சிறுவருக்கு மகாபாரதம்

சிறுவருக்கு மகாபாரதம், பழனியப்பா பிரதர்ஸ், விலை 150ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0001-146-0.html மகாபாரதம் மகா சமுத்திரம் போன்றது. இதில் உள்ள கதைகளை, எளிய தமிழ் நடையில் அழகாக வடித்திருக்கின்றனர். பகாசுரன் கதை, அபிமன்யூ வீரம் ஆகியவை உட்பட, 170 சம்பவங்கள் கதைகளாக வண்ணப்படத்துடன் அமைந்திருக்கின்றன.   —-   சிந்தனைத் துளிகளும் சின்னச் சின்னக் கதைகளும், கு.வெ. பாலசுப்பிரமணியன், விலை 45ரூ. சிறந்த கருத்துக்களை எளிதாக படிக்க வசதியாக எழுதப்பட்ட நூல். நூற்றாண்டு கால வழியும் இதில் […]

Read more

கிராமத்து ராட்டினம்

கிராமத்து ராட்டினம், ஜி. மீனாட்சி, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், 41பி, சிட்கோ இன்டஸ்ட் ரியல் எஸ்டேட், அம்பத்தூர், சென்னை 98, விலை 85ரூ. இயல்பு எல்லையைத் தாண்டாமல் கதை சொல்வதென்பது சிலருக்கு வரம். அப்படியொரு வரம் வாய்க்கப்பெற்றவர் எழுத்தாளர் ஜீ. மீனாட்சி என்பது இந்த நூலில் அவர் படைத்திருக்கும் பதினோரு கதைகளிலுமே தெரிகிறது. வாழ்க்கைச் சக்கரம் எப்போதுமே மேலே இருந்தவர்களை கீழே தள்ளியும், கீழே இருந்தவர்களை மேலே உயர்த்தி வைத்தும் தன் கண்ணாமூச்சி ஆட்டத்தை தொடர்ந்துகொண்டிருக்கிறது என்பதை இவரது கிராமத்து ராட்டினம் கதை […]

Read more

கண்டதைச் சொல்கிறேன்

கண்டதைச் சொல்கிறேன், விகடன் பிரசுரம், 757 அண்ணாசாலை, சென்னை 2, விலை 65ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0000-805-8.html திருமணம் சம்பந்தமான வழக்குகள் அதிகமாகிக் கொண்டே வருகின்றன. பல பொய்களைச் சொல்லி ஏமாற்றித் திருமணம் செய்வது, வரதட்சணைக் கேட்டு சித்திரவதை செய்வது, பல பெண்களைத் திருமணம் செய்வது இப்படி பலவிதமான வழக்குகள் கோர்ட்டுக்ளுக்கு வந்த வண்ணம் உள்ளன. இதுபற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த எண்ணிய வழக்கறிஞர் சுமதி, ஒவ்வொரு குற்றங்களுக்கும் ஒரு சிறுகதையை எழுதி, அந்தக் குற்றம் எந்தப் பிரிவகளின் […]

Read more

சாலப்பரிந்து

சாலப்பரிந்து, நாஞ்சில் நாடன், க. மோகன ரங்கன் (காலச்சுவடு நவீனத் தமிழ் கிளாசிக் சிறுகதை வரிசை), காலச்சுவடு பதிப்பகம், 669, கே.பி. சாலை, நாகர்கோவில் 629001, பக். 238, விலை 190ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0000-797-3.html இலக்கிய தரமான சிறுகதைகளையும், நாவல்களையும் எழுதியுள்ள நாஞ்சில் நாடன், சாகித்ய அகடமி விருதாளர், ஒரு நோக்கத்தோடு பேனாவைப் பிடித்திருக்கும், இவருடைய படைப்பகக்களில் சமுதாயம் பற்றிய பிரக்ஞை சற்று அதிகமாக இருக்கும். வீட்டுக்கும் வெளியே அவருக்கு கிடைத்த அனுபவங்கள், வாசகர்களுக்கு இலக்கியமாக […]

Read more

சுந்தர காண்டம்

சுந்தர காண்டம், கிரி டிரேடிங் ஏஜென்சி, டி.எஸ்.வி. கோவில் தெரு, மைலாப்பூர், சென்னை 4, விலை 225ரூ. இலங்கை மன்னன் ராவணனால் கவர்ந்து செல்லப்பட்ட சீதையை இலங்கை சென்று சீதையைக் கண்டுபிடித்து அனுமன் வெற்றியுடன் திரும்புவதே சுந்தரகாண்டம். சக்கரவர்த்தி திருமகளான ராமபிரானின் கட்டளைப்படி சீதையைத் தேடி வந்த வானர படை தென் சமுத்திரக்கரை வந்து சேர்ந்தது. எங்ஙனம் கடலைத் தாண்டுவது என்று அவர்கள் கவலையில் சோர்ந்திருந்தபோது, ஜாம்பவனான் ஆஞ்சநேயனுக்கு அவருள் உறைந்துகொண்டிருந்த அளப்பரிய செயலாற்றலை நினைவுபடுத்தி, புத்துணர்ச்சியுடன் வீறுகொண்டு எழச் செய்கிறார்.அதனால் உத்வேகமடைந்த அனுமன் […]

Read more

கண்சிமிட்டும் நேரத்தில்

கண்சிமிட்டும் நேரத்தில், ஆர். மணிமாலா, கற்பகம் புத்தகாலயம், 4/2, சுந்தரம் தெரு, தியாகராயநகர், சென்னை 17, விலை 60ரூ. தொலைக்காட்சியில் பணியாற்றும் நிவேதிதா மற்றும் சசிதரன் என்ற 2 கதாபாத்திரங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட நாவல் கண்சிமிட்டும் நேரத்தில். இதில் நல்ல நட்போ, கெட்ட நட்போ, நம்மை சரிபாதின்னு சொல்கிற ஆத்மாவிடம் எதையும் மறைக்கக்கூடாது என்ற உயர்ந்த தத்துவமும் எடுத்துக் கூறப்பட்டுள்ளது. சொல் நயத்துடன் அன்றாட நிகழ்வுகளை அருமையாக நூல் ஆசிரியர் தொகுத்துள்ளார்.   —-   பால்பண்ணைத் தொழில்கள் வங்கிக் கடனுதவி, அரசு […]

Read more

ஆஸ்திரேலிய ஆதிவாசிக் கதைகள்

ஆஸ்திரேலிய ஆதிவாசிக் கதைகள், தமிழில் மாத்தளை சோமு, தமிழ்க்குரல் பதிப்பகம், 10, புலியோன் பஜார், இரண்டாவது சந்து, திருவல்லிக்கேணி, சென்னை 5, பக். 270, விலை 180ரூ. கல்தோன்றி மண் தோன்றாக் காலத்தோடு முன்தோன்றிய மூத்தகுடி எனத் தமிழர்களின் தொன்மையை நிலை நிறுத்துவது, போலவே நூலாசிரியர்கள் முயற்சி அமைந்திருப்பதைப் பாராட்டலாம். ஏழு கடல் தாண்டி, ஏழு மலை தாண்டி என தமிழில் பாட்டி கால கதைகளை ஞாபகமூட்டும் வகையில் நூலின் முதல் கதையான கடவுளை நோக்கி ஒரு பயணம் அமைந்துள்ளது. பெரியதும், சிறியதுமான 94 […]

Read more

எழுதித் திரிந்த காலம்

எழுதித் திரிந்த காலம், புதுவை ரா. ரஜினி, புதுவை ரா.ராஜினி, புதுச்சேரி, பக். 128, விலை 150ரூ. பல்வேறு இதழ்களில் எழுதிய 22 கட்டுரைகள், நூலாசிரியரின் 2 நேர்காணல்கள் தொகுக்கப்பட்டு இந்நூலில் சுவையாகப் பரிமாறப்பட்டுள்ளன. நமது வாழ்க்கையில் அன்றாடம் சந்திக்கும் நபர்கள், நிகழ்வுகள் இந்தக் கட்டுரைகளில் பதிவாகியிருக்கிறன்றன. எல்லாருடைய வாழ்க்கையிலும் இந்த கட்டுரைகளில் விவரிக்கப்பட்டிருக்கும் அனுபவங்கள் இருந்திருக்கும் என்றாலும், இக்கட்டுரைகளைப் படிக்கும்போது இனம்புரியாத வாசிப்பின்பம் ஏற்படுகிறது என்பது என்னவோ உண்மை. எழுத்தாளர் கி. ராஜநாராயணனுடன் நூலாசிரியர் பழகிய அனுபவம் சல்யூட் என்ற கட்டுரையில் நமது […]

Read more

மானாவாரிப்பூ

மானாவாரிப்பூ, மேலாண்மை பொன்னுசாமி, கங்கை புத்தக நிலையம், 23, தீனதயாளு தெரு, தி.நகர், சென்னை 17, விலை 299ரூ. 34 சிறுகதைகளின் தொகுப்பே இந்நூல். தமிழர் தந்தை சி.பா. ஆதித்தனார் இலக்கிய பரிசு பெற்றள்ள இந்நூலில் சாதி, ஏழ்மை என பல்வேறு கருக்களை மையமாகக் கொண்டு படைப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு கதையையும் விறுவிறுப்பாகவும், படித்துத்தூண்டும் வகையிலும் எழுதியிருப்பதில் ஆசிரியரின் கைவண்ணம் புலனாகிறது. சிறுகதைகள் ஒவ்வொன்றும் யதார்த்தமாக அதே நேரம் சிந்தனையை தூண்டும் வகையில் எழுதப்பட்டு உள்ளது இதன் சிறப்பு.   —-   சனிக்கிரகத்தின் […]

Read more

இனிக்கும் முதுமைக்கும் இனிய யோசனைகள்

இனிக்கும் முதுமைக்கும் இனிய யோசனைகள், டாக்டர் ஜி. லாவண்யா, நர்மதா பதிப்பகம், 10, நானா தெரு, பாண்டிபஜார், தி.நகர், சென்னை 17, விலை 55ரூ. முதுமையில் ஏற்படும் மன உளைச்சல், நோய்கள் ஆகியவற்றை முன்கூட்டியே தடுப்பது எப்படி? அதற்கான உணவு மற்றும் இயற்கை மருத்துவ முறை என்ன? முதுமைக்கான யோகாசன குறிப்புகள், நீரிழிவை தடுப்பது எவ்வாறு என்பது போன்ற பல தகவல்கள் சுவைபட கூறப்பட்டுள்ளன.   —-   கணவர்தான் எனக்கு எல்லாமே, ந. சந்திரன், மணிமேகலைப் பிரசுரம், 7, தணிகாசலம் சாலை, தி.நகர், […]

Read more
1 65 66 67 68 69 80