தமிழக வரலாற்றுத் தடயங்கள்

தமிழக வரலாற்றுத் தடயங்கள், நடன. காசிநாதன், அருள் பதிப்பகம், சென்னை, பக்கங்கள் 100, விலை 125ரூ. சோழர் செப்பேடுகள், நடன. காசிநாதன், சேகர் பதிப்பகம், சென்னை, பக்கங்கள் 144,விலை 300ரூ. இந்நூல்களில் ஆசிரியர் நடன. காசிநாதன் மேனாள் தொல்லியல் துறை இயக்குனர். ஆகையால் இந்நூல்களில் காணப்படும் விவரங்கள் முழுமையான அதிகார பூர்வமானவை. முதல் நூலில் ஆசிரியர், அண்மைக் காலங்களில் கிடைத்த சில புதிய முக்கியச் சான்றுகளை, பழைய சான்றுகளுடன் தொகுத்து அளித்துள்ளார். இவற்றில் முக்கியமாகக் கருதப்படும், பெரம்பலுர் சான்றுகளின் விவரங்கள் ஆய்வாளர்களுக்குப் பயனுள்ளதானவையாக இருக்கும். […]

Read more

ஒரு கொத்து அகம்

ஒரு கொத்து அகம், நீலமணி, திலகம் பதிப்பகம், 17இ, பி1, குமரன் குடியிருப்பு, கே.கே. பொன்னுரங்கம் சாலை, ஓம் சக்தி நகர், வளசரவாக்கம், சென்னை 87, பக்கங்கள் 222, விலை 110ரூ. சங்க இலக்கிய நூல்களில் புறம் போரின் வீரக்கதைகளை விவரிக்கும் என்பதும், அகம் தமிழரின் காதல் வாழ்வை கவிநயம் சொட்டச் சொட்ட விவரிக்கும் என்பதும் அனைவரும் அறிந்ததே. பாண்டியன் உக்கிரப் பெருவழுதியின் ஆதரவுடன் உப்பூரி குடிகிழார் மகனார் உருத்திரசன்மர் தொகுத்த அகநானூறு நூலில் இருநூறு பாடல்களைத் தேர்ந்தெடுத்துக் கொண்டு, ஒரு புது முயற்சியாக […]

Read more

பாரதப் பிரதமர்கள்(அன்று முதல் இன்றுவரை)

பாரதப் பிரதமர்கள்(அன்று முதல் இன்றுவரை), குன்றில் குமார், அழகு பதிப்பகம், 15/21, டீச்சர்ஸ் கில்டு காலனி, 2வது தெரு, ராஜாஜி நகர் விரிவு, வில்லிவாக்கம், சென்னை 49, பக்கங்கள் 232, விலை 120ரூ. இந்தியத் திருநாடு விடுதலை பெற்றது முதல், இன்றுவரை 14 பிரதமர்களை கண்டுள்ளது. அவர்களின் அரசியல் மற்றும் ஆட்சிப் பணிகள் குறித்து, இந்நூல் மிக விரிவாகக் கூறுகிறது. இந்தியாவின் முதல் பிரதமர் நேரு, இத்தாலி நாட்டின் சர்வாதிகாரி முசோலினியின் அழைப்பை ஏற்காத காரணம் (பக்க. 33), நேரு இந்திரா என்று பெயர் […]

Read more

தேவி பாகவதம்

தேவி பாகவதம், குருபிரியா, கடலங்குடி பப்ளிகேஷன்ஸ், 38, நடேச அய்யர் தெரு, தி.நகர், சென்னை 17, விலை 100ரூ. புராணங்களில் இருந்தும், இதிகாசங்களில் இருந்தும், சுவையான சம்பவங்களை தொகுத்துக் கொடுத்துள்ளார் ஆசிரியர் குருபிரியா. மகாவிஷ்ணுவுக்கு மகாலட்சுமி அளித்த சாபம், புதன் யாருடைய மகன், வியாசர் தோற்றம், பீஷ்மரின் சபதம், பாண்டவர் வரலாறு, கிருஷ்ணாவதாரம் உள்பட 35 நிகழ்ச்சிகள் இடம்பெற்றுள்ளன.   —-   நான்+நான்=நாம், வந்தனா அலமேலு, நக்கீரன், 105, ஜானிஜான்கான் ரோடு, சென்னை 14, விலை 60ரூ. ஆண், பெண் பழகும்போது ஏற்படும் […]

Read more

சுற்றுச்சூழல் சிந்தனைகள்

சுற்றுச்சூழல் சிந்தனைகள், ஜே.ஜோபிரகாஷ், ரேவதி பதிப்பகம், 19, ராஜசேகரன் தெரு, மைலாப்பூர், சென்னை 4, விலை 225ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0001-023-8.html சுற்றுச்சூழல் தூய்மையாக இருக்கவேண்டிய அவசியத்தை வலியுறுத்தும் கட்டுரைகள் கொண்ட புத்தகம். மரங்களை வளர்க்க வேண்டிய அவசியம், பிளாஸ்டிக் பொருள்களால் ஏற்படும் பிரச்சினைகள், முல்லைப் பெரியாறு விவகாரம்… இப்படிப் பல்வேறு விஷயங்களையும் அலசி ஆராய்கிறார் நூலாசிரியர் ஜே.ஜோபிரகாஷ். முக்கியமாக இளைய தலைமுறையினர் அவசியம் படிக்க வேண்டிய புத்தகம்.   —-   விண்வெளியின் வியப்பூட்டும் செய்திகள், […]

Read more

அருள்மிகு கருப்பசாமி ஒரு நடமாடும் தெய்வம்

அருள்மிகு கருப்பசாமி ஒரு நடமாடும் தெய்வம், தவத்திரு சுவாமி ஓங்காரநந்தா, ஓங்காரம், எம் 14/2, கிழக்கு அவென்யூ, கொரட்டூர், சென்னை 80, பக்கங்கள் 1848, விலை 1500ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0001-014-6.html அருள்மிகு கருப்பசாமி, தமிழ்நாட்டின் புகழ்மிக்க காவல்தெய்வம் என்பதோடு, கோடிக்கணக்கான குடும்பங்களுக்கு முக்கிய குல தெய்வமாகவும் திகழ்வது உண்மை. நாடெங்கிலும் உள்ள கருப்பனார் கோவில்கள் பற்றிய விவரங்களையும், வழிபாட்டுச் சிறப்புகளையும் மந்திர, தந்திர, யந்திரங்களோடு எண்ணற்ற துதிப்பாடல்களையும், புராண வரலாற்று ஆதாரங்கள் மற்றும் கர்ண பரம்பரைச் […]

Read more

மாலிக் காபூர்

மாலிக் காபூர், செ. திவான், விகடன் பிரசுரம், 757, அண்ணாசாலை, சென்னை 2, விலை 70ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0001-020-8.html டெல்லியை ஆண்ட அலாவுதீன் கில்ஜியின் அடிமை அரசன்தான் மாலிக் காபூர். கொடூரனாக, தென்னாட்டைக் கொள்ளையடித்தவனாக வரலாற்று ஆசிரியர்கள் பலர் எழுதியுள்ளனர். மாலிக்காபூரை மாறுபட்ட கோணத்தில் படம் பிடித்துக் காட்டுகிறார் வரலாற்று ஆராய்ச்சியாளர் செ. திவான். மாலிக்காபூரின் போர் திறனையும் ஆட்சித் திறனையும், பல்வேறு அரசியல் சதிகளில் இருந்து மீண்டு வந்ததையும், பல்வேறு ஆதாரங்களைச் சுட்டிக்காட்டி விவரிக்கிறார். தன்னுடைய […]

Read more

பாவேந்தர் பாரதிதாசன் கவிதைகள் (நான்கு தொகுதிகள்)

பாவேந்தர் பாரதிதாசன் கவிதைகள் (நான்கு தொகுதிகள்), பூம்புகார் பதிப்பகம், 127, பிரகாசம் சாலை, பிராட்வே, சென்னை 108, முதல் தொகுதி 240ரூ, இரண்டாம் தொகுதி 280ரூ, மூன்றாம் தொகுதி 290ரூ, நான்காம் தொகுதி 260ரூ. தமிழர்களின் உள்ளத்தில் மொழியுணர்வு என்ற விழிப்புணர்வுக்கு வித்திட்டவர் பாவேந்தர் பாரதிதாசன், காலத்தால் அழிக்க முடியாத அவரது கவிதைகளை, இளம் தலைமுறையினருக்கு அவர் விட்டுச் சென்ற சொத்தாகவே கருதலாம். தமிழ் அழியுமானால் தமிழர் அழிவர் என வீராவேசமாக அவர் முழங்கிய பாக்கள், படித்தவர்களின் மனதில் உணர்ச்சிகளை தூண்டின. இந்த புரட்சி […]

Read more

பாம்பன் சுவாமிகள் மனித மேம்பாட்டுச் சிந்தனைகள்

பாம்பன் சுவாமிகள் மனித மேம்பாட்டுச் சிந்தனைகள், முனைவர் கோமதி சூரிய மூர்த்தி, திருவேரகம், 117, 86வது தெரு, முதல் அவென்யூ, (வடக்கு) அசோக் நகர், சென்னை 600083, பக்கங்கள் 134. முருகனையே முழுதும் வாழ்வில் பற்றாக்கொண்டு 6666 பாடல்கள் பாடி அருளியவர் பாம்பன் சுவாமிகள். இவரது அருட்பாடல்களில், மனிதனை வாழ்வில் உயர்த்தும் பல்வேறு சிந்தனைகள் பரவிக் கிடக்கின்றன. குருவி, நெல்மணிகளை தேடித்திரட்டுவதுபோல் இந்நூல், ஆசிரியர் சிந்தனை முத்துக்களைத் தேடித் தொகுத்துள்ளார். திருக்குறள், திருமந்திரம், தேவாரம், திருப்புகழ், தாயுமானவர் பாடல்களோடு பாம்பனார் பாடல்களை இணைத்து நவமணி […]

Read more

ஓநாய் குலச்சின்னம்

ஓநாய் குலச்சின்னம், ஜியாங் ரோங், தமிழில் சி. மோகன், அதிர்வு பதிப்பகம், 38, இரண்டாவது தெரு, இராமலிங்க நகர், விருகம்பாக்கம், சென்னை 93, பக்கங்கள் 672, விலை 500ரூ. சீனாவில் நடந்த கலாசாரப் புரட்சியை மட்டுமே நாம் அறிவோம். அதன் தொடர்ச்சியாகத் தொன்மை வாய்ந்த மங்கோலிய மேய்ச்சல் புல் நிலம் என்ன ஆனது என்பதன் வரலாற்றுப் புனைவே இந்த நாவல். மங்கோலிய மேய்ச்சல்காரர்களுக்குப் புல்தான்… நாய், ஆடு, மாடு, குதிரைகளைவிடப் பெரிய உயிர். இரக்கத்துக்கு உரிய உயிர். புல்லை மேயும் மான்கள் அவர்களைப் பொறுத்தவரையில் […]

Read more
1 801 802 803 804 805 841