ஐயம் அகற்று

ஐயம் அகற்று, கண்ணதாசன் பதிப்பகம், 23, கண்ணதாசன் சாலை, தியாகராய நகர், சென்னை 17 To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0002-143-3.html கண்ணதாசன் கேள்வி – பதில், கவிஞர் கண்ணதாசன் தென்றல் பத்திரிகை நடத்திய காலகட்டத்தில் ஐயம் அகற்று என்ற தலைப்பில் கேள்வி பதில் பகுதியை எழுதினார். அவற்றை தொகுத்து ஐயம் அகற்று என்ற பெயரில் இப்போது புத்தகமாக கண்ணதாசன் பதிப்பகம் வெளிவந்துள்ளது. காரசாரமான பதில்கள், நகைச்சுவையான பதில்கள், இலக்கியச்சுவையான பதில்கள்… இப்படி பலவிதமான பதில்களை கவிஞர் அளித்துள்ளார். படித்து […]

Read more

போராளியின் காதலி

போராளியின் காதலி, வெற்றிச்செல்வி, சோழன் படைப்பகம், எண்10, 6வது தெரு, முதல் செக்டார், கே.கே.நகர், சென்னை 78, விலை 120ரூ. தமிழ் ஈழப்போரின் இறுதி நாட்களில் இலங்கையில் நடந்த உண்மை சம்பவங்களை நாவலாக அளித்துள்ளார் ஆசிரியர். எத்தனை எத்தனை இடர் இன்னல்கள் அங்கு வாழும் தமிழ் மக்கள் அடைந்துள்ளனர். படிக்கும்போதே நெஞ்சம் பதறுகிறது. தரையில் கிடப்பதில் பிணங்கள் எவை? உயிர் இருக்கும் உடல்கள் எவை? என கண்டுபிடிப்பதே சிரமமாகிப்போனது என்ற வரிகள் அடங்கிய கடைசி அத்தியாயங்களை படிக்கும்போது இதயம் கனக்கிறது. அழகான காதலோடு தொடங்கி, […]

Read more

கல்வெட்டுக்கலை

கல்வெட்டுக்கலை, பொ. ராசேந்திரன், சொ. சாந்தலிங்கம், பாண்டிய நாட்டு வரலாற்று ஆய்வு மையம், மதுரை, பக். 240, விலை 250ரூ. தமிழ் மன்னர்கள் பற்றியும், தமிழ்நாட்டு வரலாறு பற்றியும் அரிய கல்வெட்டுகளும், ஓலைச்சுவடிகளும், செப்பேடுகளும் பெரிதும் உதவுகின்றன. நாம் அச்சில் படிக்கும் தமிழ் எழுத்துக்களும், கல்வெட்டு எழுத்துக்களுக்கும் பெரிய மாறுதல் காணப்படும். கல்வெட்டைப் படிக்க மிகுந்த திறமையும், பயிற்சியும் வேண்டும். பொ. இராசேந்திரன், சொ. சாந்தலிங்கம் ஆகிய இருவரும் இணைந்து எழுதிய இப்புத்தகத்தில், தமிழ்நாட்டின் முக்கிய கல்வெட்டுகள், பற்றி அபூர்வமான தகவல்கள் நிறைந்துள்ளன. இப்புத்தகத்தை […]

Read more

ராஜீவ் படுகொலை-தூக்குக்கயிற்றில் நிஜம்

ராஜீவ் படுகொலை-தூக்குக்கயிற்றில் நிஜம், பேட்ரிஷியா பப்ளிகேஷன், 2/40பி, இரண்டாம் தளம், ராம்நகர், நங்கநல்லூர், சென்னை 61, விலை 200ரூ. ராஜீவ்காந்தி படுகொலை பின்னணியில் தனக்கு தெரிந்த விஷயங்களை வெளியிட்டு உள்ளார், திருச்சி வேலுசாமி. திடுக்கிடும் தகவல்கள் பல இடம்பெற்று இருக்கின்றன. ராஜீவ் கொலை, தொடர்பாக அவர் எழுப்பிய வினாக்கள் இன்னும் விடைகாண முடியாமலே இருக்கின்றன என்பதை உணரமுடிகிறது. அத்துடன் அன்பு கணவரை பறிகொடுத்த சோனியாகாந்தி, பாசத் தந்தையை இழந்த பிரியங்கா காந்தி ஆகியோர் வேதனைகளின் மவுன வெளிப்பாடுகள் நெஞ்சை கனக்கச் செய்கிறது. நன்றி: தினத்தந்தி, […]

Read more

பெயரற்றது

பெயரற்றது, சயந்தன், தமிழினி, 63, நாச்சியம்மை நகர், சேலவாயல், சென்னை 51, பக்.128, விலை-90ரூ. போருக்குப் பிந்தையது ஈழத்துப் படைப்புகள், காத்திரமான யுத்த இலக்கியங்களாக உருவாகி வருகின்றன. சுவிஸ் நாட்டில் வசிக்கும் ஈழத் தமிழரான சயந்தன் எழுதியுள்ள பெயரற்றது. புலம்பெயர் இலக்கியத்தின் இன்னோர் உலகத்தை நமக்கு அறிமுகப்படுத்துகிறது. மொத்தம் எட்டு கதைகள். அனைத்துமே போரின் வலிகளைப் பேசுகிறது. தமிழ் டைகர்ஸ் பிறீடம் பைட்டர்ஸ் என்ற சிறுகதை, புகலிடத்தில் மொழிப்பெயர்ப்பாளராக வேலை செய்யும் ஒருவருடைய குறிப்பு. தாய்நாட்டில் வாழ முடியாத சூழல் நிலவுவதை நிரூபித்தாக வேண்டிய […]

Read more

கச்சத்தீவு

கச்சத்தீவு,(தமிழக மீனவர்களின் தன்னுரிமைப் போராட்டம்), ஆர். முத்துக்குமார், சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன்ஸ், 10/2, (8/2) போலீஸ் குவாட்டர்ஸ் சாலை, தி.நகர், பேருந்து நிலையம் பின்புறம், தியாகராயநகர், சென்னை 17, விலை 100ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0001-266-6.html கச்சத்தீவை சூழ்ந்து நிற்பது தண்ணீர் அல்ல. தமிழனின் கண்ணீர். நாகை, ராமேஸ்வரம், ராமநாதபுரம் மீனவர்களின் வாழ்க்கையோடு சம்பந்தப்பட்ட இடம் மட்டுமல்ல அது. தமிழகத்தின் வளத்தோடு சம்பந்தப்பட்டது. இப்போது இந்தியாவின் மானத்தோடு தொடர்புடையது. கடந்த 40 ஆண்டு காலமாக 600க்கும் மேற்பட்ட மீனவர்களைக் கொலை […]

Read more

செவ்விலக்கியச் சிந்தனைப் புதையல்,

செவ்விலக்கியச் சிந்தனைப் புதையல், முனைவர் மு. இளங்கோவன், வயல்வெளிப்பதிப்பகம், இடைக்கட்டு, உள்கோட்டை அஞ்சல், கங்கை கொண்ட சோழபுரம் (வழி), அரியலூர் மாவட்டம் – 612901, விலை 150ரூ. சங்க இலக்கியங்களில் புதைந்து கிடக்கும் தமிழர் வரலாற்றைப் பண்பாட்டை புலவர்களும் அறிஞர்களும் பலவிதங்களில் ஆய்ந்து எடுத்துரைத்துள்ளனர். அவ்வரிசையில் புதுச்சேரியைச் சேர்ந்த முனைவர் மு. இளங்கோவன் எழுதியிருக்கும் செவ்விலக்கியச் சிந்தனைப் புதையல் என்ற நூலும் ஒன்றாக இருக்கிறது. சங்க இலக்கியப் பாடல்களின் வழியாக கரிகால்ச்சோழனின் வரலாற்றையும் கலிங்கத்தில் இருந்து காரவேலன் படையெடுப்பையும் விளக்கும் அவர் கரிகாலனின் வீரத்தைப் […]

Read more

நத்தையோட்டுத் தண்ணீர்

நத்தையோட்டுத் தண்ணீர், கே.ஜி. பப்ளிகேஷன்ஸ், 31, பூக்குளம் புதுநகர், கரந்தை தஞ்சாவூர், பக். 80, விலை 60ரூ. தீதும் நன்றும் பிறர்தர வாரா என்பது போலவே எல்லாமும் நமக்குள்ளேயே நடந்தேறி விடுவதை நாகரிகமான முறையில் நம்முன் எடுத்துவைக்கிறார் ஹரணி. வாசிப்பு அனுபவம் நம்மை அடையாளப்படுத்தும் என்கிறார். சுட்டிக் காட்டுவது நடப். சுடப்படுவத நட்பல்ல என்கிறார். காற்று நுழைய முடியாத இடத்தில் கூட கடித உணர்வுகளை நுழைக்கிறார். சந்தர்ப்பவாதிகளை மன உறுதியோடு தவிர்க்க உதவுகிறார். வழிகாட்டிகளையும் ஆசிரியர்களின் அர்ப்பணிப்புகளையும் இனம் காண வைக்கிறார். மொத்தத்தில் ஹரணி […]

Read more

கண்ணதாசன் பயணங்கள்

கண்ணதாசன் பயணங்கள், கவிஞர் கண்ணதாசன், கண்ணதாசன் பதிப்பகம், 23, கண்ணதாசன் சாலை, தி.நகர், சென்னை 17, பக். 144, விலை 70ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0002-174-4.html கவியரசர் கண்ணதாசன் அமெரிக்கா ரஷ்யா, மலேசியா, இலங்கை உள்ளிட்ட பல உலக நாடுகளுக்கு அடிக்கடி பயணம் செய்தவர். அந்தப் பயணங்கள் பற்றி பத்திரிகைகளில் தொடர் கட்டுரைகளாக எழுதி படிப்போரை பரவசப்படுத்திய தருணங்கள் நிறைய உண்டு. தென்றல் இதழில் வெளிவந்த ஈழ நாட்டில் ஈராறு நாட்கள் என்ற பயணக்கட்டுரை பலரது கவனத்தை […]

Read more

வனசாட்சி

வனசாட்சி, தமிழ்மகன், உயிர்மை பதிப்பகம், 11/29, சுப்பிரமணியம் தெரு, அபிராமபுரம், சென்னை 18, விலை 225ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0000-811-7.html கண்ணீர்த்தோட்டம் வறுமையில் இருந்த மக்களை வளமான வாழ்வு என்று ஏமாற்றி தேயிலைத் தோட்டங்களில் சிதைத்ததை விளக்கிய டேனியலின் எரியும் பனிக்காடு நாவலைப் போன்று தமிழகத்திலிருந்து கடல்வழியாக இலங்கைக்குச் சென்று உழன்ற மக்களின் சுமார் 200 ஆண்டு கதையைச் சொல்கிறது எழுத்தாளர் தமிழ்மகனின் வனசாட்சி. வடஇலங்கையில் கரையிறங்கி வழியெங்கும் அவஸ்தைகளை அனுபவித்து, குற்றுயிராக முன்பின் அறிமுகமே இல்லாத ஹட்டன் […]

Read more
1 4 5 6 7 8 11