நானும் என் எழுத்தும்

நானும் என் எழுத்தும், சுந்தர ராமசாமி, காலச்சுவடு பதிப்பகம், பக். 199, விலை 150ரூ. தமிழின முன்னோடி எழுத்தாளர்களில், எல்லோராலும் அன்புடனம், பாசத்துடனும் சு,ரா, என அழைக்கப்படுவர் சந்தர ராமசாமி. இலக்கியம், நவீனத்துவ இலக்கியம், சிறுகதை, புதினம், கட்டுரை என, பல சிந்தனைக் களங்களில் கால் பதித்த பெருமகனார், பன்மொழி வித்தகர், பல விருதுகளுக்கு உறவுக்காரர். அவரது 42 ஆண்டு கால படைப்புகள் பற்றிய பதிவுகள், கட்டுரைகள், என்னுரைகள், கேள்வி-பதில், நாட்குறிப்புகள் என, பல வகைகளில் தொகுத்து வெளியிட்டுள்ளனர் காலச்சுவடு பதிப்பகம். தமிழ் இலக்கியம் […]

Read more

குருதிப்புனல்

குருதிப்புனல், இந்திரா பார்த்தசாரதி, கவிதா பப்ளிகேஷன், 8, மாசிலாமணி தெரு, பாண்டிபஜார், தி.நகர், சென்னை 17, விலை 150ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/978-81-8368-072-1.html தமிழ்நாட்டில் நடந்த கலவரங்களில், தஞ்சை மாவட்டம் கீழவெண்மணி கிராமத்தில் நடந்த கலவரம் முக்கியமானது. மிராசுதாரர்களுக்கும், விவசாயிகளுக்கும் நடந்த தகராறில், விவசாயிகள் சுமார் 40பேர் உயிருடன் கொளுத்தப்பட்டார்கள். அவர்களில் பெரும்பாலோர் பெண்கள், குழந்தைகள், முதியவர்கள். இச்சம்பவத்தை அடிப்படையாக வைத்து, எழுத்தாளர் இந்திரா பார்த்தசாரதி எழுதிய குருதிப்புனல் சாகித்ய அகாடமி பரிசைப் பெற்ற சிறந்த நாவல். உணர்ச்சியும் […]

Read more

ராஜாஜி எழுதிய மதுவிலக்கு

ராஜாஜி எழுதிய மதுவிலக்கு, முல்லை பதிப்பகம், 323/10, கதிரவன் காலனி, அண்ணா நகர் மேற்கு, சென்னை 40, விலை 30ரூ. சுதந்திரப் போராட்டத்தில் தீவிரமாகக் கலந்து கொண்ட ரா44, மதுவிலக்கை அமல் நடத்த வேண்டும் என்பதற்காகவும், போராடி வந்தார். அதில் வெற்றியும் பெற்றார். தமிழ்நாட்டில் மதுவிலக்கு அமலுக்கு வந்தது. ஆனால் பிறகு தி.மு.க. ஆட்சியின்போது மதுவிலக்கு ரத்து செய்யப்பட்டது. சுமார் 60 ஆண்டுகளுக்கு முன் மதுவிலக்கை வலியுறுத்தி ராஜாஜி எழுதிய கட்டுரைகள், மறு பதிப்பு செய்யப்பட்டு உள்ளன. மதுவிலக்கு பற்றியும் அக்காலத்தில் ராஜாஜி நடத்திய […]

Read more

இலக்கிய உதயம்

இலக்கிய உதயம், பேராசிரியர். எஸ். வையாபுரிப் பிள்ளை, பூம்புகார் பதிப்பகம், பக். 464, விலை 250ரூ. இலக்கிய ஆராய்ச்சி ஆர்வலர்களுக்குக் கிடைத்த அறிவுக் களஞ்சியப் பேழையாக அமைந்துள்ள இந்நூல், எல்லாருக்கும் பயன்தரும் நல்ல நூல். எகிப்து, பாபிலோனியா, பாலஸ்தீனம், பாரசீகம், சீனம் ஆகிய பிற நாட்டு ஆதி இலக்கியங்களையும், நம் நாட்டு இலக்கியங்களையும் அறிந்து கொள்ள பெருந்துணையாய் அமைந்துள்ளது. வேதங்கள், புராணங்கள், பவுத்த இலக்கியங்கள் முதல் அனைத்தையும் இந்நூல் மூலம் அறிந்து கொள்ள இயல்கின்றது. இலக்கியங்களில் ஒப்பியல் ஒருமைப்பாட்டைக் காண்கிறார் நூலாசிரியர். மகாபாரதக் கதையை […]

Read more

அர்த்தமுள்ள வாழ்வுக்கு அறுபது வழிகள்

அர்த்தமுள்ள வாழ்வுக்கு அறுபது வழிகள், யு எஸ் எஸ் ஆர் நடராசன், பத்மா பதிப்பகம், 21/10, லோகநாதன் நகர், இரண்டாம் தெரு, சூளைமேடு, சென்னை 94, விலை 160ரூ. 60 அறிஞர்களின் பொன்மொழிகளை தேர்வு செய்து, அவற்றை அடிப்படையாக வைத்து கருத்தாழம் உள்ள 60 கட்டுரைகளை எழுதியுள்ளார் யு எஸ் எஸ் ஆர் நடராசன். கடந்த 60 ஆண்டு கால வாழ்க்கைப் பாதையில் நான் சந்தித்த நிகழ்வுகள், தனக்கு ஏற்பட்ட அனுபவங்கள், பயின்ற நூல்கள், வெளிநாட்டுப் பயண அனுபவங்கள் ஆகியவற்றின் அடிப்படையில் தனது ஆழ்ந்த […]

Read more

சாந்திவனத்து வேர்கள்

சாந்திவனத்து வேர்கள், ஆ. திருநாவுக்கரசு, பாவை பப்ளிகேஷன்ஸ், பக். 182, விலை 100ரூ. கிராமத்துக்கு அடிமைச் சேவகமும், சுடுகாட்டுப் பணிகளும் செய்து வாழ்கிற வெட்டியான் சங்கிலியின் குடும்பம், சாதீய ஒடுக்கு முறையால் சிதைக்கப்படுகிற அவலத்தை, மிக யதார்த்தமாக சித்தரிக்கிறார் ஆசிரியர். அவர்களோடு தங்கியிருந்து, தொழிலில், அவர்கள் அனுபவிக்கும் சிரமங்களை நேரடியாகக் கண்டு, கேட்டு, இந்த நூலை உருவாக்கியிருக்கிறார். உள்ளத்தை உருக்கும் நாவலைப் படிக்கும்போது, படிப்பவர் இதயம் கணக்கவே செய்யும். -சிவா. நன்றி; தினமலர், 23/6/2013.   —-   அகம் பொதிந்தவர்கள், கர்ணன், மெய்யப்பன் […]

Read more

மனோதிடம் ஒரு புதுமையான பெருங்கதை

மனோதிடம் ஒரு புதுமையான பெருங்கதை, குஜராத்தி மூலம் பன்னாலால் படேல், தமிழில்-ந.சுப்ரமணியன், சாகித்ய அகடமி, குணா பில்டிங்ஸ், 443, அண்ணாசாலை, தேனாம்பேட்டை, சென்னை 18, பக். 608, விலை 375ரூ. படேலுக்கு ஞான பீட விருதைப் பெற்றுத் தந்திருக்கிறது இந்த நாவல். ஒரு கிராமவாசியான இந்நூலாசிரியர் முறையான கல்வி பயிலாதவர் என்னும் செய்தி, நமக்கு வியப்பைத் தரும். அவரது அனுபவ அறிவு நாவல் முழுவதும் வெளிப்டுகிறது. குஜராத்தின் கிராமப்புறத்தைப் பின்னணியாகக் கொண்ட இந்த நாவல், 1900ம் ஆண்டுவாக்கில், அங்கு கோரத் தாண்டவமாடிய பஞ்சத்தின் விளைவுகளைத் […]

Read more

குமுதம் சக்ஸஸ்

குமுதம் சக்ஸஸ், குமுதம் பு(து)த்தகம், 306, புரசைவாக்கம் நெடுஞ்சாலை, சென்னை 10, பக். 128, விலை 25ரூ. ப்ளஸ் டூ தேர்வு முடிவுகள் வெளிவந்துவிட்டன. அடுத்து என்ன கோர்ஸ் படிப்பது? எந்த கல்லூரியில் சேர்வது? என்ற குழப்பம் பெற்றோருக்கும் மாணவர்களுக்கும். கூடவே, நமக்கெல்லாம் அண்ணா பல்கலையில் இடம் கிடைக்குமா என்ற கேள்வி எழுகிறது. அப்படியே கிடைத்தாலும் வங்கிகளில் கல்விக் கடன் கிடைக்குமா? இப்படிப் பல்வேறு கேள்விகள் உங்களுக்கு எழலாம். அவற்றிற்கெல்லாம் அந்தந்த துறை வல்லுநர்களைக் கொண்டே எளிமையாக பதில்களைக் கொடுத்திருப்பதுதான் குமுதம் சக்ஸஸ் நூலின் […]

Read more

பகவத் கீதை-விளக்க உரை சுவாமி ராமா

பகவத் கீதை-விளக்க உரை சுவாமி ராமா, கண்ணதாசன் பதிப்பகம், 23, கண்ணதாசன் சாலை, தி.நகர், சென்னை 17, பக். 560, விலை 300ரூ. பகவத் கீதையை ஏதோ மதம் சார்ந்த ஒரு கோட்பாடு அல்லது கொள்கை என்று பார்க்கக்கூடாது. அது மனித வாழ்வின் அகச் செயல்பாடுகளை அலசி ஆராய்வதாகும். உளவியலின் ஊற்றுக்கண் பகவத்கீதை என்பதே சரி. அந்த உளவியல் கோட்பாடுகளை விளக்கி அதை அனைவருக்கும் கிடைக்கச் செய்வதே இந்த உரையின் நோக்கம். உளவியல் கோட்பாடுகளை அவற்றிலிருந்து தனியே பிரித்து எடுத்து நடைமுறை வாழ்வில் அவை எவ்வாறு […]

Read more

தங்கத்தில் முதலீடு

தங்கத்தில் முதலீடு, சி. சரவணன், விகடன் பிரசுரம், 757, அண்ணாசலை, சென்னை 2, பக். 184, விலை 80ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0000-845-6.html ஸ்பானிய நாட்டுக் குகை ஒன்றில் கண்டெடுக்கப்பட்ட தங்கத்தினால் செய்யப்பட்ட ஒரு பொருள் கி.மு. 40,000ல் செய்யப்பட்டதாய்க் கண்கிக்கப்பட்டுள்ளது. தங்கத்தின் பயன்பாடு அவ்வளவு தொன்மையானது. உலக அளவில் தங்கத்தைப் பயன்படுத்துவ்தில் நாம்தான் நம்பர் ஒன் பேர்வழிகள். சென்ற 2010லம் ஆண்டில் மட்டும் தங்கத்தில் 1லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் முதலீடு செய்திருக்கிறோம் நாம். இன்றைய நிலையில் […]

Read more
1 2 3 4 9