என் ஜன்னலுக்கு வெளியே

என் ஜன்னலுக்கு வெளியே, மாலன், புதிய தலைமுறை பதிப்பகம், சென்னை – 32, விலை 100 ரூ. நீங்கள் இந்தத் தேசத்தை நேசிப்பவராக இருந்தால், ஏழைகள் மீது கருணை கொண்டவராக இருந்தால், எதிர்காலத்தின் மீது நம்பிக்கை உள்ளவர் என்றால், இலவசங்களை அள்ளிக்கொடுப்பதாகச் சொல்லி வாக்கு கேட்டு வருபவர்களை நிராகரியுங்கள் என்று மிக அழுத்தமாகப் பதிவு செய்கிறார் மாலன். ஜன்னலுக்கு உள்ளே இருந்துகொண்டு என்னதான் ஆக்கபூர்வமாகச் சிந்தித்தாலும், அவையெல்லாம் அம்பலம் ஏற முடியாத சமுதாயக் கட்டமைப்பில் நாம் உழன்றுகொண்டிருக்கிறோம் என்பதை நன்றாக உணர்ந்தவர்தான் மாலன். இருந்தாலும் ‘இமைப்பொழுதும் […]

Read more

ஐஏஎஸ் வெற்றி உங்கள் கையில்

ஐஏஎஸ் வெற்றி உங்கள் கையில், பேராசிரியர் நெல்லை கவிநேசன், குமரன் பதிப்பகம், தி.நகர், சென்னை – 17, விலை 100 ரூ. கல்வித்துறையில் 25 ஆண்டுகளுக்கு மேலாக அனுபவம் பெற்றவர் நெல்லை கவிநேசன். ஐஏஎஸ் கனவுடன் உள்ள தமிழ் இளைஞர்களுக்கு வழிகாட்டும் நோக்குடன் எழுதப்பட்டிருக்கும் நூல் இது. பாடத்திட்டம், கேள்விகள் கேட்கப்படும்விதம் குறித்து விரிவாக விளக்கப்பட்டுள்ளது. மூன்று மாதிரி வினாத்தாட்களும் இடம்பெற்றுள்ளன.   —   108 காதல் கவிதைகள், ஆத்மார்த்தி, வதனம், 67 டிடி சாலை, ஆரப்பாளையம், மதுரை – 16, விலை 40 ரூ. […]

Read more

திருவிதாங்கூர் தமிழர் போராட்ட வரலாறு

திருவிதாங்கூர் தமிழர் போராட்ட வரலாறு, முனைவர் பி. யோகீசுவரன், நீலா பதிப்பகம், சென்னை, பக்கம் 344, விலை 175 ரூ. விடுதலை பெற்ற பின்னர் சுதந்திர இந்தியாவில், மொழிவாரி மாநில மறு சீரமைப்பு நடந்தபோது, தமிழ்நாட்டின் வடக்கெல்லை, தெற்கெல்லையில் தமிழர்கள் வாழ்ந்த மிகப்பெரிய நிலப்பரப்புகளை ஆந்திரத்துடனும், கேரளத்துடனும் இணைக்கும் அநீதி நிகழ்ந்ததையும், அதை எதிர்த்துப் பெரும் போராட்டங்கள் நடத்தப்பெற்றதையும், அதனால் பல உயிரிழப்புகள் ஏற்பட்டதையும் நாடறியும். அப்போது நிகழ்ந்த தெற்கெல்லை மீட்புப் போராட்ட வரலாற்றுச் சம்பவங்களை விவரிக்கும் விதமாக, இந்த நூல் எழுதப்பெற்றுள்ளது. இந்தப் போராட்டத்தை […]

Read more

சிருங்கேரி மடம் – ஓர் ஆய்வு

குமரி மண்ணில் கிறிஸ்தவம், ஜி. ஐசக் அருள்தாஸ், தமிழ் ஆய்வு மையம் ஸ்காட் கிறிஸ்தவக் கல்லூரி, நாகர்கோவில், பக்கம் 294, விலை 140 ரூ.   கிறிஸ்துவின் சீடர் ஆன தோமா, இந்திய மண்ணில் கால் பதித்த நாள்முதல் இன்று வரையிலும், குமரி மண்ணில் கிறிஸ்தவம் பரவிய வரலாற்றை, இந்த நூல் தெளிவாக எடுத்துக்காட்டுகிறது. சமயப் பணி, கல்விப் பணி, மருத்துவப் பணி, சமூகப் பணிகளின் வழியே கிறிஸ்தவம் மக்களிடையே பரப்பிய செய்திகள், வரிசையாகத் தரப்பட்டுள்ளன. ‘உயர் ஜாதியினரின் ஒடுக்குதலால் துன்பம் அனுபவித்த மக்கள், விடுதலை […]

Read more

ஸ்பெக்ட்ரம் சர்ச்சை

ஸ்பெக்ட்ரம் சர்ச்சை, பத்ரி சேஷாத்ரி, கிழக்கு பதிப்பகம், 33/15, எல்டாம்ஸ் ரோடு, ஆழ்வார்பேட்டை, சென்னை – 18, விலை 40 ரூ. உலகையே மலைக்க வைத்த ஊழல். தமிழக சட்டசபை தேர்தலில் தி.மு.க.விற்குப் பெரும் அதிர்ச்சித் தோல்விக்குக் காரணமாக இருந்த ஊழல். இதையும் மிஞ்சி ஒரு ஊழல் உலகில் இனி நடக்க வாய்ப்பில்லை என்று கருதப்படும் ஊழல்… என்று பல ஆச்சரியங்களையும் அதிர்ச்சிகளையும் உள்ளடக்கிய ஊழல்,ஸ்பெக்ட்ரம் ஊழல், சுமார் ஒண்ணே முக்கால் லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான இந்த ஊழல் விவகாரத்தின் முழுமையான பின்னணியை […]

Read more

ஈழத்தில் பெரியார் முதல் அண்ணா வரை

ஈழத்தில் பெரியார் முதல் அண்ணா வரை, நாவலர் ஏ. இளஞ்செழியன், விகடன் பிரசுரம், 757, அண்ணா சாலை, சென்னை-02, விலை 95ரூ இங்கே தி.மு.க. இருப்பதைப்போல இலங்கையிலும் தி.மு.க. இருந்தது என்பதே பலருக்கும் தெரியாது. பெரியாரின் தலைமையை ஏற்று திராவிடர் கழகம் இங்கே இருந்தபோது இலங்கையிலும் அது உதயமானது. பெரியாரிடம் இருந்து முரண்பட்டு அண்ணாவும் அவரின் தம்பிமார்களும் விலகி திராவிட முன்னேற்றக் கழகம் கண்டபோது, இலங்கையிலும் அது தொடர்ந்தது. இங்கே, அரசியல் கட்சியாக தி.மு.க. மாறியபோது, அங்கே ஒரு மாற்றுச் சிந்தனை ஒலித்தது. ‘திராவிட’ என்று […]

Read more

வெற்றிச் சக்கரம் (சிறுகதைகள்)

மலைப்பாதையில் நடந்த வெளிச்சம், பத்மஜா நாராயணன், டிஸ்கவரி புக் பேலஸ் (பி)லிட், விலை 70 ரூ கவிஞர் பத்மஜா நாராயணனின் கவிதைத் தொகுப்பைப் படிக்கும்போது, ஒவ்வொரு கவிதையும் அவரவர் தம் சுய அனுபவங்களோடு ஒத்துப் போகிற பாதிப்பை ஏற்படுத்துகிறது. ‘உனக்கும் எனக்கும் நடுவே அலைகின்றன, நமக்கான வார்த்தைகள்’ என்கிற வரிகள், வாழ்வின் ஏதாவது ஓர் இடத்தில் தவிர்க்க முடியாததுதானே… ‘எல்லாப் பொறிகளிலும் இலகுவாய் போய் சிக்கிக் கொள்கிற சுயம். எந்தப் பொறிக்கும் வேண்டப்படாத வஸ்துவாய் பொறியிலிருந்து இடதுகையால் தூக்கி எறியப்படும் நானானது மற்றொரு பொறியில்தான் […]

Read more

போர்க்குற்றவாளி

பண்பாட்டு அரசியல், சி. சொக்கலிங்கம், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட், 41 பி, சிட்கோ இண்டஸ்டிரியல் எஸ்டேட். அம்பத்தூர், சென்னை 98. பக்கங்கள் 244, விலை 125 ரூ. தமிழக கலை இலக்கியப் பெருமன்றத்தின், குமரி மாவட்டக் குழுவில் பிரதான அங்கம் வகிக்கும் இந்நூலாசிரியர் கடந்த 30 ஆண்டுகளில் எழுதிய பல கட்டுரைகளின் தொகுப்பே இந்த நூல். வகுப்பு வாதம், ஊடகம், மாற்றப்பண்பாடு, மதிப்பீடு என்று நான்கு தலைப்புகளில் அமைந்திருக்கும் கட்டுரைகள் யாவுமே நயமானவை. வானியல் முகமூடியில் ஜோதிட பூதம் (வகுப்பு வாதம்), […]

Read more

இலக்கியக் காதலில் இலக்கணச் சுருதி

  இலக்கியக் காதலில் இலக்கணச் சுருதி, ஜெயம் கொண்டான், ஸ்ரீ கள்ளழகர் பதிப்பகம், 41, காமராசர் சாலை, அசோக்நகர், சென்னை – 600083, விலை 60 ரூ. தம்முடைய பள்ளிப் பருவ காலத்தில் தோன்றிய சினேகித சினேகிதங்கள் நட்பின் இலக்கணச் சுருதிகளை அவர்களிடம் இருந்து கண்டதையும் கேட்டதையும் பார்த்ததையும் கற்றதையும் இந்நூலில் அழகாக மீட்டியுள்ளார் கவிஞர் ஜெயம் கொண்டான். கவிதையே மௌனமாக இருந்து என்னைப் பேச வைத்தாய்… நான் பேச ஆரம்பித்ததும் நீ மௌனமாகிவிட்டாய். இதுபோன்ற எளிய யதார்த்த புனைவு இந்தக் கவிதை நூல். […]

Read more

கம்பனும் ஆழ்வார்களும்

கம்பனும் ஆழ்வார்களும், ம.பெ.சீனிவாசன், மீனாட்சி புத்தக நிலையம், மதுரை-1, பக்கம் 312, விலை 180 ரூ.   வைணவத் தமிழ் வளர்த்த முதலாமவர் ஆழ்வார்கள். கம்பன் அவர்க்குப் பின்னே அக்கடனைச் செய்தார். இருப்பினும், ஆழ்வார்களின் சொற்சுவையும் கம்பனின் கவிச்சுவையும் எவ்வாறு ஒன்றிணைகின்றன என்பதை இந்த நூல் அழகாகக் காட்டுகிறது. வைணவத் தமிழ்ச் சுவை சரளமாகப் பொங்கிப் பிரவாகமெடுத்து நூல் எங்கும் விரவிக் கிடக்கிறது. இதில், கம்பனும் ஆழ்வார்களும் ஒப்புமை காணப்பெறுகிறார்கள். அடுத்து பெரியாழ்வார், ஆண்டாள் நாச்சியார், குலசேகரர், திருமங்கை மன்னர், நம்மாழ்வார் என இவர்களின் […]

Read more
1 326 327 328 329 330 336