சிவபெருமானுக்குரிய அஷ்ட மஹா விரதங்கள்

சிவபெருமானுக்குரிய அஷ்ட மஹா விரதங்கள், க. முருகானந்தம், பிரேமா பிரசுரம், சென்னை, விலை 150ரூ. விரதங்கள் என்பது இறைவனை நினைப்பதற்காகவே தோன்றியது என்பதும், ஒரு காரணமாகும். அந்த விரதங்கள் எதற்காக இருக்கிறோம் என்பதுகூட தெரியாதவர்களாகவே பலர் இருக்கின்றனர். இந்த நூலில் சிவபெருமானுக்குரிய எட்டு விரதங்களைப்பற்றி, ஆசிரியர் கூறியிருக்கிறார். விரதங்களின் மகிமை, விரதம் தோன்றிய விதம், இந்த விரத நாட்களில் கோவில்களில் நடைபெறும் விழாக்கள் என்று ஆசிரியரின் பார்வை பரவியிருக்கிறது. நன்றி: தினத்தந்தி.   —- மனோரமா இயர்புக் 2014, மலையாள மனோரமா, சென்னை, விலை […]

Read more

வடநாட்டு கோயிற்கலைகள்

வடநாட்டு கோயிற்கலைகள், கோ.வீரபாண்டியன், வேலா வெளியீடு, சென்னை, பக். 356, விலை 260ரூ. கி.மு. 3000 முதல் வடநாட்டில் கட்டப்பட்ட கோயில்களின் கட்டுமானப் பணிகள், பயன்படுத்தப்பட்ட பொருள்கள், கட்டியவர்கள் குறித்தும், இன்றைய காலத்தில் கட்டடம் கட்டும் பணியைக் காட்டிலும் அன்றைய காலத்தில் எவ்வளவு நவீன முறைகளைக் கையாண்டுள்ளனர் என்ற தகவல்களும் விரிவாக இடம்பெற்றுள்ளன. மொகஞ்சதாரோ, ஹரப்பா, உள்ளிட்ட பல்வேறு நகரங்களின் கட்டுமானப் பணிகள், நிர்வாகப் பணிகள் போன்றவையும் இடம்பெற்றுள்ளன. கோயில்கள், வேள்வி பீடங்கள், குன்றுகள், குடைவரைகள், தூண்கள் போன்றவற்றின் கட்டுமான முறைகளும் இதில் இடம்பெற்றுள்ளன. […]

Read more

அசுரன்

அசுரன், மஞ்சுள் பப்ளிஷிங் ஹவுஸ் பி லிட், சென்னை, விலை 395ரூ. இலங்கை அரசன் ராவணன் மற்றும் அவனது அசுர இன மக்களின் வீரக் கதையை எடுத்துக் கூறுகிறது இப்புத்தகம். ராமாயணத்தில் அறியப்படாத ஒரு பழங்கதையை இந்நூல் கூறுகிறது. அசுரன் கதையில் ராவணின் மகள் சீதை. சீதை அசுரகுலத்து அரசியாக வளரவில்லை என்றாலும் அவள் அவனுடைய மகள். அவளுடைய நல்வாழ்க்கைக்காக ராவணன் செய்யும் செயல்கள் ஒவ்வொன்றும் தவறாகப் போக, அவனது உடன்பிறப்புக்களும் மகனும் மாண்டு போகிறார்கள். இறுதியில் அவனே கொல்லப்படுகிறான். அசுரகுலம் அழிந்து போகிறது. […]

Read more

கம்பனில் சங்க இலக்கியம்

கம்பனில் சங்க இலக்கியம், ம.பெ. சீனிவாசன், மீனாட்சி புத்தக நிலையம், மதுரை, பக். 304, விலை 200ரூ. கம்பரின் தொல்காப்பியப் புலமை கம்பராமாயணத்தில் பல இடங்களில் பளிச்சிடுகின்றன. அதேபோல் கம்பர், அகத்திணை, புறத்திணை இரண்டையும் போற்றிய விதத்தையும், சங்க இலக்கிய நூல்களில் இடம்பெற்றுள்ள பாடல்களைத் தம் பாடலில், ஏற்றிப் போற்றியுள்ள பாங்கையும் இடையள நாட்டு மணக்குடியான் பால்வண்ண தேவனான வில்லவதரையன் அகநானூற்றுக்கு அகவற்பாவால் எழுதிய உரைப் பாயிரத்தில் சங்கப் புலவர்களைச் சான்றோர் என்று குறிப்பிடுவதை அடியொற்றி, கம்பர் கோதாவரி ஆற்றுக்கு உவமை கூறுமிடத்தில் சான்றோர் […]

Read more

சென்னைக்கு மிக அருகில்

சென்னைக்கு மிக அருகில், விஸ்வபாரதி, காவ்யா, சென்னை, பக். 128, விலை 100ரூ. படைப்பின் அகத்தேடல் அன்பாக இருக்கட்டும், படைப்பின் அடிநாதம் அறமாக இருக்கட்டும், படைப்பின் நோக்கம் எல்லைகள் கடந்த மனித நேயமாக இருக்கட்டும் என தனது முகவுரையில் தெளிவுபடுத்திவிடுகிறார் விஸ்வபாரதி. இத்தொகுப்பில் மிக அழகான கதை என்றும், வடிவ அளவிலும் நிறைவான கதை என்றும் பூவரசு கதையைச் சொல்லலாம். கிராமத்தின் நம்பிக்கைகள் சார்ந்த சங்கிலிசி சாமி கதை நிறைவாக உள்ளது. இதேபோல பல கதைகளிலும் சுற்றுச் சூழல் பிரச்னை, சரிந்துபோன சமூக மதிப்பீடுகள் […]

Read more

குழந்தைகளின் பிரச்சினைகளை உளரீதியாக தீர்ப்பது எப்படி

குழந்தைகளின் பிரச்சினைகளை உளரீதியாக தீர்ப்பது எப்படி?, ஜான் முருகசெல்வம், பூங்கொடி பதிப்பகம், சென்னை, விலை 25ரூ. குழந்தை வளர்ப்பில் இன்றைய இளம் பெற்றோர் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் அதிகம். அந்தக் காலம்போல, இவ்விஷயத்தில் வழிகாட்டுவதற்கு இன்று தாத்தா பாட்டிகள் இல்லை. இந்நிலையில் குழந்தை வளர்ப்பில் சந்திக்க வேண்டியிருக்கும் முக்கியமான பிரச்சினைகளை வகைப்படுத்தி, அவற்றுக்கான தீர்வுகளை தெளிவாக வழங்கியிருக்கிறார் ஆசிரியர். நன்றி: தினத்தந்தி.   —- நினைத்ததை நிறைவேற்றும் காரிய சித்தி மந்திரங்கள், ஸ்ரீராம் ஸ்வாமிகள் எடையூர் சிவமதி, அழகு பதிப்பகம், சென்னை, விலை 45ரூ. இறைவனை […]

Read more

கண்ணன் வருவாயா

கண்ணன் வருவாயா, வாழ்வியல் அனுபவங்கள், வரலொட்டி ரெங்கசாமி, தனலெட்சுமி பதிப்பகம், சென்னை, விலை 330ரூ. தன்னலமற்ற அன்பின் வெளிப்பாடு பகவத் கீதையைப் புனித நூலாக்கியது நாம் செய்த மிகப் பெரிய தவறு என்று இந்நூலைத் தொடங்கியுள்ளார் வரலொட்டி ரெங்கசாமி. பகவத் கீதையை ஒரு தத்துவமாக நினைத்து ஒதுக்கிவைக்காமல் வாழ்க்கைக்குத் தேவையான ஒன்றாகப் பார்க்கும்போது அதில் ஏராளமான வாழ்வியல் விளக்கங்கள் பொதிந்து கிடக்கின்றன என்கிறார் ஆசிரியர். பகவத் கீதையை முதிய வயதில் படிக்கலாம் என்னும் எண்ணம் குறித்த மாறுபட்ட கருத்தைப் பதிவு செய்திருக்கிறார் வரலொட்டி ரெங்கசாமி. […]

Read more

ஏன் எதற்கு

ஏன் எதற்கு, டி.வி. பாலசர்மா, நர்மதா பதிப்பகம், சென்னை 17, விலை 100ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0000-640-6.html திருநீற்றின் மகிமை என்ன? ஜபத்தினால் என்ன பயன்? வழிபாட்டு தத்துவம் என்ன? இவை போன்ற ஆன்மிக சந்தேகங்களுக்கு பதில் அளிக்கும் புத்தகம். மொத்தம் 350 கேள்விகளுக்கு பதில்கள் உள்ளன. நன்றி: தினத்தந்தி, 2/4/204.   —- டாக்டர் பி.ஆர். அம்பேத்கர், சுரா பதிப்பகம், சென்னை, விலை 50ரூ. எழுத்தாளர் செ. சசிகலாதேவி, 25 தலைப்புகளில் சட்டமேதை பி.ஆர். அம்பேத்கர் வாழ்க்கை […]

Read more

சாதனையாளர்களின் வெற்றி ரகசியங்கள்

சாதனையாளர்களின் வெற்றி ரகசியங்கள், மஞ்சுள் பப்ளிஷிங் ஹவுஸ், போபால், விலை 295ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-227-7.html ஆஸ்திரிய நாட்டில் ஒரு சாதாரண போலீஸ்காரருக்கு மகனாகப் பிறந்த அர்னால்டு, ஹாலிவுட்டில் கோடிக்கணக்கில் சம்பாதிக்கும் சூப்பர் ஸ்டாராக உயர்ந்தார். கலிபோர்னியா மாநில கவர்னராகவும் ஆனார். ஆப்பிள் நிறுவனத்தின் ஸ்டீவ் ஜாப்ஸ், மைக்ரோசாப்டின் பில்கேட்ஸ் உலகப் பெரும் பணக்காரர்களாக உயர்ந்தது எப்படி? இந்த வெற்றி ரகசியங்களைப் பற்றி ரெய்னர் சிட்டல்மன் ஆங்கிலத்தில் எழுதிய புத்தகம் உலகப் புகழ் பெற்றது. அதை வென்றே தீருவோம் […]

Read more

குப்பை உலகம்

குப்பை உலகம், சுப்ரபாரதி மணியன், சேவ், பக். 96, விலை 60ரூ. நாவல், சிறுகதைகள் எனப் படைப்பிலக்கியத் துறையில், நிறைய எழுதியுள்ள பிரபல எழுத்தாளரான சுப்ரபாரதி மணியன், சுற்றுப்புறச் சுழல் குறித்து எழுதியுள்ள கட்டுரைகளின் தொகுப்பு. சாயக் கழிவு நீரால் மாசுபட்டுக் கிடக்கும் ஆறுகள் மற்றும் அதை ஒட்டியுள்ள, விவசாய நிலங்கள் பாழாகிப்போய்க் கொண்டிருப்பதைப் பற்றிக் கவலை தெரிவிக்கும் சுற்றுச்சூல் பணியாளர்களின், பொதுத் தொண்டு, அனைத்து மக்களுக்கும், தெரியப்படுத்த வேண்டிய முக்கியமான விஷயம். இந்த வகையில் இந்த நூலாசிரியரின் இந்தக் கட்டுரைத் தொகுப்பு வரவேற்பிற்குரியது. […]

Read more
1 89 90 91 92 93 128