காற்றின் கையெழுத்து

காற்றின் கையெழுத்து, பழநிபாரதி, விகடன் பிரசுரம், 757, அண்ணாசாலை, சென்னை 2, விலை 130ரூ. ஒரு பத்திரிகை நின்று போனது குறித்து எழுதும்போது… எழுத்தாளர் சுஜாதா, ‘நிகழ் காலத்தைப் பிரதிபலிக்காத எதுவும் நிலைக்காது’ என்று சொன்னார். பத்திரிகைகளுக்கு மட்டுமல்ல… படைப்பாளிக்கும் அது பொருந்தும். சினிமா பாடலாசிரியராக இருந்தாலும் பழநிபாரதிக்குள் இருக்கும் ‘சமூகன்’ கொடுக்கும் சாட்டையடிகள்தான் இந்தப் புத்தகத்தில் உள்ள கட்டுரைகள். வளரும் நாடுகளை உய்விக்க வந்ததாகச் சொல்லப்படும் உலகமயமாக்கல், பாரம்பரியத்தை நசுக்கி அன்னிய நாட்டிடம் கையேந்தி நிற்கும் நிலை ஆகியவற்றைக் காட்டுவதாகவே இந்த தொகுப்பின் […]

Read more

பெரியாரின் நண்பர் டாக்டர் வரதராஜுலு நாயுடு வரலாறு

பெரியாரின் நண்பர் டாக்டர் வரதராஜுலு நாயுடு வரலாறு, பழ. அதியமான், காலச்சுவடு பதிப்பகம், நாகர்கோவில், பக்கங்கள் 480, விலை 325ரூ. மறுக்கப்பட்ட வரலாற்றுப் பக்கங்கள் –சா. கந்தசாமி சுதந்திரப் போராட்டக் காலத்தில் பலர் அர்ப்பணிப்பு உணர்வோடு களத்தில் இறங்கிப் பிரச்சாரம் செய்தார்கள். பத்திரிகைகள் நடத்தினார்கள். சத்தியாகிரகம் புரிந்தார்கள். தடியடி பட்டார்கள். சிறை சென்றார்கள். சிறையில் செக்கிழுத்தார்கள். கடைசியாக தூக்கில் போடப்பட்டார்கள். அவர்களில் பலரின் போராட்டப் பங்களிப்பு என்பது அதிகமாக இருந்தாலும், தங்களின் சொந்த நடத்தைகள், கருத்துக்கள், பேச்சுக்களால் தலைவர்களிடம் முரண்பட்டதால் பெரிய பதவிகளை பெறமுடியவில்லை. […]

Read more

எதிர்ச்சொல்

எதிர்ச்சொல், பாரதி தம்பி, புலம், சென்னை 14, பக்கங்கள் 120, விலை 70ரூ. “உண்மையான போராட்டம் என்பது தன்னிலிருந்தே தொடங்குகிறது. தன் சொந்த முரண்பாடுகள் ஒன்றுடன் ஒன்று முட்டிக் கொண்டு ஒரு இக்கட்டுக்கு வரும்போது மனம் போராட்டத்தை நிகழ்த்துகிறது. … சமூக அநீதிகளுக்கு எதிரான ஒரு போராளி இவ்விதம் தன்னிலிருந்துதான் உருவாக முடியும் … நமது சமூக அமைப்பில் போராடிக் கொண்டிருப்பது ஒன்றுதான் நேர்மையாக வாழ்வதற்கான வழி. அமைதியாக வாழ்வது என்றால் அனைத்தையும் சகித்துக் கொண்டு அடிமையாக வாழ்வது என்று அர்த்தம்.” மேற்கண்ட வார்த்தைகளுடன்தான் […]

Read more

இந்திய மக்கள் பழக்க வழக்கங்கள் – சடங்குகள் – நிறுவனங்கள்

இந்திய மக்கள் பழக்க வழக்கங்கள் – சடங்குகள் – நிறுவனங்கள், அபே.ஜெ.எ.துபுவா, தமிழில் – வி.என். ராகவன், அலைகள் வெளியீட்டகம், 4/9, 4-வது முதன்மைச்சாலை, யுனைடெட் இந்தியா காலனி, கோடம்பாக்கம், சென்னை – 24. விலை-260 ரூ 200 ஆண்டுகளுக்கு முன்னால் பிரெஞ்சு நாட்டில் இருந்து தென்இந்தியாவுக்கு வந்த கிறிஸ்துவப் பாதிரியார் ஜெ.எ. துபுவாவுக்கு இந்தியாவை அடக்கி ஆள வேண்டும் என்று நினைக்கிற ஐரோப்பியர்களிடம், இந்தியர்களைப் பற்றிய முறையான தகவல்கள் எதுவுமே இல்லையே என்ற வருத்தம் இருந்தது. அந்த வருத்தத்தைப் போக்க துபுவா எழுதிய […]

Read more

கால வரிசையில் பாரதி பாடல்கள்

கால வரிசையில் பாரதி பாடல்கள், பதிப்பாசிரியர் – சீனி. விசுவநாதன், விலை 650ரூ., வெளியீடு – சீனி. விசுவநாதன், 2, மாடல் ஹவுஸ் லேன், சி.ஐ.டி. நகர், சென்னை 35. மகாகவி பாரதி மீது தீராத பக்தி பூண்டு, பாரதியின் படைப்புகள் அனைத்தையும் தேடிப் பிடித்து ஒருங்கிணைக்கும் பணியில் தன்னை அர்ப்பணித்துக் கொண்டவர் இந்நூலின் படைப்பாசிரியர். இவரது கடின உழைப்பை பாரதியின் உடன்பிறந்த தம்பி சி.விசுவநாதனும், கவிஞர் கண்ணாதசனுமே வியந்து பாராட்டியுள்ளனர். அதன்படி பாரதியின் படைப்புகள் அனைத்தையும் காலவரிசையில் தனித் தனியாகத் தொகுத்து, அவற்றை […]

Read more

சீனத்து ஞானி கன்ஃபூஷியஸ் சிந்தனைகள்

சீனத்து ஞானி கன்ஃபூஷியஸ் சிந்தனைகள் – கமலா கந்தசாமி; பக். 128; ரூ. 60; நர்மதா பதிப்பகம், சென்னை – 17 ‘வாழ்க்கையைப் பற்றியே உனக்கு ஒன்றும் தெரியாதபோது..மரணம் பற்றி நீ என்ன தெரிந்துகொள்ள முடியும்?’ – இது “மரணத்துக்கு பின்பான உலகம்’ பற்றிய தத்துவ விசாரத்தில் ஈடுபட்ட ஒருவனிடம் சீனத்து ஞானி கன்ஃபூஷியஸ் கேட்ட கேள்வி. இதுபோன்ற கன்ஃபூஷியஸின் அரிய தத்துவ முத்துகளை உரிய விளக்கங்களுடன் 42 தனித்தனி அத்தியாயங்களாக இந்நூலில் தந்திருக்கிறார் கமலா கந்தசாமி. ஓரிடத்தில் அந்த ஞானி கூறுகிறார், ‘நீ […]

Read more

மயிலிறகு மனசு

மயிலிறகு மனசு – தமிழச்சி தங்கபாண்டியன்; பக். 79; ரூ.80; விகடன் பிரசுரம், சென்னை-02 நெருக்கமான நண்பர்களிடத்தில் நாம் கொண்டிருக்கும் நட்பின் பிரதிபலிப்புகளை உளவியல் நோக்கோடு ஆராயும் நூல். பள்ளித்தோழி, வீட்டு வேலை செய்பவர், திரைப்பட நடிகை, மருத்துவர், சிந்தனையாளர், கவிஞர் போன்றோருடனான நட்பின் பிணைப்புகளை ஆசிரியர் தருகிறார். இனிமையான நினைவுகள் என்பவை எப்போதுமே மனதில் நிலைத்து நிற்பவை. நெருக்கமான சிலரைப் பற்றி நினைவுகள் மனதில் தோன்றினாலே அவை மகிழ்ச்சியை ஏற்படுத்தும். அந்த அடிப்படையில், கைவினைக் கலைஞர் ராதிகா, திரைப்பட நடிகை ரோகிணி, கவிஞர் […]

Read more

எனக்கு எதுவோ உனக்கும் அதுவே

எனக்கு எதுவோ உனக்கும் அதுவே – இளையராஜா; பக்.144; ரூ.150; குமுதம் பு(து)த்தகம் வெளியீடு, சென்னை-10 இசையமைப்பாளர் இளையராஜாவின் உள்ளத்தில் ஒளிந்திருக்கும் கவித்துவமான சிந்தனைகளை தத்துவார்த்தரீதியில் வெளிப்படுத்தும் தொகுப்புதான் இந்நூல். இளையராஜா ஆன்மிகம் குறித்தே அதிகம் சிந்திக்கிறார் என்பதற்கு இதில் உள்ள பல கவிதைகள் சான்று. “நடுத்தர வயதிலேயே பாம்பு சட்டையை உரிப்பதைப் போல, பசுமரம் பட்டையை உரிப்பதைப் போல, உலகாயத விஷயங்களை உதறி தாமரையிலைத் நீராய் ஒட்டியும் ஒட்டாமலும் இருக்கப் பயின்றவர்’ என்று கவிஞர் வாலி நூலின் அணிந்துரையில் குறிப்பிடுவது நூற்றுக்கு நூறு […]

Read more

நெருஞ்சி

நெருஞ்சி- முனைவர் கு.வெ. பாலசுப்பிரமணியன்; பக்.159; ரூ.75; அனுராதா பப்ளிகேஷன்ஸ், கும்பகோணம் -ஆர்எம்எஸ், 612605 உலகின் நான்கு திசைகளிலும் மக்கள் வாழ்வை உலுக்கிக் கொண்டிருக்கும் கொடியோர் வெறியாட்டத்தை உரத்துப் பேசும் நாவல். துணிவு,ஆற்றல் அறிவு கொண்ட ஈழத் தமிழச்சியாக கொற்றி என்ற கார்த்தியாயினி பாத்திரம் சிறப்பாகப் படைக்கப்பட்டுள்ளது. “அந்தப் பொம்பள கிட்ட எந்த ஆயுதமும் செல்லாது, நாமெல்லாம் அடியாளுங்க; அந்த அம்மா போராளிடா’ என்று துணை பாத்திரம் மூலம் கொற்றியின் வீரத்தைப் பறைசாற்றுகிறார் ஆசிரியர். நாவலைத் தொய்வின்றி நடத்திச் செல்வதில் பூவாயி, அண்ணாமலை, முகிலன் […]

Read more

முடிவுகளே தொடக்கமாய்

முடிவுகளே தொடக்கமாய் – கண.முத்தையா; பக்.144; ரூ. 30; தமிழ்ப் புத்தகாலயம், சென்னை- 17 தமிழின் முன்னோடிப் பதிப்பகங்களுள் ஒன்று, தமிழ்ப் புத்தகாலயம். அதன் நிறுவனர் கண.முத்தையாவின் நினைவலைகளின் சிறு தொகுப்பே இந்நூல். அறிஞர் ராகுல சாங்கிருத்தியாயனின் “வால்காவிலிருந்து கங்கை வரை’ என்ற அரிய நூலை தமிழுக்கு வழங்கியவர் கண.முத்தையா; நேதாஜியின் இந்திய தேசிய ராணுவத்தில் பணியாற்றியவர்; தமிழ் எழுத்தாளர் சங்க நிர்வாகியாகவும் இருந்திருக்கிறார். சுமார் 50 ஆண்டு காலம், தமிழின் முன்னணி எழுத்தாளர்கள் பலருடன் பழகிய இவரது நினைவுகளை அகிலன் கண்ணன் கோர்வையாகத் […]

Read more
1 2 3 4