காந்தி கணக்கு

காந்தி கணக்கு, சூரியன் பதிப்பகம், லியோலேபிள் கட்டடம், இடுவம்பாளையம், திருப்பூர் 641687, விலை 100ரூ. காந்திக் கணக்கு என்னும் இந்த நூல் வ.உ.சி.க்கும் காந்தியடிகளுக்கும் இடையே நடந்த கணக்கு வழக்குப் போராட்டத்தையே விவரிக்கிறது. காந்தியடிகளின் மறுபக்கம் பற்றி பல வினாக்கள் தொடுக்கிறார் நூலாசிரியர் அனிதா கு. கிருஷ்ணமூர்த்தி. வ.உ.சி. வரலாற்று நூலுக்காக தமிழக அரசின் விருது பெற்ற நூலாசிரியர். காந்திக் கணக்கு நூலிலும் பல அரிய தகவல்களை தொகுத்துள்ளார். காமராஜர் நடத்திய இன்சூரன்ஸ் நிறுவனம், காமராஜருக்காக வழக்காடிய வ.உ.சி. காந்தியின் அஸ்தியை தலையில் சுமந்த […]

Read more

தமிழக வரலாற்றில் இருளும் ஒளியும்

தமிழக வரலாற்றில் இருளும் ஒளியும், முனைவர் செல்லன் கோவிந்தன், திருக்குறள் பதிப்பகம், 66, பெரியார் தெரு, எம்.ஜி.ஆர்.நகர், சென்னை 78, பக். 272, விலை 170ரூ. தமிழக வரலாற்றில் இருளும் ஒளியும் என்ற, இந்த நூலினைப் படைத்துள்ள நூலாசிரியர் ஆய்வாளரா என்னும் ஐயம் தோன்றும் அளவிற்கு, இந்த நூலினைப் படைத்திருக்கிறார். சங்க இலக்கியத்தில், மனிதன் இனக் குழுவாக வாழ்ந்த காலத்துப் பாடல் துவங்கி, கி.பி. இரண்டாம் நூற்றாண்டு வரைஉள்ள பாடல்கள் தொகுக்கப்பட்டுள்ளன என்பதை, சங்க இலக்கியத்தைப் படிக்கும் எவரும் எளிதில் அறிந்துகொள்ள முடியும். இந்த […]

Read more

அமெரிக்காவின் ஒபாமாக்களும் இந்தியாவின் தலித்துக்களும்

அமெரிக்காவின் ஒபாமாக்களும் இந்தியாவின் தலித்துக்களும், டி. ஞானையா, அலைகள் பதிப்பகம், 4/9, 4வது மெயின் ரோடு, யுனைடெட் இந்தியா காலனி, கோடம்பாக்கம், சென்னை 24, பக். 405, விலை 250ரூ. நூலாசிரியர் ஞானய்யாவுக்கும், இந்த நூலுக்கும் அணிந்துரை வழங்கிய நீதியரசர்(ஓய்வு) வி. சதுர். கிருஷ்ணய்யருக்கும், வயது 90ஐ தாண்டிவிட்டது. உலக வரலாற்றில் மிகவும் சென்சிடிவான ஒடுக்கப்பட்ட, ஒதுக்கப்பட்ட பிரிவனிர்களின் பரிதாபத்துக்குரிய வாழ்க்கை பற்றியும், அந்த சமூகத்தை முன்னேற்ற பாடுபட்ட தலைவர்களுள், சில முன்னோடிகள் குறித்தும் விரிவாகவும், விலாவாரியாகவும் இந்த நூலை எழுதியிருக்கிறார் டி. ஞானய்யா. […]

Read more

சாலப்பரிந்து

சாலப்பரிந்து, நாஞ்சில் நாடன், க. மோகன ரங்கன் (காலச்சுவடு நவீனத் தமிழ் கிளாசிக் சிறுகதை வரிசை), காலச்சுவடு பதிப்பகம், 669, கே.பி. சாலை, நாகர்கோவில் 629001, பக். 238, விலை 190ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0000-797-3.html இலக்கிய தரமான சிறுகதைகளையும், நாவல்களையும் எழுதியுள்ள நாஞ்சில் நாடன், சாகித்ய அகடமி விருதாளர், ஒரு நோக்கத்தோடு பேனாவைப் பிடித்திருக்கும், இவருடைய படைப்பகக்களில் சமுதாயம் பற்றிய பிரக்ஞை சற்று அதிகமாக இருக்கும். வீட்டுக்கும் வெளியே அவருக்கு கிடைத்த அனுபவங்கள், வாசகர்களுக்கு இலக்கியமாக […]

Read more

சைவ சமயக் கலைக் களஞ்சியம் தொகுதி 6

சைவ சமயக் கலைக் களஞ்சியம் தொகுதி 6, முனைவர் ஆர். செல்வக்கணபதி, தெய்வச் சேக்கிழார் மனிதவள மேம்பாட்டு அறக்கட்டளை, பக். 696, விலை 10 தொகுதிகளுக்கும் சேர்த்து ரூ. 15,000. சைவ சமயக் கலைக் களஞ்சியம் ஆறாம் தொகுதியான சைவ சமய அருளாளர்கள் எனும் இப்பெருநூல் பற்பல சான்றோர்களின் எண்ணக்களஞ்சியம். ஆசிரியர் செல்வக்கணபதியின் பத்தாண்டு கால உழைப்பில் உருவான வண்ணக் களஞ்சியம். சைவ சமயம் தமிழகம் எனும் முதல் தொகுதியில் தொடங்கிய தோரணவாயில் எனும் பத்தாம் தொகதியாக நிறைவு பெறும் இத்தொகுப்பின் ஆறாம் தொகுதியே […]

Read more

சைவ சமயக் கலைக் களஞ்சியம் தொகுதி 7

சைவ சமயக் கலைக் களஞ்சியம் தொகுதி 7, முனைவர் ஆர். செல்வக்கணபதி, தெய்வச் சேக்கிழார் மனிதவள மேம்பாட்டு அறக்கட்டளை, பக். 696, விலை 10 தொகுதிகளுக்கும் சேர்த்து ரூ. 15,000. ஒரு நூலைப் பார்த்தால், பார்த்தவுடன் படிக்க வேண்டும் என்ற உணர்வு ஏற்பட வேண்டும். அவ்வாறு அமைந்துள்ளவைதான், சைவ சமயக் கலைக் களஞ்சியங்கள். தொகுதி ஏழில், மொத்த பக்கங்கள் 800. வாழ்த்துரை, அணிந்துரை, சைவ சமய அருள் நூல்கள் என்ற தலைப்பில், 2553 புலவர்களின் வரலாறு, அவர்கள் எழுதியுள்ள நூல்கள் அனைத்தும், 1 முதல் […]

Read more

பழஞ்சீனக் கவிதைகள்

பழஞ்சீனக் கவிதைகள், வான் முகில், மீனா கோபால் பதிப்பகம், 26, குறுக்குத் தெரு, ஆதம்பாக்கம், சென்னை 88, பக். 216, விலை 180ரூ. ஆங்கில மூலத்திலிருந்த தமிழாக்கம் செய்யப்பட்ட தேர்ந்தெடுக்கப்பட்ட, 63 கவிஞர்களின் கவிதைகள் இடம் பெற்றுள்ளன. தருக்கடைந்தால் அது, தன் வீழ்ச்சிக்குத் தானே வித்திடலாகும். உன் பணி முடிந்ததும் பின்னடைந்திரு, விண்ணக வழி அத்தகையதே (பக். 75) என, மிகை வெற்றியின் அபாயம் குறித்தும். ஒளிமிகு சன்னலின் கீழ் என்னுடன் இருப்போர் யார்? இருவர் என் நிழலும் நானும், ஆனால் விளக்கு எரிந்து […]

Read more

பெயல் மணக்கும் பொழுது

பெயல் மணக்கும் பொழுது, அ. மங்கை, மாற்று. தமிழில் வெளிவந்துள்ள பெண் கவிஞர்களின் கவிதை தொகுப்பில் மிக முக்கியமான தொகுப்பாக பெயல் மணக்கும்பொழுது அமைந்துள்ளது. ஈழ பெண் படைப்பாளிகளின் இலக்கிய பதிவுகள், முடிவுறாத போராட்டமாக தொடரும் பல நிலைப்பாடுகளையும் உணர்த்துவதாக உள்ள, இந்த தொகுப்பை அ. மங்கை தொகுத்து வெளியிட்டுள்ளார். ஈழ தமிழர்களின் வாழ்வில், பல முக்கியமான மாற்றங்களும், சிதறல்களும், அலைவுகளும் இந்த காலகட்டத்தில் இடம்பெற்றுவிட்டன. 93 கவிஞர்களின் கவிதைகள், சிக்கலான பல்வேறுமுகங்களுடைய அவலங்கள் நிறைந்த, ஈழ வாழ்வை பாடுகின்றன. இந்த தொகுப்பிற்கு வ. […]

Read more

த லவ்வர்ஸ் பார்க்

த லவ்வர்ஸ் பார்க், வரலொட்டி ரெங்கசாமி, வி.எஸ்.ஆர். பப்ளிகேஷன்ஸ், 11, வெங்கட்ராமன் ரோடு, சின்ன சொக்கிகுளம், மதுரை 625 002, பக். 224, விலை 200ரூ. பிரபல தமிழ் நாவல், சிறுகதை எழுத்தாளர் வரலொட்டி ரெங்கசாமி, எளிமையான ஆங்கிலத்தில் எழுதியுள்ள அருமையான நாவல். எல்லோருக்கும் புரியும்படியான ஆங்கில உரையாடல்கள். நாம் சிரிக்க, அழ, சிந்திக்க வைக்கின்றன கதாபாத்திரங்கள். இவர்கள் நமக்கு அன்னியமாக தெரியவில்லை. நாம் சந்திக்கும் அன்றாட மனிதர்கள்… கதைக்களமான மதுரை ஈகோ பார்க்கில் வலம் வருகிறார்கள். இந்த நாவலை படித்து முடிக்கும்போது, நம்மை […]

Read more

சிலப்பதிகாரமும் செந்தமிழ்க் காப்பியங்களும்

சிலப்பதிகாரமும் செந்தமிழ்க் காப்பியங்களும், க. கண்ணகி, தமிழ் ஐயா வெளியீட்டகம், ஔவைக் கோட்டம், திருவையாறு 613 204, பக். 472, விலை 340ரூ. திருச்செங்கோடு கே.எஸ்.ஆர். கலை அறிவியல் கல்லூரியுடன் இணைந்து, திருவையாறு தமிழ் ஐயா கல்விக் கழகம் 2012 ஜுலை திங்களில் நடத்திய அனைத்துலக அளவிலான காப்பியத் தமிழ் பத்தாவது ஆய்வு மாநாட்டின் கருத்தரங்கத்தில், அறிஞர்களால் வாசிக்கப்பட்ட 95 கட்டுரைகளின் தொகுப்பு நூல். சிலம்பில் சிகரங்கள் என்ற தலைப்பில் முப்பது ஆய்வுக் கட்டுரைகளும், சிலம்பில் புதுமை என்ற தலைப்பில் இருபது ஆய்வுக் கட்டுரைகளும், […]

Read more
1 211 212 213 214 215 240