இராகவதம் 1

இராகவதம் 1, ரா. இராகவையங்கார் ஆக்கங்கள், தொகுப்பும் பதிப்பும்- கா. அய்யப்பன், காவ்யா, சென்னை, பக். 1040, விலை 1000ரூ. மதுரைத் தமிழ்ச்சங்க சமஸ்தான வித்துவானாக இருந்தவர் ரா.இரா. தமிழ் ஆய்வு வரலாற்றில் தமக்கென ஒரு தனி இடத்தைப் படித்தவர். செந்தமிழ்ப் பத்திரிகையின் முதல் மூன்று ஆண்டுகள் ஆசிரியராக இருந்தபோது, அவ்விதழில் பல ஆய்வுக் கட்டுரைகளை எழுதியுள்ளார். செந்தமிழ் இதழில் அவர் எழுதிய கட்டுரைகளின் பட்டியல் நூலின் இறுதியில் தரப்பட்டுள்ளன. இதில் செந்தமிழ் இதழிலும், கலைமகள் மற்றும் விழா மலரில் எழுதிய ஆய்வுக் கட்டுரைகளும் […]

Read more

சேக்கிழார் பிள்ளைத்தமிழ்

சேக்கிழார் பிள்ளைத்தமிழ், மூலமும் விளக்கவுரையும், விளக்கஉரை-வித்துவான் பாலூர் கண்ணப்பமுதலியார், பூம்புகார் பதிப்பகம், சென்னை, பக். 926, விலை 580ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0001-789-8.html சேக்கிழார் பெருமான் மீது கொண்ட தீராத பக்தியின் காரணமாக, மகாவித்வான் மீனாட்சி சுந்தரம்பிள்ளை பாடிய நூல்தான் சேக்கிழார் பிள்ளைத்தமிழ். இது குமரகுருபரரின் மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழுக்கு அடுத்த நிலையில் வைத்துப் போற்றப்படுகிறது. இவ்வரிய நூலுக்கு அரும்பத உரையும், விளக்க உரையும் எழுதியுள்ளார் பாலூர் கண்ணப்ப முதலியார். இவ்விளக்கவுரை சாதாரண உரையாக அல்லாமல், பெருவிளக்க உரையாகவும் […]

Read more

தாய்மை

தாய்மை, பத்மா பதிப்பகம், சென்னை, விலை 250ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0001-368-1.html பேறு கால பராமரிப்பும், குழந்தை வளர்ப்பும் குறித்து டாக்டரும், பாராளுமன்ற முன்னாள் உறுப்பினருமான வெ. குழந்தைவேலு எழுதிய நூல். கருவுற்ற காலம் தொடங்கி, குழந்தை பிறக்கும் வரை பெண்கள் அறிந்து கொள்ள வேண்டிய அரிய ஆலோசனைகளை வழங்கியுள்ளார். கருவுற்ற நாளில் இருந்து அடிக்கடி மருத்துவ பரிசோதனை செய்ய வேண்டும். கண்ட கண்ட மாத்திரைகளை சாப்பிடக்கூடாது என்பன போன்ற நலம் பயக்கும் அறிவுரைகள். இதைத் தொடர்ந்து குழந்தையை […]

Read more

மறக்கவே நினைக்கிறேன்

மறக்கவே நினைக்கிறேன், மாரி செல்வராஜ், விகடன் பிரசுரம், பக். 286, விலை 150ரூ. To buy this Tamil book online:https://www.nhm.in/shop/100-00-0002-229-5.html ஆனந்தவிகடன் வார இதழில் தொடராக வெளிவந்த கட்டுரைகளின் தொகுப்பு. தாமிரபரணியில் கொல்லப்படாதவர்கள் என்ற சிறுகதை தொகுப்பு மூலம், எழுத்துலகில் அறிமுகமானவர், மாரி செல்வராஜ். தான் செய்தவற்றை, நியாயப்படுத்தியோ அல்லது ஒப்புக்கொண்டு மன்னிப்பு கேட்கும் தோரணையோ எதுவும் இல்லை. இதுதான் நடந்தது. இதை தான் செய்தேன் என்ற நிர்வாண அழகில், தனி கவனம் ஈர்த்துள்ளார். மரணத்தின் நாட்குறிப்பு கட்டுரையில், டைரிகளோடு, தான் சந்தித்த […]

Read more

தீப்பற்றிய பாதங்கள்

தீப்பற்றிய பாதங்கள், டி.ஆர்.நாகராஜ், தமிழாக்கம்-ராமாநுஜம், புலம், சென்னை, விலை 350ரூ. கர்நாடகத்தைச் சேர்ந்த டி.ஆர்.நாகராஜ் கல்விப்புல வட்டாரத்தில் சர்வதேச கவனத்தைப் பெற்றவர். அவர் கன்னட மொழியில் குறிப்பிடத்தக்க தலித் விமர்சகராகவும் செயல்பாட்டாளராகவும் விளங்கினார். இலக்கியத் துறைப் பேராசிரியரான நாகராஜ், சமூக அரசியல் செயல்பாடுகளை ஆய்வு செய்யும்போது இலக்கியம் வெளிச்சத்தைக் கொடுக்கும் விளக்காக இருக்க முடியும் என்று நம்பியவர். அறிவை ஒழுங்கமைத்துக்கொள்ள கதை சொல்லல் சிறந்த வழியென்று முன்மொழிந்த அவர், தன்னுடைய கட்டுரைகளையும் கதைகளாகவே வடிவமைத்தார். வாதங்களுக்கு வலுசேர்க்கும் விதத்தில் தனது தனிப்பட்ட அனுபவங்களையும் நாட்டாரியல் […]

Read more

பிரபஞ்சத்தையே சுழற்றுவாள் இந்தப் பார்வதி

பிரபஞ்சத்தையே சுழற்றுவாள் இந்தப் பார்வதி, ரத்னாகரன், மணிமேகலைப்பிரசுரம், சென்னை, விலை 140ரூ. பெண்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளுக்கான காரணத்தை ஆராய்ந்து தீர்வு காணும் ஒரு வேகத்தையும், தாக்கத்தையும் வெளிப்படுத்தும் வகையில் எழுதப்பட்ட நாவலாகும். இதனை படிப்பதன் மூலம் பெண்ணின் பெருமையை உணரமுடிவதுடன், பெண்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளை தடுக்க வேண்டும் என்ற எண்ணமும் தோன்றுகிறது. நன்றி: தினத்தந்தி, 18/6/14.   —-   மனத்தில் பதிந்தவர்கள், சுதா பதிப்பகம், சென்னை, விலை 100ரூ. கவிதை உறவு இதழில் மாதம் தோறும் கவிஞர் ஏர்வாடி ராதாகிருஷ்ணன் எழுதிய கட்டுரைகளின் […]

Read more

பரம(ன்) இரகசியம்

பரம(ன்) இரகசியம், என். கணேசன், பிளாக்ஹோல் மீடியா பப்ளிகேஷன்ஸ் லிமிடெட், சென்னை, விலை 550ரூ. இலக்கியச் சிந்தனை உட்பல பல பரிசுகளைப் பெற்றவை இந்நூலாசிரியரின் படைப்புகள். சிறுகதைகள், நாவல்கள் மட்டுமின்றி ஆழ்மன சக்தி, ஆன்மீகம், சுய முன்னேற்றம், வாழ்வியல் போன்றவை குறித்தும், இன்றைய தலைமுறையினருக்கு ஏற்ப நவீன சிந்தனையுடன் இவரது படைப்புகள் உள்ளதால், வாசகர்களிடையே அவற்றிற்கு பெரும் வரவேற்பு உள்ளது. அந்த வகையில் 600 பக்கங்களுக்கு மேல் விரியும் இந்த நாவலும், ஆரம்பம் முதல் இறுதி வரை பரபரப்பான, திகிலான, நிகழ்வுகளுடன் தொய்வின்றிக் கதை […]

Read more

பாரதிதாசன் கட்டுரைகள்

பாரதிதாசன் கட்டுரைகள், தொகுப்பாசிரியர்-பேரா. மு. சாயபு மரைக்காயர், வெளியீடு-கங்கை புத்தக நிலையம், சென்னை, விலை 90ரூ. மொழி, நாடு, சமயம், வாழ்வியல், பல்சுவை, சமுதாயம் என்ற 6 பெருந்தலைப்புகளில் பாவேந்தர் பாரதிதாசன் எழுதிய 53 கட்டுரைகளைக் கொண்ட நூல். பாவேந்தர் பாரதிதாசனின் தமிழ் உணர்வையும், தமிழ் இனப்பற்றையும், எடுத்துக்காட்டும் வகையிலும், சமயப் பூசல்களையும், சாதி கொடுமைகளையும், கடவுள் மறுப்பையும், பெண்ணடிமைத்தனத்தையும், தொழிலாளர் துயரத்தையும் வெளிப்படுத்தும் வகையிலும் அவரது கட்டுரைகள் சிந்தனைக்கு விருந்தாக அமைந்துள்ளன. நன்றி: தினத்தந்தி, 18/6/14.   —–   கண்ணன் கதைகள், […]

Read more

வளர்ச்சிப் பாதையில் மோடியின் குஜராத்

வளர்ச்சிப் பாதையில் மோடியின் குஜராத், என்.எஸ். அப்துல் ஜலீல், சிராக் ஃபவுன்டேஷன் ட்ரஸ்ட், சென்னை, விலை 150ரூ. குஜராத்தில் நரேந்திர மோடியின் ஆட்சியில் மாநிலம் வளர்ச்சி அடைந்திருப்பதாகச் சொல்லப்படுவதை மறுத்து கல்வி, விவசாயம், கிராம முன்னேற்றம், ஒடுக்கப்பட்டோர் நிலையை ஆதாரங்களுடனும் புள்ளி விவரங்களுடனும் விளக்குகிறது இந்நூல். ஆனால் நூலின் தலைப்பு உள்ளடக்கத்திற்கு எதிரானதுபோல் உள்ளது. நன்றி: இந்தியா டுடே, 4/6/2014.   —- மழைக்காடுகளின் மரணம், நக்கீரன், பூவுலகின் நண்பர்கள், சென்னை, விலை 20ரூ. காடுகள் குறித்த ஒரு விரிவான பார்9வையை அளிக்கிறது இந்நூல். […]

Read more

தெய்வத்தமிழ் மரபும் மாட்சியும்

தெய்வத்தமிழ் மரபும் மாட்சியும், கண்ணகி கலைவேந்தன், தமிழ் ஐயா வெளியீட்டகம், தஞ்சாவூர், விலை 500ரூ. திருக்கோவில்கள் வளர்த்த தெய்வத் தமிழ் அனைத்துல 11வது ஆய்வு மாநாட்டில் தமிழ் அறிஞர்கள், பல்துறை பேராசிரியர்கள், புலவர்கள், சமய அறிஞர்கள் மற்றும் ஆய்வாளர்களால் வாசித்து அளிக்கப்பட்ட கட்டுரைகளின் தொகுப்பு நூல். திருக்கோவில்களில் வளர்ந்த தெய்வத்தமிழ், தெய்வத்தமிழ் இலக்கியங்கள், திருக்கோவில்கள் வளர்த்த மரபுக் கலைகள், திருக்கோவில்களின் கலையும் மாட்சியும் ஆகிய தலைப்புகளின் கீழ் 91 கட்டுரைகள் கருத்துக் கருவூலமாக தொகுத்து அளிக்கப்பட்டுள்ளன. நன்றி: தினத்தந்தி, 4/6/2014.   —-   […]

Read more
1 48 49 50 51 52 88