நொச்சி

நொச்சி அறியப்படாத தமிழ்ப் பதிப்பாளுமைகள் ஆய்வு – ஆவணம், பரிசல் வெளியீடு, சென்னை, விலை 130ரூ. நொச்சி நூலில் 28 பதிப்பாளுமைகள் குறித்த கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன. தவிர 27 பதிப்பாளுமைகள் தொடர்பான தகவல் குறிப்புகளையும் தொகுத்து பின்னிணைப்பாகக் கொடுத்துள்ளனர். தமிழ்ப் பதிப்பு வரலாறு என்பது இதுவரை ஒரு சார்பாகவே எழுதப்பட்டுள்ளது. உ.வே. சாமிநாதையர், சி.வை. தாமோதரப்பிள்ளை, ச. வையாபுரிப்பிள்ளை, ஆறுமுக நாவலர், இரா. இராகவையங்கார் போன்ற செவ்வியல் இலக்கியப் பதிப்பாளர்கள் தொடர்ந்து முன்னிலைப்படுத்தப்படுகின்றனர். இவர்கள் மட்டும்தான் பதிப்பாளர்கள் என்ற பிம்பம் தொடர்ந்து நிறுவப்பட்டுக்கொண்டே […]

Read more

பெய்ரூத்திலிருந்து ஜெருசலேம் வரை

பெய்ரூத்திலிருந்து ஜெருசலேம் வரை, ஆங்க் ஸ்வீ சாய், அடையாளம், புத்தாநத்தம், விலை 320ரூ. பாலஸ்தீனத்தில் தொடரும் துயரங்கள் இந்நூலின் ஆசிரியரான மருத்துவர் ஒரு சீனர். இவர் சிறு வயதில் இஸ்ரேலிய ஆதரவாளராக வளர்க்கப்பட்டவர். அராபியர்கள் குறித்த எதிர்மறையான எண்ணமே அவருக்கு இருந்துள்ளது. 1982ம் ஆண்டில் இஸ்ரேலியப் போர் விமானங்கள் பெய்ரூட் நகரத்தை இடைவிடாமல் தாக்கியபோது அவர் அதிர்ச்சியடைந்தார். இஸ்ரேல் குறித்த பார்வை மாறத் தொடங்கியது. பெய்ரூட்டில் போரால் பாதிக்கப்பட்ட அப்பாவி மக்களுக்குச் சேவை செய்வதற்காக விடுக்கப்பட்ட அழைப்பின் பேரில் இவர் லண்டனில் பார்த்துவந்த பணியை […]

Read more

தொல்காப்பியத்தில் வீரநிலைக்கால எச்சங்கள்

தொல்காப்பியத்தில் வீரநிலைக்கால எச்சங்கள், முனைவர் கு.வெ. பாலசுப்பிரமணியன், தமிழ்ப்பேராயம், எஸ்.ஆர். எம்.பல்கலைக்கழகம், காட்டாங்குளத்தூர், பக். 112, விலை 70ரூ. இசைக்குழுக்களாக வாழ்ந்த பழந்தமிழர்கள் ஒருவரோடு ஒருவர் முரண்பட்டு சண்டை போட்டதை போர் என்று சொல்லக்கூடாது. அது தமிழர்களுக்குள் எழுந்த பூசல்களே என்பதை தொல்காப்பிய வழி சொல்வது ஆய்வுக்குரியது, மாமன்னர்கள் நடத்திய கடுமையான போர்களால் மக்கள் பட்ட சொல்லொண்ணாத் துயரங்களை புலவர்கள் எடுத்துச்சொல்லி, மன்னர்களை உணரச் செய்தது போன்ற வரலாற்றுக் காலச் செய்திகளை விளக்கும் இடங்கள் அதிகம். திணைதோறும் போர், நடுகல் வழிபாடு உள்ளிட்ட செய்திகள் […]

Read more

குஜராத் இனப்பபடுகொலை நடந்தது என்ன?

குஜராத் இனப்பபடுகொலை நடந்தது என்ன?, தமிழில் அ. முத்துக்கிருஷ்ணன், வாசல் மற்றும் தலித் முரசு, சென்னை, பக். 104, விலை 130ரூ. அந்தியின் ஆதாரம் தெகல்கா செய்த புலனாய்வுகளின் தமிழாக்கம் குஜராத் படுகொலைகள் பற்றிய பதறவைக்கும் தகவல்களைத் தருகிறது. நாடெங்கும் உள்ள மதவாத அமைப்புகள் இந்த 16ஆவது மக்களவைத் தேர்தலை மோடியின் முகமூடிகளை அணிந்துகொண்டே மக்களுக்குக் காட்டுகின்றன. ஊடகங்களால் ஊதிப் பெருக்கப்பட்ட மோடியின் பலூன் பிம்பம் மெதுவாகக் காற்றில் அசைந்தாடுகிறது. இந்தத் தருணத்தில் வந்துள்ளது குஜராத் இனப்படுகொலை நடந்தது என்ன? 2002ல் கோத்ரா ரயில் […]

Read more

தியாகசீலர் கக்கன்

தியாகசீலர் கக்கன், முனைவர் இளசை சுந்தரம், மதுரா வெளியீடு, சென்னை, விலை 100ரூ. தியாகசீலர் கக்கன்ஜியைப் பற்றிய ஒரு விரிவான நூல் வெளியாவது இதுதான் முதல் முறை. அவரைப் பற்றிய தகவல்களைத் திரட்ட இந்நூலாசிரியர் மிகவும் சிரமப்பட்டிருப்பதை இந்நூலைப் படிக்கும்போது உணரமுடிகிறது. மிக எளிய குடும்பத்தில், அதிலும் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தில் பிறந்த ஒருவர், விடுதலைப் போராட்ட வீரராகவும், சிறந்த கொள்கைப் பிடிப்புள்ளவராகவும், நேர்மையான அரசியல்வாதியாகவும், நிர்வாகத் திறமை மிக்கவராகவும், இறுதிவரை எளிய வாழ்க்கையையே விரும்பியவராகவும், மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக உயர்ந்து விளங்கியுள்ளது பாராட்டத்தக்கது. இவரின் பிறப்பு […]

Read more

கெடை காடு

கெடை காடு, ஏக்நாத், காவ்யா, சென்னை, பக். 184, விலை 170ரூ. ஒரு மலையடிவார கிராமத்தின் வாழ்வை காட்டின் வழி அசைபோடவைக்கும் நாவல். மேற்குத் தொடர்ச்சி மலையின் அடிவாரத்து கிராமம் கீழாம்பூர். ஆடுமாடுகளுக்கு மேய்ச்சல் நிலத்தில் போதிய உணவு கிடைக்காதபோது குள்ராட்டி காட்டிற்கு மாடுகளை அழைத்துப்போய் கிடைபோட வைக்கிறார்கள். காடு மனிதர்களையும், ஆடுமாடுகளையும் உள்வாங்கிக்கொள்கிறது. அந்த கிராமத்தின் வாழ்வு காட்டிற்குள் காட்சிப்படுத்தப்படுகிறது. கிடைக்குத் தலைமை தாங்கும் நொடிஞ்சான் குட்டி, குள்ராட்டிக்கு கிடைபோடச் செல்லும் உச்சிமகாளி, கந்தையா, இராமசுப்பு, சேகரி, தவிட்டான் என்று ஒரு கிராமத்தின் […]

Read more

இளையராஜாவைக் கேளுங்கள்

இளையராஜாவைக் கேளுங்கள், குமுதம் பு(து)த்தகம், சென்னை, பக். 184, விலை 120ரூ. இசைஞானி இளையராஜாவை தரிசிக்க ரசிகர்களுக்கும் வாசகர்களுக்கும் மிகப் பெரும் வாய்ப்பை உருவாக்கித் தந்தது குமுதம். வாசகர்கள் கேள்விக்கு இசைஞானி அளித்த பதில்களின் மூலம் அந்த தரிசனம் சாத்தியமானது. ஆனால் அவை வெறும் பதில்கள் மட்டுமல்ல. இசைஞானியின் வாழ்க்கையை அவரது அனுபவரீதியில், அவரே சொல்லக்கேட்ட மிகப் பெரிய பேறு அது. இசை, ஆன்மீகம், குடும்பம், நட்பு, சினிமா என்று எந்த ஒன்றைப் பற்றி பேசினாலும் அதில் தன் புகழை நாட்டாமல், உண்மைகளை வெளிப்படையாகப் […]

Read more

அடிப்படை வாதங்களின் மோதல்

அடிப்படை வாதங்களின் மோதல், தாரிக் அலி, தமிழில் கி. ரமேஷ், பாரதி புத்தகாலயம், விலை 350ரூ. சிலுவைப்போர், ஜி.காத், நவீனத்துவம். மத அடிப்படைவாதத்துக்கும் உலக போலீஸ்காரனாக தன்னை நினைத்துக்கொண்டிருக்கும் ஓர் ஏகாதிபத்திய அடிப்படைவாதத்துக்குமான மோதல்தான், கடந்த பல ஆண்டுகளாக உலகக் கொந்தளிப்பாக மாறிக்கொண்டு இருக்கிறது. எந்த ஒன்றின் பக்கம் நின்றும் ஆதரிக்க இயலாதவாறு இரண்டுமே கொடூரத்திலும் கொடூரமாக தங்களை அடையாளப்படுத்தி வரும் சூழலில் இரண்டையுமே எதிர்க்கவேண்டும் என்று வலுவான வாதங்களை வைக்கிறார் தாரிக் அலி. பிறப்பால் அவர் பாகிஸ்தானி. முஸ்லிம் அல்லாத முஸ்லிம் என்று […]

Read more

எனக்குள் எம்.ஜி.ஆர்.

எனக்குள் எம்.ஜி.ஆர்., காவியக் கவிஞர் வாலி, குமரன் பதிப்பகம், விலை 250ரூ. சிலர் எதை எழுதினாலும் அது ரஸமாகத்தான் இருக்கும். வேறு மாதிரி அவர்களால் எழுதவே முடியாது. அந்த வகையைச் சேர்ந்தவர் மறைந்த காவியக் கவிஞர் வாலி. தமக்கும் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆருக்கும் இடையே நிலவிய நெருக்கத்தை சுவைபட எழுதியிருக்கிறார் இந்தக் கட்டுரைகளில். நல்லவன் வாழ்வான் படத்துக்குப் பாடல் எழுத வாய்ப்புக் கிடைத்து அதற்கு அண்ணாவும் ஓ.கே. சொன்னதுபோது தாம் ஏழுமலையானுக்கு நேர்ந்து கொண்டபடி திருப்பதிக்குப் போய் மொட்டை போட்டுக் கொண்டு வந்தாராம் வாலி. […]

Read more

சமுதாயப் பார்வையில் மணிமேகலை

சமுதாயப் பார்வையில் மணிமேகலை, கே. ஜீவபாரதி, ஜீவா பதிப்பகம், பக். 216, விலை 110ரூ. மணிமேகலையின் முன் கதையாகிய சிலப்பதிகார ஆராய்ச்சியில் தொடங்கிப் பதிகமும், வஞ்சிக் காண்டமும், இளங்கோவடிகளால் இயற்றப்படவில்லை எனக்காட்டி, இளங்கோவுக்கு கண்ணகி கதையை சொன்னவர் சாத்தனார் என்பது சரியா என வினவி, மணிமேகலை படைத்த சாத்தனாரும், சங்கத்துச் சீத்தலைச் சாத்தனாரும் ஒருவரல்லர் என, நிறுவிச் செல்கிறது இந்த நூல். பசிப்பிணி அறுத்த பாத்திரமான மணிமேகலையைச் செதுக்கியுள்ள பாங்கினை, வியந்து விதந்து சொல்கிறது. பொதுவுடைமைச் சிந்தனையாளராகிய நூலாசிரியர், தம் கருத்திற்கேற்பச் சமுதாயப் பணியை, […]

Read more
1 3 4 5 6 7 8