சிபி

சிபி, ஏ.ஏ.ஹெச்.கே.கோரி, இருவாட்சி, 41, கல்யாணசுந்தரம் தெரு, பெரம்பூர், சென்னை 11, பக். 288, விலை 170ரூ. சிறுபான்மை பிரிவு என்பதன் சுருக்கமே சிபி என்னும் நாயகனின் பெயராக இருக்கிறது என்பதைப் படிக்கும் இடத்திலிருந்தே சுவாரஸ்யம் தொடங்கிவிடுகின்றது. கற்பனைப் பாத்திரங்களோடு மகாத்மாகாந்தி, நேரு, காமராஜர், மொரார்ஜி தேசாய் போன்ற அரசியல் தலைவர்களையும் இந்தத் தலைமுறைக்குத் தெரியாத அவர்களின் அரிய குணங்களையும் நம் கண்முன் தரிசனப்படுத்துகிறது இந்நாவல். மேற்கத்திய கலை வடிவமான டாக்குடிராமா என்னும் யுக்தியில் எழுதப்பட்டிருககும் இந்த நாவலில், இறந்த காலமும் நிகழ்காலமும் எதிர்காலமும் […]

Read more

தடைகளும் விடைகளும்

தடைகளும் விடைகளும், முரு.பழ.ரத்தினம் செட்டியார், சைவ சித்தாந்த வாழ்வியல் ஆய்வு மையம், 3, அண்ணாநகர், சோளிங்கர் 631102, பக். 306, விலை 120ரூ. சைவ சித்தாந்தத்தின் வழியில், பல்வேறு வடிவில் எழுப்பப்படும் சமயம் தொடர்பான 250 கேள்விகளுக்கான விடைகள் இந்த நூலில் தொகுக்கப்பட்டுள்ளன. கேள்விகள் இரு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. முதல் பகுதியில் அருள் அறம், உலக நலம், ஊழ்வினை, பழக்க வழக்கங்கள், தெய்வமாடி, பேயகள், மந்திரங்கள், சித்துகள், வழிபாடு, புராணக் கதைகள் உள்ளிட்ட 10 தலைப்புகளில் கேள்விகள் தொகுக்கப்பட்டுள்ளன. பால் குடிப்பது தீமையா, வட்டி […]

Read more

இலக்கிய மரபியல்

இலக்கிய மரபியல், கி. இராசா, பார்த்திபன் பதிப்பகம், திருச்சி 21, பக். 504, விலை 350ரூ. இலக்கிய ஆய்வில் பொதுவாக இலக்கிய மரபு என்ற வழக்கு உண்டு. இலக்கிய மரபியல் என்ற வழக்கு இதுகாறும் இல்லை. இலக்கிய மரபு என்பது வேறு. இலக்கிய மரபியல் என்பது வேறு. இலக்கிய மரபு (Literary Genetics) என்பது இலக்கியத்தின் தோற்றம் வளர்ச்சி குறித்தது. இதனை இலக்கியப் பரிணாமம் (Evolution lf Literature) என்றால் சட்டென விளங்கும். இந்த இலக்கியப் பரிமாணத்திற்கு அடிப்படையாக விளங்குகின்ற இலக்கிய மரபுக் கூறுகள் […]

Read more

சங்கர காவியம் – பூஜ்யஸ்ரீ காஞ்சி மகானின் புனித வாழ்க்கை வரலாறு

சங்கர காவியம் – பூஜ்யஸ்ரீ காஞ்சி மகானின் புனித வாழ்க்கை வரலாறு, டால்மியாபுரம் கணேசன், அகஸ்தியர் பதிப்பகம், விலை 250ரூ. எதையுமே கதை கட்டுரைகளைப் படிப்பதைவிட நாடக வடிவமாக்கித் தந்துவிட்டால் போதும். அப்படியே எடுத்துச் சுளைசுளையாய் விழுங்குகிற மாதிரி மனத்தின் உள்வாங்கிக் கொண்டுவிடலாம். இந்தக் கலையில் தாம் வல்லவர் என்பதை நிரூபித்துக் காட்டியிருக்கிறார் டால்மியாபுரம் கணேசன். நடமாடும் தெய்வம் என்று பெருமையோடு வழிபட்ப்பட்ட காஞ்சி மகாப்பெரியவாளைப் பற்றிய பல நிகழ்வுகளைப் பலரும் பலவாறாகப் பேசியும் எழுதியும் வந்திருக்கிறார்கள். சென்ற நூற்றாண்டின் ஆன்மிக அற்புதம் அவர். […]

Read more

சாதியும் தமிழ்த்தேசியமும்

சாதியும் தமிழ்த்தேசியமும், பெ. மணியரசன், பன்மை வெளி, எண் 1, இராசா வணிக வளாகம், நீதிமன்றச் சாலை, புது ஆற்றுப் பாலம், தஞ்சாவூர் 1, விலை 80ரூ. சாதி ஒழித்தல் ஒன்று – நல்ல தமிழ் வளர்த்தல் மற்றொன்று பாதியை நாடு மறந்தால் – மற பாதி துலங்குவதில்லையாம் – என்றார் பாவேந்தர் பாரதிதாசன். சாதி ஒழிப்பு வீரர்கள் தமிழைப் புறக்கணிப்பதும், தமிழ்த் தீரர்கள் சாதிப் பிரச்னைகளை மறைத்துச் செயல்படுவ்தும்தான் இன்று தமிழ்ச் சமூகத்தில் நடக்கிறது. இந்த இரண்டு பிரச்னைகளையும் சம அளவில் வைத்துப் […]

Read more

ராஜீவ் படுகொலை-தூக்குக்கயிற்றில் நிஜம்

ராஜீவ் படுகொலை-தூக்குக்கயிற்றில் நிஜம், திருச்சி வேலுசாமி, பேட்ரிஷியா பதிப்பகம், 2/40, பி, இரண்டாம் தளம், ராம்நகர், நங்கநல்லூர், சென்னை 61, விலை 200ரூ. ஸ்ரீபெரும்புதூரில் 1991ல் நடந்த ராஜீவ் காந்தி படுகொலை ஒட்டுமொத்த தமிழின வரலாற்றில் பெரும் மாறுதல்களை ஏற்படுத்திய ஒன்று. இன்று அது முள்ளிவாய்க்காலில் தமிழினம் அழிக்கப்பட்ட நிகழ்வு வரைக்கும் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி இருக்கிறது. அந்த படுகொலை மட்டும் நடக்காமல் இருந்திருந்தால் இந்திய வரலாறு நிச்சயமாக வேறாக இருந்திருக்கும். ஒருவேளை இலங்கையில் நிலைமை கூட இப்போதிருப்பதில் இருந்து முற்றிலும் வேறாக இருந்திருக்கலாம். […]

Read more

சார்லி சாப்ளினின் எனது வாழ்க்கை

எனது வாழ்க்கை, சார்லி சாப்ளின், தமிழில்-சிவன், கவிதா பப்ளிகேஷன்ஸ், 8, மாசிலாமணி தெரு, பாண்டிபஜார், தி.நகர், சென்னை 17, பக். 288, விலை 200ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0000-469-1.html சார்லி சாப்ளின் என்ற நகைச்சுவை சக்கரவர்த்தியை எல்லாரும் அறிவர். ஆனால் அவரது ஆராம் கால வாழ்வு எத்தனை துக்கம் நிறைத்தாக இருந்தது என்பது, பலருக்குத் தெரியாது. ஏப்ரல் 16ல் 1889ம் ஆண்டு சார்லி சாப்ளின் பிறந்தார். டிசம்பர் 1877, 25ம் தேதி மறைந்தார். இந்த இடைப்பட்ட காலத்தில் கண்ணீர் […]

Read more

தடம் பதித்த மாமனிதன் ரசிகமணி டி.கே.சி.

தடம் பதித்த மாமனிதன் ரசிகமணி டி.கே.சி., தி. சுபாஷினி, மித்ரஸ் பதிப்பகம், பக். 400, விலை 250ரூ. மனிதனாய், மாமனிதனாய் டி.கே.சி. தடம் பதித்த தன்மையைத் தடம் பதித்த மாமனிதன் என்ற தலைப்பில் நூலாக்கியிருக்கிறார் தி. சுபாஷினி. டி.கே.சியும் சான்றோர்களும் என்னும் பகுதியில் டி.கே.சி.யால் மதிக்கப் பெற்ற வள்ளுவர், பாரதி, கவிமணி, ராஜாஜி, காந்திஜி, ஆகியோர் பற்றியும் விளக்கப்பட்டிருக்கிறது. டி.கே.சி.யுடன் தொடர்பு கொண்டிருந்த கல்கி, ஐஸ்டிஸ் மகராஜன், வித்வான் சண்முகசுந்தரம், டி.டி. திருமலை, கு. அழகிரிசாமி, கி. ராஜநாராயணன், வல்லிக்கண்ணன், ம.பொ.சி., தி.க.சி. முதலானோர் […]

Read more

வடநாட்டு சிவத்தலங்கள்

வடநாட்டு சிவத்தலங்கள், ப. முத்துக்குமாரசுவாமி, பழனியப்பா பிரதர்ஸ், கோனார் மாளிகை, 25, பீட்டர்ஸ் சாலை, ராயப்பேட்டை, சென்னை 14, பக். 450, விலை 340ரூ. பாரத திருநாட்டின் பழம்பெரும் செல்வங்கள் பக்தி வழிபாட்டு கோவில்கள், இந்திய ஒருமைப்பாட்டுக்கு வழிகாட்டும், இந்த கோவில்கள் பற்றிய அதிகமான செய்திகளை, இந்த நூலில் காண முடிகிறது. வடநாட்டில் உள்ள சிவத்தலங்கள், மாநில வாரியாக, விரிவாக படங்களுடன் தரப்பட்டுள்ளன. அரியானா, அருணாசலப்பிரதேசம், அசாம், இமாசலப் பிரதேசம், ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம், ஒடிசா முதல் ஜார்க்கண்ட் வரை 16 வட மாநிலத் தலங்களை, […]

Read more

வீணையின் குரல்

வீணையின் குரல் (எஸ். பாலசந்தர்-ஓர் வாழ்க்கைச் சரிதம்), விக்ரம் சம்பத், தமிழில்-வீயெஸ்வி, காலச்சுவடு பதிப்பகம், 669, கே.பி.கே. சாலை, நாகர்கோவில் 629001, பக். 600, விலை 350ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0000-808-0.html இந்தியாவின் மரபு மாறாத வீணை இசையை உலகெங்கும் முழக்கி வெற்றி வாகை சூடிய வீணை மேதை எஸ். பாலசந்தரின் வரலாற்று சுவடுகளை, ஒரு திரைப்படம் போல விக்ரம் சம்பத் இந்த நூலில் பதிவு செய்துள்ளார். பிறவிக் கலைமேதை பாலசந்தரின் சினிமா சாதனைகள், சங்கீத சாதனைகள், தனிமனித […]

Read more
1 2 3 4 5 11