நடிப்பு

நடிப்பு (கூடுவிட்டுக் கூடு பாயும் ஒரு பண்டுவம்), மு. இராமசுவாமி, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட், பக். 161, விலை 145ரூ. தமிழ் நவீன நாடகத் துறையில் தவிர்க்க முடியாத பெயர், மு. இராமசுவாமி. தான் அவ்வப்போது, அங்கங்கே எழுதிய சற்றே நீண்ட குறிப்புகளைத் தொகுத்துப் புத்தகமாக்கியிருக்கிறார். வெற்றுக் குறிப்புகள் அல்ல. அத்தனையும் சுவாரசியம்! ஈ.வெ.ரா., தனிநாயக அடிகள் போன்ற ஆளுமைகளைப் பற்றிய சித்திரங்கள், நாடகம் தொடர்பான வரலாறு- நடப்புப் போக்குகள், நாடக ஆக்கம் பற்றிய அனுபவங்கள், தொட்டுக்கொள்ள கொஞ்சம் சினிமா […]

Read more

ஜெபம் பண்ண வேண்டிய விதமாவது

ஜெபம் பண்ண வேண்டிய விதமாவது, வி.செ. இம்மானியேல், விலை 150ரூ. ஜெபம் என்றால் என்ன? ஜெபம் அவசியம்தானா? ஜெபம் என்னவெல்லாம் செய்யும்? யாரை நோக்கி யார் வழியாக ஜெபிக்க வேண்டும் என்பதை எல்லாம் ஜெபிக்க வேண்டும் என்பதை எல்லாம் விளக்கும் நூல். கிறிஸ்தவ மக்களுக்கு சிறந்த வழிகாட்டி. நன்றி: தினத்தந்தி, 9/3/2016.   —- பாரதிதாசன் தமிழ் முழக்கம், பாவேந்தர் பாரதிதாசன், முல்லை பதிப்பகம், விலை 25ரூ. “தமிழுக்கு வாழ்வதே வாழ்வாகும்” என்று பாடும் அளவுக்கு ஆழமாகச் சென்றவர் பாவேந்தர் பாரதிதாசன். அவரது நூல்களிலிருந்து […]

Read more

தாயும் ஆனவன்

தாயும் ஆனவன், சுசீலா, ஜீஜீ எண்டர்பிரைசஸ், விலை 120ரூ. சிவாஜிகணேசனும், எம்.ஆர்.ராதாவும் இணைந்து நடித்த “பாகப்பிரிவினை” , “பாவமன்னிப்பு” ஆகிய திரைப்படங்களை யாரும் மறந்திருக்க முடியாது. அதில் வரும் வசனங்கள், ரசிகர்களின் செவிகளில் இன்னும் ஒலித்துக்கொண்டிருக்கின்றன. இந்தப் படங்களுக்கு வசனம் எழுதியவர் சோலைமலை. அவருடைய மகள் சுசீலா சோலைமலைதான் இந்தப் புத்தகத்தின் ஆசிரியர். இப்புத்கத்தில் தாயும் ஆனவன், பந்தயம், காரடையான் நோன்பு, ஏய் என்ற நான்கு குறு நாவல்கள் இடம் பெற்றுள்ளன. பெரும்பாலும் உரையாடல்கள் மூலமே கதையை நகர்த்திச் செல்கிறார் சுசீலா. படிக்கும்போது, அவருடைய […]

Read more

சொலவடைகளும் சொன்னவர்களும்

சொலவடைகளும் சொன்னவர்களும், ச. மாடசாமி, சூரியன் பதிப்பகம், பக். 272, விலை 200ரூ. ஏழ்மையின் செல்வாக்கு! To buy this Tamil book online: http://www.nhm.in/shop/1000000024759.html பழமொழி என்ற சொல், சொலவடை என, புதுக்கப்பட்டது. நம் பண்பாட்டின் நிலைக்களனாய் உள்ள கிராமங்களில், உழைக்கும் மக்களிடமிருந்து உருவாகும், உன்னத அனுபவங்களில் இருந்து, பட்டை தீட்டப்பட்ட வைர வரிகளே, இந்த சொலவடைகள். வாழ்வியல் அனுபவம், கவித்துவம், நக்கல் மூன்றும் கலந்து இதில் மிளிர்கிறது. நாட்டுப்புற இலக்கியமாய் தெம்மாங்கு, பள்ளு, கும்மி, லாவணி ஏடுகளில் பதிவாகி உள்ளன. வீட்டுப்புற […]

Read more

அப்துல்கலாம் பொன்மொழிகள்

அப்துல்கலாம் பொன்மொழிகள், தொகுப்பு ச.குமார், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், விலை 75ரூ. தமிழகத்தில் பிறந்து இந்தியனாக வளர்ந்து உலக விஞ்ஞானிகளுள் ஒருவராகத் திகழ்ந்த நமது பாரத நாட்டின் ‘பாரத ரத்னா’ என்ற உயரிய விருது பெற்ற எளிமையான மாமனிதர் டாக்டர் ஏ.பி.ஜெ. அப்துல் கலாமின் வாழ்க்கைச் சுருக்கத்தையும், அவரின் பொன்மொழிகளையும் தொகுத்து அளித்திருக்கிறார் ச. குமார். அவருடைய பல நூல்களின் சாரத்தை இந்த ஒரே நூலில் அறிய முடிகிறது. மாணவ-மாணவிகள் அவசியம் படிக்க வேண்டிய புத்தகம். நன்றி: தினத்தந்தி, 17/2/2016.   —- […]

Read more

அறம் பொருள் இன்பம்

அறம் பொருள் இன்பம், சாரு நிவேதிதா, அந்திமழை, விலை 200ரூ. மனதில் பட்டத்தை துணிச்சலாக எழுதும் எழுத்தாளர் சாரு நிவேதிதா. அவர் ஒரு பத்திரிகையில் எழுதிய கேள்வி – பதில் புத்தகமாக வெளிவந்துள்ளது. அரசியல், சினிமா, இலக்கியம், கடவுள், மதுவிலக்கு… இப்படி சகலவிதமான விஷயங்களையும் அலசி இருக்கிறார். சில பதில்கள் சிந்திக்க வைக்கின்றன. சில சிரிக்க வைக்கின்றன. ஒரு ஜோசியர் பற்றி அவர் எழுதியிருப்பதாவது: “ஒருமுறை அவர் இந்திரா காந்திக்கு ஜோதிடம் பார்த்திருக்கிறார். நீங்கள் கொல்லப்படுவீர்கள் என்று சொல்லி இருக்கிறார். அதற்கு இந்திரா காந்தி […]

Read more

மார்கஸ் எங்கல்ஸ் பேசுகிறார்கள்

மார்கஸ் எங்கல்ஸ் பேசுகிறார்கள், எஸ்.தோதாத்திரி, பாவை பப்ளிகேஷன்ஸ், பக். 82, விலை 50ரூ. கார்ல் மார்க்ஸ், எங்கல்ஸ் ஆகியோரின் மூல நூல்கள் தற்போது கிடைப்பது அரிதாகிவிட்டது. ஆனால் மார்க்சியத்தை விளக்கும் நூல்கள் தாராளமாகக் கிடைக்கின்றன. மார்க்சிகயத்தைப் பற்றி பிறர் எழுதிய நூல்களில் இருந்து மார்க்சியத்தை விளக்காமல், மார்க்சின் மூல நூல்களிலிருந்து மார்க்சியத்தை விளக்கினால் என்ன? என்ற எண்ணத்தின் விளைவாக இந்நூல் உருவாகியுள்ளது. இந்நூலில் ஒன்பது கட்டுரைகள் அடங்கியுள்ளன. மார்க்சின் தத்துவம், அரசியல், பொருளாதாரக் கருத்துகளை சுருக்கமாகவும், தெளிவாகவும் இக்கட்டுரைகள் விளக்குகின்றன. ‘கற்பனாவாத சோஷலிசமும் விஞ்ஞான […]

Read more

தடம் பதித்த தலைவர்கள்

தடம் பதித்த தலைவர்கள், எஸ்.பி.எழிலழகன், சுரா பதிப்பகம், விலை 250ரூ.‘ மகாத்மா காந்தியடிகள், அண்ணல் அம்பேத்கர், தந்தை பெரியார், காமராஜர், அண்ணா, ராஜாஜி போன்ற தலைவர்கள், அறிஞர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள் பற்றி தமிழ அரசின் செய்தி மக்கள் தொடர்புத் துறையில் கூடுதல் இயக்குநராகப் பணியாற்றும் எஸ்.பி. எழிலழகன் எழுதியுள்ள நூல். இந்தத் தலைவர்களின் வரலாற்றுக் குறிப்புகளோடு நின்று விடாமல் அவர்களின் நினைவைப் போற்றும் வகையில் தமிழக அரசு எழுப்பியுள்ள நினைவகங்கள் குறித்தும், சிலைகள் பற்றியும் கூறி இருப்பது நூலின் சிறப்பு அம்சமாகும். இந்த […]

Read more

கற்றோர் போற்றுங்கள்

கற்றோர் போற்றுங்கள், ஆர்.பி. சங்கரன், கண்ணதாசன் வெளியீடு, பக். 228, விலை 120ரூ. கவியரசர் கண்ணதாசன் வாழ்ந்த காலத்திலும் மறைந்த காலத்திலும் அவரைப் பற்றிய அவரோடு பழகிய பெருமக்கள், பல்வேறு இதழ்களில் வடித்த எண்ணங்களின் தொகுப்பு. -இரா. மணிகண்டன். நன்றி: குமுதம், 22/2/2016.   —- வயிறு மட்டும் வாழ்க்கையல்ல, கவிஞர் ஏகலைவன், வாசகன் பதிப்பகம், பக். 128, விலை 70ரூ. வெற்றிக்கான நம்பிக்கையூட்டும் கட்டுரைகளின் தொகுப்பு. -இரா. மணிகண்டன். நன்றி: குமுதம், 22/2/2016.

Read more

தாகூரின் வாழ்வியல் சிந்தனைகள்

தாகூரின் வாழ்வியல் சிந்தனைகள், எஸ். ஜெகத் ரட்சகன், ஆழ்வார்கள் ஆய்வு மையம், பக். 200, விலை 130ரூ. தேசியக் கவிஞர் தாகூரின் சிந்தனைகளில் இருந்து மணிமணியானவற்றை பொறுக்கி எடுத்து தொகுத்துள்ள நூல். படிக்க சுவாரஸ்யம். -இரா. மணிகண்டன். நன்றி: குமுதம், 22/2/2016.   —- நமது சங்கீத வித்துவான்கள், திருக்குடந்தை பதிப்பகம், விலை 100ரூ. எம்.எஸ். சுப்புலட்சுமி, ஜி.என். பாலசுப்பிரமணியம், டி.கே. பட்டம்மாள், அரியகுடி ராமானுஜ அய்யங்கார், வீணை எஸ். பாலசந்தர், என்.சி. வசந்தகோகிலம், எம்.எம். தண்டபாணி தேசிகர் உள்பட 17 சங்கீத வித்துவான்கள் […]

Read more
1 25 26 27 28 29 63