ராமனும் ராமசாமியும்

ராமனும் ராமசாமியும், ம. பிரகாஷ், காவ்யா, 16, இரண்டாம் குறுக்குத் தெரு, டிரஸ்ட்புரம், கோடம்பாக்கம், சென்னை 24, விலை 150ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0001-313-6.html ராமாயணத்தை பெரியார் எதிர்த்ததற்கான காரணங்கள் குறித்து நூலில் விரிவாக எழுதியுள்ளார் ஆசிரியர். கந்தபுராணத்தை அடிப்படையாக வைத்தே ராமாயணமும் எழுதப்பட்டுள்ளத என்றும் அவர் சான்றுகளுடன் விளக்கியுள்ளார்.பெரியாரைத் தொடர்ந்து எம்.ஆர்.ராதா, பாரதிதாசன் உள்ளிட்டோர் ராமாயணத்தை எதிர்த்து வெளியிட்டுள்ள கருத்துக்களையும் நூலில் தொகுத்துள்ளார் ஆசிரியர். நன்றி: தினதந்தி,11/9/2013.   —-   இலக்கிய நுகர்ச்சி, இரா. குமரவேலன், […]

Read more

வாலி சிறுகதைகள்

வாலி சிறுகதைகள், கவிஞர் வாலி, வாலி பதிப்பகம், சென்னை 17, பக். 112, விலை 80ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0001-867-0.html இந்தப் புத்தகத்தில் நறுக்குத் தெரித்தாற்போல உள்ள இந்த ஆறு சிறுகதைகளுமே வாலியின் கற்பனைக்கும் கருத்துக்கும் கவிதா விலாசத்தையும் பறைசாற்றுகின்றன. சிறுகதைகள்தான் தன் எழுத்துக்கு பிள்ளையார் சுழி என்று முகவுரையில் சொல்லியிருக்கிறார். முதலில், சங்கீத குரு நம்பூதிரியின் பெண்ணை குரு என்பவன் மணக்கும் கலப்பின சங்கீதக் காதல், கதை முழுவதும் துக்கடாக்கள். சில இடங்களில் ராகமாலிகா, இரண்டாவது கதை, […]

Read more

அரசு பதில்கள்

அரசு பதில்கள், குமுதம் பு(து)த்தகம், 306, புரசைவாக்கம் நெடுஞ்சாலை, சென்னை 10, பக். 192, விலை 150ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0001-307-4.html கலை, இலக்கியம், சினிமா, அரசியல், சமூகம், அறிவியல், உலக அறிவு, நாடகம், விளையாட்டு, மொழிபெயர்ப்பு, விமரிசனம் என்று எல்லாமும் அடங்கிய ஒரு கருத்துப் பெட்டகம்தான் அரசு பதில்கள். ஒவ்வொரு பதிலிலும் வாழைப்பழத்தில் ஊசிஏற்றுவதுபோல ஒரு விமர்சனம் இருக்கும். எல்லா பதிலும் ஆழ்ந்த பட்டறிவும் ஒரு தேடலும் இருக்கும். வயது வித்தியாசம் இன்றி ரசிக்க முடியும். இந்தியாவின் […]

Read more

ஸ்ரீ அரவிந்தர் வாழ்க்கை வரலாறு

ஸ்ரீ அரவிந்தர் வாழ்க்கை வரலாறு, பி. கோதண்டராமன், பழனியப்பா பிரதர்ஸ், கோனார் மாளிகை, 25, பீட்டர்ஸ் சாலை, சென்னை 14, பக். 362, விலை 160ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0001-152-5.html ஆன்மிகப் பேருலகை வளப்படுத்தி, மக்களை நல்வழிப்படுத்த பல மகான்கள் அவ்வப்போது அவதரித்தவண்ணம் உள்ளனர். அவர்களுள் கொல்கத்தாவில் அவதரித்த பகவான் ஸ்ரீ அரவிந்தர் குறிப்பிடத்தக்கவர். நாட்டுக்காகப் பல அருஞ்செயல்களைச் செய்தவர். விடுதலைப் போராட்டத்தில் தீவிரமாக ஈடுபட்டு சிறையிலிருந்தவர். வங்காளப் பிரிவினையை எதிர்த்து மக்கள் பேரெழுச்சி செய்தபோது, அவ்வியக்கத்தில் தம் […]

Read more

வந்தாங்க ஜெயிச்சாங்க,

வந்தாங்க ஜெயிச்சாங்க, மணவை பொன். மாணிக்கம், கற்பகம் புத்தகாலயம், 402, சுந்தரம் தெரு, தி.நகர், சென்னை 17, பக். 207, விலை 130ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0001-879-7.html சாதிக்கத் துடிப்பவர்களுக்கு சாதனையாளர்களைப் பற்றி மட்டும் போதித்தால் போதுமா? அவர்களின் மனதில் பொதிந்து கிடக்கும் உண்மைகளையும் சேர்த்துத் தந்தால்தான் அது முழுமையடையும் என அவர்களின் மொழிகளிலேயே கொட்ட வைத்திருக்கிறார் ஆசிரியர். வைரமுத்து முதல் மயில்சாமி வரை கலைத்துறையைச் சேர்ந்த 70 சாதனையாளர்களின் வாழ்க்கையை சாறாக்கித் தரும் உத்தியிது. சாதனையாளர்களின் குடும்பப் […]

Read more

தமிழ்நாட்டுப் பாளையக்காரர்களின் தோற்றமும் வீழ்ச்சியும்

தமிழ்நாட்டுப் பாளையக்காரர்களின் தோற்றமும் வீழ்ச்சியும், பேராசிரியர் கே. ராஜய்யன், தமிழில்-நெய்வேலி பாலு, கருத்துப்பட்டறை, 2, முதல்தளம், மிதேசு வளாகம், 4வது நிறுத்தம், திருநகர், மதுரை 6, விலை 120ரூ. முதலாவது இந்திய சுதந்திரப் போராட்டம் என்று சொல்லப்படும் சிப்பாய்க் கலகம் வட இந்தியாவில் நடந்தது 1857ல். அதற்கு 50 ஆண்டுகளுக்கு முன்னதாகவே விடுதலை வேள்வி தென் இந்தியாவில் குறிப்பாகத் தமிழகத்தில் வளர்த்தெடுக்கப்பட்டது. அந்த வீரக் கதையின் அழுத்தமான வரலாறுதான் இது. அந்தக் காலத்தில் இருந்த நிர்வாக அமைப்பு என்பது பாளையங்கள். இதனை ஆட்சி செய்தவர்கள் […]

Read more

ஜெருசலேம் அழியா நகரத்தின் கதை

ஜெருசலேம் அழியா நகரத்தின் கதை, பா. முருகானந்தம், பழனியப்பா பிரதர்ஸ், சென்னை 14, பக். 267, விலை 210ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0001-033-9.html இன்றைய இஸ்ரேல் நாட்டின் தலைநகரமான ஜெருசலேம் நகரத்தின் ஏழாயிரம் ஆண்டு காலவரலாற்றுப் பின்னணியைப் பேசும் நூல் இது. கிறிஸ்தவர்களின் புண்ணிய பூமி ஜெருசலேம் என்ற பொதுவான நம்பிக்கையை தகர்த்து முஸ்லீம்களுக்கும் ஜெருசலேம் ஒரு புண்ணிய பூமி என்பதை நூல் விளக்குகிறது. இயேசு கிறிஸ்து இந்த நகரத்தில்தான் சிலுவையில் அறையப்பட்டார் என்பதால் கிறிஸ்துவர்களுக்கு ஜெருசலேம் புண்ணிய […]

Read more

அகத்தியர் முதல் வாரியார் வரை சித்தர்கள் 60 பேர் வாழ்வும் வாக்கும்

அகத்தியர் முதல் வாரியார் வரை சித்தர்கள் 60 பேர் வாழ்வும் வாக்கும், பி.எஸ். ஆச்சார்யா, நர்மதா பதிப்பகம், 10, நானா தெரு, பாண்டிபஜார், தி.நகர், சென்னை 17, விலை 225ரூ. சித்தர்கள் தங்கள் கடும் தவத்தின் மூலம் முக்காலங்களையும் அறியும் ஆற்றல் பெற்றவர்கள் என்றும், தங்கள் பாடல்களின் மூலம் ஆன்மீகம் மற்றும் மருத்துவக் குறிப்புகளை விபரம் அறிந்தவர்கள் மட்டுமே புரியக்கூடிய பரிபாஷைகள் மூலம் வெளிப்படுத்தியவர்கள் என்றும், இவர்களைப் பற்றி பலவாறு கூறப்படுவதுண்டு. சித்தர்கள் என்றாலே திருமூலர் முதல் கோரக்கர் வரையிலான பிரசித்தி பெற்ற 18 […]

Read more

பஞ்சதந்திரம்

பஞ்சதந்திரம், சமஸ்கிருத மூலம்-விஷ்ணுசர்மன், தமிழில்-அன்னபூர்ணா ஈஸ்வரன், சதுரம் பதிப்பகம், விலை 300ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0001-158-7.html காஷ்மீரத்து பஞ்சதந்திரம் பள்ளிக்கூடப் பாடல்களில் அனேகமாக எல்லோரும் விரும்பிப் படித்திருக்கக்கூடியது பஞ்சதந்திரக் கதைகள் மட்டுமாகத்தான் இருக்கும். அதுவும் மனிதர்களை விடவும் புத்திசாலித்தனமாகப் பேசக் கூடிய நரி, காகம், பாம்பு, சிங்கம், புலி போன்றவற்றின் சாமர்த்தியம், அசட்டுத்தனம், தந்திரங்கள் எல்லாம் சிறுபிள்ளைகளாக இருந்தபோதும் சரி, வளர்ந்து பெரியவர்களான இன்றைக்கும் சரி சுவையோ சுவைதான். விஷ்ணுசர்மன் என்னும் அறிஞர் சமஸ்கிருத மொழியில் எழுதியதை மிக […]

Read more

ஈழம் சாட்சியமற்ற போரின் சாட்சியங்கள்

ஈழம் சாட்சியமற்ற போரின் சாட்சியங்கள், ஃபிரான்ஸிஸ் ஹாரிசன், தமிழில் என்.கே. மகாலிங்கம், காலச்சுவடு பதிப்பகம், 669, கே.பி.கே. சாலை, நாகர்கோவில், பக். 227, விலை 250ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0000-797-0.html ஈழ இனப்படுகொலை என்பதே சாட்சியமற்ற போராகத்தான் ஆகிவிட்டது. ஆனால் அவற்றை எவ்வளவுக்கு எவ்வளவு மறைக்க முயன்றார்களோ, அவ்வளவுக்கவ்வளவு கொலைக்கான ஆவணங்களும் சாட்சியங்களும், வாக்குமூலங்களும், உலகம் முழுக்க பரவலாகக் கிடைக்கும் விடயமாகிவிட்டது. அவற்றை முதல் முறையாக வெளியே கொண்டு வரும் நூலாக இந்நூல் விளங்குகிறது. இலங்கை பிபிசி செய்தியாளராக […]

Read more
1 755 756 757 758 759 841