கணினியின் அடிப்படை

கணினியின் அடிப்படை, ஜெ. வீரநாதன், வெளியிட்டோர்: பாலாஜி கணினி வரைகலைப் பயிலகம், 167, போலீஸ் கந்தசாமி வீதி, ஒலம்பஸ், இராமநாதபுரம், கோயம்புத்தூர் – 641045. விலை ரூ. 123   கணினி நமது அடிப்படைத் தேவைகளின் ஒன்றாக மாறிவிட்டது. அதன் அடிப்படைகளைத் தெரிந்துகொண்டால் வயது வித்தியாசம் இல்லாமல் அனைவராலும் இதனை கையாளமுடியும். அறிமுக நிலையில் இருக்கும் அனைவருக்கும் ஏற்படும் சந்தேகங்களை 31 தலைப்புகளில் புரியும்படி விளக்கப்படங்களுடன் ஆசிரியர் விளக்கியுள்ளார். விண்டோஸின் சமீபத்திய பதிப்பான, பதிப்பு 7-ஐ மையமாக வைத்து புத்தகத்தை எழுதியுள்ளார். கணினி மட்டுமல்லாமல் அதனுடன் […]

Read more

சோதனைகளை சாதனைகளாக மாற்றுவது எப்படி?

சோதனைகளை சாதனைகளாக மாற்றுவது எப்படி?, லோகநாயகி, குமுதம் பு(து)த்தகம், 306, புரசைவாக்கம் நெடுஞ்சாலை, சென்னை – 10. பக். 224, விலை ரூ. 130 குமுதம் சிநேகிதி ஆசிரியர் லோகநாயகி, சிநேகிதிகளின் கேள்விகளுக்கு அளித்த பதில்களின் தொகுப்பே இந்நூல். கேள்விகளுக்கான பதில்கள்தான் என்றாலும், பதில்களில் உங்களுக்குக் கிடைக்கும் செய்திகள் ஏராளம். அறிவியல், ஆன்மிகம், குடும்ப உறவுகள், ஆண்-பெண் மன இயல்புகள், பயணம் குறித்த அனுபவங்கள், வரலாற்றுச் சான்றுகள், சினிமா உள்ளிட்ட நாட்டு நடப்புகள், அரசியல் விமர்சனங்கள் என்று தகவல் பெட்டகமாக விளங்குகிறது. பெண்கள் முன்னேற்றம், தன்னம்பிக்கை, சோதனைகளை சாதனைகளாக […]

Read more

நாம் இந்தியர்கள்! பெருமிதம் கொள்வோம்!

நாம் இந்தியர்கள்! பெருமிதம் கொள்வோம்!, தொகுப்பாசிரியர்: ப. இலட்சுமணன், மாதவ் பப்ளிகேஷன்ஸ், டி-3, வசந்தம் அபார்ட்மென்ட், 1/338, சபரி சாலை, மடிப்பாக்கம், சென்னை – 91. விலை ரூ. 60   உலகின் பழம் பெருமை மிக்க நாடுகளில் இந்தியா முன்னோடியானது என்பதற்கு உரிய ஆதாரபூர்வமான தகவல்கள் சுருக்கமாகவும், சுவையாகவும் இந்நூலில் தொகுக்கப்பட்டுள்ளன. பல நாடுகளில் மக்கள் காட்டுமிராண்டிகளாக வாழ்ந்தபோது, இந்தியா சிறப்பான கலாசாரம், பண்பாடு கொண்ட மக்களாக மட்டுமல்லாமல், அறிவியல், அரசியல், ஆன்மீகம், இலக்கியம், தத்துவம், மருத்துவம், கல்வி, பொறியியல், வானவியல், கட்டடவியல்… […]

Read more

வள்ளுவரின் வித்தியாசமான பார்வைகள்

ஆலந்தூர் கோ.மோகனரங்கன் கவிதைகள், ஆலந்தூர் கோ.மோகனரங்கன், வசந்தா பதிப்பகம், ஆதம்பாக்கம், சென்னை – 88. விலை ரூ. 170 எளிமையான கவிதைகளுக்குப் பெயர் பெற்றவரான ஆலந்தூர் கோ.மோகனரங்கன், பள்ளிகளில் தமிழ்ப்பாட நூல்களின் வாயிலாக அறிமுகமானவர். அவரது தொகுப்பின் நான்காம் பாகம் இது. எளிமையும் இனிமையும் கலந்த இவரது கவிதைகள் இதுவரை இதுபோன்ற பெரிய தொகுப்பாக வந்ததில்லை என்பது குறிப்பிட வேண்டியது.   —   வள்ளுவரின் வித்தியாசமான பார்வைகள், கலியராஜன், மணிமேகலைப் பிரசுரம், சென்னை, விலை ரூ. 100 திருக்குறளில் கூறப்பட்டுள்ள கருத்துகளை நுட்பமாக […]

Read more

கனவு ஆசிரியர்

கனவு ஆசிரியர், தொகுப்பாசிரியர்: க. துளசிதாசன், புக்ஸ் ஃபார் சில்ட்ரன், பாரதி புத்தகாலயம், 421, அண்ணாசாலை, தேனாம்பேட்டை, சென்னை – 18, விலை ரூ. 90. ‘உங்கள் வாழ்க்கையில் யார் மிக முக்கியமான வழிகாட்டி என நினைக்கிறீர்கள்?’ என்று, வர்த்தக இதழ் ஒன்று பெரிய தொழில் அதிபர்கள் எட்டுப் பேரிடம் கேட்டது. அதில் ஆறு பேர், தங்களது பள்ளிக்கூட ஆசிரியர்கள் என்று சொன்னார்கள். எல்லாக் குழந்தைகளுக்கும் முதல் ஹீரோ, அவர்களது ஆசிரியர்கள்தான். நல்லதும் கெட்டதுமான பல நடவடிக்கைகள் பள்ளியில் இருந்துதான் தொடங்குகின்றன என்பதால், அதற்குக் […]

Read more

விதைகள்

விதைகள், தொகுப்பு நூல், வெளியீடு: பூவுலகின் நண்பர்கள், ஏ2, அலங்கார் பிளாசா, 425, கீழ்ப்பாக்கம் கார்டன் சாலை, கீழ்ப்பாக்கம், சென்னை – 10, விலை 70 ரூ. இந்திய விவசாயத்தின் பேரழிவு பசுமைப் புரட்சிக்குப் பின் துவங்குகிறது. நவீன வேளாண்மை முறையும் உரங்களும் பூச்சிக்கொல்லி மருந்துகளும் அதிகபட்ச உற்பத்தி என்ற மாயவலையின் மூலம் நமது இயற்கையான வேளாண் ஆதாரங்களை நிர்மூலமாக்கிவிட்டன. அகில உலக தாவர மரபியற் வளங்களுக்கான அமைப்பின் கீழ், பல்வேறு நாடுகள் மரபுக்கூறு வங்கிகளை அமைக்கின்றன. அவை அந்த நாடுகளிலிருந்து உயிர் ஆதாரங்கள் […]

Read more

டாக்டர் மு.வ.வின் தனிப்பெரும் மாட்சி

டாக்டர் மு.வ.வின் தனிப்பெரும் மாட்சி, கவிவேந்தர் கா. வேழவேந்தன், கீதை பதிப்பகம், பக்கம் 184, விலை 100 ரூ இலக்கியம் தோய்ந்த கவிஞராகவும், அரசியல் துறை சார்ந்த நெறியாளராகவும், நல்ல வழக்கறிஞராகவும், மானடத்தை நேசிக்கும் மாண்பாளராகவும் உலா வருகின்ற கவிவேந்தர் டாக்டர். மு.வ., எனத் துவங்கி, ‘டாக்டர் மு.வ., அவர்களும் நானும்’ என 30 கட்டுரைகளோடு நிறைவு செய்துள்ளார் வேழவேந்தன். மாண்பு என, பல கட்டுரைகளில் நூலாசிரியர் அழகாய் பதிவு செய்துள்ளார். பேராசிரியரது படைப்புகளில் செந்தாமரை, கள்ளோவியமோ, அந்த நாள், கரித்துண்டு, கயமை, அகல்விளக்கு, […]

Read more

கால வரிசையில் பாரதி பாடல்கள்

கால வரிசையில் பாரதி பாடல்கள், பதிப்பாசிரியர் – சீனி. விசுவநாதன், விலை 650ரூ., வெளியீடு – சீனி. விசுவநாதன், 2, மாடல் ஹவுஸ் லேன், சி.ஐ.டி. நகர், சென்னை 35. மகாகவி பாரதி மீது தீராத பக்தி பூண்டு, பாரதியின் படைப்புகள் அனைத்தையும் தேடிப் பிடித்து ஒருங்கிணைக்கும் பணியில் தன்னை அர்ப்பணித்துக் கொண்டவர் இந்நூலின் படைப்பாசிரியர். இவரது கடின உழைப்பை பாரதியின் உடன்பிறந்த தம்பி சி.விசுவநாதனும், கவிஞர் கண்ணாதசனுமே வியந்து பாராட்டியுள்ளனர். அதன்படி பாரதியின் படைப்புகள் அனைத்தையும் காலவரிசையில் தனித் தனியாகத் தொகுத்து, அவற்றை […]

Read more

எதிர்ச்சொல்

எதிர்ச்சொல், பாரதி தம்பி, புலம், சென்னை 14, பக்கங்கள் 120, விலை 70ரூ. “உண்மையான போராட்டம் என்பது தன்னிலிருந்தே தொடங்குகிறது. தன் சொந்த முரண்பாடுகள் ஒன்றுடன் ஒன்று முட்டிக் கொண்டு ஒரு இக்கட்டுக்கு வரும்போது மனம் போராட்டத்தை நிகழ்த்துகிறது. … சமூக அநீதிகளுக்கு எதிரான ஒரு போராளி இவ்விதம் தன்னிலிருந்துதான் உருவாக முடியும் … நமது சமூக அமைப்பில் போராடிக் கொண்டிருப்பது ஒன்றுதான் நேர்மையாக வாழ்வதற்கான வழி. அமைதியாக வாழ்வது என்றால் அனைத்தையும் சகித்துக் கொண்டு அடிமையாக வாழ்வது என்று அர்த்தம்.” மேற்கண்ட வார்த்தைகளுடன்தான் […]

Read more

மயிலிறகு மனசு

மயிலிறகு மனசு – தமிழச்சி தங்கபாண்டியன்; பக். 79; ரூ.80; விகடன் பிரசுரம், சென்னை-02 நெருக்கமான நண்பர்களிடத்தில் நாம் கொண்டிருக்கும் நட்பின் பிரதிபலிப்புகளை உளவியல் நோக்கோடு ஆராயும் நூல். பள்ளித்தோழி, வீட்டு வேலை செய்பவர், திரைப்பட நடிகை, மருத்துவர், சிந்தனையாளர், கவிஞர் போன்றோருடனான நட்பின் பிணைப்புகளை ஆசிரியர் தருகிறார். இனிமையான நினைவுகள் என்பவை எப்போதுமே மனதில் நிலைத்து நிற்பவை. நெருக்கமான சிலரைப் பற்றி நினைவுகள் மனதில் தோன்றினாலே அவை மகிழ்ச்சியை ஏற்படுத்தும். அந்த அடிப்படையில், கைவினைக் கலைஞர் ராதிகா, திரைப்பட நடிகை ரோகிணி, கவிஞர் […]

Read more
1 60 61 62 63