சர்க்கரை மனிதர்கள்

சர்க்கரை மனிதர்கள், புதிய தலைமுறை பதிப்பகம், 25ஏ, என்.பி.இன்டஸ்ட்ரியல் எஸ்டேட், ஈக்காட்டுதாங்கல், சென்னை 32, விலை 90ரூ. எவ்வித பிரதிபலனும் எதிர்பார்க்காமல், பிறருக்கு ஏதாவது உதவி செய்ய வேண்டும் என்று ஆர்வத்துடன் உழைப்பவர்கள் ஒவ்வொரு ஊரிலும் ஒருசிலர் இருப்பார்கள். எல்லோருக்கும் பத்திரிகைச் செய்திகளை படித்துச் சொல்வதுடன், பிழையின்றி செய்திகளைப் படிக்கும் சிறவர்களுக்கு சாக்லெட் கொடுக்கும், பேப்பர் பெருசு, எதிர்பாராமல் பிரச்சினைகளில் சிக்குவோருக்கு வட்டி இல்லாமல் பணம் கொடுத்து உதவும் சிறுவாட்டு லட்சுமி. இப்படி பெரிய மனம் படைத்த எளிய மனிதர்களை கண்டுபிடித்து சந்தித்திருக்கிறீர்களா?என்ற தலைப்புடன் […]

Read more

தமிழரின் சமையலறை மருந்துகள்

தமிழரின் சமையலறை மருந்துகள், டாக்டர் ஜி. லாவண்யா, மேகதூதன் பதிப்பகம், புதிய எண் 13, சின்னப்ப ராவுத்தர் தெரு, திருவல்லிக்கேணி, சென்னை 5, விலை 85ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0002-171-6.html இந்நூலாசிரியர் ஹோமியோபதி, சித்த மருத்துவம், ரெய்கி – தியான மருத்துவம், ஹிப்னாடிசம், யோகா, அக்குபஞ்சர் முதலான பல்வேறு இயற்கை மருத்துவ முறைகளைக் கற்பிக்கும் பேராசிரியர். இன்றைய நவீன உலகில் நாம் உண்ணும் உணவு, சுவாசிக்கும் காற்று, அருந்தும் நீர், நமது சுற்றுச்சூழல் எல்லாமே மாசடைந்து போயுள்ளன. […]

Read more

வேலூர் புரட்சியில் வீரமிகு முஸ்லிம்கள் (1806)

வேலூர் புரட்சியில் வீரமிகு முஸ்லிம்கள் (1806), செ. திவான், குமுதம் பு(து)த்தகம், 306, புரசைவாக்கம் நெடுஞ்சாலை, சென்னை 10, பக். 128, விலை 90ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0002-171-5.html வேலூர் புரட்சி உள்ளிட்ட இந்திய விடுதலைப் போரில் தங்கள் இன்னுயிரைத் தந்து, பல தியாகங்களைச் செய்த தமிழக முஸ்லிம்கள் பலரின் வரலாறு மறைக்கப்பட்டுவிட்டது. அவற்றையெல்லாம் தொகுத்து, விடுதலைப்போரில் முஸ்லிம்களின் பங்கு என்ன என்பதை உலகிற்கு உணர்த்தும் நூல் இது. தமிழகத்தில் இஸ்லாம் வேரூன்றியதிலிருந்து, கோல்கொண்டாவின் மீர் ஜும்லா, […]

Read more

வாலி சிறுகதைகள்

வாலி சிறுகதைகள், வாலி, வாலி பதிப்பகம், 12/28, சௌந்தரராஜன் தெரு, தி.நகர், சென்னை 17, பக். 112, விலை 80ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0001-867-0.html சிறுகதையோ, நெடுங்கதையோ இருந்தால் சவுக்காயிருக்க வேண்டும் அல்லது சவுக்காரமாய் இருத்தல் வேண்டும். இதுதான் சிறுகதைகளுக்கு வாலி சொல்லும் இலக்கணம். இத்தொகுப்பு முழுதும் அந்த நெடிதான் தூக்கல். சங்கீதத்திற்கு ஜாதி மதம் கிடையாது என்பதை ஒரு தாழ்த்தப்பட்ட இனத்தைச் சேர்ந்த குருவை வைத்து, கோவிந்த நம்பூதிரியின் ஜாதி வெறியை சவுக்கால் அடித்திருக்கும் அது […]

Read more

எலிக்குஞ்சுகளும் படி நெல்லும்

எலிக்குஞ்சுகளும் படி நெல்லும், ஸ்ரீரங்கராஜபுரம் துளசி, அகநி வெளியீடு, 3, பாடசாலை வீதி, அம்மையப்பட்டு, வந்தவாசி, பக். 64, விலை 30ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0002-178-7.html சுதந்திரம் வெட்டப்படுகிறது பூங்காச்செடிகள் எரிகிறது சூளை மண் மரணம். இம்மண்ணின் நாடித்துடிப்பை அரிய இந்தக் கவிதைகளே போதும். வார்த்தைகளை ஜாலமாக்கி ரசனைக்காக சில சொற்களைக் கோர்த்து கவிதையாக்கும் இந்த காலத்தில் மண்ணின் மணத்தை நுகரவைத்து, மக்களின் மனதை அறியச் செய்யும் ஹைக்கூக்களை, வாசிப்பு மனங்களில் ஆணியடித்து தொங்கவிட்டுப் போகிறார் துளசி. […]

Read more

தடங்கலுக்கு மகிழ்கிறோம்

தடங்கலுக்கு மகிழ்கிறோம், தினகரன், வைகறை பதிப்பகம், 6, மெயின்ரோடு, திண்டுக்கல், பக். 128, விலை 60ரூ. வானத்தின் அழுக்கைக்குப் பின் ஆயிரம் அர்த்தங்கள் உண்டு. ஒவ்வொரு துளியும் ஒரு உயிரின் பிறப்புக்காக. அதுபோல் வாழ்வு என்பது பிறருக்குப் பயன்பட வேண்டும். பிறருக்குப் பயன்படாத எதுவும் வாழ்வல்ல. இப்படி கட்டுரை முழுதும் இன்றைய இளைஞர்களுக்கான கருத்தாக மாற்றியிருக்கிறார் ஆசிரியர். எதிர்காலம் பற்றிய சிந்தனையை இதயத்தில் வளர்த்தவர்களே சாதனையாளர்களாக மிளிர்ந்திருக்கிறார்கள் என்று அறிவுறுத்துகிறார். அறநெறிக் கருத்துக்கள். ஆன்மீக நாட்டம். அறிவிருக்கு விருந்து. படிப்போருக்கு புதிய பாதை.   […]

Read more

கொங்கு நாட்டுப்புறக் கதைகள்

கொங்கு நாட்டுப்புறக் கதைகள், தி.பெரியசாமி, காவ்யா, சென்னை 24, பக். 176, விலை 135ரூ. மனிதவாழ்வின் பல்வேறு உணர்வுப் பூர்வமான பகுதிகளை எந்தவித அலங்காரமுமில்லாமல் வெளிப்படுத்துபவை நாட்டுப்புறக் கதைகள். இந்நூலில் 110 கொங்கு நாட்டுப்புறக் கதைகள் தொகுத்தளிக்கப்பட்டுள்ளன. கிராமத்து மக்களின் வாழ்வில் நிகழ்ந்த நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்டு, மக்களால் பல ஆண்டுகளாகச் செவி வழியாகக் கூறப்பட்ட கதைகளை, அவற்றின் சுவை குன்றாமல் எழுத்துவடிவில் தந்திருக்கிறார் நூலாசிரியர். அன்பு, நேர்மை, ஒழுக்கம், தியாகம் விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை போன்ற நற்பண்புகளைக் கொண்ட மனிதர்களையும், சுயநலம், துரோகம், […]

Read more

தேசத்தை நேசிப்போம்

தேசத்தை நேசிப்போம், இளைஞர் இந்தியா செந்தமிழ்தாசன், இளைஞர் இந்தியா புத்தகாலயம், 109, பெருமாள் கோயில் தெரு, மாதவரம், சென்னை 60, பக். 335, விலை 150ரூ. நம் தேசம் காத்த தலைவர்களின் தியாகங்களையும் பாரதத் திருநாட்டின் மாபெரும் மாண்புகளையும் ஒரு வரலாற்றுக் கண்ணோட்டத்தில் படைக்கப்பட்ட நூல். ஒரு பாரதபூமி ஒரு நாளில் ஒரு எளிய நிகழ்வில் ஒரு தனிப்பட்ட மனிதரின் முயற்சியில் விடுதலைக் கனியை எட்டிவிடவில்லை. அதற்காக தூக்குக் கயிற்றை முத்தமிட்டவர்கள், செக்கிழுத்தவர்கள், கல்லுடைத்தவர்கள், கைவிலங்கு, கால்விலங்கு, இரும்புக் குண்டுடன் வாழ்வை முடித்தவர்கள் எத்தனையோபேர். […]

Read more

விவேகானந்தரைப் பற்றி விவேகானந்தர்

விவேகானந்தரைப் பற்றி விவேகானந்தர், ஸ்ரீ ராமகிருஷ்ண மடம், மயிலாப்பூர், சென்னை 4, பக். 481, விலை 100ரூ. சுவாமி விவேகானந்தர் தம்மையும் தமது வாழ்க்கை நிகழ்வுகளையும் பற்றி எழுதியுள்ள மிக அரிதான நூல் இது. ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்சரின் சீடனாக விவேகானந்தர் ஆனதும், தன் குருவின் வாழ்க்கை வரலாற்றைப் பற்றி அவர் விவரிப்பதும் ஒரு ஆன்மிக நாவல்போல் விரிகிறது. சிகாகோ சர்வதேச மகாசபையில் அவர் ஆற்றிய உரையும் அவர் இந்தியாவிற்குத் திரும்பி வர வேண்டிய அவசியமும் படிக்கும்போது நம் உடலில் ஒரு புது உணர்வு எழுகிறது. […]

Read more

நானும் மனிதனும்

நானும் மனிதனும், இளஞ்சேரன், சம்பிரித்தி பதிப்பகம், 10, ஜானகிராம் காலனி விரிவு, அரும்பாக்கம், சென்னை 106, பக். 184, விலை 120ரூ. மனுநீதிச் சோழன், பசுக்கன்றைக் கொன்ற தன் மகனை அதே தேர்க்காலிலிட்டுக் கொன்றான். இது நீதி. மனிதர்கள் ஒவ்வொரு நாளும், ஆடு, மாடு,  கோழியென நூற்றுக்கணக்கானவற்றைக் கொன்று தின்கிறார்களே. மனுநீதிச் சோழனை முன் மாதிரியாகக் கொண்டு இந்த மனிதர்களுக்குத் தூக்குத் தண்டனை விதிக்க முடியுமா? இதுபோன்ற படிப்பினை வழங்கும் 48 சின்னஞ்சிறு கதைகளை உள்ளடக்கிய கதைகள் இவை. அத்தனையும் மனிதம் பற்றி உணர்த்துபவை. […]

Read more
1 48 49 50 51 52 57