பால்ய வீதி

பால்ய வீதி, தெ.சு.கவுதமன், கவி ஆதவன் புத்தகக்கருவூலம், சென்னை, பக். 80, விலை 80ரூ. அன்றாட வாழ்வின் அனுபவத்திலிருந்து வாழ்வின் அர்த்தத்தை தன் கவிதைகள் வழி தேடுகிறார் கவுதமன். அப்படிப்பட்ட கவிதைகளின் தொகுப்பே பால்யவீதி. இச்சமூகத்தின் மேல் காட்டும் கோபம் ஆத்திரம் ஆதங்கம் சோகம் எல்லாமே, இச்சமூக மாற்றத்திற்கான ஒரு பாங்காக்கிக்காட்ட முயல்கிறார். ஏதோ பொழுதுபோக்குக்காக கவிதை எழுதாமல், அடக்கமுடியாமல் போன அந்த முதல் மனிதன் அடங்கியிருந்தால் காணாமல் போயிருக்கக்கூடும் பல மூத்திரச் சந்துகள் என்று சமூகத்திற்கான மாற்றம் வேண்டிய எண்ணப்பதிவுகளாக நம் மனதிற்குள் […]

Read more

மஹா பெரியவாளும் ஏகாம்பரம் ஆகிய நானும்

மஹா பெரியவாளும் ஏகாம்பரம் ஆகிய நானும், எஸ். ஏகாம்பரநாதன், சைதன்ய மஹா பிரபு நாமபிக்ஷா கேந்திரா, சென்னை, பக். 456, விலை 250ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-305-8.html குழந்தை பருவத்திலிருந்தே ஸ்ரீ காஞ்சி மஹா பெரியவருடன் பேசிப் பழகி அவரது அன்பைப் பெற்றவரான இந்நூலாசிரியர், 1978லிருந்து 1983 வரை சுமார் 5 வருடங்கள் மஹா பெரியவருடன் சுமார் 5000 கி.மீ. தூரத்திற்கு நடைபெற்ற யாத்திரையில் பங்கேற்றவர். காஞ்சிபுரத்திலிருந்து பூனாவிற்கு அருகிலுள்ள சதாராவுக்கு கால்நடையாகவே இந்தக் கடும் பயணம் மேற்கொள்ளப்பட்டது. […]

Read more

இஸ்லாமியக் கலைப்பண்பு

இஸ்லாமியக் கலைப்பண்பு, முஹம்மது மர்மடியூக் பிஃக்தால், தமிழில் ஆர்.பி.எம்.கனி, யூனிவர்சல் பப்ளிஷர்ஸ், சென்னை, பக். 208, விலை 100ரூ. இஸ்லாமைப் பற்றிய தெளிவான அறிவைப் பெருக்கிக்கொள்ள வெளியாகியுள்ள பல அரிய நூல்களில் இந்நூலும் ஒன்று. இஸ்லாத்தில் வகுத்துள்ள வாழ்க்கை நெறிகள், எவ்வாறு எக்காலத்துக்கும் பொருத்தமாக உள்ளன என்பதைப் பற்றியும், உலக மேம்பாட்டுக்கு இஸ்லாம் எப்படி ஜீவசக்தியாய் வழிகாட்டுகிறது என்பதைப் பற்றியும் இந்நூல் விளக்குகிறது. பல இடங்களில் புனித குர்ஆனுடைய வசனங்களைத் தமிழில் மொழி பெயர்த்து அதற்கு விளக்கமும் கூறப்பட்டுள்ளது. கிறிஸ்தவர்கப் பிறந்த நூலாசிரியர், பல […]

Read more

கடவுளின் கைபேசி எண்

கடவுளின் கைபேசி எண், இ.சு. முரளிதரன், ஜீவநதி பப்ளிகேஷன்ஸ், பக். 76, விலை 200ரூ. ஈழத்துக் கவிஞர் இ.சு. முரளிதரனின் இச்சிறுகதைத் தொகுப்பு, ஈழத்து சிறுகதையின் போக்கு உலகச் சிறுகதைப் போக்குடன் இயைந்துபோகிறது என்பதற்கு உதாரணம். தொண்ணூறுகளுக்குப் பிறகான பின் நவீனத்துவப் பாணியிலான சிறுகதை வளர்ச்சிக்கு ஈழத்து அரசியல் சூழலும் பேரினவாத ஒடுக்குமுறையின் கொடூரமான நிலைமையுமே காரணம் என்பதற்கான சான்றாக கடவுளிக் கைபேசி எண் தொகுப்பு அமைந்துள்ளது. பாடக்குறிப்பு, பாராட்டுச் சான்றிதழ், கைபேசி உரையாடல், AB+ குருதியும் நீலநரியும் ஆழ்ந்த அர்த்தம் தருபவை. ஈழத்தின் […]

Read more

முதல் மனிதன்

முதல் மனிதன், ஆல்பெர் காம்யு, தமிழில் வெ. ஸ்ரீராம், க்ரியா, சென்னை, விலை 270ரூ. பிரெஞ்சு இலக்கியத்தின் பெரிய ஆதர்சம் ஆல்பெர் காம்யுதான். வெகுகாலமாக வெளியிடப்படாமல் இருந்து, சமீபத்தில் முதல் மனிதன் வெளியானபோது திசையெங்கும் பெரும் அதிர்வலைகள். சித்தாந்தம் மனிதகுல முன்னேற்றத்திற்கு உதவ வேண்டும் என்பதில் காம்யு எப்போதும் உறுதியாக இருந்தார். அதனால்தான் இப்போதும் அவருக்கான இலக்கிய மரியாதை, பகிர்வு அப்படியே இருக்கிறது. பிரெஞ்சிலிருந்து நேரடிமொழிபெயர்ப்பு என்பதால், தொனி கொஞ்சமும் குறையாமல் வந்திருக்கிறது. அவரின் குழந்தைப் பருவமும், எதிர்கொண்டபோரும், எதிர்ப்பும், தந்தை, தேடிச் சென்ற […]

Read more

நாவல் இலக்கியம்

நாவல் இலக்கியம், மா. இராமலிங்கம், மீனாட்சி புத்தக நிலையம், மதுரை, பக். 176, விலை 110ரூ. தமிழில் மிக அரிதாகத்தான் இத்தகைய திறனாய்வு நூல்கள் வெளிவருகின்றன. ஊடகங்களும் எழுத்தாளர்களும் பெருகிவிட்ட இந்நாளில் தினம்தோறும் ஒரு புத்தகம் வெளிவந்து, நமது புத்தக அலமாரியை நிரப்புகிறது. ஆனால் படைப்பிலக்கியம் வளர்ந்திருக்கும் அளவிற்கு படைப்புகளைத் திறன் கண்டு தெளியும் திறனாய்வு நூல்கள் வளரவில்லை என்ற சூழ்நிலையில் இப்புத்தகம் வெளிவந்திருக்கிறது. 1972இல் முதல் பதிப்பு கண்ட இந்த நூலுக்கு மு. வரதராசன் அணிந்துரை எழுதியிருப்பது சிறப்பு. இந்த நூல் மீண்டும் […]

Read more

பவளம் தந்த பரிசு

பவளம் தந்த பரிசு, ரேவதி, பழனியப்பா பிரதர்ஸ், சென்னை, பக். 124, விலை 50ரூ. சிறுவர்களுக்கான இலக்கியம் தமிழில் அரிதாகவே படைக்கப்பட்டு வரும் சூழலில், ரேவதியின் இதுபோன்ற நூல்கள் அதற்கு ஒரு புத்துணர்வு ஊட்டும் வகையில் அமைந்துள்ளது. கோகுலம் இதழின் சிறப்பாசிரியராக இருந்த டாக்டர் ஈ.எஸ். ஹரிஹரன் ரேவதி என்ற புனைபெயரில் எழுதிய சிறுகதைகளுக்கான கதைகள் இவை. பவளம் தந்த பரிசு, கண்மணி தந்த பரிசு, அம்பிகை தந்த பரிசு, கமலம் தந்த பரிசு, வாசுகி கேட்ட பரிசு என்ற ஐந்து கதைகளும் மரங்களை […]

Read more

அம்மா

அம்மா, வாலி, வாலி பதிப்பகம், சென்னை, பக். 88, விலை 60ரூ. சினிமாவைத் தாண்டி வாலிக்கிருந்த இலக்கியச் சிந்தனையை சுவைக்க விரும்புவோர் இந்தத் தொகுதியைப் படித்தாலே போதும். தாயை, தந்தையை, காஞ்சிப் பெரியவர், குலகுரு என்று பாடிய அவரேதான் முடிதிருத்தும் முனியனையும் பாடுகிறார். சலவைத் தொழிலாளியை, விறகு வெட்டியை, பெண்ணின் எழிலை, மின்னலை இப்படி அவர் தொடாத பொருளில்லை. அவர் பாடலில் இடம்பெற்றால் அந்தப் பொருளுக்கும் புது அர்த்தம் வந்துவிடுகிறது. தாய் பற்றிய கவிதையில் அம்மாவின் ஆன்மாவையே தரிசிக்க வைத்துவிடுகிறார். நன்றி: குமுதம், 6/8/2014. […]

Read more

தொல்காப்பியத்தில் வீரநிலைக்கால எச்சங்கள்

தொல்காப்பியத்தில் வீரநிலைக்கால எச்சங்கள், முனைவர் கு.வெ. பாலசுப்பிரமணியன், தமிழ்ப்பேராயம், எஸ்.ஆர். எம்.பல்கலைக்கழகம், காட்டாங்குளத்தூர், பக். 112, விலை 70ரூ. இசைக்குழுக்களாக வாழ்ந்த பழந்தமிழர்கள் ஒருவரோடு ஒருவர் முரண்பட்டு சண்டை போட்டதை போர் என்று சொல்லக்கூடாது. அது தமிழர்களுக்குள் எழுந்த பூசல்களே என்பதை தொல்காப்பிய வழி சொல்வது ஆய்வுக்குரியது, மாமன்னர்கள் நடத்திய கடுமையான போர்களால் மக்கள் பட்ட சொல்லொண்ணாத் துயரங்களை புலவர்கள் எடுத்துச்சொல்லி, மன்னர்களை உணரச் செய்தது போன்ற வரலாற்றுக் காலச் செய்திகளை விளக்கும் இடங்கள் அதிகம். திணைதோறும் போர், நடுகல் வழிபாடு உள்ளிட்ட செய்திகள் […]

Read more

இளையராஜாவைக் கேளுங்கள்

இளையராஜாவைக் கேளுங்கள், குமுதம் பு(து)த்தகம், சென்னை, பக். 184, விலை 120ரூ. இசைஞானி இளையராஜாவை தரிசிக்க ரசிகர்களுக்கும் வாசகர்களுக்கும் மிகப் பெரும் வாய்ப்பை உருவாக்கித் தந்தது குமுதம். வாசகர்கள் கேள்விக்கு இசைஞானி அளித்த பதில்களின் மூலம் அந்த தரிசனம் சாத்தியமானது. ஆனால் அவை வெறும் பதில்கள் மட்டுமல்ல. இசைஞானியின் வாழ்க்கையை அவரது அனுபவரீதியில், அவரே சொல்லக்கேட்ட மிகப் பெரிய பேறு அது. இசை, ஆன்மீகம், குடும்பம், நட்பு, சினிமா என்று எந்த ஒன்றைப் பற்றி பேசினாலும் அதில் தன் புகழை நாட்டாமல், உண்மைகளை வெளிப்படையாகப் […]

Read more
1 39 40 41 42 43 57