சட்டமன்றத்தில் திருமாவளவன்

சட்டமன்றத்தில் திருமாவளவன், தொல். திருமாவளவன், தொகுப்பாசிரியர் பூவிழியன், கரிசல் பதிப்பகம், ஆர்62, 2வது நிழற்சாலை, த.நா.வீ.வா. குடியிருப்பு, வேளச்சேரி, சென்னை 42, விலை 200ரூ. 2001ம் ஆண்டு மங்களூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் சட்டசபையில் பேசிய உரைகள், விவாதங்கள், கட்டுரைகள் போன்றவை 240 பக்கங்களில் புத்தகமாக தொகுக்கப்பட்டுள்ளன. ஒடுக்கப்பட்ட மக்களுக்கான விடுதலைக் குரலாய், போர்க்குரலாய் சட்டமன்றத்தில் நூலாசிரியர் தன் குரலை பதிவு செய்துள்ளார். அத்துடன் தாழ்த்தப்பட்ட மக்களின் உரிமைகளை வென்றெடுப்பதற்காக சட்டசபையில் நூலாசிரியர் கோபமாக […]

Read more

செம்புலச் சுவடுகள்

செம்புலச் சுவடுகள், (ஓர் உரைக்கவிதை தொகுப்பு), கி. தனவேல், இ.ஆ.ப. கௌதம் பதிப்பகம், 2, சத்தியவதி நகர் முதல் தெரு, பாடி, சென்னை 50, விலை 50ரூ. கிராமத்து நிலப்பரப்பு தென்னார்க்காடு மாவட்ட கிராமங்களின் ஞாபகச் சுவடுகளை ஏக்கத்துடன் நினைவுகூரும் கவிதைகளைத் தாங்கி வந்திருக்கிறது. கி. தனவே இ.ஆ.ப. எழுதியிருக்கும் செம்புலச் சுவடுகள் கவிதைத் தொகுப்பு. நவீன கால நகர்ப்புற வாழ்க்கையில் தான் இழந்துவிட்ட கிராமத்து அடையாளங்களை ஒவ்வொரு நாளும் நகருக்குள் வாழப் பணிக்கப்பட்ட கிராமத்துவாசி நினைவு கூர்கின்றான். நினைவில் கிராமம் சுமந்து அலையும் […]

Read more

இரண்டாவது சுதந்திரம் தகவல் அறியும் உரிமைச் சட்டம்

இரண்டாவது சுதந்திரம் தகவல் அறியும் உரிமைச் சட்டம், வடகரை த. செல்வராஜ், ரேவதி பப்ளிகேஷன்ஸ், புஎ. 76, பஎ.27/1, பாரதீஸ்வரர் காலனி 2வது தெரு, கோடம்பாக்கம், சென்னை 24, விலை 100ரூ. தகவல் பெற ஓர் கையேடு மத்திய அரசு கொண்டுவந்த உருப்படியான சட்டங்களில் ஒன்று தகவல் அறியும் உரிமையுச் சட்டம். இன்று அரசுத் துறைகளில் நடைபெறும் முறைகேடுகளை வெளிச்சம் போட்டுக் காட்டுவதில் தகவல் அறியும் உரிமைச் சட்டத்திற்கு முக்கியப் பங்குண்டு. பெரும்பாலும் மெத்தப் படித்தவர்களே இச்சட்டத்தை பயன்படுத்தி தகவல் அறிவதைக் காண முடிகிறது. […]

Read more

கண்டதைச் சொல்கிறேன்

கண்டதைச் சொல்கிறேன், விகடன் பிரசுரம், 757 அண்ணாசாலை, சென்னை 2, விலை 65ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0000-805-8.html திருமணம் சம்பந்தமான வழக்குகள் அதிகமாகிக் கொண்டே வருகின்றன. பல பொய்களைச் சொல்லி ஏமாற்றித் திருமணம் செய்வது, வரதட்சணைக் கேட்டு சித்திரவதை செய்வது, பல பெண்களைத் திருமணம் செய்வது இப்படி பலவிதமான வழக்குகள் கோர்ட்டுக்ளுக்கு வந்த வண்ணம் உள்ளன. இதுபற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த எண்ணிய வழக்கறிஞர் சுமதி, ஒவ்வொரு குற்றங்களுக்கும் ஒரு சிறுகதையை எழுதி, அந்தக் குற்றம் எந்தப் பிரிவகளின் […]

Read more

தனிநாயக அடிகளாரின் படைப்புகள்

தனிநாயக அடிகளாரின் படைப்புகள், பூம்புகார் பதிப்பகம், 127, பிரகாசம் சாலை (பிராட்வே), சென்னை 108, விலை 200ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0002-143-6.html இலங்கையில் பிறந்த தனிநாயகம் அடிகளார், நெல்லை மாவட்டத்தில் ஆசிரியராகப் பணியாற்றி வந்தபோது, தமிழ் இலக்கியத்தின் மீது ஆர்வம் கொண்டு, 1941ல் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து தமிழ் பயின்றார். தமிழின் சிறப்பை நன்கறிந்த அவர், தமிழில் சிறந்த நூல்கள் பலவற்றை எழுதினார். மேடைகளிலும் சிறந்த சொற்பொழிவுகள் நிகழ்த்தி புகழ் பெற்றார். அவருடைய நூற்றாண்டு விழா கொண்டாடப்படுகின்ற […]

Read more

ஈழத்துப் போர் இலக்கியச் சிறப்பிதழ்

ஈழத்துப் போர் இலக்கியச் சிறப்பிதழ், இலங்கை, ஞானம் பதிப்பகம்,3பி, 46வது ஒழுங்கை, கொழும்பு -06, விலை 1500ரூ. தமிழில் யுத்த இலக்கியத்திற்கு நீண்ட கால மரபு இருக்கிறது. புறநானூறு என்ற மாபெரும் இலக்கியத் தொகுப்பின் மூலம், யுத்தத்தை தமிழ்ச் சமூகம் எப்படி அணுகியிருக்கிறது என்பதைப் புரிந்துகொள்ள முடியும். ஆனால் நவீன உலகின் தமிழர்கள் கால் நூற்றாண்டு காலத்திற்கும் மேலாக தங்கள் விடுதலைக்கான யுத்தம் ஒன்றை நடத்தினார்கள். குருதி வெள்ளத்தில் மூழ்கடிக்கப்பட்ட அந்த யுத்தத்தின் மாபெரும் தொகை நூல் ஒன்றினை இலங்கியிலிருந்து வெளிவரும் ஞானம் கலை […]

Read more

சட்டமும் சாமானியனும்

சட்டமும் சாமானியனும், வக்கீல் ராபர்ட் சந்திரகுமார், இனியன் அதிதி பதிப்பகம், மதுரை, பக். 160, விலை 100ரூ. ஆசிரியர் மதுரை ஐகோர் கிளை வக்கீல். மாஞ்சோலை தேயிலைத் தோட்ட தொழிலாளியின் மகன், கல்வி, குழந்தை, பெண், திருநங்கை, பழங்குடியினர், தொழிலாளர், காவல்துறை அத்துமீறல், மரண தண்டனை, சட்டம், தண்ணீர், தமிழ் தலைப்புகளில் கட்டுரை வடித்துள்ளார். கருத்தாழமிக்கதாக உள்ளது. சம்பந்தப்பட்ட சட்டங்களை ஆய்வு செய்கிறது. பஞ்சாலைகளில் சுமங்கலித் திட்டத்தில் இளம் பெண் தொழிலாளர்களுக்கு இழைக்கப்படும் அநிதிகள் பற்றி ஒரு கட்டுரை, 1992ல் மோகினி ஜெயின், 1993ல் […]

Read more

தோழர் ஈ.வெ.ரா. நாகம்மையார்

தோழர் ஈ.வெ.ரா. , நாகம்மையார், முனைவர் ந.க. மங்கள முருகேசன், தென்றல் பதிப்பகம், 13/3, பீட்டர் சாலை குடியிருப்பு, ராயப்பேட்டை, சென்னை 14, பக். 204, விலை 150ரூ. ஒவ்வொரு ஆணின் வெற்றிக்குப் பின்னாலும், ஒரு பெண் இருக்கிறாள் என்னும் வாக்கிற்கு உயிரோட்டம் தரும் வகையில் ஈ.வெ.ரா. முன்னேற்றத்திற்கு அடித்தளமாய் விளங்கியவர் அவரது துணைவியார் ஈ.வெ.ரா., நாகம்மையார். நான் சுயநல வாழ்வில் மைனராய், காலியாய், சீமானாய் இருந்த காலத்திலும், பொதுநல வாழ்வில் ஈடுபட்டுத் தொண்டனாயிருந்த காலத்திலும், எனக்கு வாழ்வில், ஒவ்வொரு துறையின் முற்போக்குக்கும் நாகம்மாள் […]

Read more

க.நா. சுப்ரமணியனின் தேர்ந்தெடுத்த சிறுகதைகள்

க.நா. சுப்ரமணியனின் தேர்ந்தெடுத்த சிறுகதைகள், தொகுப்பாசிரியர் சா. கந்தசாமி, சாகித்திய அகாதெமி, 443, அண்ணாசாலை, தேனாம்பேட்டை, சென்னை 18, பக். 240, விலை 125ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0001-918-0.html தமிழ் இலக்கிய வாசகர்கள் அனைவராலும் அறியப்பட்ட எழுத்தாளர் க.நா.சு. அவர் எழுதிய தொண்ணூற்றுக்கும் மேற்பட்ட சிறுகதைகளில் தேர்ந்தெடுத்த 24 சிறுகதைகளின் தொகுப்பு இது. க.நா.சு. மிகச் சிறந்த இலக்கிய விமர்சகர் என்பதில் சந்தேகம் இல்லை. அதற்காக அவர் எழுதிய எல்லாக் கதைகளும் சிறந்தவையாக இருந்தாக வேண்டிய கட்டாயமும் இல்லை. […]

Read more

காவல் புலன் விசாரணை

காவல் புலன் விசாரணை, வீ. சித்தண்ணன், ஜெய்வின் பதிப்பகம், 4/391, ஏ, ராம்தோட்டம், அண்ணாசாலை, பாலவாக்கம், சென்னை 41, விலை ஒரு பாகம் 500ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0001-306-8.html குற்றவாளிகள் தண்டனையிலிருந்து தப்பக்கூடாது, நிரபராதிகள் தண்டிக்கப்படக்கூடாது என்ற உயரிய எண்ணத்தை மையமாக வைத்து காவல் புலன்விசாரணை அதிகாரங்கள், அணுகுமுறைகள் மற்றும் நுணுக்கங்கள் என்ற தலைப்பில் 1034 பக்கங்களுடன் 25 தலைப்பகளில் 2 பாகம் கொண்ட நூலை வீ. சித்தண்ணன் எழுதி உள்ளார். இவர் 35 ஆண்டுகள் காவல் துறையில் […]

Read more
1 8 9 10 11 12