அதிக ஆற்றல் வாய்ந்த மனிதர்களின் 7 பழக்கங்கள்

அதிக ஆற்றல் வாய்ந்த மனிதர்களின் 7 பழக்கங்கள், ஸ்டீபன் ஆர். கவி, தமிழில் நாகலட்சுமி சண்முகம், மஞ்சள் பப்ளிஷிங் ஹவுஸ், குர்காவ்ன் ஹரியானா, பக். 507, விலை 325ரூ. 2 கோடிப் பிரதிகள் விற்றுள்ள புத்தகம் என்ற பெருமையுடன் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு தனி மனிதரும், நான்தான் என் வாழ்வின் படைப்பு சக்தி என்று கண்டுபிடித்துக் கொள்வதுதான் வளர்ச்சி மற்றும் நம்பிக்கை குறித்த கொள்கையாக வரலாறு முழுவதும் விளங்கிவருகிறது. நன்னெறிகளை அடித்தளமாகக் கொண்டு நிர்மாணிக்கப்படுகின்ற வாழ்க்கைமுறையையும், தலைமைத்துவத்தையும் குடும்பங்களிலும் நிறுவனங்களிலும் எவ்வாறு வளர்த்தெடுப்பது என்பது […]

Read more

அன்பே யோகம்

அன்பே யோகம், தா. நீலகண்டபிள்ளை, செம்மூதாய் பதிப்பகம், 17, தாகூர் தெரு, எம்.எம்.டி.ஏ. நகர், சிட்லபாக்கம், சென்னை 64, பக். 150, விலை 80ரூ. 18 கட்டுரைகள் அடங்கிய தொகுப்பு இது. பக்தி இலக்கியங்கள் மனிதர்களை செழுமைப்படுத்தத் தோன்றியவை என்பதை சம்பந்தப்பட்ட ஆசிரியர்களின் பாக்களோடு விளக்கியிருக்கிறார் ஆசிரியர். திருமூலர், திருநாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர், புனிதவதியார், கம்பன் ஆகியோரின் பாடல்களில் பிறரிடம் அன்பு செலுத்த வேண்டும் என்கிற கருத்தை மேலோங்கியிருந்தது என்பதை உணர்த்தும் ஆசிரியர் அன்பே யோகம் என்று நூலுக்கும் தலைப்பிட்டது பொருத்தமானதே. இந்த இலக்கியங்களின் […]

Read more

ம.பொ.சி.யின் தமிழன் குரல்

ம.பொ.சி.யின் தமிழன் குரல், தொகுப்பு-தி.பரமேசுவரி, சந்தியா பதிப்பகம், பு.எண்.77, 53வது தெரு, 9வது அவென்யூ, அசோக் நகர், சென்னை 83, 3 தெகுதிகள் சேர்த்து விலை 420ரூ. தமிழக எல்லைப் பரப்பைக் காத்த தலைமகன், ம.பொ.சிவஞானம் தமிழகத்தின் முக்கியப் பகுதிகளை ஒருபுறம் கேரளத்தவரும், இன்னொரு புறம் ஆந்திரத்தவரும் எடுத்துக் கொள்ளத் துடித்தபோது பதற்றம் ஏற்பட்டது. ம.பொ.சி.க்கு மட்டும்தான். எங்கு இருந்தால் என்ன, இந்தியாவுக்குள்தானே இருக்கப்போகிறது என்று காங்கிரஸ்காரர்களும் இதையெல்லாம் சேர்த்துத்தானே நாங்கள் திராவிட நாடு கேட்கிறோம் என்று திராவிட இயக்கத்தவரும் காரணங்கள் சொல்லிக்கொண்டு இருந்தபோது […]

Read more

356 தலைக்கு மேல் கத்தி

356 தலைக்கு மேல் கத்தி, தி. சிகாமணி, பாவை பப்ளிகேஷன்ஸ், 142, ஜானி ஜான்கான் சாலை, ராயப்பேட்டை, சென்னை 14, விலை 70ரூ. கோடிக்கணக்கான மக்களின் விரலில் பட்ட மையை, ஒரு துளி பேனா மையால் அழிக்க முடியுமா? முடியும் என்று சொல்வதுதான் இந்தியா அரசியலமைப்புச் சட்டத்தின் 356 வது பிரிவு. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தின் ஆட்சியை தங்களது சுயவிறுப்பு வெறுப்பின் அடிப்படையில் கலைக்க வழிவகை அமைக்கிறது சட்டம். இந்தச் சட்டத்தால் 1976, 1980, 1991 ஆகிய மூன்றுமுறை தமிழகத்தில் ஆட்சி கலைக்கப்பட்டுள்ளது. இந்திராவின் […]

Read more

சங்கச் செவ்வியல்

சங்கச் செவ்வியல் (சங்க கிரேக்க ஒப்பீடு), முனைவர் செ. சாரதாம்பாள், மீனாட்சி புத்தக நிலையம், மதுரை 1, பக். 336, விலை 175ரூ. நீண்ட விரிவான மரபும் கட்டுக்கோப்பும் விரிவான முறைமைகளும் கொண்ட தன்மைதான் செவ்வியல். இதை ஆங்கிலத்தில் கிளாசிசம் என்பர். அத்தகைய செவ்வியல் பண்பைத் தமிழ் இலக்கியங்கள் பெற்றிருக்கின்றன. வாய்மொழி இலக்கியப் பண்புகளும் வரிவடிவ இலக்கியச் செம்மையும் ஒன்றமிடத்தில்தான் செவ்வியல் தோற்றம் பெறுகிறது என்பது நிதர்சன உண்மை. தமிழில் இலக்கியங்களில் உள்ள செவ்வியல் கூறுகளை பண்புகளை, கிரேக்க இலக்கியங்களுடன் ஒப்பிட்டு சில ஆய்வு […]

Read more

வரலாற்றில் மணிமங்கலம்

வரலாற்றில் மணி மங்கலம், அனந்தபுரம் கோ. கிருட்டின மூர்த்தி, திருக்குறள் பதிப்பகம், சென்னை 78, பக். 304, விலை 200ரூ. மகேந்திரவர்மனிடம் தோல்வி கண்ட இரண்டாம் புலிகேசி, நரசிம்மவர்மனை வெற்றிகாண காஞ்சிபுரத்துக்கு அருகில் உள்ள மணிமங்கலம் என்ற இடத்தில் போர் புரிந்து தோல்வியைத் தழுவுகிறான். இரண்டாம் புலிகேசியின் போர் முயற்சியால் பல்லவ நாடு பெரும் துன்பத்தைச் சந்தித்திருக்கிறது. இதனால் நரசிம்மவர்மன், இரண்டாம் புலிகேசியை அவன் நாட்டிலேயே அவனைத் தோற்கடிக்கிறான். அதனால் நரசிம்மவர்மன் காலத்தில் காஞ்சிரம் பல்லவருக்கு உரியதாக நிலைபெற்றது. இதனால் பல்லவ நாட்டின் முக்கிய […]

Read more

முற்பிறவி மறுபிறவி ஆதாரங்கள்

முற்பிறவி மறுபிறவி ஆதாரங்கள், விக்கிரவாண்டி வி. ரவிச்சந்திரன், மேகதூதன் பதிப்பகம், 13, சின்னப்ப ராவுத்தர் தெரு, திருவல்லிக்கேணி, சென்னை 5, விலை 150ரூ. முற்பிறவியில் காதல் நிறைவேறாமல் இறந்து போனவர்கள், மறுபிறவியில் ஒன்று சேருவதாக சில திரைப்படங்களில் பார்த்திருக்கிறோம். முற்பிறவி நினைவுகள் சிலருக்கு அபூர்வமாக வருவதுண்டு என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள் பல்வேறு நாடுகளில் முன்ஜென்ம நினைவுகள் வரப்பெற்ற சிலருடைய வாழ்க்கையை இந்நூலில் கூறுகிறார். விக்கிரவாண்டி வி. ரவிச்சந்திரன். அந்த சம்பவங்கள் விறுவிறுப்பான துப்பறியும் கதைகளைப் படிக்கும் உணர்வை ஏற்படுத்துகின்றன. மறுபிறவியில் நம்பிக்கை இல்லாதவர்களும் ரசித்துப் […]

Read more

காரியக் காமராசர் காரணப் பெரியார்

காரியக் காமராசர் காரணப் பெரியார், மே.கா. கிட்டு, தோழமை வெளியீடு, 10, 6வது செக்டர், கே.கே. நகர், சென்னை 78, விலை 125ரூ. காமராசர், பெரியார் என்னும் இரு பெரும் தலைவர்கள் ஒரே இயக்கத்தில் வளர்ந்து வெவ்வேறு திசையில் அரசியலில் பயணித்தாலும், ஒருவர் மீது மற்றவர் கொண்ட மரியாதை அரசியல் நாகரிகத்தை இந்த நூல் பறை சாற்றுகிறது. காங்கிரஸ் கட்சியை வெறுத்துக் கொண்டே, காமராசர் என்ற அந்த பெருந்தலைவரை, அவரது ஆட்சியை பெரியார் ஆதரித்து வந்திருக்கிறார் என்பது வியப்பு அளிக்கிறது. மக்கள் தொண்டாற்றிய அந்த […]

Read more

மறவர் சரித்திரம்

மறவர் சரித்திரம், வீ. ச. குழந்தை வேலுச்சாமி, முல்லை நிலையம், 9, பாரதிநகர், முதல்தெரு, தி.நகர், சென்னை 17, விலை 60ரூ. தமிழகத்தின் பழமை குடி மக்கள் என்று கூறப்படும் மறவர்கள் வாழ்ந்து வந்த பகுதிகள், நாயக்கர் அரசாட்சியில் தென்நாட்டு பகுதிகளில் மன்னவர்களாய் மறவர்கள் இருந்த பெருமைகள் உள்ளிட்ட மறவர்கள் பற்றிய பல தகவல்களை இந்நூல். நன்றி: தினத்தந்தி, 22/5/13   —-   மண்ணை அளந்தவர்கள், பழ. கோமதி நாயகம், பாவை பப்ளிகேஷன்ஸ், 142, ஜானிஜான்கான் சாலை, ராயப்பேட்டை, சென்னை 14, விலை […]

Read more

பெண் ரகசியமற்ற ரகசியங்கள்

பெண் ரகசியமற்ற ரகசியங்கள், அருவி, 10, 6வது செக்டார், கே.கே. நகர், சென்னை 78, விலை 150ரூ. பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் பெருகி வருகிற இந்தக் காலக்கட்டத்தில் பெண்களுக்கு இந்த சமூகத்தில் என்னவெல்லாம் பிரச்சினைகள் ஏற்படுகின்றன என்று கோடிட்டு காட்டி இருப்பதுடன் அந்தப் பிரச்சினைகள் வராமல் காக்கவும் வழிமுறைகள் கூறி இருப்பது சிறப்பு. பெண்கள் எப்படியெல்லாம் ஏமாற்றப்படுகிறார்கள் என அறிகிறபோது, பதற்றம் ஏற்படுவதை தவிர்க்க முடியவில்லை. பெண்கள், பெண் பிள்ளையை பெற்றவர்களின் பெண் பிள்ளைகள் அனைவரும் வாசிக்க வேண்டிய புத்தகம் இது. நன்றி: […]

Read more
1 2 3 4 5 6 9