குழந்தைகள் நலம்

குழந்தைகள் நலம், டாக்டர் க. ராஜேந்திரன், தமிழ்ப் பண்பாட்டு மையம், கோவை, பக். 380, விலை 200ரூ. இந்த நூலில் ஆசிரியர், தாயின் கர்ப்ப காலம் முதல் குழந்தைக்கு 18 வயது ஆகும் வரையிலும், சிசு வளர்ப்பு, உணவு முறைகள், தடுப்பு ஊசி, குழந்தையின் வளர்ச்சி நிலைகள், பொதுவான நோய்கள் மற்றும் தடுப்பு முறைகள் பற்றி, விரிவாக எளிதாகச் சொல்கிறார். விலையும் மலிவு. தாய்மார்கள் அவசியம் படிக்க வேண்டிய மருத்துவ நூல். -எஸ். குரு. நன்றி: தினமலர், 20/4/2014.   —- ஜோதிட சகலாதிகாரம், […]

Read more

பெண்ணினத்தின் பேரொளி

பெண்ணினத்தின் பேரொளி, அ. விசாலாட்சி, விஜயகுமார் பதிப்பகம், திருப்பூர், விலை 100ரூ. முதல்அமைச்சர் ஜெயலலிதாவின் அறிவு, ஆற்றல், துணிவு, திறமை முதலான சிறப்பியல்களை படம் பிடித்துக் காட்டும் புத்தகம். இதை, அழகிய நடையில் எழுதியிருப்பவர் திருப்பூர் மேயர் அ. விசாலாட்சி. பதவி ஏற்றபின் ஜெயலலிதா ஆற்றிய பணிகளையும், சாதனைகளையும் பட்டியலிட்டு இருக்கிறார் மேயர் விசாலாட்சி. தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் வேளையில் அ.தி.மு.க. பேச்சாளர்களுக்கு இந்நூல் சிறந்த கையேடாக விளங்கும். நன்றி:தினத்தந்தி, 2/4/2014.   —- இந்தியப் புதையல் ஒரு தேடல், பால் ப்ரன்டன், தமிழில் […]

Read more

மதுரை அரசி

மதுரை அரசி, இளங்கோ, இகம் இல்லம், பக். 158, விலை 57ரூ. அங்கம் ஒன்றுக்கு நான்கு காட்சிகளாக நான்கு அங்கங்களைக் கொண்ட மதுரை அரசி என்னும் இப்புதுக்கவிதை நாடக நூல். கி.பி. 1812ல் மதுரை மாவட்ட ஆட்சியராக இருந்த ரோஸ் பீட்டர் வாழ்வில் நடந்த வரலாற்று உண்மையை மையப்படுத்தி தடாதகை என்ற மதுரை மீனாட்சியின் வரலாற்றை முழுமையாக விவரிக்கிறது. பல்வேறு புராணச் செய்திகள் உடன் மாலிக்காப்பூர் படையெடுப்பு, குமாரகம்பணனின் மதுரை வருகை, மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ் அரங்கேற்றம் போன்ற பல்வேறு வரலாற்றுச் செய்திகள் […]

Read more

அனுபவச் சுருள்

அனுபவச் சுருள், டாக்டர் கே.எஸ். சுப்பிரமணியன், கவிதா பப்ளிகேஷன்ஸ், தி.நகர், சென்னை, பக். 192, விலை 125ரூ. ஒரு வங்கி அதிகாரியின் அரசியல் அனுபவங்கள், இலக்கிய ரசனை, நனவோட்ட முறையிலான நிகழ்ச்சித் தொகுப்புகள். பிலிப்பைன்ஸ் நாட்டு மக்கள் எழுச்சி, மொழி பெயர்ப்பு அனுபவம், ஜெயகாந்தன், சி. சுப்ரமணியன், ராஜாஜி போன்றோர்களுடனான நேர்காணல், ஆங்காங்கே தலை தூக்கும் பாரதியின் கவிதை வரிகள் இப்படியே சுவாரஸ்யமாக 192 பக்கங்கள். எந்தத் தலைப்பை எடுத்துப் படித்தாலும் அதில் ஒரு ஆழ்ந்த கருத்தும், யதார்த்தமும் இழையோட அமைந்த அனுபவம். என்னைக் […]

Read more

கந்தர் அந்தாதி

கந்தர் அந்தாதி, அருணகிரிநாதர், மும்பை ராமகிருஷ்ணன், எல்.கே.எம். பப்ளிகேஷன், பக். 544, விலை 290ரூ. செந்தமிழ் முருகன் கந்தவேலின் புகழ் பாடும் நூல்களும் கந்தர் அந்தாதியும் ஒன்று. மகாபாரத்திற்கு உரை எழுதிய வில்லிப்புத்தூராழ்வாருக்கும், அருட்கவி அருணகிரிக்கும் இடையே ஏற்பட்ட கவிதைப் போட்டியின் விளைவாகப் பாடப்பட்ட நூல் கந்தரந்தாதி. அருணகிரியால் திருச்செந்தூர் செந்திலாண்டவனின் புகழ்பாடும் நூல் கந்தரந்தாதி. கந்தரந்தாதியைப் பாராதே கழுக்குன்ற மலைய நினையாதே என்று ஒரு பழமொழீ உள்ளது. அந்த அளவுக்கு பாடுவதற்கு மிகக் கடினமான நூல். படிப்பதற்கோ நெட்டுருச் செய்வதற்கோ, பொருள் காண்பதற்கோ […]

Read more

தமிழ் அறிவோம்

தமிழ் அறிவோம், கவிக்கோ ஞானச்செல்வன், மணிவாசகர் பதிப்பகம், பக். 160, விலை 50ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0001-848-1.html தமிழ்மொழியின் தனித்தன்மை, அழகு, மேன்மை சிதையாமல் காக்கப்பட வேண்டும் என்பதில் கருத்தாக நின்று பணிகள் ஆற்றும் கவிக்கோ ஞானச்செல்வன் எழுதிய நூல் இது. தன்னேரிலாத தமிழ் எனத் தொடங்கி, இருந்தமிழே உன்னால் இருந்தேன் என முடியும் 32 கட்டுரைகளைக் கொண்ட இந்நூலின் பிற்சேர்க்கையாகத் தமிழ் எழுதும்போதும், பேசும்போதும் ஏற்படக்கூடிய ஐயங்களுக்கு விடையும் விளக்கமும் தரப்பட்டுள்ளது. பிறமொழிக் கலப்பு எவ்வாறு தமிழ் […]

Read more

மண் மொழி மக்கள்

மண் மொழி மக்கள், கவிஞர் வாலி, குமுதம் பு(து)த்தகம், சென்னை 10, விலை 75ரூ. கவிஞர் வாலி குமுதம் இதழில் கடைசியாக எழுதி வெளிவந்த மண் மொழி மக்கள் தொடர் முற்றுப்பெறாமல் முடிந்த நிலையில் 10 வாரங்கள் மட்டும் வெளியான தொடர் புத்தகமாக வெளிவந்துள்ளது. ஒரு நாட்டில் வளமான மண்ணும், வளமான மொழியும் இருந்தால்தான் மக்கள் மகிழ்ச்சியுடன் வாழ்வார்கள் என்பதை நூலாசிரியர் ஆணித்தரமாக கூறி உள்ளார். வழக்கமான வாலியின் வார்த்தை ஜாலங்களும், பலரது வாழ்க்கை ஜாலங்களும் விரவிக் கிடப்பதுடன், அபூர்வ புகைப்படங்களும் இடம் பெற்றுள்ளன. […]

Read more

தமிழில் முதல் சிறுகதை எது

தமிழில் முதல் சிறுகதை எது, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை, விலை 40ரூ. எழுத்துலகில் புகழ் பெற்ற டாக்டர் ஆர்.எஸ். ஜேக்கப் தமிழில் வந்த முதல் சிறுகதை எது? எழுத்தாளர் யார்? என்பதை பல்வேறு கோணங்களில் ஆராய்ந்து எழுதியிருக்கும் இந்த நூல் சிறுகதை இலக்கியத்தின் பெருமைக்குரிய பக்கங்கள். 1877ம் ஆண்டில் கிறிஸ்தவ பாதிரியார் சாமுவேல் பவுல் ஐயர் எழுதிய சரிகைத் தலைப்பாகை தான் தமிழில் எழுதப்பட்ட முதல் சிறுகதை என்பதை காரண, காரியங்களுடன் விவரிப்பவர், அதைக் கூட ஆய்வாளர்களின் பார்வைக்கே விட்டுவிடுகிறார். தகுதிக்கு […]

Read more

வைணவ இலக்கியம்

வைணவ இலக்கியம், கலியன் எதிராசன், வானதி பதிப்பகம், சென்னை 17, பக். 152, விலை 50ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0000-538-0.html வைணவத்தின்பால் கொண்ட பற்று காரணமாக, இந்நூலாசிரியர் பல்வேறு இடங்களில் நடத்திய சொற்பொழிவின் தொகுப்பே இந்த நூல். பொய்கை ஆழ்வாரின் சிந்தனைகள், திருமாலை, திருப்பாவை, ஆண்டாளும் மீராபாயும் உள்ளிட்ட 13 தலைப்புகளில் கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன. ஆழ்ந்த கருத்துகள், பொருத்தமான திருவாய்மொழி, திருவந்தாதி பாடல்கள் அதற்கான விளக்கமுடன் அமைந்த கட்டுரைகளில் முழுமையான வைணவ இலக்கியத்தை நம்மால் நுகர முடிகிறது. […]

Read more

இந்தியப் புதையல் ஒரு தேடல்

இந்தியப் புதையல் ஒரு தேடல், பால் ப்ரன்டன், தமிழில் புவனா பாலு, கண்ணதாசன் பதிப்பகம், சென்னை, பக். 520, விலை 300ரூ. புவியியல் வல்லுநர்கள் நிலங்களை, நாடுகளை, கண்டங்களை ஆராய்ந்தறிந்ததைப்போல, பால் ப்ரண்டன் இந்தியாவின் பாரம்பரியங்கள், அவற்றை நிலைநாட்டிய ஆன்மிகத் தலைவர்களைப் பற்றிய விவரங்களைச் சேகரித்து ஒரு ஆன்மிக வரைபடத்தையே வரைந்து இந்தியாவை உலகிற்குக் காட்டியிருக்கிறார். 1900இல் இந்தியாவில் இரயில், கார், மாட்டு வண்டி பயணங்கள், போலிச்சாமியார்கள், கபட வேடதாரிகள், நல்லோர், உலகிற்கே தெரியாமல் வாழ்ந்த உண்மையான யோகிகள், யோக, தந்திரா ஆசான்கள், மக்களை […]

Read more
1 90 91 92 93 94 128