நெஞ்சில் நிலைத்தவர்கள்

நெஞ்சில் நிலைத்தவர்கள், தேழமை வெளியீடு, 10, ஆறாவது தெரு, முதலாவது செக்டர், கே.கே. நகர், சென்னை 78, விலை 225ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0001-162-8.html அறஞிர்கள், கலைஞர்கள், கவிஞர்கள், எழுத்தாளர்களின் வாழ்க்கைக் குறிப்புகள் கொண்ட புத்தகம். மறைமலையடிகளார், பன்மொழிப் புலவர், அப்பாத்துரையார், சிலம்புச் செல்வர், ம.பொ. சிவஞானம், திரு.வி.க. கல்கி, கண்ணதாசன், சேதுப்பிள்ளை உள்பட 70 பேர்கள் பற்றிய கட்டுரைகள் இதில் உள்ளன. ரவீந்திரநாத் தாகூர் உள்பட ஒருசிலர் மட்டும், தமிழ்நாட்டுக்கு வெளியே வாழ்ந்தவர்கள். இந்தப் புத்தகத்தின் […]

Read more

காந்தி கணக்கு

காந்தி கணக்கு, சூரியன் பதிப்பகம், லியோலேபிள் கட்டடம், இடுவம்பாளையம், திருப்பூர் 641687, விலை 100ரூ. காந்திக் கணக்கு என்னும் இந்த நூல் வ.உ.சி.க்கும் காந்தியடிகளுக்கும் இடையே நடந்த கணக்கு வழக்குப் போராட்டத்தையே விவரிக்கிறது. காந்தியடிகளின் மறுபக்கம் பற்றி பல வினாக்கள் தொடுக்கிறார் நூலாசிரியர் அனிதா கு. கிருஷ்ணமூர்த்தி. வ.உ.சி. வரலாற்று நூலுக்காக தமிழக அரசின் விருது பெற்ற நூலாசிரியர். காந்திக் கணக்கு நூலிலும் பல அரிய தகவல்களை தொகுத்துள்ளார். காமராஜர் நடத்திய இன்சூரன்ஸ் நிறுவனம், காமராஜருக்காக வழக்காடிய வ.உ.சி. காந்தியின் அஸ்தியை தலையில் சுமந்த […]

Read more

தமிழக வரலாற்றில் இருளும் ஒளியும்

தமிழக வரலாற்றில் இருளும் ஒளியும், முனைவர் செல்லன் கோவிந்தன், திருக்குறள் பதிப்பகம், 66, பெரியார் தெரு, எம்.ஜி.ஆர்.நகர், சென்னை 78, பக். 272, விலை 170ரூ. தமிழக வரலாற்றில் இருளும் ஒளியும் என்ற, இந்த நூலினைப் படைத்துள்ள நூலாசிரியர் ஆய்வாளரா என்னும் ஐயம் தோன்றும் அளவிற்கு, இந்த நூலினைப் படைத்திருக்கிறார். சங்க இலக்கியத்தில், மனிதன் இனக் குழுவாக வாழ்ந்த காலத்துப் பாடல் துவங்கி, கி.பி. இரண்டாம் நூற்றாண்டு வரைஉள்ள பாடல்கள் தொகுக்கப்பட்டுள்ளன என்பதை, சங்க இலக்கியத்தைப் படிக்கும் எவரும் எளிதில் அறிந்துகொள்ள முடியும். இந்த […]

Read more

அமெரிக்காவின் ஒபாமாக்களும் இந்தியாவின் தலித்துக்களும்

அமெரிக்காவின் ஒபாமாக்களும் இந்தியாவின் தலித்துக்களும், டி. ஞானையா, அலைகள் பதிப்பகம், 4/9, 4வது மெயின் ரோடு, யுனைடெட் இந்தியா காலனி, கோடம்பாக்கம், சென்னை 24, பக். 405, விலை 250ரூ. நூலாசிரியர் ஞானய்யாவுக்கும், இந்த நூலுக்கும் அணிந்துரை வழங்கிய நீதியரசர்(ஓய்வு) வி. சதுர். கிருஷ்ணய்யருக்கும், வயது 90ஐ தாண்டிவிட்டது. உலக வரலாற்றில் மிகவும் சென்சிடிவான ஒடுக்கப்பட்ட, ஒதுக்கப்பட்ட பிரிவனிர்களின் பரிதாபத்துக்குரிய வாழ்க்கை பற்றியும், அந்த சமூகத்தை முன்னேற்ற பாடுபட்ட தலைவர்களுள், சில முன்னோடிகள் குறித்தும் விரிவாகவும், விலாவாரியாகவும் இந்த நூலை எழுதியிருக்கிறார் டி. ஞானய்யா. […]

Read more

சிலப்பதிகாரமும் செந்தமிழ்க் காப்பியங்களும்

சிலப்பதிகாரமும் செந்தமிழ்க் காப்பியங்களும், க. கண்ணகி, தமிழ் ஐயா வெளியீட்டகம், ஔவைக் கோட்டம், திருவையாறு 613 204, பக். 472, விலை 340ரூ. திருச்செங்கோடு கே.எஸ்.ஆர். கலை அறிவியல் கல்லூரியுடன் இணைந்து, திருவையாறு தமிழ் ஐயா கல்விக் கழகம் 2012 ஜுலை திங்களில் நடத்திய அனைத்துலக அளவிலான காப்பியத் தமிழ் பத்தாவது ஆய்வு மாநாட்டின் கருத்தரங்கத்தில், அறிஞர்களால் வாசிக்கப்பட்ட 95 கட்டுரைகளின் தொகுப்பு நூல். சிலம்பில் சிகரங்கள் என்ற தலைப்பில் முப்பது ஆய்வுக் கட்டுரைகளும், சிலம்பில் புதுமை என்ற தலைப்பில் இருபது ஆய்வுக் கட்டுரைகளும், […]

Read more

ஜெகாந்தன் சிறுகதைகளில் பெண்

ஜெகாந்தன் சிறுகதைகளில் பெண், ந. சுரேஷ்ராஜன், அய்யா நிலையம், ஆரோக்கியா நகர், ஐந்தாம் தெரு, இ.பி. காலனி, நாஞ்சிக்கோட்டைச் சாலை, தஞ்சாவூர் 613006, பக். 224, விலை 175ரூ. சமூகத்தில் எந்த நிலையில் இருந்தபோதிலும் பெண்கள் சிந்திக்கத் தெரிந்தவர்கள் என்பதைத் தனது படைப்புகள் மூலம், அழுத்தமாகப் பதிவு செய்தவர் ஜெயகாந்தன். அவரது கதைகளில் மேல்தட்டுப் பெண்களை விடவும், நடுத்தர மற்றும் விளிம்பு நிலைப் பெண்களே மிகுதியாக இடம் பெற்றுள்ளனர். அப்படிப்பட்ட பெண் பாத்திரங்களை வரிசைப்படுத்தி அவர்களின் குணாதிசயங்களை விளக்கியிருப்பதோடு, தொடர்புடைய கதைகளில் இருந்து ஓரிரு […]

Read more

தூது வந்த வீரர்

தூது வந்த வீரர், ஏம்பல் தஜம்முல் முகம்மது, நியூலைட் புக் சென்டர், 1504ஏ, எம்ஐஜி, 3ம் முதன்மைச்சாலை, மாத்தூர் எம்.எம்.டி.ஏ, சென்னை 68, விலை 200ரூ. 150 ஆண்டுகளுக்கு முன்னர் அண்ணல் முஹம்மது நபி குறித்து, இங்கிலாந்தில் வரலாற்று ஆசிரியரும், ஆங்கில அறிஞருமான தாமஸ் கார்லைல் பேசிய பேச்சுக்கள் அடங்கிய ஆங்கிலநூல், அழகிய எளிய தமிழில், படிப்பவர்கள் அனைவரும் புரிந்து கொள்ளும் வகையில் உபயோகமான குறிப்புகளோடு தூது வந்த வீரர் என்ற மிகச்சிறந்த நூலாக வெளிவந்துள்ளது. இதில் இஸ்லாமும் மேற்கு நாடுகளும் என்ற தலைப்பில் […]

Read more

ஆய்வுக் களஞ்சியம் தொகுதி 1

ஆய்வுக் களஞ்சியம் தொகுதி 1, நிர்மலா மோகன், வானதி பதிப்பகம், சென்னை 17, பக். 208, விலை 110ரூ. கபிலரின் வாழ்வியல் சிந்தனைகள், குறுந்தொகையில் உவமை நயம், கலித்தொகையில் நோக்கு, நற்றிணை நவிலும் கற்பு நெறி, சங்க இலக்கியத்தில் குந்தை, ஊடல் தணிக்கும் வாயிலாக, ஈத்துவக்கும் பெருஞ்சித்திரனார் உள்பட சங்க இலக்கியம் தொடர்பான 16 கட்டுரைகளும், திருக்குறள் உள்பட அற நூல்கள் தொடர்பான 3 கட்டுரைகளும் இந்நூலில் உள்ளன. ஒக்கூர் மாசாத்தியாரின் தனித்திறன் கட்டுரை தமிழ்ப் பெண் கவியின் கற்பனை வளம் உவமை நயம், […]

Read more

பல்லவர் பாண்டியர் அதியர் குடைவரைகள்

பல்லவர் பாண்டியர் அதியர் குடைவரைகள், மு. நளினி, ரா. கலைக்கோவன், சேகர் பதிப்பகம், சென்னை 78, பக். 352, விலை 300ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0001-867-9.html வரலாற்று ஆய்வில் பாறைச் சிற்பங்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. தமிழகத்தின் ஆதி வரலாற்றை அறிய உதவுபவையாக குடைவரைக் கோயில்களும், பாறைகளும், கல்வெட்டுகளும் உள்ளன என்பதற்கு ஆதாரமாக நூலாசிரியர்கள் தங்களது கள ஆய்வுகளைத் தொகுத்து நூலாக்கியுள்ளனர். சிங்கப் பெருமாள் கோயில் குடைவரை கட்டுரையில் பெருமாளைத் தரிசிக்கும் ஆடவர் திருவுருவத்தைக் கூட விட்டுவிடாமல் […]

Read more

நம்மிடையே உலவும் ஆவிகள்

நம்மிடையே உலவும் ஆவிகள், மேகதூதன் பதிப்பகம், 7/13, சின்னப்ப ராவுத்தர் தெரு, திருவல்லிக்கேணி, சென்னை 5, விலை 250ரூ. ஆவிகளுடன் பேசும் நுட்பங்கள், தியான முறைகள், நம் வாழ்வில் ஆவிகள் எப்போதும் நுழையும் என்பது போன்ற தகவல்களைத் தருகிறது இப்புத்தகம். ஆவி மீடியாவான ஜேம்ஸ், வான் பிராக், நேரலை நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று, மக்களின் கேள்விகளுக்கு ஆவிகளிடம் நேரடியாகக் கேட்டு, பதில் பெற்றுத் தந்தது. உலகத் தொலைக்காட்சி வரலாற்றில் அதுவே முதல் முறை. ஆவிகள் குறித்து மக்களிடம் ஏராளமான கேள்விகள் இருக்கின்றன. ஆவிகள் உலகம் […]

Read more
1 68 69 70 71 72 84