விவேகானந்தரைப் பற்றி விவேகானந்தர்

விவேகானந்தரைப் பற்றி விவேகானந்தர், ஸ்ரீ ராமகிருஷ்ண மடம், மயிலாப்பூர், சென்னை 4, பக். 481, விலை 100ரூ. சுவாமி விவேகானந்தர் தம்மையும் தமது வாழ்க்கை நிகழ்வுகளையும் பற்றி எழுதியுள்ள மிக அரிதான நூல் இது. ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்சரின் சீடனாக விவேகானந்தர் ஆனதும், தன் குருவின் வாழ்க்கை வரலாற்றைப் பற்றி அவர் விவரிப்பதும் ஒரு ஆன்மிக நாவல்போல் விரிகிறது. சிகாகோ சர்வதேச மகாசபையில் அவர் ஆற்றிய உரையும் அவர் இந்தியாவிற்குத் திரும்பி வர வேண்டிய அவசியமும் படிக்கும்போது நம் உடலில் ஒரு புது உணர்வு எழுகிறது. […]

Read more

இக்கால மொழியியல் அறிமுகம்

இக்கால மொழியியல் அறிமுகம், கு.பரமசிவம், அடையாளம், புத்தாநத்தம், திருச்சி மாவட்டம், பக். 70, விலை 160ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0002-174-8.html மொழியியல் என்பது ஓர் அறிவியல். இது மொழியைக் கற்பிப்பதற்குப் பயன்படுகிறது. அதுமட்டுமின்றி, பேச்சு சிகிச்சையிலும் மொழியியல் பயன்படுகிறது. இக்காலத்துக்குத் தேவையாக இருக்கிறது. 26 ஆண்டுகளுக்குப் பிறகு இந்நூல் மறுபதிப்புச் செய்யப்பட்டிருப்பது இந்தக் காலத்தின் தேவையை நிறைவு செய்கிறது. மொழியியல் என்றால் என்ன என்று விளக்குவதில் ஆரம்பிக்கும் நூல். இக்கால மொழியியலின் அடிப்படைக் கொள்கைகளை அறிமுகப்படுத்துகின்றது. ஒலியன், […]

Read more

சர்வதேச பயங்கரவாதமும் இந்திய பயங்கரவாதமும்

சர்வதேச பயங்கரவாதமும் இந்திய பயங்கரவாதமும், டி.ஞானையா, அலைகள் வெளியீட்டகம், சென்னை 24, பக். 416, விலை 260ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0000-504-4.html உலக அளவிலும் இந்தியாவிலும் உள்ள பயங்கரவாத இயக்கங்களின் போக்குகளைப் படம்பிடித்துக் காட்டும் நூல். அரசை எதிர்ப்பவர்கள் மட்டுமல்ல, அரசை நடத்துகிறவர்களும், பயங்கரவாதத்தன்மையுடன் செயல்படுகிறார்கள் என்றும், இதற்கு உதாரணமாக இந்தியாவில் 20ஆம் நூற்றாண்டின் துவக்க காலக்கட்த்தில் ஜாலியன்வாலாபாக் படுகொலையை பயங்கரவாதத்தன்மையுடன் பிரிட்டிஷ் ராணுவம் நிகழ்த்தியதை நூல் சுட்டிக்காட்டுகிறது. பிரிட்டிஷ் அரசை எதிர்த்துப் போராடிய பகத்சிங் போன்றவர்களும் பயங்கரவாதிகள் […]

Read more

ஐயம் அகற்று

ஐயம் அகற்று, கண்ணதாசன் பதிப்பகம், 23, கண்ணதாசன் சாலை, தியாகராய நகர், சென்னை 17 To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0002-143-3.html கண்ணதாசன் கேள்வி – பதில், கவிஞர் கண்ணதாசன் தென்றல் பத்திரிகை நடத்திய காலகட்டத்தில் ஐயம் அகற்று என்ற தலைப்பில் கேள்வி பதில் பகுதியை எழுதினார். அவற்றை தொகுத்து ஐயம் அகற்று என்ற பெயரில் இப்போது புத்தகமாக கண்ணதாசன் பதிப்பகம் வெளிவந்துள்ளது. காரசாரமான பதில்கள், நகைச்சுவையான பதில்கள், இலக்கியச்சுவையான பதில்கள்… இப்படி பலவிதமான பதில்களை கவிஞர் அளித்துள்ளார். படித்து […]

Read more

புறநானூறும் திருக்குறளும் ஒப்பாய்வு

புறநானூறும்  திருக்குறளும் ஒப்பாய்வு, ஒளி பதிப்பகம், 4-63, டாக்டர் ரங்கா சாலை, சென்னை 18, விலை 150ரூ. புறநானூறு, சங்க கால மன்னர்களின் வீரத்தை உணர்த்த வந்த நூல். திருக்குறள் மக்களுக்கு அறம் உணர்த்த வந்த நூல். இந்த இரு நூல்களின் அறிமுகம், தொடர், ஒப்புமை, பொருள் ஒப்புமை, ஒற்றுமை வேற்றுமைக் கூறுகள் என ஐந்து பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு அதில் புதிய கருத்துக்களை சிறப்புகளைப் பட்டியலிட்டு காட்டுகிறது இந்நூல். புறநானூற்றில் அமைந்துள்ள வரலாற்றுக் களஞ்சியங்கள், கவின் தொடர்கள், உள்ளம் கவர் அறக்கருத்துகள் ஆகியவை படிப்போரின் […]

Read more

வனசாட்சி

வனசாட்சி, தமிழ்மகன், உயிர்மை பதிப்பகம், 11/29, சுப்பிரமணியம் தெரு, அபிராமபுரம், சென்னை 18, விலை 225ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0000-811-7.html கண்ணீர்த்தோட்டம் வறுமையில் இருந்த மக்களை வளமான வாழ்வு என்று ஏமாற்றி தேயிலைத் தோட்டங்களில் சிதைத்ததை விளக்கிய டேனியலின் எரியும் பனிக்காடு நாவலைப் போன்று தமிழகத்திலிருந்து கடல்வழியாக இலங்கைக்குச் சென்று உழன்ற மக்களின் சுமார் 200 ஆண்டு கதையைச் சொல்கிறது எழுத்தாளர் தமிழ்மகனின் வனசாட்சி. வடஇலங்கையில் கரையிறங்கி வழியெங்கும் அவஸ்தைகளை அனுபவித்து, குற்றுயிராக முன்பின் அறிமுகமே இல்லாத ஹட்டன் […]

Read more

வந்தாங்க ஜெயிச்சாங்க,

வந்தாங்க ஜெயிச்சாங்க, மணவை பொன். மாணிக்கம், கற்பகம் புத்தகாலயம், 402, சுந்தரம் தெரு, தி.நகர், சென்னை 17, பக். 207, விலை 130ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0001-879-7.html சாதிக்கத் துடிப்பவர்களுக்கு சாதனையாளர்களைப் பற்றி மட்டும் போதித்தால் போதுமா? அவர்களின் மனதில் பொதிந்து கிடக்கும் உண்மைகளையும் சேர்த்துத் தந்தால்தான் அது முழுமையடையும் என அவர்களின் மொழிகளிலேயே கொட்ட வைத்திருக்கிறார் ஆசிரியர். வைரமுத்து முதல் மயில்சாமி வரை கலைத்துறையைச் சேர்ந்த 70 சாதனையாளர்களின் வாழ்க்கையை சாறாக்கித் தரும் உத்தியிது. சாதனையாளர்களின் குடும்பப் […]

Read more

ஸ்ரீ அரவிந்தர் வாழ்க்கை வரலாறு

ஸ்ரீ அரவிந்தர் வாழ்க்கை வரலாறு, பி. கோதண்டராமன், பழனியப்பா பிரதர்ஸ், கோனார் மாளிகை, 25, பீட்டர்ஸ் சாலை, சென்னை 14, பக். 362, விலை 160ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0001-152-5.html ஆன்மிகப் பேருலகை வளப்படுத்தி, மக்களை நல்வழிப்படுத்த பல மகான்கள் அவ்வப்போது அவதரித்தவண்ணம் உள்ளனர். அவர்களுள் கொல்கத்தாவில் அவதரித்த பகவான் ஸ்ரீ அரவிந்தர் குறிப்பிடத்தக்கவர். நாட்டுக்காகப் பல அருஞ்செயல்களைச் செய்தவர். விடுதலைப் போராட்டத்தில் தீவிரமாக ஈடுபட்டு சிறையிலிருந்தவர். வங்காளப் பிரிவினையை எதிர்த்து மக்கள் பேரெழுச்சி செய்தபோது, அவ்வியக்கத்தில் தம் […]

Read more

அரசு பதில்கள்

அரசு பதில்கள், குமுதம் பு(து)த்தகம், 306, புரசைவாக்கம் நெடுஞ்சாலை, சென்னை 10, பக். 192, விலை 150ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0001-307-4.html கலை, இலக்கியம், சினிமா, அரசியல், சமூகம், அறிவியல், உலக அறிவு, நாடகம், விளையாட்டு, மொழிபெயர்ப்பு, விமரிசனம் என்று எல்லாமும் அடங்கிய ஒரு கருத்துப் பெட்டகம்தான் அரசு பதில்கள். ஒவ்வொரு பதிலிலும் வாழைப்பழத்தில் ஊசிஏற்றுவதுபோல ஒரு விமர்சனம் இருக்கும். எல்லா பதிலும் ஆழ்ந்த பட்டறிவும் ஒரு தேடலும் இருக்கும். வயது வித்தியாசம் இன்றி ரசிக்க முடியும். இந்தியாவின் […]

Read more

தமிழ்நாட்டுப் பாளையக்காரர்களின் தோற்றமும் வீழ்ச்சியும்

தமிழ்நாட்டுப் பாளையக்காரர்களின் தோற்றமும் வீழ்ச்சியும், பேராசிரியர் கே. ராஜய்யன், தமிழில்-நெய்வேலி பாலு, கருத்துப்பட்டறை, 2, முதல்தளம், மிதேசு வளாகம், 4வது நிறுத்தம், திருநகர், மதுரை 6, விலை 120ரூ. முதலாவது இந்திய சுதந்திரப் போராட்டம் என்று சொல்லப்படும் சிப்பாய்க் கலகம் வட இந்தியாவில் நடந்தது 1857ல். அதற்கு 50 ஆண்டுகளுக்கு முன்னதாகவே விடுதலை வேள்வி தென் இந்தியாவில் குறிப்பாகத் தமிழகத்தில் வளர்த்தெடுக்கப்பட்டது. அந்த வீரக் கதையின் அழுத்தமான வரலாறுதான் இது. அந்தக் காலத்தில் இருந்த நிர்வாக அமைப்பு என்பது பாளையங்கள். இதனை ஆட்சி செய்தவர்கள் […]

Read more
1 90 91 92 93 94 104