குற்றாலக் குறிஞ்சி

குற்றாலக் குறிஞ்சி, டாக்டர் கோவி மணிசேகரன், பூம்புகார் பதிப்பகம், பக். 356, விலை 275ரூ. சாகித்ய அகாடமி விருது பெற்ற, வரலாற்று இசை ஞானப் புதினம் இது. கதையின் நாயகி, குறிஞ்சி பிறப்பால் புலைச்சியாயினும், பிறவி இசை மேதை. மக்களுக்காக மக்கள் மத்தியில் மட்டுமே பாடும் உறுதி. சமஸ்தானங்கள், ஜமீன்தாரர்கள், கலெக்டர்கள், வெள்ளைக்கார துரைகள் முதலியோர் ரசிப்பதற்காக அவர்களுக்காக பாடமாட்டேன் என்ற வைராக்கியம், நம்மை பிரமிக்க வைக்கும். கலைகளை வளர்த்த தஞ்சை சரபோஜி மன்னரே, அவளைக் காதலிக்கிறார். பின் தன் மகன் சிவாஜியும் அவளை […]

Read more

கு.மா. பாலசுப்பிரமணியம் திரை இசைப்பாடல்கள்

கு.மா. பாலசுப்பிரமணியம் திரை இசைப்பாடல்கள், கவிஞர் பொன். செல்லமுத்து, மணிவாசகர் பதிப்பகம், 31, சிங்கர் தெரு, பாரிமுனை, சென்னை 108, விலை 90ரூ. சுமார் 50 ஆண்டுகளுக்கு முன் ஜி.ராமநாதன் எஸ்.எம்.சுப்பையா நாயுடு, கே.வி. மகாதேவன், டி.ஜி.லிங்கப்பா முதலிய இசை அமைப்பாளர்கள் கொடி கட்டிப் பறந்த காலத்தில், சிறந்த பாடல்கள் எழுதிய கவிஞர்களில் கு.மா. பாலசுப்பிரமணியமும் ஒருவர். அவருடைய பல பாடல்கள் இன்னும் காலத்தை வென்று வாழ்கின்றன. அவற்றில் சில, சிங்காரவேலனே தேவா (கொஞ்சும் சலங்கை), அமுதைப் பொழிதும் நிலவே(தங்க மலை ரகசியம்), சித்திரம் […]

Read more

இந்திய ஒருமைப்பாடு

இந்திய ஒருமைப்பாடு, குறித்தலை பாலா, பாலா கடம்பனேஸ்வரர் பதிப்பகம், 58, ஆர்.எம்.ஆர்.இல்லம், வைகை நல்லூர், குளித்தலை 639104, விலை 50ரூ. அன்பு, சகிப்புத்தன்மை, உதவும் குணம், சாதி சமய வேறுபாடற்ற நிலை என ஒருமைப்பாட்டிற்கு உரம் சேர்க்கும் கருத்துக்களுடன் நேர்மை, குழந்தைத் தொழிலாளர் முறை ஒழிப்பு, தன் கையே தனக்குதவி போன்ற கருத்துக்களை 10 சிறுகதைகள் மூலம் நயம்பட தந்துள்ளார் ஆசிரியர்.   —-   குழலின் மொழி, நந்தலாலா சேவா சமிதி டிரஸ்ட், 2/4, டாக்டர் ரங்கா ரோடு, மைலாப்பூர், சென்னை 4, […]

Read more

என் பிள்ளைகளுக்குப் பரீட்சை

என் பிள்ளைகளுக்குப் பரீட்சை, சுவாமி விமூர்த்தானந்தர், ராமகிருஷ்ண மடம், மயிலாப்பூர், சென்னை 4, பக். 67, விலை 25ரூ. உள்ளுணர்வுக் கதைகள் என்று அழைக்கப்பெறும் 15 சிறுகதைகள் இந்நூலில் இடம் பெற்றுள்ளன படிக்கப் படிக்கச் சிந்தனையைத் தூண்டும் விதத்தில் ஒவ்வொரு கதையும் அமைந்துள்ளது. சிறுவர்கள் விரும்பிப் படிக்கவும் நல்ல வழியில் சிந்தனையை வளர்க்கும் படியான கதைகளைக் கொண்டிருப்பது சிறப்பு. அஃறிணையிலிருந்து நாம் பாடம் கற்றுக் கொள்ள வேண்டியருக்கிறது என்பதை அந்தப் பூனைகளின் குடும்பம், கொசு தர்மம் போன்ற கதைகள் உணர்த்துகின்றன. அன்பு என்ற கதை, […]

Read more

சிவப்பு நிற மழைக்கோட்டில் ஒரு பெண்

சிவப்பு நிற மழைக்கோட்டில் ஒரு பெண், சாதத் ஹசன் மண்ட்டோ, தொகுப்பும் மொழி பெயர்ப்பும், உதயசங்கர்,  நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட், சென்னை 98, பக். 174, விலை 145ரூ. உருது மொழி இலக்கியத்தின் புகழ்பெற்ற எழுத்தாளரான சாதத் ஹசன் மண்ட்டோவின் 13 சிறுகதைகளின் தொகுப்பு இந்நூல். இந்திய சுதந்திரப் போராட்ட காலத்தில் இந்திய மக்களின் வாழ்க்கை எவ்வாறு இருந்தது என்பதை இக்கதைகள் பதிவு செய்திருக்கின்றன. நாடு சுதந்திரம் அடைவதற்கு முன்பே கொளுத்தப்பட்ட மதவெறித் தீயினால் நாடு பிரிவினைக்குள்ளானதும், அது மக்களுடைய […]

Read more

நதியின் பிழையன்று

நதியின் பிழையன்று, வெ. இன்சுவை, பாவை பப்ளிகேஷன்ஸ், 142, ஜானிஜான்கான் சாலை, ராயப்பேட்டை, சென்னை 14, விலை 90ரூ. காலம் மாறிப்போய்விட்டான். அவனுடைய வாழ்க்கை நெறிமுறைகளும் மாறிப்போய்விட்டன. சரிந்து போய்க் கொண்டிருக்கும் பண்பாட்டு சீரழிவை எப்படி சரிசெய்யப் போகிறோம்? விதவிதமான மனிதர்களைச் சுற்றி நடக்கும் நிகழ்வுகளைக் கண்டு மனம் கொதித்து தனது கோபத்தையும், ஆற்றாமையையும் அப்படியே படம் பிடித்துக் காட்டியுள்ளார் நூலாசிரியை வெ.இன்சுவை.   —-   வளம் தரும் பரிகார ஸ்தலங்கள், ஏ. ஜெயப்பிரகாஷ், ஸ்ரீ அலமு பதிப்பகம், திருவல்லிக்கேணி, சென்னை 5, […]

Read more

குமுதம் ஒரு பக்கக் கதைகள் 2007

குமுதம் ஒரு பக்கக் கதைகள் 2007, குமுதம் புதுத்தகம், 306, புரசைவாக்கம் நெடுஞ்சாலை, சென்னை 10, பக். 112, விலை 80ரூ. எழுத்துலகில் மிகப்பெரிய மைல்கல் குமுதம் ஒரு பக்கக் கதைகள். நடைமுறை வாழ்க்கையில் நாம் அன்றாடம் காணும் பிரச்னைகள், போராட்டங்கள், அன்பு, காதல், பகை, போட்டி, பொறாமை இவைதான் இந்த ஒரு பக்கக் கதைகளின் கருவாக அமைந்துள்ளன. பிரச்னைகளை மட்டும் பேசாமல் அதற்கான தீர்வையும் இந்த சின்னஞ்சிறு கதைகளிலேயே அதன் ஆசிரியர்கள் வைத்திருப்பது வியப்பு. இவர்கள் தொடாத பொருளே இல்லை என்கிற அளவிற்கு […]

Read more

ஒரு சாமானியனின் நினைவுகள்

ஒரு சாமானியனின் நினைவுகள், க. இராசாராம், நக்கீரன் பப்ளிகேஷன்ஸ், 105, ஜானிஜான்கான் சாலை, ராயப்பேட்டை, சென்னை 14, விலை 250ரூ. தமிழ்நாட்டின் மிக முக்கிய அரசியல் தலைவர்களில் ஒருவராக விளங்கியவர் க. இராசாராம். சட்டசபை சபாநாயகராகவும், அமைச்சராகவும் இருந்தவர். தி.மு.க.வில் இருந்தாலும், அ.தி.மு.க.வில் இருந்தாலும் காங்கிரஸ் உள்பட எல்லா கட்சிகளிலும் அவருக்கு நண்பர்கள் உண்டு. தமது அனுபவங்கள் பற்றி அவர் எழுதிய கட்டுரைகள், ஒரு சாமானியனின் நினைவுகள் என்ற பெயரில் புத்தகமாக வெளிவந்துள்ளது இதில், பல முக்கியமான அரசியல் நிகழ்ச்சிகள் மூடி மறைக்கப்படாமல் பதிவு […]

Read more

ஓவியமாய் ஒரு பெண்

ஓவியமாய் ஒரு பெண், யோகா, யோக சாவித் பப்ளிகேஷன்ஸ், 15/90, பாண்டி பஜார், தி.நகர், சென்னை 17, விலை 75ரூ. பிரபல புகைப்படக் கலைஞர் கலைமாமணி யோகா எழுதிய 11 சிறுகதைகள் அடங்கிய தொகுப்பே ஓவியமாய் ஒரு பெண். 11 கதைகளில் முதல் கதையாக அமைந்து நூலின் தலைப்புக்கு பெருமை சேர்த்திருக்கிறது ஓவியமாய் ஒரு பெண் சிறுகதை. அவரவர் துறையில் பிரபலமாயிருக்கிற தம்பதிகளின் அன்பின் நேசத்தை ஆழமாகவே பதிவு செய்திருக்கிறது. கணவர் குடும்பத்தில் அவரது சகோதர வட்டம் எல்லாரும், 58 வயதுக்குள் இறைவனடி சேர்ந்துவிட, […]

Read more

பாவேந்தம்

பாவேந்தம், பதிப்பாசிரியர்கள்-முனைவர்கள் இரா. இளங்குமரன், இரா. இளவரசு, கு. திருமாறன், பி. தமிழகன், கிடைக்குமிடம்-தமிழ் மண் பதிப்பகம், 2, சங்கார வேலர் தெரு, தி.நகர், சென்னை 17. பாரதிதாசன் படைப்புகள் முழுவதும். புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் எழுதிய கவிதைகள், காவியங்கள், கட்டுரைகள் அனைத்தும் 25 தொகுதிகளாக வெளியிடப்பட்டுள்ளன. பாரதிதாசன், தொடக்க காலத்தில் ஆத்திகராக இருந்தவர். அப்போது எழுதிய பக்திப் பாடல்களும் இதில் இடம் பெற்றுள்ளன. 25 தொகுதிகளையும் ஒட்டு மொத்தமாகப் பார்க்கும்போது பிரமிப்பு ஏற்படுகிறது. பாவேந்தர் படைப்புகள் அனைத்தையும் ஒன்று சேர்த்து இவ்வளவு தொகுதிகளை வெளியிடுவது […]

Read more
1 61 62 63 64 65 80