நீர் கொத்தி மனிதர்கள்

நீர் கொத்தி மனிதர்கள், அபிமானி, காவ்யா, சென்னை, பக். 318, விலை 250ரூ. தமிழக அரசு ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர், கலை இலக்கியப் பணிக்கான அமைப்பின் நிதியுதவி பெற்று வெளியிடப்படும் இந்த நாவல், ரத்தக் கண்ணீரை வரவழைக்கும் தன்மை கொண்டது. திருநெல்வேலி மாவட்டத்தில் ஓர் இடத்தில் சாம்பாக்கமார்களுக்கும் அவர்களை ஒதுக்கி வைக்கும் சில ஆதிக்க சாதி மதத்தினருக்கும், சாம்பாக்கமார்களுக்கும், அவர்களால் ஒதுக்கப்படும் ஒரு குறிப்பிட்ட ஜாதியினருக்கும் இடையில் ஏற்படும் மோதல்களும், முரண்பாடுகளும் தான் நாவலின் கதை. தண்ணீருக்கான போராட்டம். தலித் இலக்கியப் பொக்கிஷம். […]

Read more

சென்னைக்கு மிக அருகில்

சென்னைக்கு மிக அருகில், விஸ்வபாரதி, காவ்யா, விலை 100ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-221-8.html இது ஒரு சிறுகதைத் தொகுப்பு. பன்னிரெண்டு சிறுகதைகள். வாழ்க்கையோடு தொடர்புடைய விஷயங்களைக் கதைக் களமாக வைத்து, எழுதப்பட்டவை. புத்தகத்தின் தலைப்பாகத் தேர்வு செய்துள்ள கதையில், வீடு தேடும் இன்றைய மத்திய வர்க்க மக்களின் ஆர்வமும், தேடலும் மிக நன்றாக சித்தரிக்கப்பட்டுள்ளது. கடைசிக் கதை வடக்கத்தி பையன், நம்மை யோசிக்க வைக்கிறது. கதைகளின் வரிசைப்படி பொருளடக்கம் இல்லை. புத்தகத் தயாரிப்பில் இது அவசியமல்லவா? -ஜனகன். நன்றி: […]

Read more

ஆரியம் திராவிடம் இந்தியம்

ஆரியம் திராவிடம் இந்தியம், வ. பாரத்வாஜர், காவ்யா, சென்னை, பக். 376, விலை 340ரூ. கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக எழுதிக் கொண்டிருக்கும் நூலாசிரியரின், வெவ்வேறு காலகட்டங்களில் எழுதிய 50 கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல். நம் நாட்டில் ஆரியம், திராவிடம் என இரு பிரிவுகளாக இந்தியத் தத்துவ மரபுகள் விரிந்துகிடக்கின்றன. இந்நூல் கட்டுரைகளில் ஆரியம் குறித்தும், திராவிடம் குறித்தும் பேசப்படுகின்றது. இந்தியாவின் சமூகம், அரசியல், சமயம், கலாசாரம், மொழிகள், இனம், வரலாறு என எது குறித்தும் பேசினாலும் ஆரியம், திராவிடம் என இந்தியம் அதில் […]

Read more

திருக்குறள் புதுக்கவிதை வடிவில்

திருக்குறள் புதுக்கவிதை வடிவில், காவ்யா, சென்னை, விலை 900ரூ. கடவுள் மனிதனுக்குச் சொன்னது கீதை. மனிதன் கடவுளுக்குச் சொன்னது திருவாசகம். மனிதன் மனிதனுக்குச் சொன்னது திருக்குறள். மனிதன் மகோன்னத நிலையடையும் நெறிகளையும் அறங்களையும் அழகாக சொன்னது திருக்குறள். அத்திருக்குறளுக்கு உரைநடையில் விளக்கம் எழுதியவர்கள் பலர். சிலரது உரை சாமான்யர்களுக்கு புரிவது கடினம். அதனால் உரைநடையை வேறொரு கோணத்தில் புதுக்கவிதை வடிவத்தில் கொடுத்தால் அனைவரும் படித்து இன்புறுவர் என்றெண்ணி இந்நூலை படைத்துள்ளார் நூலாசிரியர் கி.ரா. கிருஷ்ண பிரசாத். நன்றி: தினத்தந்தி, 23/4/2014.   —- பகதூர்கான் […]

Read more

சென்னைக்கு மிக அருகில்

சென்னைக்கு மிக அருகில், விஸ்வபாரதி, காவ்யா, சென்னை, பக். 128, விலை 100ரூ. படைப்பின் அகத்தேடல் அன்பாக இருக்கட்டும், படைப்பின் அடிநாதம் அறமாக இருக்கட்டும், படைப்பின் நோக்கம் எல்லைகள் கடந்த மனித நேயமாக இருக்கட்டும் என தனது முகவுரையில் தெளிவுபடுத்திவிடுகிறார் விஸ்வபாரதி. இத்தொகுப்பில் மிக அழகான கதை என்றும், வடிவ அளவிலும் நிறைவான கதை என்றும் பூவரசு கதையைச் சொல்லலாம். கிராமத்தின் நம்பிக்கைகள் சார்ந்த சங்கிலிசி சாமி கதை நிறைவாக உள்ளது. இதேபோல பல கதைகளிலும் சுற்றுச் சூழல் பிரச்னை, சரிந்துபோன சமூக மதிப்பீடுகள் […]

Read more

மரிச்ஜாப்பி

மரிச்ஜாப்பி, ராஸ் மாலிக், தமிழில் இனியன் இளங்கோ, தலித் முரசு, கருப்புப் பிரதிகள், சென்னை, விலை 90ரூ. காங்கிரஸ் கட்சிக்கு சீக்கியப் படுகொலை, பி.ஜே.பி.க்கு குஜராத் படுகொலை என்றால் சி.பி.எம். கட்சிக்கு மரிச்ஜாப்பி படுகொலை என்று ஆதாரம் கொடுத்து அதிரவைக்கிறது இந்தப் புத்தகம். இதுவரை மரிச்ஜாப்பி என்பது மனித உரிமையாளர்களால்கூட அதிகம் பேசப்படாத கொடூரக் கொலைச் சரித்திரம். அதனைப்பற்றி தமிழில் வந்துள்ள முக்கிய ஆவணம் இது. 1980களில் மேற்கு வங்கத்தில் ஜோதிபாசு தலைமையிலான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அரசு ஆண்டுவந்தது. அந்தக் காலக்கட்டத்தில் பாகிஸ்தான் […]

Read more

குறிஞ்சிப் பாட்டு பதிப்பு வரலாறு

குறிஞ்சிப் பாட்டு பதிப்பு வரலாறு, முனைவர் நித்யா அறவேந்தன், காவ்யா, பக். 176, விலை 150ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-215-7.html சங்க இலக்கியங்கள் இணையற்ற ஏற்றம் உடையவை. அவற்றுள் கபிலர் வழங்கியுள்ள குறிஞ்சிப்பாட்டு ஆரிய அரசன் பிரகதத்தனுக்குத் தமிழ் ஊட்டியது. தமிழ் தாத்தா உ.வே.சா., 1889ல் இந்நூலின் முதற்பதிப்பை வெளியிட இப்போது, 2011 வரை 35 பதிப்புகள் வெளிவந்துள்ளன. நூலாசிரியர் பதிப்பு வரலாற்றுடன் உரைகளின் போக்கு, உரை வேறுபாடுகள், உவமைகள், உலகாயுதச் சிந்தனைகள், குறிஞ்சிப் பாட்டின் மலர்கள், ஒப்பீடு, […]

Read more

நாடாளுமன்றத்தில் வைகோ

நாடாளுமன்றத்தில் வைகோ, பிரபாகரன் பதிப்பகம், 26, மூன்றாவது முதன்மைச்சாலை, கிருஷ்ணா நகர், குரோம்பேட்டை, சென்னை 44, விலை 400ரூ. டெல்லி பாராளுமன்றத்தில் 6 ஆண்டுகளும், டெல்லி மேல் சபையில் 18 ஆண்டுகளும் பணியாற்றியவர் வைகோ. அப்போது அவர் ஆற்றிய உரைகள் அடங்கிய நூல். இலங்கைத் தமிழர்களின் உரிமையைக் காக்க பலமுறை குரல் கொடுத்தவர் வைகோ. அந்த உரைகளும் இந்தப் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளன. வைகோ, தி.மு.கழகத்தில் இருந்தபோது யாருக்கும் தெரியாமல் இலங்கைக்கு சென்று பிரபாகரனை சந்தித்துப் பேசினார். அதனால் பிறகு தி.மு.க.வை விட்டு அவர் […]

Read more

திராவிடத் தெய்வம் கண்ணகி

திராவிடத் தெய்வம் கண்ணகி, தொகுப்பாசிரியர் சு. சண்முகசுந்தரம், காவ்யா, சென்னை 24, பக். 926, விலை 700ரூ. ஒற்றைச் சிலம்பு கொண்டு மன்னனிடம் நீதி கேட்டு வாதாடி, மதுரையைப் பற்றி எரியச் செய்தாள் கண்ணகி. அவளது சிலம்பாலும், சினத்தாலும் உருவான சிலப்பதிகாரம் திராவிட இதிகாசமாகப் போற்றப்படுகிறது. கண்ணகி திராவிடத் தெய்வமாக வணங்கப்படுகிறாள். வீரபத்தினி, நடுகல், தாய்த் தெய்வம் போன்ற முன்னோர் வழிபாடுகள் திராவிட வழிபாடுகளாக விளங்கி வருகின்றன. கண்ணகி வழிபாடு திராவிட மக்களின் தாய்த் தெய்வ வழிபாட்டில் ஒன்றாகவும், ஆரம்பகாலம் தொட்டே வளர்ந்து வந்த […]

Read more

மரபும் மரபு சார்ந்தும்

மரபும் மரபு சார்ந்தும், முனைவர் ஓ. முத்தையா, காவ்யா, 16, இரண்டாம் குறுக்குத் தெரு, டிரஸ்ட்புரம், சென்னை 24, பக். 204, விலை 160ரூ. கள்ளிக்காட்டில் முள்ளை வெட்டி அடுக்கிக் கொண்டிருந்த வேலாயி இடுப்புவலி எடுத்து வேலி மறைவில் தனது மூன்றாவது பிள்ளையைத் தனியாளாய் பெற்றெடுத்தாள். மரபு அவளுக்கு அத்தகைய வலிமையைக் கொடுத்திருக்கிறது. இன்றைய நவீன மருத்துவம் தாய்க்கும் பிள்ளைக்கும் தனித்தனியே கட்டணம் வசூலித்து கட்டாயக் கத்திரி போடுகிறது. மரபு தரும் இந்த வலிமையையும் துணிச்சலையும் மண்மூடிப் போகும்முன் பாதுகாக்கவாவது செய்யலாமே? என்பதுதான் நூலாசிரியரின் […]

Read more
1 17 18 19 20 21 22