வந்தாங்க ஜெயிச்சாங்க,

வந்தாங்க ஜெயிச்சாங்க, மணவை பொன். மாணிக்கம், கற்பகம் புத்தகாலயம், 402, சுந்தரம் தெரு, தி.நகர், சென்னை 17, பக். 207, விலை 130ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0001-879-7.html சாதிக்கத் துடிப்பவர்களுக்கு சாதனையாளர்களைப் பற்றி மட்டும் போதித்தால் போதுமா? அவர்களின் மனதில் பொதிந்து கிடக்கும் உண்மைகளையும் சேர்த்துத் தந்தால்தான் அது முழுமையடையும் என அவர்களின் மொழிகளிலேயே கொட்ட வைத்திருக்கிறார் ஆசிரியர். வைரமுத்து முதல் மயில்சாமி வரை கலைத்துறையைச் சேர்ந்த 70 சாதனையாளர்களின் வாழ்க்கையை சாறாக்கித் தரும் உத்தியிது. சாதனையாளர்களின் குடும்பப் […]

Read more

தமிழ்நாட்டுப் பாளையக்காரர்களின் தோற்றமும் வீழ்ச்சியும்

தமிழ்நாட்டுப் பாளையக்காரர்களின் தோற்றமும் வீழ்ச்சியும், பேராசிரியர் கே. ராஜய்யன், தமிழில்-நெய்வேலி பாலு, கருத்துப்பட்டறை, 2, முதல்தளம், மிதேசு வளாகம், 4வது நிறுத்தம், திருநகர், மதுரை 6, விலை 120ரூ. முதலாவது இந்திய சுதந்திரப் போராட்டம் என்று சொல்லப்படும் சிப்பாய்க் கலகம் வட இந்தியாவில் நடந்தது 1857ல். அதற்கு 50 ஆண்டுகளுக்கு முன்னதாகவே விடுதலை வேள்வி தென் இந்தியாவில் குறிப்பாகத் தமிழகத்தில் வளர்த்தெடுக்கப்பட்டது. அந்த வீரக் கதையின் அழுத்தமான வரலாறுதான் இது. அந்தக் காலத்தில் இருந்த நிர்வாக அமைப்பு என்பது பாளையங்கள். இதனை ஆட்சி செய்தவர்கள் […]

Read more

ஜெருசலேம் அழியா நகரத்தின் கதை

ஜெருசலேம் அழியா நகரத்தின் கதை, பா. முருகானந்தம், பழனியப்பா பிரதர்ஸ், சென்னை 14, பக். 267, விலை 210ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0001-033-9.html இன்றைய இஸ்ரேல் நாட்டின் தலைநகரமான ஜெருசலேம் நகரத்தின் ஏழாயிரம் ஆண்டு காலவரலாற்றுப் பின்னணியைப் பேசும் நூல் இது. கிறிஸ்தவர்களின் புண்ணிய பூமி ஜெருசலேம் என்ற பொதுவான நம்பிக்கையை தகர்த்து முஸ்லீம்களுக்கும் ஜெருசலேம் ஒரு புண்ணிய பூமி என்பதை நூல் விளக்குகிறது. இயேசு கிறிஸ்து இந்த நகரத்தில்தான் சிலுவையில் அறையப்பட்டார் என்பதால் கிறிஸ்துவர்களுக்கு ஜெருசலேம் புண்ணிய […]

Read more

அகத்தியர் முதல் வாரியார் வரை சித்தர்கள் 60 பேர் வாழ்வும் வாக்கும்

அகத்தியர் முதல் வாரியார் வரை சித்தர்கள் 60 பேர் வாழ்வும் வாக்கும், பி.எஸ். ஆச்சார்யா, நர்மதா பதிப்பகம், 10, நானா தெரு, பாண்டிபஜார், தி.நகர், சென்னை 17, விலை 225ரூ. சித்தர்கள் தங்கள் கடும் தவத்தின் மூலம் முக்காலங்களையும் அறியும் ஆற்றல் பெற்றவர்கள் என்றும், தங்கள் பாடல்களின் மூலம் ஆன்மீகம் மற்றும் மருத்துவக் குறிப்புகளை விபரம் அறிந்தவர்கள் மட்டுமே புரியக்கூடிய பரிபாஷைகள் மூலம் வெளிப்படுத்தியவர்கள் என்றும், இவர்களைப் பற்றி பலவாறு கூறப்படுவதுண்டு. சித்தர்கள் என்றாலே திருமூலர் முதல் கோரக்கர் வரையிலான பிரசித்தி பெற்ற 18 […]

Read more

பஞ்சதந்திரம்

பஞ்சதந்திரம், சமஸ்கிருத மூலம்-விஷ்ணுசர்மன், தமிழில்-அன்னபூர்ணா ஈஸ்வரன், சதுரம் பதிப்பகம், விலை 300ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0001-158-7.html காஷ்மீரத்து பஞ்சதந்திரம் பள்ளிக்கூடப் பாடல்களில் அனேகமாக எல்லோரும் விரும்பிப் படித்திருக்கக்கூடியது பஞ்சதந்திரக் கதைகள் மட்டுமாகத்தான் இருக்கும். அதுவும் மனிதர்களை விடவும் புத்திசாலித்தனமாகப் பேசக் கூடிய நரி, காகம், பாம்பு, சிங்கம், புலி போன்றவற்றின் சாமர்த்தியம், அசட்டுத்தனம், தந்திரங்கள் எல்லாம் சிறுபிள்ளைகளாக இருந்தபோதும் சரி, வளர்ந்து பெரியவர்களான இன்றைக்கும் சரி சுவையோ சுவைதான். விஷ்ணுசர்மன் என்னும் அறிஞர் சமஸ்கிருத மொழியில் எழுதியதை மிக […]

Read more

ஈழம் சாட்சியமற்ற போரின் சாட்சியங்கள்

ஈழம் சாட்சியமற்ற போரின் சாட்சியங்கள், ஃபிரான்ஸிஸ் ஹாரிசன், தமிழில் என்.கே. மகாலிங்கம், காலச்சுவடு பதிப்பகம், 669, கே.பி.கே. சாலை, நாகர்கோவில், பக். 227, விலை 250ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0000-797-0.html ஈழ இனப்படுகொலை என்பதே சாட்சியமற்ற போராகத்தான் ஆகிவிட்டது. ஆனால் அவற்றை எவ்வளவுக்கு எவ்வளவு மறைக்க முயன்றார்களோ, அவ்வளவுக்கவ்வளவு கொலைக்கான ஆவணங்களும் சாட்சியங்களும், வாக்குமூலங்களும், உலகம் முழுக்க பரவலாகக் கிடைக்கும் விடயமாகிவிட்டது. அவற்றை முதல் முறையாக வெளியே கொண்டு வரும் நூலாக இந்நூல் விளங்குகிறது. இலங்கை பிபிசி செய்தியாளராக […]

Read more

அர்த்தமுள்ள வாழ்க்கை வாழ முக்கியக் குறிப்புகள்

அர்த்தமுள்ள வாழ்க்கை வாழ முக்கியக் குறிப்புகள், சசிமதன், கடலங்குடி பப்ளிகேஷன்ஸ், 38, நடேச அய்யர் தெரு, தி.நகர், சென்னை 17, விலை 65ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0002-141-8.html உண்பது, உறங்குவது, இனப்பெருக்கம் செய்வது என்பது மற்ற உயிரினங்களுக்கான வாழ்க்கை நியதி. ஆனால் மனித வாழ்க்கை அவற்றையும் கடந்து, அறிவார்ந்த நிலையில் சிந்தித்து, திட்டமிட்டு வாழ்வதாகும். அதற்கு நிறைய கஷ்டங்களையும், பிரச்னைகளையும் மனிதன், தன் வாழ்நாளில் சந்திக்க வேண்டியுள்ளது. அதில் வெற்றி பெற்றவனே சிறந்த வாழ்க்கையை அடைந்தவனாவான். அதற்கு […]

Read more

கைம்மண்

கைம்மண், சுதாகர் கத்தக், பார்வை பதிவுகள், 27/53, சின்னக்கண்ணா நகர், சாமி செட்டிப்பாளையம், வடக்கு, ஜோதிபுரம் அஞ்சல், கோயம்புத்தூர், விலை 150ரூ. உறுதியான கொள்கையுடன், சீரிய கலாசாரத் தளத்தில், விலை போகாதவனாக, சமூகத்தைத் தன் படைப்புகள் மூலம் விமர்சிப்பவனாக இருக்க வேண்டும் தலித் படைப்பாளி. சீமான்களுக்கும் சீமாட்டிகளுக்கும் உவப்பானது இல்லை தலித் இலக்கியம். தமிழ்ச் சூழலில், தான் சுதந்திரமாக இருக்கிறோம் என்று படைப்பாளி நினைக்கும்போதே கைதுசெய்யப்பட்டுவிடுகிறான். கைதானதை எதிர்த்துக் குரல் எழுப்புப்போதே குரல்வளை நெறிக்கப்படுகிறது. கோபத்தை வெளிப்படுத்தும்போதே கண்கள் பிடுங்கப்படுகின்றன. இந்த நிலையில் இருந்து […]

Read more

செள்ளு

செள்ளு, செல்வராஜ், பாரதி புத்தகாலயம், 421, அண்ணாசாலை, தேனாம்பேட்டை, சென்னை 18, பக். 96, விலை 60ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0001-712-7.html கடல் பற்றி நமக்குத் தெரிந்த அளவுக்குக்கூட கடலோர மக்களின் வாழ்வு பற்றி தெரிவதில்லை. இந்த நிலையில், கடலோர மக்களின் வாழ்வைத் தழுவி நெய்தல் நிலத்து இலக்கியமாக வந்திருப்பதுதான் செல்வராஜின் செள்ளு சிறுகதைத் தொகுப்பு. தென்தமிழகத்தில் குமரி மாவட்டத்தின் அரபிக் கடலோரத்தில் வாழும் பாரம்பரிய மீனவச் சமூகமாக முக்குவர்களின் வாழ்வை, அவர்களின் காதலை, துன்பத்தை, நொய்மையை, தேடலை, […]

Read more

மலரும் நினைவுகளில் மக்கள் தலைவர்

மலரும் நினைவுகளில் மக்கள் தலைவர், கே. இளந்தீபன், கவிதா வெளியீடு, 8/55, மேற்கு சாலைத் தெரு, சுந்தரப் பெருமாள் கோவில், கும்பகோணம் 614208, பக். 104, விலை 100ரூ. மக்கள் தலைவர் மூப்பனார் பற்றிய நினைவுகளின் தொகுப்பு நூல். மூப்பனார் மறைந்ததும் கலைஞர், ஜெயலலிதா, வைகோ உள்ளிட்ட தமிழக தலைவர்கள், ஜனாதிபதி, பிரதமர், மத்திய அமைச்சர்கள், உள்ளிட்ட இந்தியத் தலைவர்கள், வாலி, வைரமுத்து உள்ளிட்ட கவிஞர்கள் இன்னும் கட்சி பேதமின்றி, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட அனைத்து கட்சி அன்பர்களிடமும் மூப்பனார் பற்றிய மேலான நினைவுகளை நூல் […]

Read more
1 6 7 8 9 10 11