காந்தி கணக்கு

காந்தி கணக்கு, அனிதா கு. கிருஷ்ணமூர்த்தி, சூரியன் பதிப்பகம், லியோலேபிள் கட்டடம், இடுவம் பாளையம், திருப்பூர், பக். 120, விலை 100ரூ. வ.உ.சி. கண்ணனூர் சிறையில் இருந்தபோது தென் ஆப்பிரிக்காவில் வாழ்ந்து வந்த வேதியன்பிள்ளை என்பவர் ரூ. 5000த்தை, வ.உ.சியிடம் ஒப்படைத்துவிடுமாறு, காந்தியடிகளிடம் கொடுத்து அனுப்பியுள்ளார். அந்தப் பணம் 8 ஆண்டுகளாக ஒப்படைக்கப்படவில்லை. பின்னர் வேதியன்பிள்ளை இந்தியாவிற்கு வந்து வ.உ.சி.யையும் அழைத்துக் கொண்டு போய் காந்தியை நேரடியாகச் சந்தித்து அப்பணத்தைப் பெற்றுத் தந்ததாக இந்நூலாசிரியர் கூறுகிறார். இது இந்திய வரலாற்றில் மறைக்கப்பட்ட நிகழ்வு என்று […]

Read more

தீராநதி நேர்காணல்கள்

தீராநதி நேர்காணல்கள், குமுதம் பு(து)த்தகம், 306, புரசைவாக்கம் நெடுஞ்சாலை, சென்னை 10, பக். 216, விலை 200ரூ. தீராநதியில் வெளியான ஜெயகாந்தன், சுஜாதா, ஐராவதம் மகாதேவன், வைரமுத்து, பாலுமகேந்திரா, மாலதி மைத்ரி, உள்ளிட்ட 15 ஆளுமைகளின் நேர்காணல்களைத் தொகுத்து குமுதம் பு(து)த்தகம் நூலாக வெளியிட்டுள்ளது. பல்துறை அறிஞர்களின் துறைசார்ந்த கருத்துக்கள், அரிய தகவல்கள் என்று புதிய உலகிற்குள் நம்மை பயணிக்க வைக்கும் நூல். கலைஞனுக்கும் சமூகத்திற்குமான ஒரு உறவை ஜெயகாந்தன் நேர்காணல் நமக்கு காட்டுகிறது. தமிழின் தொன்மையை ஐராவதம் மகாதேவன் உயர்த்திப்பிடிக்கிறார். பெண், பெண்மை, […]

Read more

இரண்டாவது சுதந்திரம் தகவல் அறியும் உரிமைச் சட்டம்

இரண்டாவது சுதந்திரம் தகவல் அறியும் உரிமைச் சட்டம், வடகரை த. செல்வராஜ், ரேவதி பப்ளிகேஷன்ஸ், புஎ. 76, பஎ.27/1, பாரதீஸ்வரர் காலனி 2வது தெரு, கோடம்பாக்கம், சென்னை 24, விலை 100ரூ. தகவல் பெற ஓர் கையேடு மத்திய அரசு கொண்டுவந்த உருப்படியான சட்டங்களில் ஒன்று தகவல் அறியும் உரிமையுச் சட்டம். இன்று அரசுத் துறைகளில் நடைபெறும் முறைகேடுகளை வெளிச்சம் போட்டுக் காட்டுவதில் தகவல் அறியும் உரிமைச் சட்டத்திற்கு முக்கியப் பங்குண்டு. பெரும்பாலும் மெத்தப் படித்தவர்களே இச்சட்டத்தை பயன்படுத்தி தகவல் அறிவதைக் காண முடிகிறது. […]

Read more

பயங்கரவாதம் நேற்று இன்று நாளை

பயங்கரவாதம் நேற்று, இன்று , நாளை, பி. ராமன், தமிழில்-ஜே.கே. இராஜசேகரன், கிழக்குப் பதிப்பகம், தெற்கு உஸ்மான் ரோடு, தி.நகர், சென்னை 17, பக். 424, விலை 290ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/978-81-8493-704-6.html எது பயங்கரவாதம்? யார் பயங்கரவாதிகள்? அவர்களை வழிநடத்தும் சித்தாந்தம் எது?பயங்கரவாதத்தை எப்படி முறியடிப்பது? போன்ற கேள்விகளுக்கு விடை சொல்வதுடன், பயங்கரவாதத்தின் வேர்களையும் கிளைகளையும் இந்நூல் தேடிச்செல்கிறது. இந்தியாவின் தலையாயப் பிரச்னையான மாவோயிஸ்டுகள் தொடங்கி உலகளவில் அச்சுறுத்தல் ஏற்படுத்திவரும் இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்புகள் வரை […]

Read more

உணர்வு பொருளாதல்

உணர்வு பொருளாதல், ஜே.பி.எம். பப்ளிகேஷன்ஸ், 2, எக்ஸ்சர்வீஸ்மென் என்க்ளேவ், அகரம் ரோடு, சேலையூர், சென்னை 73, விலை 230ரூ. ஆன்மிக தகவல்கள் மற்றும் உலகநடப்புகளை 16 தலைப்புகளில் கொண்ட புத்தகம். நூலாசிரியர் ஜே. பன்னீர்செல்வம் தெளிந்த நீரோடை போன்ற நடையில் அரிய தகவல்களை எழுதியிருக்கிறார். சமூகம் அறிய வேண்டிய ஆன்மீகத்தின் முகத்தை அறிவியல் சாயலில் இந்தப் புத்தகம் காட்டுகிறது. பண்டைக்கால இந்திய தத்துவங்களும், அண்மைக்கால இளம் அறிவியல் கோட்பாடுகளுடன் ஒத்துப் போகிறது என்பதை நூலாசிரியர் தெளிவுப்படுத்தி உள்ளார். 317 பக்கங்களை கொண்ட இந்த புத்தகம் […]

Read more

கடாஃபி வாழ்வும் வீழ்வும்

கடாஃபி வாழ்வும் வீழ்வும், பிரதீபா, நக்கீரன் பதிப்பகம், 105, ஜானி ஜான் சாலை, ராயப்பேட்டை, சென்னை 14, விலை 30ரூ. 40 ஆண்டுகளுக்கு மேலாக லிபியா நாட்டை ஆட்சி செய்த கடாபியின் வாழ்க்கை வரலாற்றை சொல்லும் நூல் இது. சர்வாதிகாரியாக செயல்பட்டாலும் கடாபிக்கு லிபிய வரலாற்றில் இடம் உண்டு என்பதை இந்த நூல் தெளிவுபடுத்தியுள்ளது. மாணவர்கள், ஆராய்ச்சியாளர்களுக்கு பயனுள்ள நூல்.   —-   ஆலந்தூர் மோகனரங்கன் கவிதைகள், வசந்தா பதிப்பகம், 26, குறுக்குத்தெரு, ஜோசப் குடியிருப்பு, ஆதம்பாக்கம், சென்னை 88, விலை 170ரூ. […]

Read more

பாம்பின் கண் (தமிழ்சினிமா ஓர் அறிமுகம்)

பாம்பின் கண், (தமிழ்சினிமா ஓர் அறிமுகம்), கிழக்குப் பதிப்பகம், 177/130, அம்மன் பில்டிங், லாயிட்ஸ் ரோடு, ராயப்பேட்டை, சென்னை 14, விலை 190ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/978-81-8493-701-5.html திரைப்படத்துறை பற்றி ஆராய்ச்சிகள் செய்து புகழ் பெற்ற க. தியோடர் பாஸ்கரன், தமிழ் சினிமா வரலாற பற்றிய இந்த நூலை எழுதியுள்ளார். இந்நூல் முதலில் ஆங்கிலத்தில் எழுதப்பட்டு, பிறகு தமிழில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. ஆங்கில நூல் ஜனாதிபதி பரிசைப் பெற்றது. தமிழின் முதல் பேசும் படமான காளிதாஸ் (1931) […]

Read more

கன்னியாகுமரி மாவட்டம் அரசியல் – சமூக வரலாறு

கன்னியாகுமரி மாவட்டம் அரசியல் – சமூக வரலாறு, தொகுப்பாசிரியர்-செ.தங்கமணி, கன்னியாகுமரி மாவட்ட வரலாற்றுப் பேரவை, 33, உட்க சாலை, சென்னை 2, பக். 240, விலை 200ரூ. கன்னியாகுமரி மாவட்ட வரலாற்றை பல்வேறு கோணங்களில் விவரித்துச் சொல்லும் நூல். கன்னியாகுமரி மாவட்டம் முட்டம் பகுதியில் கி.மு. 4000 ஆண்டுகால தடயங்கள் கிடைத்துள்ளன. எனவே அக்காலத்திலேயே மக்கள் இப்பகுதியில் வாழ்ந்திருக்கின்றனர் என்கிறது இந்நூல். ஆய்நாடு, பண்ணை சமூக அமைப்பு முறை, சங்காலத்திலும் அதற்குப் பின்பும் குமரி மாவட்டத்தில் நடந்த போர்கள், மக்கள் உரிமை இயக்கங்கள், தோள்சீலைப் […]

Read more

தரிசனம்

தரிசனம், வெ. இறையன்பு ஐ.ஏ.எஸ். குமுதம் பு(து)த்தகம், 306, புரசைவாக்கம் நெடுஞ்சாலை, சென்னை 10, பக். 88, விலை 75ரூ. மலைமேல் பயணம் செய்ய வேண்டும். பயணத்தை எங்கிருந்து தொடங்குவது சிஷ்யன் கேட்டான். ஞானி சொன்னால் மலை உச்சியிலிருந்து தொடங்கு என்று. பயணத்தைத் தொடங்க வேண்டும் என்று நினைத்த உடனேயே, இந்நேரம் நீ மலை உச்சியில் இருந்திருக்க வேண்டும் என்பதுதான் ஞானிகளின் எண்ண தரிசனம். ஆழ்மனத்திற்குள் புதைந்திருக்கும் அந்த அனுபூதி தன்மையை தரிசிக்க முடிந்தவர்களுக்கு இது எளிது என்கிறார்கள் ஞானிகள். இறையன்பும் அப்படித்தான் பேரண்டத்தைக் […]

Read more

பாவேந்தர் பாரதிதாசன் திரைத்தமிழ்

பாவேந்தர் பாரதிதாசன் திரைத்தமிழ், முனைவர் ச.சு. இளங்கோ, இசையமுது பதிப்பகம், பி3, சுங்கவரி அலுவலர் குடியிருப்பு, 75, தேவாலய முதன்மைச் சாலை, பெருங்குடி, சென்னை 96, பக். 488, விலை 180ரூ. துப்பாக்கி வயிற்றில் பீரங்கி பிறந்ததைப்போல பாரதி வழித்தடத்தில் பாரதிதாசன் தோன்றினார் என்ற நூலாசிரியரின் முன்னுரையே நூலுக்கு ஒரு கம்பீரம் தருகிறது. பாரதிதாசனின் திரைத்தமிழ் வாழ்க்கை பற்றிய ஒரு ஆய்வு நூல் இது. அவர் எழுதிய ஆயிரம் தலை வாங்கிய அபூர்வசிந்தாமணி, வளையாபதி ஆகிய திரைப்படங்களின் திரைக்கதை, உரையாடல்களை வைத்து ஆய்வு செய்துள்ளார் […]

Read more
1 47 48 49 50 51 57