எதற்கு ஈழம்?

எதற்கு ஈழம்?, தீபச்செல்வன், தோழமை வெளியீடு, 10, 6வது செக்டர், கே.கே.நகர், சென்னை 78, விலை 175ரூ. ஈழம் என்பது பல ஆண்டுகளாகப் போராடி மாண்ட போராளிகளின் கனவு மட்டுமல்ல, முப்பதாண்டு போரில் வாழும் கனவோடு கொல்லப்பட்டவர்களுக்கான அஞ்சலியும் ஈழம்தான் என்று நெத்தியடியாக சொல்லி இருக்கிறார் நூலாசிரியர். அதே வேளையில் ஈழப்பிரச்சினையில் தமிழக அரசியல்வாதிகள் நடந்துகொண்டவிதமும் தோலுரித்துக் காட்டப்பட்டுள்ளது. விடுதலைப்புலிகள் ஆயுதம் ஏந்தும் சூழல் உருவானது தொடங்கி உள்நாட்டுப போர் முடிவுக்கு வந்த பின்னரும் இன்று வரை ஈழத்தமிழர்களுக்கு இழைக்கப்படுகிற அநீதி விவரிக்கப்பட்டுள்ள விதம், […]

Read more

அமிர்தம்

அமிர்தம் (சிறுகதை இரண்டாம் தொகுதி), எஸ். ஷங்கர நாராயணன், சு. வேணுகோபால், நிவேதிதா புத்தகப் பூங்கா, 6/11, டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலை, வ.உ.சி. நகர், பம்மல், சென்னை 75, பக். 176, விலை 85ரூ. தீனிப்பிரியர்களை சாப்பாட்டு ராமன்கள் என சாடுகிறோம். ஆனால் ரசித்துச் சாப்பிடுவதிலும், ருசித்துச் சாப்பிடுவதிலும் ஆர்வம் கொள்ளாதவர்கள் யார்? அது தவிர இந்த நாட்டில் ஒரு பட்டினிப் பட்டாளம் இருக்கிறது. அடுத்த வேளைச் சோறு எங்கே கிடைக்கும்? என தெரியாத நிலை. பசி பற்றியும், ருசி பற்றியும் உணவு பற்றியும் […]

Read more

வாழ்வியல் பூக்கள்

வாழ்வியல் பூக்கள்(குறுநாவல்கள், சிறுகதைகள்), திருமதி சங்கரி அப்பன், ரமணி பதிப்பகம், 69, மேலப் பொன்னகரம் 5வது தெரு, (ஆரப்பாளையம் பேருந்து நிலையம் அருகில்), மதுரை 625016, பக். 236, விலை 75ரூ. அமரர் தீபம் நா. பார்த்தசாரதியின் பொன்விலங்கு நாவலைப் படித்து தமிழ் எழுத்து உலகில் நுழைந்த இந்த எழுத்தாளரின் இந்த முதல் படைப்புத் தொகுப்பு வாசகர்களை வசீகரிக்கும் என்று சொல்லலாம். மூன்று குறுநாவல்களும், 33 சிறுகதைகளையும் உள்ளடக்கிய இந்தத் தொகுப்பிற்கு, அறிஞர் பெருமக்களின் மதிப்புரையும், வாசித்து மகிழ்ந்த வாசகர்கள் கடிதங்களும் சிறப்பு சேர்க்கின்றன. […]

Read more

உயிரே உனக்காக

உயிரே உனக்காக, ஏ. நடராஜன், கவிதா பப்ளிகேஷன்ஸ், 8, மாசிலாமணி தெரு, பாண்டிபஜார், தி.நகர், சென்னை 17, விலை 250. சென்னை தொலைக்காட்சி முன்னாள் இயக்குனர் ஏ. நடராஜன் சிறந்த எழுத்தாளர் என்று முத்திரை பதித்தவர். நாவல்களும், சிறுகதைகளும் எழுதி புகழ்பெற்றவர். அவருடைய சிறந்த நாவல்களில் ஒன்று உயிரே உனக்காக. ஹாலிவுட் இருக்கும் லாஸ் ஏஞ்சல்ஸ் நகர பின்னணியில் கதையை பின்னியிருக்கும் நடராஜன், வர்ணனைகள் மூலம் அந்த நகருக்கே நம்மை அழைத்துப் போகிறார். நரேன், மதுரிமா, கவிதை, வைதீஸ்வரன் என்ற நான்கு கதாபாத்திரங்களை வைத்து, […]

Read more

கல்கியின் சிறுகதைகள்

கல்கியின் சிறுகதைகள், நக்கீரன், 105, ஜானிஜான்கான் சாலை, ராயப்பேட்டை, சென்னை 14, விலை மூன்று புத்தகங்களும் முறையே 100ரூ, 120ரூ, 130ரூ. சரித்திரக் கதைகள் எழுதுவதில் ஈடுஇணையற்றவராகத் திகழ்ந்த கல்கி சிறுகதைகள் எழுதுவதிலும் வல்லவராக விளங்கினார். காதல், வீரம், சோகம், நகைச்சுவை… இப்படி நவரசங்களும் கலந்தவை அவருடைய சிறுகதைகள். கல்கியின் மிகச்சிறந்த 55 கதைகளை தேர்ந்தெடுத்து 3 புத்தகங்களாக வெளியிட்டுள்ளது நக்கீரன். கல்கியின் மிகப் பிரபலமான வீணை பவானி, திருவழுந்தூர் சிவக்கொழுந்து, கேதாரியின் தாயார், அமரவாழ்வு, பொங்குமாங்கடல், புவிராஜா, சுபத்திரையின் சகோதரன் ஆகிய கதைகளும் […]

Read more

சுவடிகள் வழங்கி கவிதைகள்

சுவடிகள் வழங்கி கவிதைகள், கவிஞர் கோ. வேணுகோபாலன், மணிவாசகர் பதிப்பகம், 31, சிங்கர் தெரு, பாரிமுனை, சென்னை 108, பக். 208, விலை 125ரூ. பழந்தமிழ்க் கவிதைகளில் உள்ள வடிவங்கள், சொல்லாட்சிகள், உவமைகள், அணிகள் என்று அத்தனையையும் ஒரு சேரப் படித்து இன்புற நினைப்பவர்களுக்குப் பொருத்தமான நூல். வேறு எந்த மொழிக்கும் இத்தனை சிறப்பு உண்டா என்று கேட்கும் அளவிற்கு பழந்தமிழ்க் கவிதைகளை, இலக்கியச் செல்வங்களை ஒன்று திரட்டி, அதற்கேற்ற விளக்கமும் தந்து தமிழை உயர்த்தியிருக்கிறார் ஆசிரியர். கம்பன் பாட்டுகளில் களிக்க வைக்கிறார். வில்லிபுத்தூராரின் […]

Read more

வாழ்வியலை உணர்த்தும் ஜென் கதைகள்

வாழ்வியலை உணர்த்தும் ஜென் கதைகள், குன்றில் குமரன், அழகு பதிப்பகம், 15/21, டீச்சர்ஸ் கில்டு காலனி, 2வது தெரு, ரஜாஜி நகர் விரிவு, வில்லிவாக்கம், சென்னை 49, பக்கம் 160, விலை 60ரூ. ஜென் என்பது இந்த நிமிடம் இங்கே வாழ்வது, நிமிடத்திற்கு நிமிடம் வாழ்வது, எது ஒன்றையும் சாட்சியாக நின்று கவனித்தல், எல்லாவற்றையும் ஏற்றுக் கொள்வது, என்பதை மையமாகக் கொண்டது. தியானம் என்ற சொல்தான் ஜப்பானில் ஜென்னாக உருவெடுத்தது என்கிறார் ஓசோ. அந்த வகையில் இந்த சிறிய புத்தகத்தில் நம் வாழ்வில் அன்றாடம் […]

Read more

கடவுளும் கந்தசாமிப்பிள்ளையும்,

சமயங்களின் அரசியல், தொ. பரமசிவன், விகடன் பிரசுரம், 757 அண்ணா சாலை, சென்னை 2, பக்கம் 176, விலை 85ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0000-838-1.html சைவம் மற்றும் வைணவம் ஆகியவை, சமண புத்த சமயங்களை எப்படி எதிர் கொண்டன? சமணத் துறவிகள், புத்த துறவிகள் மக்கள் கூட்டமாக இல்லாத இடங்களை கைவிட்டு, ஏன் தள்ளியே வாழ்ந்தனர்? பெண்கள் ஏன், துறவிகளாக ஏற்கப்படவில்லை? நிர்வாணம் என்றால் என்ன? பட்டிமன்றம் என்ற சொல் எப்படி வந்தது? என்பது பற்றி, இந்த நூலில் […]

Read more

கொட்டாரம்

கொட்டாரம்,  நீல பத்ம நாபன், வானதி பதிப்பகம், 23, தீனதயாளு தெரு, தி.நகர், சென்னை 17, விலை 50ரூ. To buy this Tamil book online – https://www.nhm.in/shop/100-00-0001-009-6.html என்னைப் போல் இருவர், ரவுத்திரம், பகை, நொண்டிப்புறா, பூஜை அறை, கொட்டாரம் என்ற 6 சிறுகதைகளின் தொகுப்பு நூல். வாசகனின் வாசிப்புக்கேற்ப ஊக நிலையைப் படரவிடுவது நூலாசிரியரின் பண்பாகத் திகழ்கிறது. அது வாசக மகிழ்வைப் பெருக்கிடும் சூழலுக்கு வலுவூட்டுகிறது. நீல பத்ம நாபனின் மொழி நடை, சுகமான சிறுகதை தொகுப்பை சுவைக்கலாம்.   —– […]

Read more

சல்மா எழுதிய சாபம்( சிறுகதைகளின் தொகுப்பு )

சாபம், சல்மா, காலச்சுவடு பதிப்பகம், 669, கே.பி.சாலை, நாகர்கோவில்1, பக். 142, விலை 110ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0000-801-2.html சல்மா எழுதிய 11 சிறுகதைகளின் தொகுப்பு இந்நூல். எழுத்திற்கு ஆண் பெண் பேதமில்லை என்ற போதிலும் இத்தொகுப்பில் உள்ள சிறுகதைகளை பெண் ஒருவராலேயே எழுத முடியும் என்பதே உண்மை. கதாப்பாத்திரங்கள் நிறைய மௌனங்களைச் சுமந்து கொஞ்சமாகவே வார்த்தைகளை பிரசவிக்கிறார்கள். பெண்கள் பல துறைகளில் கால் ஊன்றி ஆண்களுக்கு நிகராகப் பரிணமித்தாலும், நடைமுறை வாழ்வில் அவர்கள் மிகுந்த வலியையும் வேதனையையும் […]

Read more
1 74 75 76 77 78 80