 அ சர் பிரோஷா மேத்தா சாலை, போர்ட், மும்பை 400 001, விலை 185ரூ. இங்கிலாந்து நாட்டில் ஆங்கிலத்தில் வெளியான நூல் வெற்றி தரும் நேர நிர்வாகம் என்ற தலைப்பில் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு உள்ளது. காலம் பொன் போன்றது என்ற வேத வாக்கிற்கு இணங்க, இன்றைய உலகின் தேவைகளைப் புரிந்துகொண்டு அதற்கு ஏற்ப முன்கூட்டியே நேரத்தைத் திட்டமிடுவது தற்போது இன்றியமையாதது. இ.மெயில், […]

Read more

சங்கத்தமிழ்

சங்கத்தமிழ்(மொழி இலக்கிய வளம்), முனைவர் வீ. ரேணுகாதேவி, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை 98, பக். 112, விலை 95ரூ. தமிழ்மொழி காலத்தால் பழமையானது மட்டுமல்ல. இலக்கிய வளம் மிக்கதும்கூட என்பதை நிறுவும் ஆய்வு நூல். சங்க இலக்கியங்களில் மலர்கள் குறித்த ஆய்வுக்கு ஆசிரியர் தொகுத்துத் தந்திருக்கும் 99 வகையான மலர்கள் பட்டியல் உதவக் கூடும். கடவுள் நம்பிகை, கடவுள் செய்திகள், வழிபாட்டு உணர்வு, அறத்தொடு நிற்றல், மடலேறுதல் உள்ளிட்ட சங்ககால நடைமுறைத்தாக்கம் பக்தி இலக்கியங்களில் காணக்கிடைப்பதை ஆய்ந்துள்ளார். வழக்கொழிந்துபோன சங்ககாலச் சொற்களை […]

Read more

வடநாட்டு கோயிற்கலைகள்

வடநாட்டு கோயிற்கலைகள், கோ. வீரபாண்டியன், வேலா வெளியீடு, சென்னை, பக். 356, விலை 260ரூ. கி.மு. 3000 முதல் வடநாட்டில் கட்டப்பட்ட கோயில்களின் கட்டுமானப் பணிகள், பயன்படுத்தப்பட்ட பொருள்கள், கட்டியவர்கள் குறித்தும், இன்றைய காலத்தில் கட்டடம் கட்டும் பணியைக் காட்டிலும், அன்றைய காலத்தில் எவ்வளவு நவீன முறைகளைக் கையாண்டுள்ளனர் என்ற தகவல்களும் விரிவாக இடம் பெற்றுள்ளன. மொகஞ்சதாரோ, ஹரப்பா, உள்ளிட்ட பல்வேறு நகரங்களின் கட்டுமானப் பணிகள், நிர்வாகப் பணிகள் போன்றவையும் இடம் பெற்றுள்ளன. கோயில்கள், வேள்வி பீடங்கள், குன்றுகள், குடைவரைகள், தூண்கள் போன்றவற்றின் கட்டுமான […]

Read more
1 2 3 4 8